த்ரிஷாவுக்குப் பிடிச்ச நடிகர்கள் பட்டியலில் அஜீத்துக்கு முதலிடம்!!

தன்னுடன் நடித்த முன்னணி நடிகர்களை வரிசைப்படுத்திய நடிகை த்ரிஷா, அஜீத்துக்கு முதலிடம் தந்தார்.

வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் தலைமை அமைப்பான ஃபெட்னாவின் 27வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் முன்னணி நடிகை த்ரிஷா.

த்ரிஷாவுக்குப் பிடிச்ச நடிகர்கள் பட்டியலில் அஜீத்துக்கு முதலிடம்!!

மிசௌரி மாநிலத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்ற த்ரிஷாவிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டனர்.

இந்தக் கேள்விகளில் ஒன்று... 'உங்களுக்கு ஜோடியாக நடித்த நடிகர்களில் யாருடன் உங்களுக்கு கெமிஸ்ட்ரி சரியாக அமைந்தது என்பதன் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள்... முதல் 5 நடிகர்களைச் சொல்லுங்கள்,' என்றனர்.

முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கிய த்ரிஷா, பின்னர் சட்டென பதில் கூறத் தொடங்கினார்.

'அஜீத், சூர்யா, விக்ரம், கமல், விஜய்....னு சொல்லலாம்' என்றார்.

த்ரிஷாவுக்குப் பிடிச்ச நடிகர்கள் பட்டியலில் அஜீத்துக்கு முதலிடம்!!

உடனே வந்திருந்த ரசிகர்களைப் பார்த்து, த்ரிஷாவுக்கு எந்த ஹீரோ பொருத்தம் என்று தொகுப்பாளர்கள் கேட்க, அவர்களில் ஒரு பகுதியினர் பெரும் குரலில் 'தல அஜீத்' என்றும், அவர்களுக்கு இணையான பலத்துடன் 'இளைய தளபதி விஜய்' என இன்னொரு பகுதியினரும் குரல் கொடுத்தனர்.

 

சென்னையில் திரைப்பட பள்ளி துவங்குகிறார் பாரதிராஜா

சென்னை: மூத்த இயக்குநர் பாரதிராஜா, அடுத்த தலைமுறை கலைஞர்களுக்காக, திரைப்பட பள்ளியொன்றை சென்னையில் துவங்க உள்ளார்.

சென்னையில் திரைப்பட பள்ளி துவங்குகிறார் பாரதிராஜா

பதினாறு வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, திக்..திக்..திக் மற்றும் பல கிராமத்து காவியங்களை அளித்தவர், தேசிய விருதுக்கு சொந்தக்காரரான, இயக்குநர் பாரதிராஜா. இவர், சென்னையில் திரைப்பட பள்ளியொன்றை துவங்க உள்ளார்.

நேற்று முதல் அந்த பள்ளிக்கான பூர்வாங்க வேலைகள் துவங்கியுள்ளன. இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணத்தை தோண்டியெடுக்க வேண்டும் என்பதற்காக நான் திரைப்பட பள்ளி துவங்கவில்லை. சமூகம் எனக்கு அளித்த பாடங்களை அந்த சமூகத்துக்கே திருப்பி கொடுப்பதற்காகத்தான் இந்த திரைப்பட பள்ளியை துவங்கியுள்ளேன். இதிலிருந்து லாபம் சம்பாதிப்பது எனது நோக்கம் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜில் படம்… சூடான காட்சிகள்… ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கிய ராம்கோபால் வர்மா

ஜில் படம்… சூடான காட்சிகள்… ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கிய ராம்கோபால் வர்மா

படத்திற்கு ஐஸ்கிரீம் என்று ஜில் தலைப்பு வைத்துவிட்டு சூடான காட்சிகளை நிறைய படமாக்கியிருக்கிறாராம் ராம்கோபால் வர்மா

திரில்லர் கதை

ஐஸ்கிரீம் ஒரு திகில்கதை, ராம்கோபால் வர்மாவின் புதிய அறிமுகமான தேஜஸ்வி மதிவதாதான் ஹீரோயின்.

ஜில் படம் சூடான காட்சிகள்

வீட்டில் தனியாக இருக்கும் அவர் தன் காதலன் வருகைக்காக காத்திருக்கிறார். காதலனும் வருகிறார். ஒரு காதல் ஜோடி தனி வீட்டில் இருந்தால் என்ன நடக்குமோ அதெல்லாம் நடக்கிறது.

பயத்தோடு நகரும் கதை

வந்திருப்பது காதலன் அல்ல என்பது இண்டர்வெல் பிளாக். அப்படியென்றால் வந்தவன் யார் என்பது கதையின் அடுத்த பகுதி. பாதி பயத்தையும், பாதி காமத்தையும் கேமராவே காட்டி விடுமாம்.

பத்துகோடி வியாபாரம்

ராம்கோபால் வர்மாவின் படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். படத்தின் பட்ஜெட் ரூ. 75 லட்சம் விற்பனையோ 10 கோடியை எட்டுமாம்.

நவீன முறை ஒளிப்பதிவு

ப்ளோஸ்காம் என்ற நவீன ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் அஞ்சி டோப். இப்போது பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஸ்டெடி கேம் என்ற கேமராவை அறிமுகப்படுத்தியதும் ராம்கோபால் வர்மாதான்.

தெலுங்கு, இந்தி

தெலுங்கிலும், இந்தியிலும் படத்தை வெளியிட இருக்கிறார்கள். தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

டிடி ஹனிமூனுக்கு எங்க போறாங்க தெரியுமா?

சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய தேனிலவுக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

டிடி ஹனிமூனுக்கு எங்க போறாங்க தெரியுமா?

இந்த நிலையில் அவர் தனது கணவருடன் தேனிலவை கொண்டாட அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தென் அமெரிக்க நகரங்கள் மற்றும் கனடாவில் பிரமாண்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இதற்காக தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள், பாடகர் பாடகிகளை அழைத்துச் செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க திவ்யதர்ஷினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த மாதமும் அடுத்த மாதமும் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்லும்போதே தன் கணவருடன் அங்கு தேனிலவும் முடித்து விட்டு திரும்ப முடிவு செய்திருக்கிறார் டிடி.

 

போதையேறிப் போச்சு... விழாக்களில் ‘இடைவெளி’யை பாலோ பண்ணும் 'திருட்டு' நடிகர்!

சென்னை: பள்ளி சிறுவர்களின் சண்டையை மையமாக வைத்த படம் மூலம் ரசிகர்களின் அங்கீகாரத்தை சம்பாரித்தவர் இந்த திருட்டுப் பட நடிகர். சமீபத்தில் இவர் நடித்த கிராமத்து பை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படம் விரைவில் வேறு சில மொழிகளிலும் ரீமேக் செய்யப் பட உள்ளது. முந்தைய சில படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையாத நிலையில், கிராமத்துப் பை உச்ச நடிகரின் படத்துக்கு இணையாக முதல் நாள் வசூலை வாரிக் குவித்த சந்தோஷத்தை திருட்டு நடிகர் பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்.

இந்நிலையில், சமீப காலமாக திரைப்பட விழாக்களுக்கு வருகை தரும் நடிகர் மற்றவர்களிடமிருந்து அதிகபட்ச இடைவெளியை ஏற்படுத்தி அமர்கிறாராம். காரணம் பகல், இரவு என வித்தியாசமில்லாமல் எந்நேரமும் நடிகர் போதையில் தான் வாழ்கிறாராம்.

மற்றவர்களுக்கு மிக அருகில் சென்றால் வாசனைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் தான் இந்த இடைவெளி திட்டமாம்.

வளர்ந்து வரும் நிலையில் இப்படி தேவையில்லாத பழக்கவழக்கங்களால் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொள்கிறாரே என அவரது நலம் விரும்பிகள் ஆதங்கப் படுகிறார்களாம்.

மேலும் கிசு கிசு செய்திகள்

 

தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறேனா..?- கமல ஹாசன் விளக்கம்

ஹைதராபாத்: தெலுங்கு திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன் கமலஹாசன்.

தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறேனா..?- கமல ஹாசன் விளக்கம்

தர்மா தேஜா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இதை, கமலஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தெலுங்கு திரைப்படத்தில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாது.

தெலுங்கு இயக்குநர்களுடன் நான் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். அதே நேரம் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்க நான் ஒப்பந்தம் செய்யவில்லை. தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க நான் முடிவெடுத்தால், அதை எனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல், தயாரிக்கும்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலஹாசன் தற்போது, உத்தம வில்லன் திரைப்பட பணிகளில் மும்முரமாக உள்ளார். இதையடுத்து மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான திருஷ்யத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.