சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டியும், கலாய்ச்சிஃபை லட்சுமிமேனனும் இப்போ ‘பெஸ்ட் பிரண்ட்ஸ்’ !

சென்னை: சூது கவ்வும் படத்தில் மாமா, மாமா என கொஞ்சும் அழகு கனவுத் தேவதையாக வந்து ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

இவரும் பாண்டிய நாடு படத்தில் விஷாலைப் பார்த்து கலாய்ச்சிஃபை செய்த நடிகை லட்சுமி மேனனும் தற்போது பெஸ்ட் பிரண்டுகளாகி விட்டார்களாம்.

இது தொடர்பான டுவிட்டர் பதிவில், ‘நான் என் பெஸ்ட் பிரண்டைக் கண்டுபிடித்து விட்டேன்' எனத் தெரிவித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

மேலும், லட்சுமிமேனனுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கூடவே கன்னங்களில் ரோஸ் கலர் பூசியது போன்ற ஸ்மைலி வேறு.

சமீபகாலமாக நடிகைகள் வெளிப்படையாகவே தங்களது சக நடிகைகளைத் தோழமையுடன் பார்ப்பது அதிகரித்துள்ளது.

நடிகை எமி ஜாக்சன் தனக்குப் பிடித்த நடிகை திரிஷா தான் எனக் கூறியதும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் எமி ஜாக்சனின் நடிப்பு பிரமாதம் என திரிஷா பாராட்டியதும் நினைவுக் கூறத் தக்கது.

போட்டி இருக்கும் இடத்தில் பொறாமையும் இருக்கத்தானே செய்யும்.. அதையும் தாண்டி வரும் இந்த மாதிரியான சில அரிய நட்புகள் பார்க்கவே சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

 

”அப்துல் கலாமின் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்” – நடிகர் விவேக்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்துல் கலாம் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வருபவர் நடிகர் விவேக். இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் "க்ரீன் கலாம்" திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக மரங்கள் நடுவது என்று மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, "அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தற்போதுள்ள மாணவர்கள் பலருக்கும் முன்னோடியாக அப்துல் கலாம் திகழ்ந்து வருகிறார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சோக லாலி பாடும் "லாலா கடை" நடிகை!

லாலா கடை நடிகை சினிமாவில் நடிக்க வந்து தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரையே திருமணமும் செய்து கொண்டார். பின்னர் கசப்பு ஏற்பட்டு கணவரை விவாகரத்தும் செய்துவிட்டார்.

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் தவறாமல் திரை உலகினர் வைக்கும் பார்ட்டிகளில் பங்கேற்பார். காரணம் மீண்டும் சினிமா சான்ஸ் வருமே என்றுதான்.

ஆனால் குத்தாட்ட வாய்ப்புதான் கிடைத்தது அதையும் விடாமல் ஆடிக்கொடுத்தார். அதற்கு கைமேல் பலனாக கிடைத்ததுதான் பிரபல டிவி சேனலில் சீரியல் வாய்ப்பு. தினத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் பேசி நடிக்கவும் செய்தார்.

திடீரென என்ன நேர்ந்ததோ ஸ்வீட் நடிகையை தூக்கிவிட்டு வேறு நடிகையை போட்டுவிட்டனர். காரணம் நடிகைக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு சீரியல் வருமானம் கொட்டவில்லையாம்.

ரசிகர்களிடம் சரியான வரவேற்பு இல்லாத நிலையில் யார் நடித்தால் என்ன என்று சத்தமில்லாமல் நடிகையை தூக்கிவிட்டனர் என்கின்றனர். கடைசியில் ஸ்வீட் நடிகை சீரியல் வாய்ப்பும் இன்றி பார்ட்டிகளில் மட்டுமே இப்போது பங்கெடுத்து வருகிறாராம்.