பாலிவுட்டில் படமாக வருகிறது வீரேந்திர சேவாக்கின் விளாசல்கள்

டெல்லி: இந்திய துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை எடுக்க தனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுப்பதுதான் இப்போது பாலிவுட்டில் வழக்கமாக உள்ளது. தடகள வீரர் மில்காசிங் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வந்து சக்கைபோடு போட்டது. இதனால் குத்து சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை ஆதாரமாக கொண்டும் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிரடி கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு 'நவாப் ஆப் நவாப்ஜ்கர்' என்ற பாலிவுட் திரைப்படத்தை தயாரிக்க பணிகள் ஆரம்பித்துள்ளன.

பாலிவுட்டில் படமாக வருகிறது வீரேந்திர சேவாக்கின் விளாசல்கள்

டெல்லியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த வீரேந்திரசேவாக் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் "நான் சிறுவயதில் நவாப்ஜ்கர் பகுதியில் அமைந்துள்ள, ரிசர்வ் போலீஸ் படையினருக்கான கிரவுண்டில் கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை ஆடுவது வழக்கம். அங்கு வசித்த குடும்பத்தார் ஒருநாளும் இதற்கு தடை சொன்னது கிடையாது.

எனது வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து சில தயாரிப்பாளர்கள் பேசினர். நான் அதற்கு ஆட்சேபனை எதுவும் கூறவில்லை. இவ்வாறு சேவாக் தெரிவித்தார். அதே நேரம் இந்திய கிரிக்கெட் அணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

 

சத்தம் இல்லாமல் தயாரிப்பாளர் ஆன புஸு புஸு நடிகை

சென்னை: புஸு புஸு நடிகை பூ நடிகையுடன் சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

புஸு புஸு நடிகையின் வளர்ச்சியைத் தான் என்ன சொல்ல. சுள்ளானுடன் ஜோடி சேர்ந்த படத்தில் என்னய்யா நடிப்பே தெரியலே இந்த நடிகைக்கு என்று சொல்லும் வகையில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பில் படிப்படியாக தேர்ச்சி பெற்றார்.

ஒரு காலத்தில் கோடம்பாக்கத்தில் அவர் கொடுத்த பார்ட்டிகள் மிகவும் பிரபலம். கோலிவுட்டில் நுழைந்த வேகத்தில் அவர் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். டோலிவுட் பக்கமும் சென்று பிரபலம் ஆகிவிட்டார். இப்படி கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு நடிப்பில் பிசியாக இருக்கும் அவர் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். அதாவது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

கட்சி ஒன்றில் இருந்து விலகிய பூ நடிகையுடன் சேர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளாராம் நடிகை. தான் பூ நடிகையின் கணவர் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் அவர் சைலண்ட் தயாரிப்பாளராம். அதே இயக்குனரின் அடுத்த படத்திலும் அவர் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறாராம். தயாரிப்பு என்றால் தனியாக பணம் எல்லாம் போடுவது இல்லை.

சம்பளத்தை தயாரிப்புக்காக தருகிறார். தயாரிப்பு தொழில் பிக்கப் ஆனால் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கும் எண்ணமும் நடிகைக்கு உள்ளதாம்.

 

ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி “லாரன் பகால்” மாரடைப்பால் மரணம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் பட உலகின் பழம்பெரும் நடிகையான லாரன் பகால் நேற்று இறந்தார். 89 வயதான இவர் நியூயார்க் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

 ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி “லாரன் பகால்” மாரடைப்பால் மரணம்!

1944 இல் "டு ஹேவ் அண்ட் நாட் ஹேவ்" என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர் தன் கணவரும், நடிகருமான ஹம்ரி போகார்ட் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவரின் கணவர் ஹம்ரி போகார்ட் 1957 இல் இறந்து விட்டார்.

இதற்கிடையே அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்த ஹாலிவுட்டின் காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸ் 63 தன் மணிக்கட்டை கத்தியால் வெட்டி ரத்தத்தை வெளியேற்றிய படி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நடிகை என்ன 'உல்டா'வாக செயல்படுகிறாரே?

சென்னை: தென்னிந்திய நடிகைகளில் மேனன் இயக்குனரின் மனம் கவர்ந்த ஹீரோயின் உல்டாவாக செயல்படுகிறார்.

தென்னிந்திய திரை உலகில் உள்ள நடிகைகள் தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தாலும் அதற்கு ஒரு லிமிட் வைத்துள்ளனர். அதே நடிகைகள் ஆந்திரா பக்கம் சென்று அங்குள்ள ரசிகர்களை கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறார்கள்.

இதை பார்க்கும் கோலிவுட் ரசிகர்களோ அடப்பாவிகளா நம்ம ஊருக்கு என்றால் ஒரு அளவு, அவர்களுக்கு மட்டும் தாராளமோ என்று பல காலமாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மேனன் இயக்குனரின் மனம் கவர்ந்த அந்த நாயகி டோலிவிட்டின் முன்னணி நாயகியாக உள்ளார். கோலிவுட்டிலும் அப்படி ஆகும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

அவர் பிற நடிகைகளை போன்று ஆந்திராவில் படுகவர்ச்சி காட்டவில்லை. ஆந்திராவில் கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை தமிழில் சிங்கம் ஜோடியாக நடித்துள்ள படத்தில் கவர்ச்சியில் மிகவும் தாராளம் காட்டியுள்ளார்.

இவர் தான் ஆந்திராவில் கவர்ச்சியில் தாராளம் தமிழகத்தில் சிக்கனம் என்று இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் உல்டாவாக செயல்படுகிறார்.

 

சிகரம் தொடு படத்துக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!

‘சிகரம் தொடு' படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய்யுடன் கைகோர்க்கிறார் விக்ரம் பிரபு.

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது சிகரம் தொடு. இந்நிலையில் தன் அடுத்தப் படத்திற்கான வேலையில் இறங்கிவிட்டார் விக்ரம் பிரபு.

சிகரம் தொடு படத்துக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் விக்ரம் பிரபு!

‘சைவம்' படத்தை முடித்துவிட்டு, அமலா பாலை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலான விஜய், திருமணத்துக்குப் பிறகு இயக்கும் முதல் படம் இது.

இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘ரிங் மாஸ்டர்' படம் வெற்றிப் பெற்றது. இவ்வெற்றியே இவரை தமிழுக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

 

ஆமீரின் நிர்வாண போஸ்டர்: படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள், தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட

டெல்லி: ஆமீர் கான் நிர்வாணமாக போஸ் கொடுத்த பி.கே. படத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆமீர் கான் நடித்து வரும் பி.கே. படத்தின் போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆமீர் கான் மீது இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

ஆமீரின் நிர்வாண போஸ்டர்: படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள், தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட

இந்நிலையில் ஆமீரின் பி.கே. படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து நீதிபதிகள் கூறுகையில்,

உங்களுக்கு பிடிக்காவிட்டால், படத்தை பார்க்காதீர்கள். ஆனால் அதில் மத விஷயத்தை கொண்டு வராதீர்கள். இந்திய சமூகம் பக்குவம் அடைந்தது. அதற்கு பொழுதுபோக்கிற்கும், பிறவற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியும் என்றனர்.

 

மீண்டும் திருமணத்துக்குத் தயாராகிறார் யுவன் சங்கர் ராஜா!

மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எனக்கென ஒரு குடும்பம் வேண்டும், என்று கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு 25ல் முதல் திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமணம் மூன்று மாதங்கள்தான் நிலைத்தது. என் 30வது வயதில் இரண்டாவது திருமணம்.

மீண்டும் திருமணத்துக்குத் தயாராகிறார் யுவன் சங்கர் ராஜா!

ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. விவாகரத்துக்காக காத்திருக்கிறோம். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். மீண்டும் திருமணம் செய்ய வேண்டும், எனக்கென குடும்பம் வேண்டும் என உணர ஆரம்பித்துள்ளேன்.

என்னுடைய பிரச்சினையே, என் துணையுடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் போவதுதான். ஆண்டுக்கு 10 படங்களுக்கு மேல் இசையமைக்க வேண்டியுள்ளது. அதில் எனது நேரம் முழுவதும் போய்விடுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வடிவேலுவின் அடுத்த படத்துக்கு தலைப்பு 'எலி'?

வடிவேலு நடிக்கும் அடுத்த படத்துக்கு எலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தெனாலிராமன் படத்துக்குப் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார் வடிவேலு.

இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார். இந்தப் படம் 1970 காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

வடிவேலுவின் அடுத்த படத்துக்கு தலைப்பு 'எலி'?

எழுபதுகளில் தமிழகத்தில் மேற்கத்திய பாணி அறிமுகமானதை கதைக் கருவாக வைத்துள்ளார்களாம். இதில் நடிக்கும் வடிவேலு, ஒரு எலியைப் போன்ற உடல்மொழி கொண்டவராக வருகிறாராம்.

முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்துக்கு எலி என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

வரும் செப்டம்பர் மாதம், வடிவேலுவின் பிறந்த நாளன்று தொடங்குகிறது 'எலி'!