குழந்தையின்மை சிகிச்சை மையம்... குஷ்பு, சுரேஷ் கோபி தொடங்கி வைத்தனர்!


சென்னை: நூறு சதவீதம் பெற்றோர்கள் மூலம் மட்டுமே குழந்தை பெற வழி செய்யும் கிராஃப்ட் மருத்துவமனையை சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

kushboo suresh gopi inaugurates craft hospital
Close
 
இவர்களுடன் நடிகைகள் சுஹாஸினி, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருவுறாமைக்கான சிகிச்சையில் முன்னணி வகிக்கும் கிராஃப்ட் மருத்துவமனை & ஆய்வு மையம் தனது மையத்தைச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் சமீபத்தில் தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்.

நடிகரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் கோபி ஆணுறுப்பு நோயியல் மற்றும் பாலியல் பிரிவுகளைத் திறந்து வைத்தார்.

பிரபல திரைப்பட நடிகைகளான சுஹாசினி மணிரத்னம் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் லேபரோஸ்கோபி மற்றும் குழந்தையின்மைப் பிரிவுகளைத் தொடங்கி வைத்தனர்.

கிராஃப்ட் மருத்துவமனையில் அதி நவீன 'ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்' நோய்க்குறி அறிதல் மற்றும் சகிச்சைக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே கூரையின் கீழ் அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கும் வகையில் தன்னிறைவு பெற்ற மருத்துவ மையமாக கிராஃப்ட் விளங்குகிறது. முறையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கு அடிப்படையான நோய்க்குறி அறிதலுக்கு கிராஃப்ட் முழுமையான உத்தரவாதம் தருகிறது.

 

மூவாயிரம் பிரிண்டு... அதான் விஸ்வரூபம் லேட்டு! - கமல் விளக்கம்

Vishwaroopam Release 3000 Plus Theaters   

சென்னை: விஸ்வரூபம் படம் மூவாயிரம் பிரிண்டுகள் வெளியாகவிருப்பதாலேயே இவ்வளவு தாமதமாவதாக நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல்- பூஜா குமார் - ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் விஸ்வரூபம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் ஆரோ 3டி எனும் ஒலி நுட்பத்தில் தயாராகியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்துக்கேற்ப திரையரங்குகளைத் தயார்ப்படுத்தும் பணி நடக்கிறது. தமிழகம் தவிர, கேரளா, ஆந்திராவிலும் இப்படி அரங்குகளை மேம்படுத்துகிறார்கள்.

இதுகுறித்து கமல் கூறுகையில், "பொதுவாக நமது பக்கவாட்டில் இருந்துதான் சப்தம் கேட்கும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதால், மேல் தளத்திலிருந்து உங்களுக்கு சப்தம் கேட்கும்.

இதுவரை இந்த வாய்ப்பை நான் அமெரிக்கத் திரையரங்குகளில் மட்டுமே அனுபவித்துள்ளேன். இனி தமிழகத்திலும் இந்த வாய்ப்பு கிட்டும் என்பது பெருமையாக உள்ளது. அதனைக் கேட்கும் போதுதான் நீங்கள் உணர்வீர்கள்.

படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஏன் என்றால், ஒரே சமயத்தில் ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதற்காக 3000 பிரிண்ட் போடப்பட வேண்டும். அதற்காகவே வெளியீடு தள்ளிப்போயுள்ளது," என்றார்.

 

டோலிவுட்டை டீலில்விட்டு மும்பைக்கு ஜாகையை மாற்றிய இலியானா

Ileana D Cruz Moves Mumbai   

மும்பை: நடிகை இலியானா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த வசதியாக ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானா பர்ஃபி படம் மூலம் பாலிவுட் சென்றார். முதல் படமே ஹிட்டான சந்தோஷத்தில் இருந்த இலியானா எங்கே டோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு மும்பைக்கு போய்விடுவாரோ என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. இந்நிலையில் இலியானா பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த வசதியாக மும்பை பந்த்ரா பகுதியில் வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார்.

இனி மும்பையில் தான் பெர்மனன்ட்டாக இருக்கப் போவதாக அவரே தெரிவித்துள்ளார். தற்போது அவர் ஷாஹீத் கபூருடன் சேர்ந்து ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கிவிட்டாலும் இன்னும் இலியானா, ஷாஹீத் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஷாஹீதுடன் சேர்ந்து பணியாற்ற இலியானா ஆர்வமாக இருக்கிறார்.

இப்படித் தான் தென்னிந்திய படங்களில் நடித்த அசின் கஜினி மூலம் பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். மேலும் ஸ்ருதி ஹாசனும் மும்பையில் ஒரு வீட்டை எடுத்து தங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நயன்-ராணா ஜோடி மும்பை வரும்போது எஸ்ஸாக பிரபுதேவா திட்டம்

Prabhu Deva Irked With Nayan Rana

மும்பை: கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் படத்தை மும்பையில் விளம்பரப்படுத்த ராணா, நயன்தாரா மும்பை வரும்போது அங்கிருந்து வெளியேற பிரபுதேவா முடிவு செய்துள்ளாராம்.

ராணா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு படம் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும். நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்த ஹீரோ, ஹீரோயின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்களாம். மேலும் இப்படத்தை இந்தியில் டப் செது வெளியிடும் திட்டமும் உள்ளது என்று கூறப்படுகிறது.

அதனால் ராணா, நயன்தாரா மும்பை செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது ராணாவும், நயனும் நல்ல நண்பர்களாகிவிட்டனராம். ஆனால் அவர்கள் டேட் செய்வதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் அவர்கள் மும்பை வரும்போது அங்கிருந்து கிளம்பி வேறு எங்காவது செல்லத் திட்டமிட்டுள்ளாராம் பிரபுதேவா.

நயன்தாராவைப் பிரிந்த பிறகு பிரபுதேவா மும்பையில் தங்கி இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நேரத்தில் முன்னாள் காதலியை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறார் அவர்.

 

துப்பாக்கி திரையிட்ட தியேட்டரில் மின்தடை: பணத்தை திரும்ப கேட்டு ரசிகர்கள் தகராறு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் துப்பாக்கி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் மின் தடை ஏற்பட்டதால் ரசிகர்கள் டிக்கெட் பணத்தை திரும்ப கேட்டு ரசிகர்கள் தகராறு செய்தனர்.

power cut forces nagarkoil theter return ticket   
Close
 
நடிகர் விஜய் நடித்துள்ள ‘துப்பாக்கி‘ திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீசானது. நாகர்கோவிலில் உள்ள ஒரு தியேட்டரில் சனிக்கிழமையன்று மாலைக்காட்சி நடந்து கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஜெனரேட்டர் மூலம் படம் ஓடிக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அந்த ஜெனரேட்டரும் பழுதாகிவிட்டது. இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர் வேறு ஒரு ஜெனரேட்டரை வெளியில் இருந்து வரவழைத்து படத்தை இயக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் அரைமணிநேரம் தாமதமானது. அதன்பிறகு ஜெனரேட்டர் வந்ததும் மீண்டும் படம் ஓடத்தொடங்கியது.

ஆனால் திரைப்படம் பார்க்க வந்திருந்த விஜய் ரசிகர்களில் சிலர் தங்களுக்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறி டிக்கெட்டுக்காக கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கூறி தியேட்டர் நிர்வாகிகளிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனாலும் அந்த ரசிகர்கள் தங்களது பணத்தை திரும்பக்கேட்டு தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்யவே அவர்களுக்கு தியேட்டர் நிர்வாகத்தினர் பணத்தை திரும்ப வழங்கி அனுப்பி வைத்தனர்.

 

இயக்குனர் ஜோதிகிருஷ்ணா-ஐஸ்வர்யா திருமணம்!

director jyoti krishna wed aishwary
Close
 
பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணா - ஐஸ்வர்யா திருமணம் வரும் நவம்பர் 23-ம் தேதி நடக்கிறது.

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜோதிகிருஷ்ணா. ஊலலல்லா படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கினார்.

இந்த நிலையில் அவருக்கும் ஐஸ்வர்யா என்வருக்கும் திருமணம் நிச்சயமானது. இருவரின் திருமணமும் வரும் நவம்பர் 23ம் தேதி திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் மணமகன் - மணமகள் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

அதன்பிறகு இருபத்தாறாம் தேதி திருமண வரவேற்பு. ஹைதராபாதில் பிரம்மாண்ட ஹோட்டலான லீலா பாலஸில் நடைபெறுகிறது. இதில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் திரை உலகை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

மணமகள் ஐஸ்வர்யாவும் ஒரு தீவிர சாய்பாபா பாகத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 

துப்பாக்கி 2ம் பாகம் வரலாம்: விஜய் சூசகம்

Vijay Hints At Sequel Thuppakki
சென்னை: துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் வரக்கூடும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி தீபாவளி அன்று ரிலீசானது. ரிலீசான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது. பல பிரச்சனைகளுக்கு நடுவே துப்பாக்கி வெற்றிகரமாக ஓடுவதால் விஜய், காஜல் உள்பட அனைவருமே மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜயிடம் நிஷாவை மணக்காமல் ஜெகதீஷ் தனது கடமையைச் செய்ய கிளம்பிவிட்டது போல் துப்பாக்கி படம் முடிந்துவிட்டதே. அப்படி என்றால் இரண்டாம் பாகம் வரும் போலிருக்கே என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், நானும் இதைத் தான் முருகதாஸிடம் கேட்டேன், அதற்கு அவர் 2ம் பாகம் வரலாம் என்பது போல் சூசகமாகக் கூறினார் என்றார்.
இதற்கிடையே மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், விஜயும் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
 

ரீலும் ரியலும் மோதிய கலக்கல் கபடிப் போட்டி

சின்னத்திரை நடிகைகளும், கபடி சாம்பியன்களும் இணைந்து விளையாடிய கலக்கல் கபடிப் போட்டி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. கபடி மட்டுமல்லாது ஆட்டம், பாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

chinnathirai actress kalakkal kabaddi kpl
Close
 
ஜெயாடிவியில் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் கலக்கல் கபடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மிகச்சிறந்த கபடி விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

இதில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் அவ்வப்போது போட்டியில் பங்கேற்று விளையாட்டு வீராங்கனைகளையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரம் சனிக்கிழமை தினத்தன்று சின்னத்திரை நடிகைகளுக்கும், ஒரிஜினல் கபடி விளையாட்டு வீராங்கனைகளுக்கும் நடைபெற்ற போட்டி ஒளிபரப்பானது. ரீல் மற்றும் ரியல் அணியினர் மோதிய இந்த விளையாட்டுப் போட்டு ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

சின்னத்திரை நடிகைகள் மகாலட்சுமி, ரம்யா, ஷிவானி, ஜோதி, நீபா, ஸ்ரீஜா ஆகியோர் ஒரு அணியாகவும், கபடி விளையாட்டு வீராங்கனைகள் மற்றொரு அணியாகவும் விளையாடினர். இரு அணியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல விளையாடியதை ரசிகர்கள் விசிலடித்து உற்சாகப்படுத்தினர்.

இதில் ரியல் அணி 29 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. நடிகை ஷிவானி சிறந்த ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார். போட்டியின் முடிவில் சின்னத்திரை நடிகைகள் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதில் நீபா சிறந்த நடன நாயகியாக அறிவிக்கப்பட்டார்.

மேக்அப் போட்டு நடித்த சின்னத்திரை நடிகைகள் வியர்க்க விறுவிறுக்க கபடி விளையாடியதை ஈரோடு நகரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

 

மம்மூட்டிக்காக மலையாள படத்தில் நடிக்கும் தனுஷ்

Dhanush Goes Mollywood

சென்னை: தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மம்மூட்டி மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக அவர் நடிக்கும் மலையாள படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒய் திஸ் கொலவெறி பாடல் பிரபலமானதற்குப் பிறகு தனுஷ் பாலிவுட் சென்றார். அங்கு சோனம் கபூருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மாலிவுட்டுக்கும் போகிறார். தாம்ப்சன் இயக்கத்தில் ம்மூட்டி, திலீப் நடிக்கும் காமத் அன்ட் காமத் மலையாளப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

முன்னணி ஹீரோவாக உள்ள அவர் 2 ஹீரோக்கள் உள்ள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம் உண்டு. மம்மூட்டி மீது தான் வைத்திருக்கும் மரியாதை காரணமாகத் தான் அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து இயக்குனர் தாம்ப்சன் கூறுகையில்,

காமத் அன்ட் காமத் கதையை தனுஷிடம் கூறியதுமே அவருக்கு பிடித்துவிட்டது. படத்தில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டார். அவர் கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றார்.

 

நயன், ஷ்ரேயா டேட் பிராப்ளம் அஞ்சலிக்கு நல்லதாப் போச்சு

Nayan Shriya S Loss Anjali S Gain

சென்னை: சிங்கம் 2 படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாட்டில் நடிகை அஞ்சலி கவர்ச்சியாக ஆடியுள்ளாராம்.

சிங்கம் பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

சிங்கம் 2ல் இரண்டு ஹீரோயின்

சிங்கம் படத்தில் சூர்யா, அனுஷ்கா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா என்று 2 நாயகிகள் உள்ளனர்.

நோ சொன்ன நயன், ஸ்ரேயா

சிங்கம் 2 படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வருமாறு நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரை ஹரி அணுகினாராம். இது தவிர பாலிவுட், டோலிவுட் பக்கமும் நடிகையைத் தேடிச் சென்றும் பயனில்லை.

சட்டென்று டேட் கொடுத்த அஞ்சலி

அதன் பிறகு அஞ்சலியைக் கேட்டபோது ஓ.கே. சொல்லி டேட் கொடுத்ததுடன் தூத்துக்குடியில் நடந்த ஹீரோ அறிமுக பாடல் காட்சியில் கவர்ச்சியாக ஆடிவிட்டுப் போயுள்ளார். அதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சிங்கம் 2ம் இந்திக்கு போகுமா?

சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. அங்கு அஜய் தேவ்கன், காஜல் அகர்வால் நடித்திருந்தனர். இந்நிலையில் சிங்கம் 2ம் பாகமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

தூக்கத்தில் நடக்கும் நோயால் அவதி: சுவிட்சர்லாந்துக்கு போகிறார் சமீரா ரெட்டி

மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

sameera reddy travels europe treatment
Close
 

நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழந்தைக்கு துபாயில் சில விளையாட்டுப்பொருட்களை வாங்கிக் கொண்டு கிரீஸ் செல்கிறார் சமீரா. இதன் பின்னர் அடுத்த சில வாரங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.

ஐரோப்பா பயணம் குறித்து நடிகை சமீரா ரெட்டியிடம் கேட்டதற்கு, தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு சிகிச்சை பெற சுவிட்சர்லாந்து செல்ல போவது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

‘வாரணம் ஆயிரம்' படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி, தமிழில் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ‘மைனே தில் துஜ்கோ தியா' என்ற படத்தில் அறிமுகமான சமீரா இதனைத் தொடர்ந்து ‘நோ என்ட்ரி', ‘ரேஸ்'' ‘ஒன் டூ திரி' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறு பட்ஜெட் படங்களுக்கு விருது வழங்கிய அபிராமி ராமநாதன்

Abirami Mega Mall Small Budget Movie Award 2012

அபிராமி மெகா மால் நிறுவனம் முதன் முதலாக சிறு பட்ஜெட் படங்களுக்கான விருதுகளை வழங்கியது. மலேசியாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வரவேற்றுப் பேசிய அபிராமி ராமநாதன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை தன்னுடைய குருநாதர் என்றார். நடிகை சரோஜா தேவியை கனவுக் கன்னி என்று கூறிய ராமநாதன், தன்னுடைய மனைவி சரோஜா தேவி மாதிரி இருப்பதாக கூறினார்.

அபிராமி விருதுகள் நிகழ்ச்சி ஜெயா டிவியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பானது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக நடைபெற்ற விழாவில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், பின்னணிப் பாடகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை நண்டு ஜெகன், பூர்ணிதா தொகுத்து வழங்கியவர்கள்.

சிறந்த திரைப்படங்களுக்கான விருது பதினாறு, வாகை சூடவா படங்களுக்கு வழங்கப்பட்டன. சதுரங்கம் படத்தில் நடித்த ஸ்ரீகாந்த்துக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுகநடிகர் விருது எங்கேயும், எப்போதும் படத்தில் நடித்த ஷர்வானந்த்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகை விருது வாகைசூடாவா படத்தில் நடித்த இனியாவிற்கு கிடைத்தது.வாழ்நாள் சாதனையாளர் விருதினை இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும், நடிகை சரோஜா தேவியும் பெற்றனர்.

வழக்கமாக, டிவி சேனலோ, பத்திரிக்கையோதான் திரைப்படத்துறையினருக்கு விருது வழங்கும் விழா நடத்துவார்கள். முதல்முறையாக அபிராமி மெகா மால் நிறுவனத்தினர் சிறு பட்ஜெட் படங்களை ஊக்குவிக்கும் விதத்தில் விருது நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.