'வேட்டை' ஆர்யாவுக்கு ஜோடி அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யாவை ஹீரோவாக தேர்வு செய்த லிங்குசாமி படத்துக்கு ‘வேட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார். கிளவுட் நைன் படத்தை தயா‌ரிக்கிறது. இதனையடுத்து ‘வேட்டை’ யில் ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, சமீரா ரெட்டி நடிக்கின்றனர்.


Source: Dinakaran
 

தெலுங்கில் ‘மன்மதன் அம்பு’ டப் ஆகிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் 'மன்மதன் அம்பு’. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷா. மாதவன், சங்கீதா இன்னொரு ஜோடி. ‘ரொம்ப நாளைக்கு பின் கமல் ரொமான்டிக் ஹீரோவா நடிக்கிற படம். 30 வயது இளைஞனா வர்றார். 'மன்மதன் அம்புÕ படத்தில் பாரிஸ் நடிகை கரோலின் நடிக்கிறார். இதனையடுத்து படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட உள்ளனர்.


Source: Dinakaran
 

‘பெத்தான் பெத்தான்’ சிம்பு பாடிய பாடல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்பு, பரத், சினேகா உல்லால் நடிக்கும் படம் 'வானம்'. தெலுங்கில் வெளியான 'வேதம்' பட ரீமேக் தான் 'வானம்’ வானம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'வானம்Õ படத்துக்காக 'பெத்தான் பெத்தான்Õ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இதில் ஆங்கில வரிகளை யுவன் சங்கர் ராஜா பாடி உள்ளார்.


Source: Dinakaran
 

கிசு கிசு - நடிகையை திட்டிய இயக்குனர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…

நல்ல காலம் பொறக்குது…

மலையாள காமெடி ஆக்டரு சுராஜு, தினமும் 1 லட்சம் கொடுத்தாதான் ஷூட்டிங் வருவேன்னு அடம் பிடிக்கிறாராம்… பிடிக்கிறாராம்… நம்மூர் காமெடி ஆக்டருங்கதான் மல்லுவுட் காமெடிகளுக்கு ரோல்மாடலாம்… ரோல்மாடலாம்… 'கோலிவுட்ல பல ஹீரோக்களைவிட அதிக சம்பளம் காமெடிக்களுக்குதான் க¤டைக்குது. ஒரு நாளைக்கே 2 லகரம் முதல் 5 லகரம் வரை வாங்குறாங்க. அந்த வழியத்தான் இங்குள்ள காமெடிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிச்சிருக்காங்கÕன்னு கேரள இயக்குனருங்க புலம்புறாங்க… புலம்புறாங்க…

வினயமான நடிகரை 3 ஹீரோ படத்துல, நடிக்க கேட்டாங்களாம். டக்குனு ஒத்துக்கிட்டராம். ரெண்டு நாள் புரொடக்ஷன் டீமோட டிஸ்கஷன¢ல உட்கார்ந்தாரு. 'இதுல என்னோட வேடத்துக்கு முக்கியத்துவம் இல்ல. அதனால இந்த வேஷம் எனக்கு வேணாம்Õனு எஸ்ஸாயிட்டாராம்… எஸ்ஸாயிட்டாராம்…

ஆரம்பத்துல தன்னோட படத்துக்கு மம்மு நடிகையை பஞ்சுவீர இயக்குனரு நடிக்க கூப்பிட்டிருந்தாரு. நடிகையை ரிஜெக்ட் பண்ணினப்போ இயக்குனரு கோபமா பேசிய விஷயம், இப்போ கசிய ஆரம்பிச்சிருக்காம்… ஆரம்பிச்சிருக்காம்… 'நீ நடிக்க லாயக்கு இல்லÕன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லி திருப்பி அனுப்பிட்டாராம்… அனுப்பிட்டாராம்… நெருக்கமானவங்ககிட்ட சொல்லி, நடிகை வருத்தப்படுறாராம்… வருத்தப்படுறாராம்…


Source: Dinakaran
 

ஒல்லியான உடல்தான் என் இமேஜ் - தனுஷ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'ஒல்லியான உடல்தான் என்னுடைய இமேஜ். அவ்வளவு சீக்கிரம் பாடி ஷேப் மாற்ற மாட்டேன்Õ என்கிறார் தனுஷ். அவர் கூறியதாவது:

‘உங்களுடன் நடிக்க வந்தவர்கள் உடல் ஷேப் மாற்றி குண்டாகி விட்டார்கள். நீங்கள் ஏன் வெயிட் போடவில்லை. சிக்ஸ் பேக் உடலுக்கு மாறவில்லை’ என்றெல்லாம் கேட்கிறார்கள். தனுஷ் என்றாலே ஒல்லியான தோற்றம்தான் ஞாபகத்துக்கு வரும். என்னதான் நிறைய சாப்பிட்டாலும் எனது தோற்றத்தில் மாற்றம் வராது. சாப்பிடுவதற்கு ஏற்ப உழைத்து விடுவதும் அதற்கு காரணம். இதைத்தான் வரவேற்கிறார்கள். உடலை ஏற்றும் எண்ணம் கிடையாது.


Source: Dinakaran
 

ரஜினி படத்தை 60முறை பார்த்த சிக்கு புக்கு நடிகை!

Preetika
ஒரு காலத்தில் என்க்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று சொல்வது நடிகைகளின் பேஷனாக இருந்தது. அப்படிப் பேசும் நடிகைகளுக்குத்தான் இங்குள்ள இங்குள்ள இயக்குநர்கள் சிலரும் ஆதரவை வாரி வாரி வழங்கி வந்தனர்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ்… நடிக்க வரும் முன்பே தமிழைக் கொஞ்சமாகவேனும் கற்றுக் கொண்டு வரும் அளவுக்கு நடிகைகள் மாறியிருக்கிறார்கள் (இதிலும் விதிவிலக்குகள் உண்டு!).

அந்த மாதிரி நடிகைகளில் ஒருவர் ப்ரீத்திகா. பாலிவுட் நடிகை அம்ரிதா ராவின் தங்கை. பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் பிறந்து, வளர்ந்தது மும்பையில். ஆனால் தமிழ் அட்சர சுத்தமாகப் பேசுகிறார்.

சிக்கு புக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமாகும் ப்ரீத்திகா, படத்தில் ஒப்பந்தமான பிறகு, தமிழை தெளிவாகக் கற்றுக் கொண்டுவிட்டாராம்.

பாலிவுட்டிலேயே இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாமே…? என்றால், ‘வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அப்போதுதான் தமிழில் சிக்குபுக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் அறிமுகமாவது இந்திக்கு நிகரான பெருமைதான்…” என்கிறார்.

ப்ரீத்திகாவின் பேவரிட் நடிகர்? வேறு யாராக இருக்க முடியும்… சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

“ரஜினிதான் என் ஆல்டைம் பேவரிட் ஹீரோ… குழந்தையாக இருந்ததிலிருந்து இன்றுவரை நான் பார்க்கும் படங்கள் அவருடையதுதான். இந்தியில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் படத்தை அறுபது தடவை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவருக்கு நான் எந்த அளவு ரசிகை என்று. இப்போது எந்திரன் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும், இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்… சான்ஸே இல்லை…” என்றார்.

 

ஐந்தாண்டு கழித்து அரசியல்! - சோனா பகீர்!

Sona
ஐந்தாண்டுகள் கழித்து அரசியலில் இறங்குவது பற்றி பரிசீலிப்பேன் என்று அதிரடி குண்டு வீசியுள்ளார் கவர்ச்சி நடிகை சோனா.

தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கிய நாளிலிருந்தே கவர்ச்சி நடிகை சோனா அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தை ‘ஆண்களை நம்பாதே’ என்பதுதான்.

நடிகையாக இருந்து, இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ள சோனா, தனது ஆரம்பகால கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்.

“இப்போது இரு படங்களை தயாரிக்கிறேன். அந்தப் படங்கள் முடிந்ததும் இயக்குநராகப் போகிறேன்.

எனக்கு எப்போது திருமணம் என்று பலர் கேட்கின்றனர். அது பற்றி சிந்திக்கவே இல்லை. ஆண்களை நான் நம்பமாட்டேன். நண்பர்கள் ஓகே… ஆனால் புருஷன்கள் துரோகிகள். அவர்களை நம்பக்கூடாது.

அதற்கு என் வாழ்க்கையே ஒரு உதாரணம். அதைப் படமாக எடுக்கும் திட்டம் உள்ளது.

எனக்கு இப்போதைக்கு அரசியல் வேண்டாம். எந்தக் கட்சியாவது என்னை வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய அழைத்தாலும் போகமாட்டேன். ஆனால் இது நிரந்தர முடிவல்ல… 5 ஆண்டுகள் கழித்து அரசியலில் ஈடுபடுவது பற்றி யோசிப்பேன்…” என்றார் அதிரடியாக.

 

இது என் படமல்ல,ராம் கோபால் வர்மா படம்-சூர்யா

Surya
ரக்த சரித்ரா இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் விவேக் ஓபராயுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள சூர்யாவை, ‘ரோபோ ரஜினிக்குப் பின் இப்போது கஜினி சூர்யா’ கலக்க வருகிறார்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் செய்திருந்தனர் மும்பை பகுதியில்.

வடக்கில் ரஜினிக்கு இருக்கும் பெரும் புகழ், செல்வாக்கு, ரசிகர்களிடம் உள்ள நல்ல பெயரை, அங்கே முதல்முறையாக நடிக்கும் சூர்யாவுக்குப் பயன்படுத்துவதா என்று பல ரஜினி ரசிகர்கள் ஆவேசப்பட்டனர்.

ஆனால் முன்னிலும் வேகமாக இந்த விளம்பரங்களைச் செய்ய ஆரம்பித்தனர். விசாரித்ததில், இதைச் செய்பவர் வேறு யாருமில்லை… படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மாதான், எனத் தெரிய வந்தது.

இதனால் ராம் கோபால் வர்மாவுக்கு கண்டனத்தை இமெயில் மற்றும் கடிதங்கள் மூலமாக பல ரசிகர்கள் அனுப்பி வைத்தனர்.

இன்னொன்று, அரசியல் தலைவர்களைப் பற்றி படுமோசமான விமர்சனங்களைத் தாங்கி வரும் ரத்த சரித்திரத்தில் அனாவசியமாக ரஜினி பெயரை இழுக்கக் கூடாது என கண்டனம் தெரிவித்திருந்தனர் ரசிகர்கள்.

இந் நிலையில், இந்த விவகாரம் குறித்து சூர்யாவிடன் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், “இப்படத்திற்காக ‘ரோபோ ரஜினிக்கு பிறகு கஜினி சூர்யா’ என்று என்னை ரஜினியுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்தது உண்மைதான்.

இப்போது அதுபோன்ற விளம்பரங்களை நீக்குமாறு கூறிவிட்டேன். ரஜினி பெரிய நடிகர் அவருடன் என்னை ஒப்பிட்டது தவறுதான்.

இந்த படத்தை சிலர் எதிர்க்கின்றனர். இதில் யாரையும் புண்படுத்தவில்லை. இன்னொரு முக்கிய விஷயம், இது சூர்யா படமில்லை. ராம் கோபால் வர்மா படம். எனவே என் படம் என்ற எதிர்ப்பார்ப்பு வேண்டாம்…” என்றார்.

 

ரிலீஸாகுது ‘மயிலு’!

Shammu
பிரகாஷ் ராஜ் – மோசர் பேர் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான படம் மயிலு. ஜீவன் இயக்கியிருந்தார்.

ரிலீசுக்கு முன்பே இளையராஜாவின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்ட படம் இது. ஒரு பொங்கல் தினத்தில், இந்தப் பாடல்கள் உருவான விதத்தை இசைஞானி லைவ்வாகவே காட்ட, மெய் மறந்துபோனார்கள் ரசிகர்கள்.

ஆனால் தயாரிப்பாளர்களுக்கிடையில் எழுந்த மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அப்படியே நின்றுவிட்டது மயிலு.

அந்தப் படத்தில் அறிமுகமாகவிருந்த இயக்குநர் ஜீவன், அதற்குப் பிறகு பா விஜய்யை வைத்து ஞாபகங்கள் எடுத்துவெளியிட்டது நினைவிருக்கலாம்.

இப்போது மீண்டும் மயிலை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான பிரகாஷ் ராஜ். கிறிஸ்துமஸுக்கு இந்தப் படம் வெளியாகிறது.

மதுரையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையில் ஷம்முவும் புதுமுகம் ஸ்ரீயும் நடித்துள்ளனர்.

படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறுகையில், “இந்தப் வெளியாவது நல்ல சினிமாவுக்கு, நல்ல இசைக்குக் கிடைத்த வெற்றி என்பேன். இந்தப் படத்தின் நாயகன் இளையராஜாதான். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத படமாக, இசையாக மயிலு அமையும்,” என்றார்.

 

தமிழ் சினிமாவில் முதன் முறையாக காஸ்டிங் இயக்குனர் அறிமுகம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஹாலிவுட் படங்களில் காஸ்டிங் இயக்குனர் என்பவர் தனியாக இருப்பார். படத்தின் கேரக்டர்களுக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்வது அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது இவரின் பணி. தமிழ் சினிமாவில் இதை இயக்குனர்களே செய்து விடுவதால் அந்த பணிக்கென்று தனியாக யாரும் இருப்பதில்லை.

இப்போது முதன் முறையாக, 'கிருஷ்ணவேணி பஞ்சாலை' என்ற படத்தில் காஸ்டிங் இயக்குனராக, 'விருமாண்டி' படத்தில் பேய்காமனாக அறிமுகமான சண்முகராஜன் பணியாற்றுகிறார். டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் படித்த இவர், இந்தப் படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்ததுடன் அவர்களுக்கு ஒரு மாதம் நடிப்பு பயிலரங்கம் நடத்தி இருக்கிறார்.

'காஸ்டிங் இயக்குனர்களை நியமிப்பதன் மூலம் இயக்குனர்களின் பணிச் சுமை குறையும். நடிப்பு பயிற்சியால் படப்பிடிப்பில் டேக்குகள் குறைவதால் நேரமும், பிலிமும் மிச்சமாகும். இதனால் தயாரிப்பாளரின் சுமையும் குறையும். இனி வருங்காலத்தில் காஸ்டிங் இயக்குனர்களின் பணி தவிர்க்க முடியாததாக இருக்கும்' என்றார் சண்முகராஜன்.


Source: Dinakaran
 

கனிமொழி படத்தில் நேரடி ஒலிப்பதிவால் எகிறியது பட்ஜெட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'கனிமொழி' படத்துக்கு நேரடி ஒலிப்பதிவு செய்ததால் படத்தின் பட்ஜெட் எகிறியதாக, அதன் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'கனிமொழி' வழக்கமான படம் அல்ல. தொழில் நுட்ப ரீதியாகவும், கதை சொல்லும் பாணியிலும் புதுமையானது. ஹீரோ ஜெய்யின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது இது அவருக்கு இன்னொரு தளத்தை கொடுக்கும். ஹீரோயின் ஷசான் பதம்ஸி தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். ஒரு தத்துவத்தின் யதார்த்த பதிவாக இது உருவாகியுள்ளது. படத்தில் யதார்த்தத்தை பேணுவதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே நேரடி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக சைலன்ட் ஜெனரேட்டர், சைலன்ட் கேமரா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் கோடி கணக்கில் பணம் செலவானது. நேரடி ஒலிப்பதிவால் தயாரிப்பாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும் படத்தின் தரத்தை உயர்த்த இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.


Source: Dinakaran
 

நாதஸ்வரம் தொடரில் புதிய பாடல்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'நாதஸ்வரம்' தொடரில் இன்று புதிய பாடல் ஒன்று ஒளிபரப்பாகிறது. திரு பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், 'மெட்டி ஒலி' திருமுருகன் தயாரித்து, இயக்கி நடிக்கும் தொடர் 'நாதஸ்வரம்'. சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரில், மவுலி, பூவிலங்கு மோகன், ஸ்ருத்திகா உட்பட பலர் நடிக்கின்றனர். 'மெட்டிஒலி' தொடரில் கதையோடு இணைந்த 'மனசே மனசே' பாடல் இடம் பெற்றது போல இத்தொடரில் 'முதன்முறை உன்னை பார்த்தேன்' என்ற பாடல் இன்று ஒளிபரப்பாகிறது. யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு சஞ்சீவ் ரத்தன் இசை அமைத்துள்ளார். இதையடுத்து புதன்கிழமை 'இது பகலா' என்ற இன்னொரு பாடல் இடம்பெறுகிறது. இதுபற்றி திருமுருகன் கூறும்போது, 'கதைக்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக இந்தப் பாடலை பயன்படுத்துகிறோம். இது, ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்' என்றார்.


Source: Dinakaran
 

ஈசன் பாடல் வெளியீட்டில் 5மொழி இயக்குனர்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'ஈசன்' பட பாடல் வெளியீட்டு விழாவில், 5 மாநிலங்களை சேர்ந்த இயக்குனர்கள் பங்கேற்கிறார்கள். கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில், சசிகுமார் தயாரித்து இயக்கும் படம் 'ஈசன்'. சமுத்திரகனி, வைபவ், அபிநயா, அபர்ணா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் 19&ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில், இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், தெலுங்கு பட இயக்குனர் த்ரிவிக்ரம், கன்னட இயக்குனர் ஜோக்ராஜ் பட், மலையாள இயக்குனர் ரஞ்சித், தமிழ் இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 'இந்திய சினிமாவில் உள்ள முக்கியமான இயக்குனர்களை இணைக்க திட்டமிட்டேன். அதன் முதல்படியாக, எனது பட பாடல் வெளியீட்டு விழாவில் அவர்கள் கலந்துகொள்கின்றனர்' என்றார் சசிகுமார்.


Source: Dinakaran
 

தமிழ் சினிமா தரத்தை உயர்த்தும் ரஜினி -கமல்! - கவிஞர் வாலி

MSV, Rajini and Kamal
சென்னை: ரஜினியும் கமலும் இன்று உச்சத்தில் இருந்தாலும், வேர்களை மறக்காதவர்கள், தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருபவர்கள், என்றார் கவிஞர் வாலி.

கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான “வாலி – 1000′ என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் வாலி பேசிய ஏற்புரை:

கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்… என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன்தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.

எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. எல்லாம் வல்ல முருகன் அருளால் நீடூழி வாழ்க என்று அந்த மணமக்களை மனதால் வாழ்த்தினேன்.

கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே. சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர். மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. அந்த அளவுக்கு வரம் – சக்தி அவருக்கு உண்டு.

இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். படகோட்டி படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை. அதே போல் தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.

ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான்.

எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம்.

20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.

கமல், ரஜினி ஆகியோர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார்கள். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம்…”, என்றார்.

சோ பேச்சு:

துக்ளக் ஆசிரியர் சோ பேசுகையில், “காலம் கடந்தும் நிற்பவை வாலியின் கவிதைகள். இது அவருக்கு கடவுள் தந்த பரிசு. அதனால்தான் அவரால் ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களைப் பாராட்டவும் முடியும். அதில் ஒன்றும் தவறு கிடையாது.

கவிதை, பாடல்களை எழுதும் போது அதிலேயே அவர் ஐக்கியமாகி விடுகிறார். தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரிடம் இன்னும் திறமைகள் கொட்டிக் கிடக்கிறது. கண்ணதாசன் காலத்திலும் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. அனைத்திலும் கவித்துவம் இருக்கும். எல்லோரையும் வாலியால் கவர முடியும்” என்றார்.

ரஜினி, கமலும் வாழ்த்திப் பேசினர்.

Rajini, Kamal, Suriya at Vaali 1000 Book Launch Stills, Event Pictures Photo gallery, Video

 

உயிரோட ‘சாவடிக்கலாமா’? – ஒரு ‘காமெடி’யின் வேதனை!

Benjamin
நான் நல்லா இருக்கேங்க… ஆனா அதுக்குள்ள நான் செத்துப் போயிட்டதா சொல்லி மாலையோட வீட்டுக்கு ஆளுங்க வராங்க. இந்த கொடுமைய எங்க போயி சொல்ல!, என்கிறார் காமெடி நடிகர் பெஞ்சமின்.

சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேலுவை கண்டமேனிக்கு திட்டும் காமெடி காரெக்டரில் அறிமுகமானவர் பெஞ்சமின். தொடர்ந்து ஆட்டோகிராபில் சேரனின் நண்பனாகவும், திருப்பாச்சியில் விஜய்யுடன் தனி காமெடியனாகாவும் நடித்தார்.

தமிழ், தெலுங்கு உள்பட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சேலம் நகரைச் சேர்ந்தவர். இப்போதும் சேலம் அஸ்தம்பட்டி பாரதி நகரில் தாயார், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இதனால் அதிரந்து போன உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலையுடன் இவரது வீட்டுக்கு வந்து விட்டனர்.

அப்போது வீட்டில் நடிகர் பெஞ்சமின் இல்லை. அவரது தாயார் மட்டும் இருந்தார்.

இந்த வதந்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செல்போனில் மகனை தொடர்பு கொண்டார். மறுமுனையில் அவரது மகன் பெஞ்சமின் பேசிய பிறகுதான் அவருக்கு மூச்சே வந்ததாம். வந்த அனைவருக்கும் மகன் நலமுடன் இருப்பதை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வதந்தியை கிளப்பியது யார் என்று தெரியவில்லை.

இது குறித்து நடிகர் பெஞ்சமின் வருத்தத்துடன் இப்படிக் கூறுகிறார்:

அன்றைக்கு நான் எனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்திருந்தேன். நான் இறந்து விட்டதாகக் கூறி பலர் மாலையுடன் வீட்டுக்கு வந்ததாக எனது தாயார் கூறினார். எனக்கும் நேற்று காலை முதல் இன்று வரை இடைவிடாமல் போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன். தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருப்பதால் நேற்று இரவு நான் துங்கக் கூட முடியவில்லை.

இந்த வதந்தியை யார் கிளப்பியது என்று தெரியவில்லை. எனது தாயார் சின்னத்தாய் இருதய நோயாளி ஆவார். அவர் இந்த வதந்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல..!”, என்றார் அவர்.

 

ரமலத்தை திருமணம் செய்தது செல்லாது என மனு செய்கிறார் பிரபுதேவா!

Prabhu Deva
ரம்லத்துடன் தனக்கு நடந்த திருமணம் பதிவு செய்யாதது; எனவே அதை செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்ய பிரபுதேவா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரம்லத்தை திருமணம் செய்து, அவர் மூலம் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொண்டவர் பிரபு தேவா. ஆனால் நயன்தாராவுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்ட பிறகு, மனைவியை மறந்து, கள்ளக்காதலி பின்னால் சுற்றத் தொடங்கினார்.

மனைவி இருக்கும்போதே, நயன்தாராவை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார்.

இதனால் அதிர்ந்துபோன ரம்லத், நீதிமன்றத்தில் பிரபு தேவா, நயன்தாரா இருவர் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் பிரபுதேவா, நயன் தாராவை 23-ந்தேதி ஆஜராகும்படி குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் நடப்பது குற்றம் என்ற ரீதியில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

ரம்லத்தும், பிரபுதேவாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது சட்டப்படி செல்லாது என்று பிரபு தேவா கருதுகிறார். எனவேதான் நயன்தாராவை திருமணம் செய்வேன் என துணிச்சலாக அவரை பேட்டி அளித்தாராம். ரம்லத்திடம் இருந்து இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு வராது என்றும் அவர் கருதியிருக்கிறார்.

ஆனால் ரம்லத் நீதிமன்றத்துக்குப் போனதால் இப்போது நயன்தாராவுடனான திருமணத்தை தள்ளி வைத்து விட்டார்.

ரம்லத் வழக்கை எவ்வாறு சந்திப்பது என்று வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார் பிரபுதேவா. முதல் சம்மனுக்கு பிரபுதேவாவும் நயன்தாராவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

2-வது சம்மன் தற்போது வந்துள்ளது. இந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகி ரம்லத் திருமணம் செல்லாது என நிரூபிக்க ஆதாரங்களை அவர் தேடுவதாக கூறப்படுகிறது. வக்கீல்களுடனும் இது சம்பந்தமாக விவாதித்து வருகிறார்.

இதை எதிர்ப்பார்த்தே, கணவன்- மனைவியாக சேர்ந்து வாழ்ந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ரம்லத் தரப்பு தயாராகி வருகிறது.

பிரபுதேவாவை மணந்ததும் ரம்லத் இந்து மதத்துக்கு மாறி பெயரை லதா என மாற்றிக் கொண்டார். அதற்கான அரசு கெஜட்டில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவற்றிலும் கணவர் பிரபுதேவா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழிலும் இருவரும் தாய், தந்தை என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

எனவே நவம்பர் 23-ம் தேதி விசாரணையை இரு தரப்புமே பரபரப்புடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

 

‘குவார்ட்டரை’க் காணோம்!

Lekha Washington and Shiva
இதுவரை ‘வ குவாட்டர் கட்டிங்’ என்றே தலைப்பை விளம்பரங்களில் வெளியிட்டு வந்தனர் அந்தப் படத்தைத் தயாரித்த ஓய் நாட் புரொடக்ஷனும், வெளியிட்ட தயாநிதி அழகிரியும். இதற்கு வரிவிலக்கு வேறு கிடைக்க, படத்துக்குக் கிடைத்ததை விட பல மடங்கு அதிக அர்ச்சனை இந்த வரிவிலக்கு மேட்டருக்குக் கிடைத்தது.

முதல்வரின் பேரன் என்ற ஒரே தகுதியால், இந்த மாதிரி விதி மீறல்களைச் செய்கிறார்கள். வ குவாட்டர் கட்டிங் எந்த வகையில் தமிழ் பெயர், அதற்கு ஏன் வரிவிலக்கு? என்று போட்டுத் தாளித்துவிட்டார்கள் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும்.

இதன் விளைவு, படம் வெளியான சில தினங்களுக்கு ‘வ சரக்கு வச்சிருக்கேன்’ என்று விளம்பரம் வெளியிட்டார்கள். ஆனாலும் விமர்சனம் அடங்கவில்லை. இப்போது எதுவுமே வேண்டாம் என்று நினைத்துவிட்டார்களோ என்னமோ… வெறு ‘வ’ என்று மட்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்!

குவாட்டரும் கட்டிங்கும் காணாமல் போயிருப்பதை விட முக்கியமான ஒரு மேட்டரும் உண்டு… அது, வெளியானதில் படம் வெளியான பாதித் தியேட்டர்களில் முதல் வாரம் முடிவதற்குள்ளாகவே படமும் காணாமல் போயிருப்பதுதான்!

 

லாவாஸாவில் விஜய் -அசின் டூயட்!

http://tamil.way2movies.com/wp-content/uploads/2010/10/VijayAsin-300x225.jpg
இலங்கைப் புகழ் அசினும், அவருக்குக் காவலனாக நடிக்கும் விஜய்யும் இப்போது இருப்பது… லாவாஸாவில்!

லாவாஸா?

பூனா அருகே ஸையாத்ரி மலைத் தொடர்களில் அமைந்துள்ள குளுகுளு பிரதேசம்தான் இந்த லாவாஸா. கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் இருக்கும் எஃபெக்ட் லாவாஸாவிலேயே கிடைக்குமாம்.

திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் இந்திய நகரம் என்ற பெருமையும் லாவாஸாவுக்கே உண்டு.

இயற்கையின் அழகு கெடாமல் பராமரிக்கப்படும் இந்த மலை நகரில் எடுக்கப்படும் முதல் தமிழ்ப் படம் காவலன்தான்.

காவலன் படத்துக்காக வித்யாசாகர் இசையில் உருவான ஒரு அழகான மெலடிப் பாடலை இங்கு வைத்துப் படமாக்கினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் விரும்ப, உடனடியாக லாவாஸா பறந்துவிட்டது காவலன் குழு.

இன்னும் ஒரு வாரத்துக்கு அசின் – விஜய் ஜோடி, லாவாஸாவில் ‘டூயட்’ பாடவிருக்கிறது!