புலி பட நடிகர் சுதீப் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூர்: விஜய்யின் புலி படத்தில் நடித்துள்ள சுதீப் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் புலி. அந்த படத்தில் விஜய் அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியாகும் படத்தில் நடிக்கிறார்.

Puli star Sudeep hospitalised

அந்த படத்தில் அஜீத்தின் மச்சினச்சி ஷாமிலி சுதீப் ஜோடியாக நடிக்கிறார். சுதீப் முதல்முறையாக நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீப்பின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசிடிட்டிக்காக சிகிச்சை பெற்ற அவர் அன்றைய தினமே வீடு திரும்பியுள்ளார். சுதீப்புக்கு மைக்ரைன் மற்றும் முதுகுவலி பிரச்சனையும் உள்ளது.

புலி படத்தை சிம்புதேவன் பெரிதும் எதிர்பார்க்கிறார். இதற்கிடையே பாகுபலி படத்தை விட புலி படத்தில் அதிக கிராபிக்ஸ் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் புலி படத்தை பார்க்க ஆவலாக உள்ளனர்.

 

சர்வதேச ரொமான்டிக் இசையை கேட்க ஹை ட்யூன்ஸ் கேளுங்க

இசை மற்றும் லைப்ஸ்டைல் நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக வழங்கும் சேனல் யு.எப்.எக்ஸ், மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசைகளை அள்ளித்தருகிறது. "ஹை ட்யூன்ஸ்".

Hi Tunes is a back to back Channel UFX

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் பன் மொழி இசை மெட்டுகளையும்,ஆங்கில இசை மற்றும் ஆல்பம் நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கும் புதுமையான நிகழ்ச்சி.

Hi Tunes is a back to back Channel UFX

நேயர் விருப்பம் இன்றைக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகிறது. ஹை டியூன்ஸ் நிகழ்ச்சியில் நேயர்கள் விருப்பபடி தென் இந்திய திரைப்பட பாடல்கள், சர்வதேச இசை மற்றும் ரொமான்டிக் இசை ஒளிபரப்பாகிறது. விரல் நுனியில் தொலைபேசி வாயிலாக நேயர்கள் கேட்கும் பாடல்களை அவர்கள் விரும்புபவர்களுக்கு அர்ப்பணித்து ஒளிபரப்புகின்றனர்.

Hi Tunes is a back to back Channel UFX
 

களவாணி ரேஞ்சுக்கு இந்த சண்டி வீரன் இருப்பான்! - இயக்குநர் சற்குணம்

அதர்வா நடிப்பில் தான் இயக்கி வரும் சண்டி வீரன் படம், களவாணி மாதிரி விறுவிறுப்பாகவும் நகைச்சுவை கலந்தும் இருக்கும் என்றார் இயக்குநர் சற்குணம்.

அதர்வா ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருக்கிறார். ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

Director Sargunam speaks about his Sandi Veeran

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதர்வா, கயல் ஆனந்தி, இயக்குநர் சற்குணம், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இயக்குநர் பேசுகையில், ‘நான் இயக்கிய ‘வாகைச்சூடவா', ‘களவாணி' ஆகிய படங்களின் வரிசையில் ‘சண்டி வீரன்' படம் இருக்கும். ஆனால் அந்தப் படங்களின் சாயல் துளியும் இருக்காது.

அடுத்தடுத்து விறுவிறுப்பான சம்பவங்கள் கொண்ட திரைக்கதை இது. அனைவரும் ரசிக்கும் வகையில் பொழுது போக்கு படமாக உருவாக்கியிருக்கிறேன். இப்படத்தில் கேரள நடிகர் லால் மில்லுக்காரர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதலில் நான் பாலாவிடம் கதையை சொன்னேன். அவர் கதையை கேட்டு நல்லா இருக்கு என்று சொன்னார். பின்னர் கதாநாயகனாக அதர்வாவை நடிக்க வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னேன். நல்லது என்று கூறி இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்றார். கயல் படத்தை பார்த்து ஆனந்தியை தேர்வு செய்தேன்.

இது கிராமத்துக் கதை. எந்த வகையில் சாதிச் சாயம் இல்லாமல் உருவாக்கியிருக்கிறேன்," என்றார்.

 

ரஜினியிடமிருந்து அழைப்பு... அதிர்ந்த மலையாளப் பட இயக்குநர்!

பொதுவாகவே தமிழ் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு ரஜினியுடன் இணையும் ஆர்வம் ஏகத்துக்கும் உண்டு. அவரிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருப்பார்கள்.

அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்கள் இயக்கி, வளரும் இயக்குநராக இருந்த ரஞ்சித், ரஜினியிடமிருந்த வந்த ஒரு அழைப்பில் இன்று முதல் நிலை இயக்குநராகிவிட்டார்.

Alphones Puthiran gets a call from Rajini, But...

இதேபோன்ற ஒரு அழைப்பு, இன்னொரு வளரும் இயக்குநருக்கு ரஜினியிடமிருந்து வந்தது. ஆனால் அவரோ ரஜினியைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் இன்னமும்.

இந்த இயக்குநரின் பெயர் அல்போன்ஸ் புத்திரன். கேரளாவின் சென்சேஷனல் இயக்குநர். பிரேமம் படத்தை இயக்கியவர்.

தமிழில் இவர் இயக்கிய படம்தான் நேரம்.

பிரேமம் படம் பார்த்த ரஜினிகாந்த், அல்போன்ஸ் புத்திரனிடம் கதை கேட்க அழைப்பு விடுத்துள்ளார். அதிர்ந்து போன அல்போன்ஸ், "ரஜினி மிகப் பெரிய நடிகர். அவருக்கு படம் பண்ணும் அளவுக்கு என் அனுபவமில்லை. அவ்வளவு பட்ஜெட்டை கையாளும் திறன் எனக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எனவேதான் அவரைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததே மிகப் பெரிய அங்கீகாரம்தான்," என்கிறார்.

 

வீட்டிலேயே இறைவனை தரிசிக்க தினமொரு திவ்ய தேசம்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "தினமொரு திவ்ய தேசம்". இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

கோவிலுக்கு செல்வது வழக்கத்தில் இருந்தாலும் பலர் தாங்கள் அன்றாடம் செல்லும் அக்கோவிலின் வரலாறு மற்றும் அதன் பெருமை பற்றி அறிந்திருக்க மாட்டர். ஆனால் அது பற்றிய விவரங்களை அறியும்போது அவர்கள் கோவிலுக்கு செல்வதன் காரணத்தையும் உணர்கிண்றனர். ஒரு சிரிய ஊரிலுள்ள கோவிலுக்குக் கூட அதற்கென்ற தனிச்சிறப்பும் வரலாறும் உண்டு.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

எடுத்துக்காட்டாக நைமிஷாரண்யம் என்ற க்ஷேத்திரத்தை எடுத்துக்கொண்டால் "நைமி" என்ற சொல்லுக்கு வடமொழியில் வட்டம் என்று பொருள். அதாவது தேவர்கள் யாகம் நடத்த உகந்த இடம் எது என்று பிரம்மனிடம் கேட்டபோது பரம்மன் தனது வட்டமான மோதிரத்தை கழற்றி பூமியில் வீச அம்மோதிரம் விழுந்த இடமே "நைமிக்ஷாரண்யம்" என்னும் க்ஷேத்திரமாகும். விஷ்ணு தனது சுதர்ஷன சக்கரத்தால் அரக்கர்களை கொன்ற இடமும் இந்த நைமிக்ஷாரண்யமாகும் என மற்றொரு வரலாறும் உள்ளது.

Dinam Oru Divya Desam on Sri Sankara TV

இது போன்ற பல அரிய தகவல்களை நேயர்களுக்கு வழங்கும் முயற்சியில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் "தினமொரு திவ்ய தேசம்". ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சார் அவர்களின் சொற்பொழிவுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் தென் இந்தியாவின் பல கோவில்களின் பெருமைகளை நேயர்கள் அறியலாம். ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

பிரபு தேவா ஸ்டுடியோஸ்... தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தார் பிரபு தேவா!

நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற பிரபு தேவா அடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பிரபு தேவா ஸ்டுடியோஸ் என பெயர் வைத்துள்ளார்.

இந்த பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி முறைப்படி அறிவிக்க உள்ளது.

Prabhu Deva enters Film Production in style

இதுகுறித்து பிரபு தேவா கூறுகையில், "சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்' தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த, அனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும்.

நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்து எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாக செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்," என்றார்.

 

என் திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?: டாப்ஸி

சென்னை: டாப்ஸிக்கு தனது திருமணம் சப்தமில்லாமல் அமைதியாக தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடக்க வேண்டும் என்று ஆசையாம்.

டாப்ஸி தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் அவர் நடித்துள்ள ரன்னிங் ஷாதி.காம் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அந்த படத்தில் நடிக்கையில் டாப்ஸிக்கு திருமண வேலைகளை செய்து கொடுக்கும் நிறுவனத்தை துவங்கும் எண்ணம் ஏற்பட்டது.

Taapsee wants to have a low key wedding

இதையடுத்து தனது தங்கை ஷகுன் மற்றும் தோழி ஃபராவுடன் சேர்ந்து திருமண வேலைகள் செய்யும் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்நிலையில் திருமணம் பற்றி டாப்ஸி கூறுகையில்,

சில திரையுலக பிரபலங்கள் ஏன் ரசிகர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. எப்பொழுது பார்த்தாலும் பிரைவஸி இல்லாமல் இருப்பதால் திருமணமாவது தங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில ஆண்டுகள் கழித்து நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால் ஊர், உலகத்திற்கு எல்லாம் தெரிவிக்காமல் நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் தான் அது நடக்கும் என்றார்.

டாப்ஸி டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவை காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினி - ரஞ்சித் படத்தில் அட்டகத்தி தினேஷ்... உறுதி செய்த இயக்குநர்!

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில், தனது முதல் படமான அட்டகத்தியில் நடித்த தினேஷுக்கு ஒரு முக்கிய வேடம் உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் ரஞ்சித்.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் இந்தப் புதிய படத்துக்கான தொழில்நுட்பக் குழு, நடிகர்கள் அனைவருமே இயக்குநர் ரஞ்சித்தின் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரஜினி படங்களில் வழக்கமாக இடம்பெறும் யாரும் இந்தப் படத்தில் இல்லை.

Attakathi Dinesh in Rajini - Ranjith movie

படத்தில் ரஜினியுடன் நாயகியாக ராதிகா ஆப்தே நடிப்பார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

அடுத்து அட்டகத்தி படத்தில் நடித்த தினேஷும் இந்தப் படத்தில் நடிப்பார் என்று செய்தி வெளியானது. இதனை இயக்குநர் ரஞ்சித்தும் உறுதி செய்துள்ளார். ஒரு முக்கியமான வேடத்தில் தினேஷ் நடிப்பது உண்மைதான் என்றும், ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆர்யா, சந்தானம் நடித்த விஎஸ்ஓபிக்கு யு சான்றிதழ்!

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (விஎஸ்ஓபி) படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

U certificate for VSOP

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

U certificate for VSOP

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதையடுத்து இப்படத்தை ஆகஸ்ட் 14-ம்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

U certificate for VSOP

‘யு' சான்றிதழ் குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "வி.எஸ்.ஓ.பி. படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடியாக, குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும்," என்றார்.

 

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகை பரவை முனியம்மாவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரபல நடிகையான பரவை முனியம்மா கடைசியாகத சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் பாட்டுப் பாடி நடித்திருந்தார்.

Sivakarthikeyan visits Paravai Muniyamma

அதன் பிறகு பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. வருமானமும் இல்லை. முதுமை காரணமாக உடல் நலக்கோளாறு ஏற்பட, மருத்துவமனையில் கஷ்டப்பட்டு வந்தார். மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவர் அவதிப்பட்டதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட, இப்போது அவருக்கு உதவிகள் வர ஆரம்பித்துள்ளன.

முதல் கட்டமாக நடிகர் விஷால், ரூ 5000 முன்பணமும், மாதாமாதம் அதே தொகையை வழங்கப் போவதாகவும் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து தனுஷ் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவியும் வழங்கியிருக்கிறார்.

நேற்று பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன். பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பரவை முனியம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். பண உதவி செய்தாரா என்ற விவரம் வெளியாகவில்லை.

 

நடிகர் வினுசக்கரவர்த்தி நிலைமை கவலைக்கிடம்- நினைவை முற்றிலும் இழந்தார்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான, நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி.

நேற்று திடீரென்று ரத்த அழுத்தமும் சர்க்கரையும் ஒருசேர அதிகமானதில் வினுசக்கரவர்த்தி மயங்கி விழுந்தார், உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Actor Vinuchakravarthy Admitted in Hospital

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வினுசக்கரவர்த்தி நினைவை முற்றிலும் இழந்து விட்டதாகவும், மேலும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், கடந்த சில மாதங்களாகவே நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாலா கூப்பிட்டார்.. கதை கூட கேக்கல.. சண்டி வீரனாயிட்டேன்! - அதர்வா

அதர்வாவின் கேரியரைப் பொருத்தவரை, பாலாவின் பரதேசிக்கு முன்; பரதேசிக்குப் பின் என்ற நிலைதான்.

Why Atharva accepts Sandi Veeran?

அதுவரை படங்களில் ஹீரோ என்ற பெயரில் சும்மா வந்து போய்க் கொண்டிருந்தவரை, பண்பட்ட நடிகராக்கினார் பாலா.

இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். அந்த நன்றிக்கடனை ஏகத்துக்கும் மனசில் வைத்திருக்கும் அதர்வா, பாலா கூப்பிட்டதுமே ஒப்புக் கொண்ட படம் சண்டி வீரன்.

Why Atharva accepts Sandi Veeran?

களவாணி புகழ் சற்குணம் இயக்கும் இந்தப் படம் குறித்து அதர்வா நம்மிடம் பேசுகையில், "எனக்கு இயக்குனர் பாலா போன் செய்து உடனே வரச் சொல்லி அழைத்தார். உடனே போய்விட்டேன். 'கதை ஒன்று கேட்டேன். அதில் நீ நடிக்க வேண்டும்' என்று கூறினார். நான் என்ன கதை, யார் இயக்குநர் என்று கூடக் கேட்கவில்லை. உடனே ஓகே சொன்னேன்.

அதன் பிறகுதான் தெரியும், இயக்குநர் சற்குணம் என்பது. ‘களவாணி' படத்தை பார்த்ததிலிருந்தே சற்குணம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. இப்படத்தில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். கிராமத்து பின்னணியில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது ரொம்ப புதிய அனுபவமாக இருந்தது" என்றார்.

Why Atharva accepts Sandi Veeran?

இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடி கயல் ஆனந்தி. அவர் கூறுகையில், "நான் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். சற்குணம் இயக்கத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது," என்றார்.

‘சண்டி வீரன்' படத்திற்கு ‘யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வருகிறது.

 

விஎஸ்ஓபின்னா....? மாமனாரைப் போட்டுக் கொடுத்த இமான்!

இசையமைப்பாளர் இமானுக்கு தன் மாமனார் மீது அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை. விஎஸ்ஓபி படத்தின் பிரஸ் மீட்டில் ஒரு அந்தரங்கத்தை அம்பலப்படுத்திவிட்டார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... இந்தத் தலைப்பை சுருக்கமாக விஎஸ்ஓபி என்று கூறி வருகிறார்கள் படக்குழுவினர். மீடியாவும் அதையே எழுதி வருகிறது.

Music director Imman doesn't know the meaning for VSOP!

இயக்குநர் ராஜேஷ் முதல் முதலில் இந்தத் தலைப்பை இசையமைப்பாளர் இமானிடம் சொன்னபோது, அவருக்கு தலைப்பின் அர்த்தம் புரியவில்லையாம். இருந்தாலும் கேட்டதும் ஓகே சொல்லிவிட்டாராம், இசையமைக்க.

உடனே தன் தந்தையிடம் போய், விஎஸ்ஓபின்னா என்னப்பா என்று கேட்டாராம். தந்தையும் தெரியவில்லை என்று கூறிவிட்டாராம்.

பின்னர் மனைவியிடம் இந்தத் தலைப்பைக் கூறினாராம். அட.. இப்படிக்கூடவா தலைப்பு வைப்பாங்க என்றாராம். அப்படின்னா அர்த்தம் தெரியுமா என்று கேட்டதும், இது சரக்கு சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதைப் புரிய வைத்தாராம்.

"என் மாமனார் அவ்வப்போது சரக்கடிப்பார். அவருக்கு இது பழக்கம் என்பதால், என் மனைவிக்குத் தெரியும்!" என மேடையிலேயே இமான் கூற, அரங்கம் சிரிப்பலையில் மிதந்தது.

கூடவே, 'என்ன இருந்தாலும் இமான் இப்படியா சொல்வார்.. மாமனார் மேல என்ன கடுப்போ?' என்ற ஜாலி கமெண்டுகளும்!

 

சினிமாவில் அரிதாரம் பூச ஆசைப்படும் நடன நடிகை

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல சினிமா, சீரியல், டாக் ஷோ என்று பிரபலமாக இருக்கும் அந்த மாஜி நடன நடிகைக்கு சினிமாவின் மீதுதான் ஆசை அதிகமாம். எனவேதான் மீண்டும் சினிமாவில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, குணசித்திர வேடங்களில் நடித்தவர் அந்த நடிகை, வடமாநிலங்களில் செட்டிலானாலும் சென்னைக்கு பறந்து வந்து சீரியலில் நடித்து விட்டு போகிறார். மாமியார் கதாபாத்திரம்தான் என்றாலும் வடநாட்டு ஸ்டைல் உடை, மேக்அப் என அசத்தும் அந்த நடிகைக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறி உள்ளனர்.

Mother actress wants to act again

சீரியலில் கிடைத்த புகழினால் பிரபல டிவி சேனலில் பஞ்சாயத்து பண்ணும் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார் அந்த மயில் நடிகை. ஏற்கனவே பஞ்சாயத்து செய்தவர் சினிமாவில் பிரபலமாகி வருவதால், மாமியாரான மயில் நடிகைக்கும் சினிமா ஆசை மீண்டும் துளிர்த்து வருகிறதாம் எனவே நல்ல கதையாக இருந்தா சொல்லுங்கப்பா என்று பிரபல இயக்குநர்களுக்கு தூது விட்டு வருகிறாராம்.

அவர் காலகட்டத்து நடிகைகள் இன்னமும் சினிமாவில் பிரபலமாக நடித்து வருவதே மயில் நடிகைக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளதாம்.

அப்போ தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அம்மா நடிகை ரெடி