சாண்டலின் கொந்தளிப்பு... தவிக்கும் ஹீரோ

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்கள்தான் சாண்டலும், எதிர்நீச்சல் போட்ட ஹீரோவும்.

இருவரும் இணைந்து இதுவரை படம் நடிக்க வில்லை. இவர்கள் இருவரையும் இணைக்க தயாரிப்பாளர்கள் நினைத்தாலும் சாண்டல் நடிகர் ஒத்துக் கொள்வதில்லையாம்.

எடுபிடி வேலை பார்த்தவன் ஹீரோவாக நடிக்கும் போது நான் அந்த படத்தில் காமெடியானாக நடிப்பதா? என்று எக்கச்செக்க டென்சன் காட்டுகிறாராம் சாண்டல்.

இதனால் செய்வதறியாது தவிக்கிறாராம் எதிர்நீச்சல் ஹீரோ. அது இது எது செய்த போது கூட இவ்வளவு சிக்கலில் ஹீரோவான பின்னர்தான் யார் எப்படி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று புலம்புகிறார் ஹீரோ.

சங்கத்தை வச்சுக்கிட்டு வருத்தப்படலாமா? என்று ஆறுதல் கூறுகின்றனர் அவரது நண்பர்கள்.

 

சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்: ஷாருக்

டெல்லி: சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

ஷாருகான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் வசூலில் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தில் உள்ளது.

எனினும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள போராடுவதாக கூறியுள்ளார் ஷாருக்கான். டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகம் நடத்திய 40-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாருகான் பேசியதாவது:

"நான் எனது முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன். நான் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.எனது பயமே என்னை பெரியவனாக்குகிறது.

சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர்: ஷாருக்

தோல்வி பயத்திலேயே நான் கடினமாக உழைக்கிறேன்.நான் ஒருநாளும் ஒய்வு எடுப்பதில்லை. நான் கடுமையாக வேலை செய்ய வில்லை என்றால் எனது இடைத்தை இழக்க நேரிடும்.

எனக்கு இரத்த அழுத்தம் இல்லை, இதய பாதிப்பு எதுவும் இல்லை ஏன் என்றால் நான் கடினமாக உழைக்கிறேன்.

தோல்வியே உங்களின் உண்மையான நண்பர்களை கண்டு பிடிக்க உதவும்.கடினமான சோதனை கட்டத்தில் தான் உண்மையான நட்பை அறிய முடியும். நான் ரா ஒன் படத்தினால் அதிக நண்பர்களை இழந்தேன்.அதுபோல் அதிகமான பார்வையாளர்களையும் இழந்தேன்.

சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் அதிகமான நண்பர்களை பெற்றேன் அதுபோல் புதிய எதிரிகளும் உருவாகி உள்ளனர்.

 

விழாவில் வாசலோடு திருப்பி அனுப்பப்பட்ட இசையமைப்பாளர்

சென்னை: சினிமாவை கொண்டாட நடந்த விழாவில் பழம்பெரும் அந்த 3 எழுத்து இசையமைப்பாளருக்கு அவமரியாதை நடந்துள்ளதாம்.

அண்மையில் சினிமாவை கொண்டாடும் விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவின் துவக்க நாள் அன்று பழம்பெரும் அந்த 3 எழுத்து இசையமைப்பாளர் விழா நடந்த இடத்திற்கு வந்துள்ளார். 60 ஆண்டுகள் இசையமைப்பாளராக ஜொலித்த அவரை நுழைவு வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் நிறுத்தியுள்ளனர்.

உங்களுக்கு அழைப்பு வைக்கவில்லை, விருது பட்டியலிலும் உங்கள் பெயர் இல்லை அதனால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்களாம்.

வேறு வழி இல்லாமல் அவரும் நொந்து கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதே நிகழ்ச்சியில் இசை உலகில் ஞானியான அந்த மனிதருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இத்தனைக்கும் திருப்பி அனுப்பப்பட்ட மனிதர் பெரிய இடத்திற்கு நல்ல பழக்கமானவரே, அப்படி இருந்தும் இப்படி நடந்துள்ளது.

 

இன்று ராஜா ராணி ரிலீஸ்: படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க?

சென்னை: ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி இன்று ரிலீஸாகியுள்ளது.

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நாஸிம் உள்ளிட்டோர் நடித்துள்ள ராஜா ராணி இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் நடிக்கும் ஆர்யா, நயன்தாரா திருமணத்திற்கே பத்திரிக்கை அடித்து ஜமாய்த்துவிட்டார்கள். இயக்குனர் ஆட்லீயிடம் கேட்டால் விளம்பரம் பாஸ் படத்திற்கு விளம்பரம் தான் முக்கியமாக உள்ளது என்றார்.

இன்று ராஜா ராணி ரிலீஸ்: படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜா ராணி இன்று ரிலீஸாகியுள்ளது. புதுமுக இயக்குனர் ஆட்லீ படத்தை எப்படி எடுத்துள்ளார், படத்தில் நிஜத்தில் கிசுகிசுக்கப்படும் ஜோடியான ஆர்யா, நயன்தாரா புதுமணத் தம்பதிகளாக எப்படி நடித்துள்ளார்கள் என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்று ராஜா ராணி ரிலீஸ்: படம் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க?

காதலர்கள் என்று கூறப்படும் ஜெய், நஸ்ரியா ஜோடி வேறு இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களின் கெமிஸ்ட்ரி பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எங்கள் சினிமா ஆசிரியர் சங்கர் விடுப்பில் இருப்பதால் அவர் வந்து கையோடு விமர்சனத்தை எழுதுவார் என்று உறுதி அளிக்கிறோம்.