நான் டிவிட்டர்லயே இல்லையே, சிம்புவைப் பற்றி எதுவும் சொல்லலையே.. பதறும் ஸ்ரீகாந்த்

சென்னை: நடிகர் சிம்பு குறித்து தான் டிவிட்டரில் எதுவுமே சொல்லவில்ல என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

பெரும் காத்திருப்பிற்குப் பிறகு வெளியான வாலு படம் பலவரையும் கவர்ந்துள்ளது. படம் குறித்து பாசிட்டிவான பேச்சுக்களே வெளியாகியுள்ளன.

படம் வெளியானதும் ஏராளமான பேர் சிம்புவிற்கு போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர், இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் சிம்புவைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான பதிவுகளை இட்டதாக செய்திகள் வெளியாகின.

Actor Srikanth Says

தொடர்ந்து இவ்வாறு செய்திகள் அதிகமாக இது நடிகர் ஸ்ரீகாந்தின் கவனத்திற்கு சென்றது, உடனே பதறிப் போன அவர் தனது பெயரில் எந்த ட்விட்டர் அக்கவுண்டும் கிடையாது, மேலும் இது மாதிரி தவறான வேலைகளை நான் ஒரு போதும் செய்வதில்லை என மறுத்திருக்கிறார்.

இது குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் கூறுகையில் "டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் போலியானவை.

நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு கணக்கினையும் வைக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை தவறாக பயன் படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும், சிம்பு என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

அஜித், சிம்புவின் ரசிகர்களை பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் நான் அளிக்கவில்லை. என் பெயரில் போலியாக கணக்கினை வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

இது மாதிரியெல்லாம் யார் பண்றாங்கன்னு தெரியல, ஆனா நல்லா பிளான் பண்ணி பண்றாங்க போல....!

 

அடுத்தடுத்த படங்களில் வரிசை கட்டி பாடும் "தளபதி"

சென்னை: புலி படத்தில் நடிகை சுருதியுடன் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருந்த நடிகர் விஜய், தற்போது அடுத்ததாக தான் நடித்து வரும் விஜய் 59 படத்தில் 2 பாடல்களைப் பாடி இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் விஜய் நடித்த படங்களில் அவரது பாடல்களும் தவறாமல் இடம்பெற்றன, காலப்போக்கில் தான் நடிக்கும் படங்களில் பாடுவதை விஜய் குறைத்துக் கொண்டார்.

ஆனால் 3 வருடங்களுக்கு முன் துப்பாக்கி படத்தில் ஒரு பாடலைப் பாடிய விஜய் துப்பாக்கி முதல் புலி வரை தான் நடிக்கும், ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலையாவது பாடி வருகிறார்.

vijay 59 Update

விஜய் பாடிய பாடல்கள் தொடர்ந்து ஹிட்டடிப்பதால் விஜயின் படங்களில் தவறாமல் விஜய்க்கும் ஒரு பாடலை படக்குழுவினர் ஒதுக்கி விடுகின்றனர்.

புலியைத் தொடர்ந்து விஜய் அடுத்தபடியாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் 2 பாடல்களை ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடியிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வரும் இந்தப் படத்தில் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்று கூறுகின்றனர், இசையமைப்பாளர் தேவா ஒரு லோக்கல் கானா பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வளர்ந்து வரும் விஜய் 59 திரைப்படம், 2016 ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

எனது குழந்தையின் பாதம் பூமியை தொட உதவிய... சினேகாவின் சிலிர்ப்பான ட்வீட்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய நடிகை சினேகா உடன் நடித்த சக நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்து கொண்டார். மகிழ்ச்சியான இவர்களின் திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக நடிகை சினேகா வெகு விரைவிலேயே தாய்மை அடைந்தார்.

நடிகை சினேகா- பிரசன்னா நட்சத்திர தம்பதியினருக்கு கடந்த வாரம் அழகான ஆண் குழந்தை பிறந்தது, திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11 ம் தேதி சிநேகாவிற்கு குழந்தை பிறந்தது.

Thanks Everyone - Sneha Says in Twitter

திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் சினேகா தம்பதியினருக்கு வாழ்த்து மழை குவிந்தது, இந்நிலையில் தன்னை வாழ்த்திய மற்றும் தான் குழந்தையை பெற்றெடுக்க உதவிய அனைவருக்கும் ட்விட்டர் மூலம் சினேகா தனது நன்றியைத் தெரிவித்து இருக்கிறார்.

சினேகாவின் தனது ட்வீட்டில் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார் " தாயானபின் எனது முதல் ட்வீட் இது, எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் மற்றும் வேண்டுதல்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். கைகளில் எனது குழந்தை இருக்கும் இந்தத் தருணம் முழுமையான ஒரு பெண்ணாக நான் உணர்கிறேன், நன்றி கடவுளே" என்று தான் அம்மாவாக மாறிய அந்தத் தருணத்தை சிலிர்ப்புடன் நினைவு கூர்ந்திருக்கிறார் சினேகா.

மேலும் மற்றொரு ட்வீட்டில் தனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் சுதாசிவகுமர் உள்பட மருத்துவ குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் சினேகா கூறியுள்ளார்.

சினேகா இப்போ ஹேப்பி அண்ணாச்சி.........