மனசெல்லாம் ஊர்லதாங்க்கா இருக்கு.. சுஹாசினியிடம் நெகிழ்ந்த கஞ்சா கருப்பு!

Suhasini S Encounter With Ganja Karuppu
ஆட்டோகிராப் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் சுகாசினி மணிரத்னம். வழக்கம்போல பேட்டியாக மட்டும் இல்லாமல் பேட்டி காணப்படுபவரின் இளமை காலங்களை அவர்களின் நண்பர்களின் மூலம் கேட்டு தெரிந்து கொள்வது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யம்.

செவ்வாய்கிழமை இரவு நடிகர் கஞ்சா கருப்புடன் உரையாடினார் சுகாசினி. நகைச்சுவை நடிகர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்த கருப்பு சிறந்த மனிதாபிமானி என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது உதவும் குணம் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.

கிராமத்தில் இருந்து வந்த தன்னை தமிழ்நாட்டுக்கே அடையாளம் காட்டிய இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரின் பெயரை தான் கட்டிய வீட்டிற்கு சூட்டியுள்ளதாக பேட்டியின் போது தெரிவித்தார் ஏற்றிவிட்ட ஏணிப்படியை எட்டி உதைக்கும் இந்த காலத்தில் அவரது செயல் வியப்பை ஏற்படுத்தியது.

சுஹாசினியிடம் பேசும்போது இன்னும் நான் ஊர்லதாங்க்கா இருக்கேன். உடம்பு மட்டும்தான் சென்னையில இருக்கு என்று தனது ஊர்ப்பாசத்தை கஞ்சா கருப்பு வெளிப்படுத்தியபோது சென்னையில் வசித்து வரும் வெளியூர்க்காரர்களின் உணர்வுகளைத் தொடுவதாக இருந்தது.

எளிமையும், பழையதை மறக்காத இந்த குணமும் கஞ்சா கருப்புவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றால் மிகையாகாது.
 

'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!

Sneha Prasanna Sells Wedding Telecast Rights
கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.

தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும்.

பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம்.

மொய் வருதோ இல்லையோ, திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பெரும் தொகை கல்யாண வீடியோவுக்கு விலையாகக் கிடைத்திருப்பதில் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் செம சந்தோஷமாம்.

போகிற போக்கைப் பார்த்தால் வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் வீட்டு, காது குத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்புகள் என எல்லா நிகழ்வுகளின் வீடியோக்களுமே விற்பனைக்கு வரும் போலிருக்கிறது!
 

என் ஷோவைக் காப்பியடிச்சுட்டாங்க... ராக்கி புலம்பல்!

Rakhi Sawant Slams Aamir Khan Satyamev Jayate
ஆமிர்கான் பங்கேற்கும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி, தன்னுடைய ராக்கிகா இன்சாப் நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று ராக்கி சாவந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆமிர்கான் முதல் முறையாக டிவிக்கு வந்துள்ளார். சத்யமேவ் ஜெயதே என்ற புதிய நிகழ்ச்சியின் மூலம் இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஆமிர்கான். ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சி தனது நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் ராக்கி சாவந்த்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அப்படியே எனது ராக்கி கான் இன்சாப் நிகழ்ச்சியை காப்பி அடித்து விட்டார்கள். எனது நிகழ்ச்சியின் பார்மட்டை அப்படியே சுட்டுள்ளனர். ஆமிர்கான் பெரிய பிரபலமான நடிகர் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு காலை நேரத்தை ஒதுக்கி காட்டி வருகின்றனர் என்றார் ராக்கி.

ராக்கி கா இன்சாப் நிகழ்ச்சி முன்பு என்டிடிவி இமேஜின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காரணம், ராக்கி சாவ்ந்த் அசிங்கம் அசிங்கமாக பேசியதால். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ராக்கி இப்படி புகார் தெரிவித்துள்ள நிலையில், பாடகர் பலஷ் சென் என்பவர் இன்னொரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தனது பாடல்களில் ஒன்றை சுட்டு, சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் டைட்டில் பாடலாக்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இசையமைப்பாளர் ராம் சம்பத் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

உண்மை வெல்லட்டும்...!
 

தமன்னாவைப் போல நானும்...மணிஷா யாதவ்!

I Will Become Good Actress Like Tamannah Says Manisha   
வழக்கமான ரிடையர் ஆன நாயகிகளைத்தான் முன்னோடியாக வரித்துக் கொள்வார்கள் இளம் நாயகிகள். ஆனால் தற்போதும் படு ஹீட்டாக பிசியாக இருக்கும் தமன்னாவை தனது வழிகாட்டியாக கூறிக் கொண்டு ஒரு இளம் நாயகி தமிழ் சினிமாவில் தனது உலாவைத் தொடங்கியுள்ளார்.

அவரது பெயர் மணிஷா யாதவ். தமிழுக்கு வந்து ஒரு படம்தான் ஆகிறது. அதுவும் முதல் படத்திலேயே மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளார் மணிஷா. அந்தப் படம் வேறு எதுவுமில்லை, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்தான். முதல் படமே பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளதால் ராசியான நடிகைகள் வரிசையில் சேர்த்து விட்டார்கள் மணிஷாவை. இப்போது அவரது கையில் பத்து விரல்கள் போக, 2 தமிழ்ப் படங்களும் இடம் பெற்றிருக்கிறதாம்.

அடுத்து சுசீந்திரன் படத்தில் நடிக்கப் போகும் மணிஷா முதலில் தமிழை தமிழ் போலவே பேசுவதற்காக ஒரு வாத்தியாரைப் போட்டு தமிழ் கற்க முடிவெடுத்துள்ளாராம்.

பெயரில் யாதவ் என்று உள்ளதைப் பார்த்து டெல்லியோ, குர்கானோ, பீகாரோ, உ.பியோ என்று நினைக்க வேண்டாம். இவர் பக்கத்து ஊரான பெங்களூரிலிருந்துதான் நடிக்க வந்துள்ளார்.

காதல் படம் பார்த்தபோதே அசந்து போய் விட்டாராம். இதனால்தான் பாலாஜி சக்திவேல் வந்து கேட்டவுடன் கால்ஷீட்டைக் கொடுத்து விட்டாராம். மேலும் தமன்னாவைத்தான் தனது வழிகாட்டியாக மானசீகமாக கருதுகிறாராம் மணிஷா. ஏன் என்றால், கல்லூரி படத்தில் தமன்னா நடித்ததைப் போல நடிக்க வேண்டும் என்று அடிக்கடி மணிஷாவிடம் பாலாஜி சக்திவேல் கூறிக் கொண்டிருப்பாராம்.

இதனால் தமன்னாவின் பால் ஒரு மரியாதை வந்து விட்டதாம் மணிஷாவுக்கு. தமன்னாவைப் போலவே நானும் வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறும் மணிஷா, தமன்னாவை பின்பற்றி நானும் ஒரு நல்ல நடிகை என்பதை நிரூபிப்பேன் என்று கூறுகிறார்.

தமன்னாவிடம் உள்ள அனைத்துமே இவரிடமும் இருப்பதாகவே தெரிகிறது. எனவே நிச்சயம் தமன்னாவைப் போலவே வருவார் என்று நாமும் நம்பலாம்...
 

பாகன் ஷூட்டிங்கில் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஸ்ரீகாந்த்!

Bomb Blast Srikanth Escapes Unhurt   
பாகன் பட ஷூட்டிங்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பாகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் டூப் போடாமல் தானே நடித்தார். காட்சிப்படி குண்டுவெடிக்கும்போது படக்குழுவினர் கயிற்றின் மூலம் ஸ்ரீகாந்தை அங்கிருந்து தூக்க வேண்டும். ஆனால் குண்டுவெடிக்கும் முன்பே கயிறு அறுந்துவிட்டது. இதை படக்குழுவினர் யாரும் கவனிக்கவில்லை.

ஆனால் ஸ்ரீகாந்த் எப்படியோ குண்டுவெடிக்கும் முன்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு விபத்தை சந்திக்கிறேன். எனக்கும், தீக்கும் அவ்வளவு ராசி. என்னை விபத்து பையன் என்றே அழைக்கலாம்.

குண்டுவெடிக்கும்போது என்னை அங்கிருந்து தூக்க கட்டப்பட்டிருந்த கயிறு குணடு வெடிக்கும் முன்பே அறுந்துவிட்டது. அது படக்குழுவினருக்கு தெரியாது. நான் எப்படியோ அங்கிருந்து வெளியேறவும், குண்டு வெடிக்கவும் கரெக்டாக இருந்தது. குண்டு வெடித்தபோது படக்குழுவினர் என்னை தூக்க கயிற்றைப் பிடித்து இழுக்க முயன்றபோது தான் அவர்களுக்கு கயிறு அறுந்ததே தெரிந்தது.

டூப் ஆர்டிஸ்டகளுக்கும் குடும்பம் உள்ளது. இது போன்ற காட்சிகளால் அவர்களுக்கும் ஆபத்து என்று தெரிந்து தான் நானே நடிக்க தீர்மானித்தேன் என்றார்.
 

அஞ்சலி - ஓவியாவுக்கு ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி!!

Chemistry Between Anjali Oviya Kalakalappu Movie
பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சு என்று பேசிக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.

கலகலப்பு படத்தில் இது தலைகீழாகி, இரண்டு ஹீரோயின்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

அஞ்சலியும், ஓவியாவும்தான் அந்த நாயகிகள்.

இந்த இருவரும் செட்டில் கூட ஒருவரையொருவர் பிரியவே இல்லையாம். எங்கும் ஒன்றாகவே இருந்தார்களாம். இருவருக்கும் ஒரே கேரவன்தானாம்.

இவ்வளவு நெருக்கமான தோழிகளாக இருவரும் திகழ்ந்ததால், யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற ஈகோ பிரச்சினை கூட எழவில்லையாம்.

அப்படியென்ன கெமிஸ்ட்ரி அது? என்று ஓவியாவிடம் கேட்டால், "நீங்கள்லாம் கேக்குற விதமே சரியில்லையே... நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லை. உண்மையிலேயே அஞ்சலி எனக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார்.

எங்களுக்குள் நல்ல புரிதலும், நெருக்கமான நட்பும் உருவாகிடுச்சி. கலகலப்பு மூலம் நல்ல தோழியை சம்பாதித்துவிட்டேன். மீண்டும் நாங்கள் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்," என்றார்.
 

மாற்றானை பெரும் விலைக்கு வாங்கிய ஈராஸ்!

Eros Grabbed Theatrical Rights Surya Maatran
சூர்யாவின் மாற்றான் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய விலைக்கு வாங்கியுள்ளது, ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்.

கேவி ஆனந்த் இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள மாற்றான் படம், ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புக்குரியதாக இருந்தது.

இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யாவும், அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

மாற்றானின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வெளியீட்டு உரிமை மற்றும் தமிழ் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஈராஸ்.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், "பிராந்திய மொழி சினிமாவில் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் காட்டும் வகையில் மாற்றானை வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இன்னும் பல படங்களை வாங்கி வெளியிட உள்ளோம்," என்றார்.
 

நாடே கொண்டாடும் வழக்கு எண் 18/9-க்கு வரி விலக்கு கொடுக்கலையே! - லிங்குசாமி

Lingusamy Requests Cm Give Tax Exemption Vazhakku En
நல்ல படம், மாணவர்களும் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் என்று அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வழக்கு எண் 18/9-க்கு வரி விலக்கு தந்தால் நன்றாக இருக்கும் என அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி கூறினார்.

படத்தின் வெற்றிவிழா சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய இயக்குநர் லிங்குசாமி,

வழக்கு எண் 18/9 படத்துக்கு யு.ஏ. சான்றிதழ் அளித்துள்ளனர். இதற்காக ரிவைசிங் கமிட்டிக்குப் போக முடிவு செய்தோம். ஆனால் ரிலீஸ் நெருங்கிவிட்டதால் வெளியிட்டுவிட்டோம். இப்போது 30 சதவீதம் படத்துக்கு வரியாகவே போகிறது. இது தரமான படம் என்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். பெற்றோரும் மாணவர்களும் பார்க்க வேண்டிய படம் என மீடியா பரிந்துரைத்துள்ளது.

துளி ஆபாசமோ, விரசமோ இல்லை. அனைத்து வகையில் சிறந்த படமான வழக்கு எண்ணுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு இதனை உங்கள் மூலம் கோரிக்கையாக வைக்கிறேன்," என்றார்.

கருணாநிதி காலத்தில் படத்தின் தலைப்பு தமிழில் இருந்தால் வரிவிலக்கு தரப்பட்டு வந்தது. ஆனால் ஜெயலலிதா முதல்வரான பிறகு, படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும், யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ஜான் டிரவோல்டா கையைப் பிடிச்சு இழுத்தாரா...?

Sex Charge On John Travolta
ஹோட்டலில் மசாஜ் செய்ய வந்த வாலிபரிடம் அத்துமீறி பாலியல் சில்மிஷத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டா ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் இதை டிரவோல்டாவின் பிஆர்ஓ மறுத்துள்ளார்.

டிரவோல்டாவுக்கு 58 வயதாகிறது. இவருடைய படங்களைப் பார்ப்போருக்கு அப்படியே விஜயகாந்த் டைப் படங்களைப் பார்ப்பது போலவே இருக்கும். ஹாலிவுட்டின் விஜயகாந்த் என்று கூட இவருக்குப் பெயர் வைக்கலாம். அப்படி ஒரு 'அதிரிபுதிரி'யான நடிகர் இவர்.

இப்போது டிரவோல்டா மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. அதாவது தனக்கு மசாஜ் செய்ய வந்த வாலிபரிடம் இவர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்பதே அந்த சர்ச்சை.

கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் டிரவோல்டா தங்கியிருந்தபோது இந்த சில்மிஷம் நடந்ததாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு 2 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி வழக்கும் போட்டுள்ளார்.

ஆனால் இதை டிரவோல்டாவின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற பொய் என்று அவர் மறுத்துள்ளார்.

வெளிநாட்டுக்காரர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தப்பு செய்தால், உடனடியாக இல்லாவிட்டாலும் கூட ஒரு கட்டத்தி்ல பகிரங்கமாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பார்கள். கிளிண்டனே கூட மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டவர்தான். அப்படி டிரவோல்டாவும் கேட்பாரா அல்லது வழக்கை சந்தித்து நிரபராதி என நிரூபிப்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
 

விஜய் இயக்க, விஜய் நடிக்கும் தலைவன்!

Vijay Vijay Join Hands Thalaivan   
தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நடிகர் விஜய். இன்னொருவர் இயக்குநர் ஏ எல் விஜய்.

இந்த இருவருமே இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து பணியாற்றியதில்லை.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் இப்போது ஒரு புதுப் படத்தில் இருவரும் இணைகிறார்கள்.

தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.

விஜய் தற்போது துப்பாக்கியில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் பணியாற்றுகிறார்.

அடுத்தது விஜய் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வருகிறார். இந்த ஆண்டு இறுதியில், நவம்பர் அல்லது டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கிசு கிசு - ஹீரோயின் சீண்டல் தயாரிப்பு கோபம்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

'த்ரி' படத்த பத்தி டோலிவுட் தயாரிப்பு கொடுத்த பேட்டி ஐஸ் தம்பதிக்கு ஷாக் கொடுத்துடுச்சாம்... கொடுத்துச்சாம்... இது சம்பந்தமா 'த்ரீ' தயாரிப்பு டோலிவுட் தயாரிப்ப போன்ல கூப்பிட்டு ரவுசுவிட்டாராம். நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன்.. நீங்கதானே போட்டிபோட்டு ரேட்ட ஏத்தனீங்கனு சத்தம்போட்டாராம். இதுக்கிடைல டென்ஷனான ஐஸ் ஹஸ்பண்ட் ஹீரோவ கூட்டிட்டு ஆப்ரிக்கா நாட்டுக்கு டூர் போயிட்டாங்களாம். மனசு லேசானப்பறம் ரெண்டுபேரும் திரும்புவாங்கன்னு நட்பு
வட்டாராம் சொல்லுதாம்... சொல்லுதாம்...

காட்டன் வீர ஹீரோவும், அனுஷ ஹீரோயினும் நடிக்கற படத்துல திடீர்னு போட்டி வந்துடுச்சாம்... வந்துடுச்சாம்... டான்ஸ் சீன்ல யார் ஸ்பீடா ஆடறதுன்னு போட்டி வச்சிகிட்டாங்களாம். என்னோட ஸ்பீடுக்கு உன்னால முடியாதுன்னு ஹீரோவ, அனுஷ நடிகை சீண்டி பார்த்தாராம். பதிலுக்கு ஹீரோவும் யூனிட்ல யார் கிட்ட வேணாலும் கேளு என் ஆட்டம்தான் ஸ்பீடுன்னு ரவுண்ட் கட்டினாராம். விளையாட்டு விபரீதமாகறதுக்குள்ள இயக்கம் தலையிட்டு சமாதானம் பண்ணாராம். ஆனாலும் ஹீரோயின் சைடுக்குதான் இயக்கத்தோட சப்போர்ட் இருந்துச்சாம்... இருந்துச்சாம்...

உயிரான எழுத்து படத்துல நடிக்கலேன்னு ஸ்டைலான நடன இயக்கம் ஸ்டேட்மென்ட் விட்டாராம்... விட்டாராம்...  அதுக்கு தயாரிப்பு சைடுலயிருந்து மறுபடியும் மறுப்பு வந்துருக்காம். 'இந்த படத்துல நீங்க ஹீரோவா நடிக்கறதா சொல்லலே. 4 ஹீரோல ஒரு ஹீரோவாதான் நடிச்சிருக்கீங்கனு சொல்றோம். வியாபாரத்த கெடுக்கற நோக்கத்தோட நடன இயக்கம் செயல்பட்றாரு'னு தயாரிப்பு புகார் சொல்றாராம். பிரச்னை தீரலன்னா சீக்கிரமே விவகாரம் பஞ்சாயத்துக்கு போகும்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...


 

பிரகாஷ்ராஜ் படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால் ஷூட்டிங் நிறுத்தம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படத்துக்கு ஹீரோயின் கிடைக்காததால் ஷூட்டிங் தொடங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிக்க உள்ள படம் 'கவுரவம்'. கவுரவ கொலைகள் பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் ஹீரோயினாக சரத்குமார் மகள் வரலட்சுமியும் ஒப்பந்தமானார்கள். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கூறி நாக சைதன்யா படத்திலிருந்து விலகினார். இதையடுத்து தெலுங்கு நடிகர் ஷிரிஷ் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஷிரிஷுக்கு வரலட்சுமி ஜோடியாக நடித்தால் பொருத்தமாக இருக்காது என ராதாமோகன் கருதினார். இதையடுத்து படத்திலிருந்து வரலட்சுமி நீக்கப்பட்டார்.
தமிழ், தெலுங்கில் படம் தயாராவதால் இரு மொழியிலும் பிரலமான இளம் நடிகை ஒருவரை தேர்வு செய்ய பிரகாஷ்ராஜ் விரும்பினார். இதற்காக இளம் நடிகை ஒருவரிடம் அவர் கால்ஷீட் கேட்டார். ஆனால் கால்ஷீட் இல்லை எனக் கூறி அந்த நடிகை மறுத்துவிட்டார். மேலும் சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. கதைக்கு பொருத்தமான ஹீரோயினை தேர்வு செய்ய முடியாமல் படக்குழு குழப்பத்தில் உள்ளது. இதனால் ஜனவரியில் தொடங்க வேண்டிய 'கவுரவம்' பட ஷூட்டிங், பல மாதங்களாகியும் தொடங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.




 

மல்லிகா ஷெராவத் ஆட்டம் குமட்டுகிறது: சமீரா தாக்கு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மல்லிகா ஷெராவத் ஆடிய குத்தாட்டம் குமட்டலாக இருக்கிறது என்றார் சமீரா ரெட்டி. பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் 'தேஸ்'. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் இயக்குனருக்கு தெரியாமல் மல்லிகா ஷெராவத்தை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் குத்து பாடலுக்கு ஆட வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷன் அந்த பாடல் கதைக்கு தேவையற்றது என்றதுடன் அதை நீக்கும்படி கூறினார். ஆனால் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை. தற்போது இப்படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

இதுகுறித்து ஹீரோயின் சமீரா ரெட்டி கூறியதாவது: 'தேஸ்' படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீரோ எல்லோருமே பாராட்டினார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். இந்நிலையில் இப்பாடலில் ஆட மல்லிகா ஷெராவத் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்ற தகவல் அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். இந்த பாடல் எனக்கு வழங்கப்பட்டிருந்தால் அதற்கு நியாயம் செய்திருப்பேன் என்று என்னை பாராட்டி பிரியதர்ஷன் கருத்து தெரிவித்திருக்கிறார். மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது. அவரிடம் பேசியதுகூட கிடையாது. அவர் குத்து பாடலுக்கு ஆடிய நடனத்தை பார்த்த பலர் குமட்டலாக இருக்கிறது என்றனர். இப்பாடல் கைநழுவிப்போனதுபற்றி ஒரு நடிகையாக எந்த வருத்தமும் எனக்கு இல்லை. இப்படத்தில் நடித்தபோது சந்தோஷமாகவே நடித்தேன். அதற்கேற்ப பாராட்டும் கிடைத்துள்ளது. குத்து பாடல் பிரச்னைதான் மனதை பாதித்தது. எனக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டிருந்தால் மற்ற எந்த நடிகையைவிடவும் நன்றாகவே ஆடி இருப்பேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார். சக நடிகை மல்லிகா ஷெராவத்தை நேரடியாக சமீரா தாக்கி பேசியது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

ஆர்யாவின் சேட்டை தொடங்கியது...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டெல்லி பெல்லி படத்தை தமிழில் ஆர்யாவை வைத்து ‌ரீமேக் செய்கிறார்கள் அல்லவா. அந்தப் படத்துக்கு தற்காலிகமாக சேட்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு பெயர் ப‌ரிசீலனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சேட்டையில் சந்தானம், பிரேம்‌ஜி, அஞ்சலி, ஹன்சிகா, நாசர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.



 

சித்தார்த்துடன் மோதும் பவர் ஸ்டார்!! - 'என் பட தலைப்பை பயன்படுத்துவதா?'

Power Star Srinivasan Opposes Sidhard Movie
பவர் ஸ்டார் என தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் டாக்டர் சீனிவாசனுக்கு மீண்டும் ஒரு பப்ளிசிட்டி!

ரஜினி, கமல் என டாப் நடிகர்களுடன் தன்னைச் சேர்த்து விளம்பரம் தேடும் பவர் ஸ்டாரை தேடி வந்திருக்கிறது ஒரு வாய்ப்பு.

இதில் சிக்கியவர் சித்தார்த். வேறு ஒன்றுமில்லை.... சீனிவாசன் பதிவு செய்து வைத்திருக்கும் படத் தலைப்பு ஒன்றை சித்தார்த் நடிக்கும் படத்துக்குப் பயன்படுத்திவிட்டார்களாம்.

அதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் சீனிவாசன். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ஏற்கெனவே பதிவு செய்த தலைப்பு இது. படப்பிடிப்பு வேறு நடக்கிறது. எனக்கு ஜோடியாக சங்கவி நடிக்கிறார். படத்தை சீக்கிரமே வெளியிடப் போகிறோம். இந்த நிலையில் அவர்கள் என் தலைப்பை பயன்படுத்தியுள்ளது தவறு. இந்தத் தலைப்பை யாருக்கும் தர முடியாது," என்றார்.

சித்தார்த் பட இயக்குனர் மணிகண்டன் இதுகுறித்து டாக்டர் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு கேட்டாராம். வலிய வந்து சிக்கிய வாய்ப்பை விடக் கூடாது என்று, பஞ்ச் வசனம் பேசி தலைப்பைத் தர மறுத்துவிட்டாராம் பவர் ஸ்டார்!
 

டிவி சீரியல்களில் 'கண்றாவிகள்'!!

Double Wife Characters Tv Serials
பிரபல தொலைக்காட்சிகளில் வெளியாகும் நெடுந்தொடர்கள் அனைத்தும் பெண்களை கண்ணீர் சிந்தவைப்பவையாகவும், மனதை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். அதிலும், வருடக்கணக்கில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்களில் பெரும்பாலும் இருதாரம் கொண்ட கதாபாத்திரங்கள், முறைகேடான காதலை மனதில் வரித்துக் கொண்டு அலையும் கேரக்டர்களுடன் கூடியதாக வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த நெடுந்தொடர்கள் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. மாமியாரை எப்படி வீட்டை விட்டு அனுப்புவது, நாத்தனாரின் வாழ்க்கையை எப்படி கெடுப்பது, மகனிடம் இருந்து மருமகளை பிரித்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து வைப்பது எப்படி என்றுதான் இந்த சீரியல்கள் பெரும்பாலும் கவலைப்படுகின்றன.

இன்னொரு கொடுமை, கஸ்தூரி, உறவுகள், இளவரசி, தங்கம், தென்றல், செல்லமே, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திற்கு இரண்டு மனைவி கண்டிப்பாக இருக்கும்.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் சீரியல்களுக்கு மக்கள் மனதில் கொஞ்சம் மரியாதை இருந்தது. தென்றல் சீரியல் மூலம் அந்த பெயர் பாதி கெட்டுப்போனது. மீதியை திருமதி செல்வம் இப்போது கெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவள் கணவனை அதுவும் நேற்றுவரை நண்பனாக கருதியவனை எப்படி வலையில் வீழ்த்தலாம் என்று திட்டமிட்டு சாதிக்கிறது ஒரு கதாபாத்திரம் பார்க்கும் போதே எரிச்சலும், அந்த இயக்குநர் மீது ஆத்திரமும் ஏற்படுகிறது பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் மத்தியில் செல்வத்திற்கு என்று ஒரு மரியாதை இருந்தது அதை கெடுத்து விட்டார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

கதாநாயகன் ராத்திரி குடித்து விட்டு வருகிறானாம், அவனது மனைவியை தூங்கச் செய்து விட்டு தோழி காத்திருக்கிறாளாம். வழக்கமாக மாடர்ன் டிரஸ் போடும் அவள், அன்று மட்டும் சேலையில் இருக்கிறாள். குடித்து விட்டு போதையில் வரும் நாயகன், கண்ணில் அவள் தனது மனைவி போலவே தெரிகிறதாம்.தட்டுத் தடுமாறி இருவரும் பெட்ரூமுக்குள் போகிறார்களாம். போய்க் கொஞ்ச நேரமான பின்னர் அந்தப் பெண் தலைவிரி கோலமாக இருக்கிறாளாம். போதை தெளிந்த நாயகன், என்னவென்று கேட்க, இப்படிப் பண்ணிட்டியே செல்வம் என்று அவள் புலம்புகிறாளாம். சினிமாவில்தானய்யா இப்படியெல்லாம் வரும்.. டிவி சீரியலிலுமா...

இனி சொல்லவே வேண்டாம். கணவர் ராமனாகவே இருந்தாலும் குல குத்துவிளக்குகள் நம்பப்போவதில்லை. எத்தனை தம்பதிகள் பிரிய காரணமாக இருந்து புண்ணியம் கட்டிக்கொண்டாரோ இந்த இயக்குநர். இவரேதான் 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் தொடரையும் இயக்குகிறார். அந்த தொடரில் கேட்கவே வேண்டாம் கணவனை விட்டு ஓடிய மனைவியும், மனைவியை விட்டு ஓடிவந்த கணவரும் இணைந்து குடும்பம் நடத்துகின்றனர். அந்த கண்றாவி வாழ்க்கைக்கு விளக்கம் கொடுத்து அதை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். தமிழ் கூறும் நல்லுலகம் இதையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது.

இதுதான் என்றில்லை, கிட்டத்தட்ட எல்லா டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் இப்படித்தான் கன்றாவிக் கட்சிகள் களேபரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன.

நல்லவேளையாப் போச்சு, தமிழ்நாட்டில் 75 சதவிகித ஊர்களில் அந்த நேரத்தில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. தப்பின குடும்பங்கள்!...
 

பாலா பட வாய்ப்பு போச்சே! - புலம்பும் பூஜா

Pooja Disappoints Due Losing Bala Movie   
பாலா படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பு நழுவிப் போனது பூஜாவைப் புலம்ப வைத்துள்ளது.

நான் கடவுள் வெளியான பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் பூஜா. பெங்களூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டார், திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் அவரைப் பற்றி அவ்வப்போது செய்திகள்.

இந்த நிலையில் திடீரென சென்னைக்கு வந்த அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

இன்னொருபக்கம் பாலா இயக்கும் பரதேசி படத்தில் கதாநாயகியாக பூஜா ஒப்பந்தமானார். இதை உறுதிப்படுத்தி பேட்டியும் கொடுத்தார் பூஜா. ஆனால் திடீரென இப்போது தன்ஷிகாவை கதாநாயகியாக்கியுள்ளார் பாலா. பூஜாவின் கால்ஷீட் பிரச்சினை காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ஷாக்கான பூஜா, புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

அவர் கூறுகையில், "பாலா என்னை தன் புதிய படத்தில் நடிக்க தேர்வு செய்தபோது என்னுடைய கேரக்டருக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றார். இதனால் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாத சூழல்.

நல்ல வாய்ப்பு பறிபோய்விட்டது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தேன். ஏமாற்றமாகிவிட்டதே," என்றார்.
 

மார்க்கெட் தளர்ந்ததால் 'ஐட்டத்துக்குத்' தாவிய சதா!

Sada Is An Item Girl Now   
நடிகை சதா வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி நடனம் ஆடும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார்.

ஜெயம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த மும்பை அழகி சதா. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவருக்கு சங்கரின் அந்நியன் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது. மாதவனுடன் எதிரி, வினயுடன் உன்னாலே உன்னாலே, ஆர்.கே.யுடன் புலி வேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரை ஆளையே காணோம்.

தமிழில் யாரும் வாய்ப்பு கொடுக்காததால் இந்தி, போஜ்புரி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தார். அங்கும் சிறிது காலத்தில் அவருக்கு மார்க்கெட் போய்விட்டது. இதையடுத்து வீட்டில் இருந்த அவர் தற்போது ஒரு பாட்டுக்கு மட்டும் கவர்ச்சியாக வந்து ஆடிவிட்டு போகும் அளவுக்கு இறங்கி வந்துள்ளார். சில நாயகிகள் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காவிட்டால் இப்படி ஒரு பாட்டுக்கு வந்து ஆடி வாய்ப்பு வாங்குவதும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சியாட்டத்தையும் முதலில் கோலிவுட்டில் இருந்தே துவங்கியிருக்கிறார். விஷாலை வைத்து சுந்தர் சி. எடுக்கும் 'மத கஜ ராஜா' படத்தில் ஒரு பாட்டுக்கு சதா கவர்ச்சியாக ஆடியுள்ளாராம். அந்த பாடல் ஒரு மில்லில் படமாக்கப்பட்டுள்ளது.

சதா அரைகுறை ஆடையில் இருந்தததால் அடையாள அட்டை வைத்திருந்த ஊழியர்கள் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை அந்த பக்கமே விடவில்லை.
 

ஜீ தமிழில் கலக்கும் ரோஜாவின் 'லக்கா கிக்கா'..!

Roja Sizzle Zee Tamil S Luckka Kickka
லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது புதிய விசயமல்ல. சிலர் கதாநாயகியாக நடிப்பார்கள். சிலர் நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த வரிசையில் ரோஜாவும் களம் இறங்கியுள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் ‘லக்கா, கிக்கா’ என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.

வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு சுற்றுக்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் வி‌டை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும்.

2 வது சுற்று திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார்.

3வது சுற்று ஏலம் விடும் நிகழ்ச்சி. 4 வது இறுதி சுற்றை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயா டிவியில் சிம்ரன் நடத்தும் ஜாக் பாட் நிகழ்ச்சிக்கு பலத்த போட்டியாக உருவாகும் என்று நேயர்கள் மத்தியில் இப்போதே ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

அப்பட அடுத்த 'ஜாக்கெட்' சண்டை ரெடி... !
 

நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?

Priya Anand Goes Nude   
அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன.

விஷயம் அவர் திறமை குறித்ததல்ல... சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது.

விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த்.

இந்த விளம்பரங்கள் சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்றவை. பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள்.

அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா?

ஏற்கெனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் நினைவிக்கலாம்!
 

போட்டி போட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்கும் சன் டிவி- விஜய் டிவி!

Neengalum Vellalam Oru Kodi Vs Kayyil Oru Kodi
தமிழ்நாட்டு மக்களை கோடீஸ்வரர்களாக்க போட்டு போட்டுக்கொண்டு கோடீஸ்வர நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன சில தமிழ் தொலைக்காட்சிகள். இந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளை விட நிகழ்ச்சி நடத்தப்படும் அரங்குகளே பிரம்மாண்டமாய் இருக்கின்றன என்கின்றனர் ரசிகர்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி’, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ போன்ற நிகழ்ச்சிகள் மக்களை சற்றே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் வாரம் முழுவதும் அழுகை தொடர்களை போட்டு ஒப்பேற்றுகின்றனர். வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதனை தொகுத்து வழங்குபவர் நடிகர் ரிஷி. இவர் ஏற்கனவே ‘டீலா நோ டீலா’ நிகழ்ச்சியின் மூலம் சன் டிவி நேயர்களுக்கு அறிமுகமானவர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமே ஒரு கோடி ரூபாயை விளையாடுபவர்களின் கையில் கொடுத்து விட்டு பின்னர் கேள்விகளை கேட்கின்றனர் என்பதே.

மொத்தமே ஏழு கேள்விகள்தான். ஒவ்வொரு சுற்றிலும் கேள்விகளுக்கான ஆப்சன்ஸ் கூறி அதிலிருந்து கேள்விகளைக் கேட்கின்றனர். பதில்களின் மேல் பணத்தை வைத்து விளையாட வைக்கின்றனர். ஏழாவது கேள்வி வரை வந்தவர்களுக்கு சன் தொலைக்காட்சியே ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்குகிறது. சுவாரஸ்யமாகத்தான் செல்கிறது. விளையாடுபவர்களையும், பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்கின்றனர்.

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்குகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சூர்யாவுக்கு புதுசு. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ஒத்திகை எல்லாம் சூர்யா பார்த்திருக்கிறார். மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியிடம் கேள்வி கேட்டு பதிலுக்கு எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்பது வரை ஒத்திகை நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சில 'அறிவுப்பூர்வமான' கேள்விகள் இடம் பெற்றாலும் ( ஈ அடிச்சான் காப்பி, நாய் அடிச்சான் காப்பி) போகப் போக பிக் அப் ஆகிவிட்டது நிகழ்ச்சி, சூர்யாவும் தான்.

அவ்வப்போது சில பிரபலங்களும் விஜய் டிவி நிகழ்ச்சியில் சூர்யா உடன் பங்கேற்கின்றனர். இதை கிண்டலடிக்கும் விதமாக சன் டிவியில் புரோமோ போடப்பட்டது. எங்கள் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஜாக்கிசான் எல்லாம் வரமாட்டாங்க. இது மக்களுக்கான நிகழ்ச்சி என்றெல்லாம் போட்டு தாக்கினர்.

ஆனால், இதற்கெல்லாம் விஜய் டிவி தரப்பில் இருந்து பதிலடி இல்லை. அவர்கள் வழக்கம் போல சில லட்சாதிபதிகளை உருவாக்கி கொண்டுதான் இருக்கின்றனர்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, கையில் ஒரு கோடி.. இதில் யார் முந்துகிறார்கள் என்று போகப் போக பார்க்கலாம்.
 

வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ஆதி - லட்சுமி மஞ்சு

Aadhi Lakshmi Manchu Dragged Flood
மறந்தேன் மன்னித்தேன் படத்தின் படப்பிடிப்பில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர் நடிகர் ஆதி மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் லட்சுமி மஞ்சு. அருகிலிருந்த மீனவர்கள் இருவரையும் கரை சேர்த்தனர்.

நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடிக்கும் படம் மறந்தேன் மன்னித்தேன். இந்தப் படத்தில் நாயகனாக ஆதி நடிக்கிறார். இன்னொரு இணையாக தப்சியும் சுதீப் கிஷனும் நடிக்கின்றனர். நாகேந்திர குமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி நதியில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதற்காக ஆற்றின் ஓரம் 170 குடிசைகள் அமைத்து, அவை வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல காட்சி. வெள்ளம் வருவது போல காட்சியை எடுக்க, அருகிலிருந்த அணையை சிறிது நேரம் திறக்க சிறப்பு அனுமதி பெறப்பட்டிருந்தது. 20 கேமராக்களில் இந்தக் காட்சியை படமாக்க அனைவரும் தயாராக இருந்தனர்.

நள்ளிரவு 12.15-க்கு அணையின் 6 மதகுகளை திறந்துவிட்டனர். தண்ணீர் பெரும் வேகத்தில் பாய்ந்து வர, குடிசைகளின் அருகில் நின்ற ஆதியும் லட்சுமி மஞ்சுவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 400 அடி தூரத்துக்கு ஆற்றில் சென்றுவிட்டனர்.

உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் நதியில் பாய்ந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
 

பிஜி தீவில் வீணா மாலிக்... மொய்த்தெடுத்த ரசிகர்கள்!

Veena Malik Mobbed Fans Fiji   
பாகிஸ்தான் நாட்டு கவர்ச்சி வெடிகுண்டு வீணா மாலிக் பிஜி தீவுக்குப் போயிருந்தபோது அவரை ரசிகர்கள் சுற்றிச் சூழ்ந்து மொய்த்தெடுத்து விட்டார்களாம். அதிர்ஷ்டவசமாக எதுவும் ஆகாமல் மீண்டு வந்தாராம் வீணா.

நடிகர், நடிகைகளைப் பார்த்தால் பொது இடங்களில் ரசிகர்கள் மொய்ப்பதும், ஆட்டோகிராப்கேட்பதும் சகஜமாகி விட்டது. அதிலும் நடிகைகள், குறிப்பாக கவர்ச்சிகரமானவர்கள் வந்து விட்டால் அவ்வளவுதான் கன்னத்தைக் கிள்ளுவதும், இடுப்பைப் பிடிப்பதும், இன்ன பிற இடங்களில் கையை வைப்பதும் ரொம்பவே சகஜமாகி விட்டது. ஆனால் கவர்ச்சியான நடிகைகளுக்குத்தான் வெளியில் போவது என்றாலே கஷ்டமான ஒன்றாகி விடுகிறது. காரணம் ரசிக மகா ஜனங்கள் செய்யும்சேஷ்டைகள்தான்.

இந்த நிலையில், நவீன் பத்ரா என்பவரின் இயக்கத்தில் சூப்பர் மாடல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்குக்கு ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விட்டது. படக் குழுவினர் பிஜியில் முகாமிட்டு ஷூட் செய்து கொண்டிருக்கி்ன்றனர். வீணாவுக்கு பிஜியிலும கூட ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களாம். அந்த நாட்டு அட்டர்னி ஜெனரல் அயாஸ் சையத் கயூம், வீணா வந்ததைக் கேள்விப்பட்டு அட்டென்ஷனாகி அவரை சந்தித்துப் பேசி மகிழ்ச்சி அடைந்தாராம்.

இந்த நிலையில் வீணா மாலிக் பிஜி வந்துள்ள தகவல் தீவு முழுவதும் காட்டுத் தீயாக பரவி விட்டதாம். இதையடுத்து மக்கள் படையெடுத்து வந்துள்ளனர் வீணாவை வேடிக்கை பார்க்க. அப்போது பலர் வீணாவிடம் கை குலுக்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் சிக்கிக் கொண்ட வீணாவின் நிலை ரொம்ப கஷ்டமாகி விட்டதாம்.

இருப்பினும் ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்தும், புகைப்படத்திற்குப் போஸ் கொடுத்தும் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப்படுத்திய வீணா, கஷ்டப்பட்டு அங்கிருந்து நகர்ந்தாராம். தற்போது ரசிகர்களிடமிருந்து வீணாவைப் பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

ஆமாமா, தூர இருந்தே பார்த்துட்டுப் போயிடுங்கப்பா...!
 

குரு பாலசந்தர் வழியில் டிவிக்கு வந்த சிஷ்யர் சுரேஷ் கிருஷ்ணா!

Suresh Krishna Debuts Chinnathirai
பாலசந்தரின் பிரதம சிஷ்யரான சுரேஷ் கிருஷ்ணா ஆஹா என்ற நெடுந்தொடரின் மூலம் சின்னத்திரையில் கால் பதிக்கிறார். குரு பாலசந்தர் ரயில் சிநேகம் தொடர் மூலம் சின்னத்திரைக்கு முதன் முதலில் வந்தார். அவரது வழியில் இப்போது சுரேஷ் கிருஷ்ணாவும் வருகிறார். பாலச்சந்தர் சின்னத்திரையிலும் முத்திரை பதித்தவர். அவரைப் போலவே சின்னத்திரையில் சிஷ்யர் ஜெயிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும் இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ‘ஆஹா’ என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான். புதுமுகங்கள் நடிக்கும் இத்தொடருக்கு, பா.விஜய்யின் பாடல் வரிகளுக்கு, ஜீ.வி.பிரகாஷ்குமாரின் அற்புதமான இசையில் டைட்டில் சாங் உருவாகி இருக்கிறது. விரைவில் இத்தொடர் விஜய் டி.வி.யில் ஒளிப்பரபாக இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆஹா என்ற படத்தை சுரேஷ் கிருஷ்ணாதான் இயக்கினார். இப்போது அதே தலைப்பை வைத்து ஆஹா என்ற ‌தொடரை இயக்குகிறார். தொடரின் தலைப்பு மட்டும் தான் படத்தின் தலைப்பு. மற்றபடி ஆஹா தொடரின் கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம். தொலைக்காட்சித் தொடர்களில் புதுமையை புகுத்தியவர் குரு பாலசந்தர் அவர் வழியில் சிஷ்யரும் ஜெயிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
 

சினேகாவுக்கு நலங்கு - நடிகர் நடிகைகள் பங்கேற்பு

Nalangu Ritual Bride Sneha   
சினேகா - பிரசன்னா திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகிவிட்டன. முதல் நிகழ்ச்சியாக மணமகள் சினேகாவுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது.

பச்சைப் பட்டுப் புடவை, தங்க நகைகள் சகிதம் ஜொலி ஜொலித்த சினேகாவுக்கு அவர்கள் சமூக முறைப்படி நலங்கு வைக்கப்பட்டது. நலங்குப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சினேகாவின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சினேகா - பிரசன்னா திருமணம் நாளை மறுநாள் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

அதற்கு முன் நாளை மாலை இதே மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.