தூள் டக்கர் தூள்… பூஸ்ட் விளம்பரத்தில் பிரபுதேவா

Prabhu Deva Goes Dhool Tucker Boost Promotional

பூஸ்ட் விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடராக தற்போது பிரபுதேவா நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின், ஷேவக், தோணி ஆகியோரின் கிரிக்கெட் ஆட்டத்தை புகழ்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் பிரபுதேவா.

கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமே விளம்பரத்தூதுவராக நியமிக்கப்பட்டு வந்த பூஸ்ட் பானத்திற்கு தற்போது தமிழ் திரை உலக மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா முதன் முறையாக நடனமாடியுள்ளார்.

சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்டம், அவர்களுக்கு சச்சின், ஷேவாக், தோணி ஆகியோரின் சிறப்புக்களைக் கூறும் பாடலைப் பாடி செம ஆட்டம் போட்டுள்ளார் பிரபுதேவா. இந்த விளம்பரம் இணையதளங்களில் ஹிட் ஆகியுள்ளது.

 

துப்பாக்கியை அடுத்து 'கடல்' சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய விஜய் டிவி

Vijay Tv Bags Kadal Television Rights   

சென்னை: மணிரத்னத்தின் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயர் அறிமுகமாகும் கடல் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. முன்னதாக இந்த சேனல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கியது. இந்த இரண்டு படங்களின் சாட்டிலைட் உரிமையையும் ஜெமினி பிலிம் சர்கியூட்டிடம் இருந்து பேக்கேஜ் டீலாக யாருக்கும் தெரிவிக்காத விலைக்கு வாங்கியுள்ளது.

பெரிய படங்களின் சாட்டிலைட் உரிமத்தை வாங்குவதில் சன் டிவி, ஜெயா டிவி போட்டி போடுகையில் சத்தமில்லாமல் விஜய் டிவி கடலின் உரிமத்தை வாங்கிவிட்டது. அண்மை காலமாக விஜய் டிவி புது படங்களின் சாட்டிலைட் உரிமத்தை பெற அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் துப்பாக்கி சூப்பர் ஹிட் ஆனது. கடல் படத்தில் கார்த்திக், ராதாவின் பிள்ளைகள் நடித்திருப்பதால் படம் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

கடல் - அதிகாரப்பூர்வ டிரெய்லர்

 

'சமர்'- மீண்டும் ஒரு சிறப்பு விமர்சனம்

Samar Special Review   
Rating:
3.5/5

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஷால், த்ரிஷா, சுனைனா, ஜான் விஜய், சம்பத், ஜெயப்பிரகாஷ்

பிஆர்ஓ: நிகில் முருகன்

இசை: யுவன் ஷங்கர்ராஜா, பேக்கிரவுண்ட்: ஸ்கோர் தரன்குமார்

ஒளிப்பதிவு: ரிச்சர் எம் நாதன்

தயாரிப்பு: ஜெய பாலாஜி ரியல் மீடியா

இயக்கம்: திரு

(நேற்று நம் துணை ஆசிரியர் ஒருவர் குடும்பத்தாரோடு இந்தப் படத்துக்குப் போய் விட்டு வந்து எழுதிய விமர்சனத்தைப் படித்தீர்கள்.. நம் சினிமா நிருபரின் விமர்சனம் இன்று.. இதோ)

பண்டிகைக் கால படங்கள் பெரும்பாலும் ஆர்ப்பாட்டமான பப்ளிசிட்டியோடு வந்து புத்தூர் கட்டோடு பெட்டிக்குப் போவது வழக்கம். ஆனால் சத்தமில்லாமல் வந்து நல்ல பெயரைத் தட்டிக் கொள்ளும் படமாக இந்தப் பொங்கலுக்கு வந்திருக்கிறது விஷால்- திரு கூட்டணியின் சமர்.

அப்படியொன்றும் அசாதாரண படமில்லைதான். நிச்சயம் ஏதோ ஒரு ஹாலிவுட் அல்லது ஸ்பானிஷ் பாதிப்பு இருந்திருக்கலாம் என்பதில் எத்தனை சதவீத உண்மை என்பதைச் சொல்வதற்கில்லை. ஆனால் நிச்சயம் இந்தக் கதை ஒரு வித்தியாசமான முயற்சி... கச்சிதமான, விறுப்பான ஒரு பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும் படம் என்பது மட்டும் நூறு சதவீதம் நிஜம்.

ரொம்ப வழக்கமான ஆரம்பம்தான். காட்டில் மரங்களை வெட்டிக் கடத்த வருகிறது ஒரு கும்பல். அவர்களை ஒன்மேன் ஆர்மியாக விரட்டியடிக்கிறார் விஷால். சண்டை முடிந்ததும் அடுத்த நிமிடமே, ஒரு ஹீரோயிசப் பாட்டு.

சுனைனாவுக்கும் விஷாலுக்கும் மூன்றாண்டுகளாக காதல். ஆனால் எப்போதும் காட்டைக் கட்டிக் கொண்டு அழும் விஷாலை (அப்பா வன அதிகாரி அழகம் பெருமாள். மரக் கொள்ளையர்களை அப்பா போட்டுக் கொடுக்க, மகன் போட்டுத் தாக்குவது வழக்கம்.. மிரட்ட வருபவர்களை அழகம் பெருமாள் சமாளிக்கும் விதமும் சுவாரஸ்யம்!),

'இத்தனை வருஷம் காதலிச்சும் உனக்கு என் இடுப்பு சைஸ் கூட தெரியல...போய்யா நீயும் உன் காதலும்' என்று கடுப்புடன் கூறிவிட்டுப் பிரிந்து பாங்காக் போகிறார். அப்புறம் மூன்று மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து ஒரு கூரியர் வருகிறது... அதில் காதலைப் புதுப்பிக்க ஒரு கடிதம், உடன் ப்ளைட் டிக்கெட்.

முதல் முறையாக பாங்காக் போகிறார் விஷால்... விமானத்தில் அவருக்கு உதவுகிறார் அனுபவசாலி த்ரிஷா.

போன இடத்தில், சுனைனா வரச் சொன்ன இடத்தில் காலையிலிருந்து காத்திருக்கிறார். இரவான பிறகும் சுனைனா வரவில்லை. அப்போது அவருக்கு உதவ வருகிறார் ஐபிஎஸ் அதிகாரி சம்பத். அடுத்த நாளும் அதே இடத்தில் காத்திருக்க, சுனைனா வரவே இல்லை. சரி, இரண்டு நாளில் ஊர் திரும்பலாம் என முடிவு செய்து, பாங்காக்கை சுற்றிப்பார்க்கக் கிளம்பும்போது, வழியில் த்ரிஷா எதிர்ப்படுகிறார்.

அடுத்த சில நிமிடங்களில் விஷாலுக்கு நேர்வதெல்லாம், அவர் மட்டுமல்ல, பார்வையாளர்களே எதிர்ப்பாராத திருப்பங்கள்.

திடீரென ரூ 5000 கோடிக்கு அதிபதியாகிறார். அடுத்த சில தினங்களில் தரைமட்டத்துக்கு வருகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது... தேடிவந்த காதலியும் கிடைக்காமல், ஊரைப்பார்க்கப் போகவும் முடியாமல் தவிக்கும் விஷால், அந்த சுழலிலிருந்து எப்படி வெளியில் வருகிறார்.. அவரை இப்படியெல்லாம் ஆட்டுவிக்கும் ஆண்டவர்கள் யார் என்பதெல்லாம் சுவாரஸ்யமான க்ளைமாக்ஸ்!

முதல்10 நிமிடங்களுக்குள் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என பரபரக்க வைக்கும் திரைக்கதை க்ளைமாக்ஸ் வரை அதே வேகத்துடன் செல்வதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். இந்த வேகத்தில் படத்திலிருக்கும் சின்னச் சின்ன லாஜிக் மிஸ்டேக்குகள் கூட தெரியாமல் போகின்றன.

இந்தக்கதையில் வெகு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷால். காமெடி என்ற பெயரில் நெளிய வைக்காமல், ஆக்ஷன் என்ற பெயரில் அலட்டாமல் அழுத்தமாக நடித்துள்ளார் விஷால். காதல் தோல்வியை சகித்துக் கொள்வது, தன்னைச் சுற்றியுள்ள குழப்பத்தை அவர் பிரதிபலிக்கும் விதம்.. யதார்த்தம். விஷாலின் இந்த வகை நடிப்புதான் அவருக்கே கூட நல்லது!

விஷாலின் இரண்டு காதல்களும் ஆரம்பிப்பதைக் காட்டி நீட்டி முழக்காமல், நேராக விஷயத்துக்கு வந்ததுதான் இந்த ஜெட் வேகத்துக்கு காரணம்.

மங்காத்தாவுக்குப் பின் த்ரிஷா நடித்துள்ள தமிழ்ப் படம். இடைவெளி சற்று அதிகம் என்றாலும், ஒரு நல்ல பிரேக்கை அவருக்குத் தந்துள்ளது சமர். இன்னொரு நாயகி சுனைனா கொஞ்சமாக தாராளம் காட்டி, ஒரு பாடலுக்கு ஆடிவிட்டுப் போகிறார்.

ஜான் விஜய், சம்பத், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். விஷாலின் வாழ்க்கையில் கண்ணாமூச்சு ஆடும் ஆண்டவர்களாக வரும ஜேடி சக்ரவர்த்தியம் மனோஜ் பாஜ்பாயும் கொஞ்சம் வித்தியாச வில்லன்கள்தான்!!

படத்தின் எந்த இடத்தில் காமெடியனைப் புகுத்தினாலும் பெரிய ஸ்பீட் பிரேக்கராகிவிடும் என்ற இயக்குநரின் முடிவு மெச்சத்தக்கது. அதை பாடல் காட்சிகளிலும் செயல்படுத்தியிருக்கலாம்!

வசனத்தை எஸ் ராமகிருஷ்ணனும் இயக்குநர் திருவும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். 'சண்டை போடாத பொண்ணும் சரக்கடிக்காத பையனும் கிடைப்பது கஷ்டம்' போன்ற வசனங்களில் எஸ்ரா தெரிகிறார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் சில காட்சிகள் அபாரம். குறிப்பாக ஜான் விஜய்யை விஷால் சேஸ் பண்ணுவது. ஆனால் வீடியோ காமிரா காட்சிகள், டெலிஷோவை நினைவூட்டுகின்றன.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் தரன்குமாரின்
பின்னணி இசையில் 'பெப்' போதவில்லை!

மற்றபடி மன்னிக்கக் கூடிய சின்னச் சின்ன குறைகள்தான். தீராத விளையாட்டுப் பிள்ளையில் சேர்ந்து சறுக்கிய திருவும் விஷாலும் இந்தப் படத்தை புதிய முறுக்குடன் இணைந்தே நிமிர்ந்திருக்கிறார்கள்.

ரொம்ப நாளைக்குப் பிறகு கடைசிவரை ஒரு ஈர்ப்போடு பார்த்த படம் சமர் என்று தாராளமாகச் சொல்லலாம். பொங்கல் ரேஸில் நம்பர் ஒன்!

 

ஒரு வழியாக தமிழக மீடியாவை சந்தித்த கடல் படக்குழுவினர்

Mani Ratnam S Kadal Team Finally Meets Tn Media   

சென்னை: இயக்குனர் மணிரத்னம் ஒரு வழியாக தனது கடல் படக்குழுவை தமிழ் மீடியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மணிரத்னம் தனது கடல் படக்குழுவினரை குறிப்பாக ஹீரோ கௌதம், ஹீரோயின் துளசியை தமிழக மீடியாக்களின் கண்ணில் காண்பிக்கவே இல்லை. ஆனால் அவர்களை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மீடியாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள ராணி சீதை ஹாலில் கடல் படக்குழுவினர் தமிழக மீடியாக்களை நேற்று சந்தித்தனர்.

வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான், சுஹாசினி மணிரத்னம், கார்த்திக், அர்ஜுன், அரவிந்த் சாமி, கௌதம் கார்த்திக், துளசி, லக்ஷ்மி மஞ்சு உள்ளிட்டோர் மீடியாக்காரர்களை சந்தித்தனர். ஒரு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் துளசியின் அம்மா ராதா மட்டும் மிஸ்ஸிங். படக்குழுவினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

மணிரத்னம் அருமையான இசையமைத்துக் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி, நன்றி தெரிவித்தார். பதிலுக்கு ரஹ்மான் மணிரத்னம் தான் என்னுடைய குரு என்று புகழந்தார். கடல் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் - அதிகாரப்பூர்வ டிரெய்லர்

 

ஜெயா டிவி வசமானது ரஜினியின் கோச்சடையான்!

Kochadaiyaan Satellite Rights Sold To Jaya Tv

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி கைப்பற்றியுள்ளது.

இப்போதெல்லாம் திரைப்படம் பூஜை போடும் போதே அதன் சேட்டிலைட் உரிமையை யார் கைப்பற்றுவது என்பதில்தான் பலத்த போட்டி நிலவுகிறது. சன்டிவி, கலைஞர் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி புதிதாக வேந்தன் டிவி வேறு களத்தில் இறங்கியுள்ளது.

புதிய திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமையை பெறுவதில் போட்டி போடும் சேனல்கள் பல கோடி கொடுத்து புதுப்பட உரிமையை வாங்கி விடுமுறை நாட்களில் ஒளிபரப்புகின்றனர். அப்பொழுதுதானே அதிக அளவில் விளம்பரதாரர்களை கவரமுடியும். இதற்காகவே தொலைக்காட்சிகள் தற்போது சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளது வேறு கதை.

ரஜினி, கமல் படங்களை கைப்பற்றுவதில் கடந்த ஆட்சி காலத்தில் சன்டிவி, கலைஞர் டிவிதான், லீடிங்கில் இருந்தன. அதிமுக ஆட்சி வந்த உடன் கமல், ரஜினி படங்களை சத்தமில்லாமல் கைப்பற்றியுள்ளது ஜெயா டிவி.

கமலின் ‘விஸ்வரூபம்' திரைப்படம் ஜெயாடிவியின் கைவசம் ஆனதுபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஏப்ரலில் வெளியாகும் ‘கோச்சடையான்' திரைப்படம் ஜெயா டிவியின் வசமாகியுள்ளதாம்.

 

'ஹேக்கர்' அஜீத்தின் படத்திற்கு பெயர் 'வலை'

It Is Valai Hacker Ajith

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார் ஹேக்கராக நடிக்கும் படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப் போகிறார்களாம்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தின் தலைப்பு வ என்ற எழுத்தில் துவங்கும் என்று கூறப்பட்டது. வ என்ற எழுத்தில் துவங்கிய வாலி, வில்லன் ஆகிய படங்கள் அஜீத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் ஆகும். அந்த வகையில் தற்போது அவர் நடிக்கும் படத்திற்கும் அதே வ என்ற எழுத்தில் பெயர் தேடினார்கள்.

இந்நிலையில் படத்திற்கு வலை என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தில் அஜீத் ஹேக்கராக நடிப்பதால் வலை என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகிறார்களாம். மேலும் இந்த தலைப்பை வைப்பது என்று தான் நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தார்களாம்.

இதற்கிடையே அஜீத் படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த சிவந்த மண் தலைப்பை பயன்படுத்த மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் குடம்பத்தை விஷ்ணுவர்தன் அணுகினார் என்பது பொய்யாம். அந்த பெயரை வைக்க அவர்கள் நினைக்கவே இல்லையாம்.

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக பிப்ரவரி மாதம் துபாய் செல்கிறார்கள்.

 

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வைரமுத்து கோரிக்கை

Vairamuthu Wants Thirukural Be Declared National Book

சென்னை: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கவியரசு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் திருநாளில் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கை. இந்திய அரசு தேசிய அடையாளங்களாக சிலவற்றை பேணி வருகிறது. ஆனால், தேசிய நூல் என்ற ஓர் அடையாளம் இன்று வரை உண்டாக்கப்படவில்லை. இனம் கடந்து மொழி கடந்து இடம் கடந்து உலக பொதுமறையாக திகழும் ‘திருக்குறள்' தான் தேசிய நூலாக திகழ முடியும் என்று தமிழர்கள் நம்புகிறோம்.

எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுகிறோம். ஒரு கருத்து நூறு ஆண்டுகள் நீடிப்பதே அரிது. ஒரு கருத்து இரு நூறு ஆண்டுகள் நீடிப்பது அரிதினும் அரிது. ஆனால், ஒரு தமிழன் சொன்ன கருத்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் நீடித்து உலக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிலைத்து நிற்கிறது. அது தமிழனின் பெருமை.

காப்பு கட்டுவது ஏன்?:

தமிழர்கள் மரபுவழி அடையாளங்களை இழந்து வருகிறார்கள். பொங்கல் திருநாளின்போது இல்லங்களில் காப்புக் கட்டுவார்கள். காப்பு என்றால் உயிர்க் காப்பு என்று பொருள் கொள்ள வேண்டும். இதன் உள்ளீடு என்ன என்பதை உங்களுக்கு சொல்வதை நான் கடமையாக கருதுகிறேன்.

காப்பு நான்கு தாவரங்களைக் கொண்டு கட்டப்படுவது. கூழைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலைகளால் கட்டப்பட்டு வீட்டின் கூரைகளில் செருகப்படும். கூழைப்பூ பாம்புக்கடிக்கு சிறந்த விஷமுறிவு மருந்தாகும். பாம்பு கடித்து விட்டது என்று அறிந்தவுடன் கூழைப்பூவை கசக்கிச் சாறெடுத்து கண்ணில் விட்டால் அது விஷத்தை முறிக்கும் என்பது தமிழர்கள் கண்டறிந்த உண்மையாகும்.

அந்த கூழைப்பூவை பாதுகாக்கத்தான் வேப்பிலையும், மாவிலையும், ஆவாரம்பூவும் ஒன்றாக கட்டப்படுகின்றன. இப்படி பொருளறியாத பல தமிழ் மரபுகளை நாம் அறிந்து பாதுகாக்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற பொது உடைமை நோக்கில்தான் வீட்டுக்கு வெளியே காப்பு கட்டப்படுகிறது. எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ளவே இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழர்கள் ஏற்படுத்தியிருந்தனர். இந்த அடையாளங்களை எல்லாம் தமிழர்கள் மறந்துகொண்டே வருகிறார்கள். அவற்றின் பொருள் அறிந்து தமிழர்கள் புதுப்பிக்க வேண்டும்.

ஜெயலலிதா அரசுக்கு நன்றி!:

திருவள்ளுவர் திருநாளில் உலகத் தமிழர்களுக்கு ஒரு செய்தி. திருக்குறளை அனைவரும் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும். திருக்குறளைப் பாதுகாப்பது என்பது அதை ஓதுவது மட்டுமல்ல. உணர்வது மற்றும் வாழ்வது. இதுதான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் பாதுகாக்க குரல் கொடுத்த கலைஞருக்கும், அதைச் செவிமடுத்துப் செயல்படுத்தும் தமிழக அரசுக்கும் எனது நன்றியை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

இளைய தலைமுறையினர் சபதம் எடுக்க வேண்டும்:

இந் நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் பொங்கல் விழா மற்றும் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் புத்தகத்தின் திறனாய்வு விழிப்புணர்வு விழா ஆகியவை நடந்தன.

அதில் பேசிய வைரமுத்து, மொழி என்பது மற்றவர்களுக்கு வேறு. தமிழர்களுக்கு வேறு. தற்போது வட இந்திய உணவுகள் பீட்சா போன்றவை நம்மை ஆக்கிரமித்து உள்ள நிலையில், தமிழக உணவுகளான கம்பு, சோளம், தினை, ராகி ஆகியவை எங்கே உள்ளது என்று தேட வேண்டி உள்ளது.

தமிழகத்தில் உணவுகள் மாறி விட்டன. உடைகள் மாறி விட்டன. ஆனால், தாய்மொழி மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் தாய் மொழியை மறக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். சொல் வளத்தை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

தற்கொலை என்பது முடிவல்ல:

எந்தவொரு நிலையிலும் தற்கொலை என்ற முடிவை எடுக்கக் கூடாது. இது வாழ்வதற்காக பிறந்த மண். தற்கொலை என்பது முடிவல்ல. எனவே, முடிந்த வரை போராட வேண்டும்.

மதித்தல், நேசித்தல் என்பது தமிழர்களின் பண்பாடு. சாட்சிகள் இல்லாத இடத்தில் நேர்மையாக இருப்பதே மிகச் சிறந்த ஒழுக்கமாகும். மனக்கட்டுப்பாடு என்பதே வாழ்க்கையின் கட்டுப்பாடாகும்.

பிறமொழியை நேசியுங்கள்.. தமிழ் மொழியை சுவாசியுங்கள்:

படைப்பு என்பது சுகமான சொற்களையும், நயமான கதைகளையும் கொண்டதாகும். ஒருவர் படைக்கும் படைப்புகள் படிப்பவர்களின் கண்களை அறையும் வகையிலும், இதயத்தை வருடும் வகையிலும் இருக்க வேண்டும். பிறமொழியை நேசியுங்கள். ஆனால், தமிழ் மொழியை சுவாசியுங்கள் என்றார்.

 

நாதஸ்வரம் குடும்பத்தின் கலாட்டா பொங்கல்!

Nathaswaram Pongal Special Village Games

பொங்கல் பண்டிகை என்பது உற்றார் உறவினர்களுடன் கூடி கொண்டாடி மகிழும் பண்டிகை. சன்டிவியில் நாதஸ்வரம் தொடரில் நடிக்கும் நடிகர்கள் இணைந்து கலாட்டா பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை சுந்தராபுரம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் இருந்து பொங்கல் கொண்டாட அதிக அளவில் அழைப்பு அனுப்பியிருந்தனர். இதனால் நாதஸ்வரம் குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகளில் விளையாடி மகிழ்ந்தனர். இது மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாலையில் ஒளிபரப்பானது.

நாதஸ்வரம் குடும்பம் ஒற்றுமையாக இருந்தாலும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்வார்கள். சொக்கலிங்கம், மயில் குடும்பத்தினர் ஒருபக்கம் என்றால் அவர்களின் சம்பந்தி நெல்லியாண்டவரின் மனைவி லீலாவதி அவர்களுக்கு எதிராக பேசி வருவார். அது பொங்கல் கொண்டாட்டத்திலும் எதிரொலித்தது.

யாருடைய பொங்கல் பொங்கும்

ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் தனித்தனியாக பொங்கல் வைக்க கிளம்பினார்கள். யாருடைய பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்களுடைய பொங்கலைத்தான் சுவாமிக்கு படைக்கவேண்டும் என்று தெரிவிக்கவே போட்டி போட்டுக்கொண்டு பொங்கல் வைத்தனர்.

விளையாட்டு போட்டியில் கலக்கல்

இதனிடையே விளையாட்டுப் போட்டி வேறு நடைபெற்றது. அண்டாவில் உள்ள தண்ணீரை எடுத்துக்கொண்டுபோய் பாட்டிலில் ஊற்றவேண்டும் என்பதுதான் போட்டி. கடைசிவரைக்கும் யாருமே பாட்டிலில் தண்ணீரை ஊற்றவில்லை. அதேபோல் சைக்கிள் போட்டியில் ஹீரோ கோபிதான் முதல்பரிசை தட்டிச் சென்றார்.

இவர்கள் எல்லோரும் விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்த கடைசியில் ஒருவழியாக பொங்கல் பொங்கியது. குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என உற்சாக கூச்சலிட இனிதே முடிந்தது நாதஸ்வரம் குடும்பத்தின் கலாட்டா பொங்கல்