தெலுங்கு 7-ம் அறிவு ஆடியோ வெளியீட்டு விழாவில் டோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் அல்ல அர்ஜுன், சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா ஆகியோர் சூர்யாவை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 7-ம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், இயக்குனர் முருகதாஸ், கார்த்தி சிவகுமார், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களான அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அல்லு அர்ஜுன் கூறியதாவது,
சூர்யா ஒரு அருமையான நடிகர். அவரால் தென்னிந்திய திரையுலகிற்கே பெருமை. சூர்யா நடித்த கஜினி தமிழிலும், தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து தான் பாலிவுட் தெலுங்கு, தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்தது. இந்தி கஜினியில் ஆமீர் கான் நடித்திருந்தார். அங்கும் சூப்பர்ஹிட் தான் என்றார்.
ராம் சரண் தேஜா கூறுகையில், சூர்யாவால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். எனக்கு மகதீரா மூலம் தான் அங்கீகாரம் கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஈஸியாக நடித்துவிடுவார். சொல்லப் போனால் இன்னும் சிறப்பாக நடிப்பார் என்றார்.
அவர்களைப் போன்று பிரபல இயக்குனர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் வி.வி. விநாயக் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சூர்யாவை ஆஹா, ஓஹோ என்று புகழந்து பேசினர்.
இப்படி ஆள் ஆளுக்கு புகழந்து தள்ளி சூர்யாவை வெட்கப்பட வைத்துவிட்டனர்.
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் 7-ம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், இயக்குனர் முருகதாஸ், கார்த்தி சிவகுமார், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களான அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அல்லு அர்ஜுன் கூறியதாவது,
சூர்யா ஒரு அருமையான நடிகர். அவரால் தென்னிந்திய திரையுலகிற்கே பெருமை. சூர்யா நடித்த கஜினி தமிழிலும், தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டதைப் பார்த்து தான் பாலிவுட் தெலுங்கு, தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்தது. இந்தி கஜினியில் ஆமீர் கான் நடித்திருந்தார். அங்கும் சூப்பர்ஹிட் தான் என்றார்.
ராம் சரண் தேஜா கூறுகையில், சூர்யாவால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். எனக்கு மகதீரா மூலம் தான் அங்கீகாரம் கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் சூர்யா ஈஸியாக நடித்துவிடுவார். சொல்லப் போனால் இன்னும் சிறப்பாக நடிப்பார் என்றார்.
அவர்களைப் போன்று பிரபல இயக்குனர்கள் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் வி.வி. விநாயக் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு சூர்யாவை ஆஹா, ஓஹோ என்று புகழந்து பேசினர்.
இப்படி ஆள் ஆளுக்கு புகழந்து தள்ளி சூர்யாவை வெட்கப்பட வைத்துவிட்டனர்.