எவ்ளோ பெரிய நெற்றி.. சோனாக்சியால் திண்டாடும் எடிட்டர்கள்!


Why Sonakshi Sinha S Forehead Is An Aditor   
பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்காவின் அகலமான பெரிய நெற்றி இப்பொழுது அவருக்கு இடைஞ்சலாக மாறியுள்ளது. காரணம் பிரேமில் அடங்காமல் திரைப்பட எடிட்டர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.

பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்காவின் மகள்தான் சோனாக்சி சின்கா. தபாங், ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தற்போது ரன்வீர்சிங்குடன் லூட்டேரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தன்னுடைய அகன்ற நெற்றியில் அழகாய் பொட்டிட்டு பெங்காலி பெண்களைப் போல நடித்துள்ளாராம். ஆனால் இந்த அகன்ற நெற்றிதான் இந்த படத்தின் எடிட்டருக்கு அவஸ்தையாக அமைந்துள்ளதாம்.

நடிகர் ரன்வீருடன் ஜோடியாக இருக்கும் ப்ரேம்களில் அகலமான நெற்றியினால் சரியாக அமையாமல் போரடினார்களாம். ஏற்கனவே ரவுடி ரத்தோர் படத்தில் இந்த பிரச்சினை எழுந்தபோது எப்படியோ சமாளித்தனர். அதே பிரச்சினை புதிய படத்திற்கும் எழுந்துள்ளது.

அகலமான பெரிய நெற்றி இருந்தால் புத்திசாலித்தனமாக இருப்பார்கள் என்பார்கள். ஆனால் சோனாக்சி விசயத்தில் அவருடைய நெற்றியே மைனசாக ஆகிவிடும் போல் இருக்கிறதே!

நெற்றியை சுருக்க ஆபரேஷன் ஏதாவது இருக்காப்பா... விசாரிச்சு சோனாக்சிக்கு சொல்லுங்களேன்...
 

கோஹ்லியுடன் கிசுகிசுக்கப்படும் தமன்னா!

What Is Going On Between Tamanna Ko
சென்னை: விராட் கோஹ்லியுடன் விளம்பரப் படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதைத் தொடர்ந்து, இருவரைப் பற்றியும் கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது.

செல்போன் நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் கோஹ்லி. இதே விளம்பர நிறுவனத்தின் ஆந்திரப் பிரதேச தூதராக தமன்னா உள்ளார்.

அடுத்து இருவரையும் சேர்த்து ஒரு விளம்பரப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனம்.

இதைத் தொடர்ந்து தமன்னாவும் கோஹ்லியும் சந்தித்துப் பேசியதாகவும், இருவரும் இப்போது நெருக்கமாகிவிட்டதாகவும் செய்தி பரவியுள்ளது.

ஏற்கெனவே பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் தமன்னா. இப்போது விராட் கோஹ்லியின் நட்பும், ஆதரவும் தன்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சேர்க்கும் என நம்புகிறார் அவர்.

விராட் கோஹ்லி நடிகைகளுடன் இணைத்துப் பேசப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே அவருக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளை நாயகி சாரா ஜேனுக்கும் காதல் என கிசுகிசு பரவியது நினைவிருக்கலாம்.
 

ராஸ் 3 படத்தில் ஈஷா குப்தாவை 20 நிமிடம் கிஸ்ஸடித்த இம்ரான் ஹஷ்மி

Emraan Hashmi Esha Gupta S 20 Minute Kissing Scene
மும்பை: சீரியல் கிஸ்ஸர் என்ற செல்லப் பெயர் கொண்ட பாலிவுட்டின் இளம் நாயகன் இம்ரான் ஹஷ்மி, ராஸ் 3 படத்தில் ஈஷா குப்தாவை 20 நிமிடங்கள் கிஸ்ஸடித்து புதிய முத்தப் புரட்சி படைத்துள்ளாராம்.

இம்ரான் ஹஷ்மியை புக் செய்யப் போகும் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் அவரது கால்ஷீட்டை விட அவரது 'வாய் சீட்டு'க்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அதாவது படத்தில் ஏதாவது ஏடாகூடமான முத்தக் காட்சியை வைத்துப் படத்திற்கு நல்ல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். ஹஷ்மியும் சளைக்காமல் உம்மா கொடுத்தபடி இருக்கிறார். இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் ராஸ் 3 படத்தில் ஈஷா குப்தாவுக்கு மொத்தம் 20 நிமிடங்கள் முத்தம் கொடுத்து புதிய புரட்சி படைத்துள்ளாராம் ஹஷ்மி. இதுவரை எந்த நடிகைக்கும் இவ்வளவு நீண்ட நேரம் முத்தமிட்டதில்லையாம் ஹஷ்மி.

ஏற்கனவே ஜன்னத் 2 படத்திலும் கூட ஈஷாவுக்குக பெரியதொரு கிஸ் கொடுத்துள்ளார் ஹஷ்மி. அந்த வகையில் இருவரது உதடுகளுக்கும் ஏற்கனவே நல்ல 'முன் அனுபவம்' உள்ளது.

இதற்கு முன்பு சோஹா அலிகானுக்கு தும் மிலே படத்தில் ஒரு நீண்ட நேர முத்தம் கொடுத்திருந்தார் ஹஷ்மி. ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் ராஸ் 3 படத்தில் கொடுத்திருக்கிறாராம்.

இதுகுறித்து இயக்குநர் மகேஷ் பட் கூறுகையில், இப்படத்தின் முக்கியக் காட்சியே இம்ரான் கொடுத்திருக்கும் நீண்ட நேர முத்தக் காட்சிதான். இதை மராத்தான் கிஸ் என்று நான் சொல்வேன்.... என்றார்.

ஈஷாவின் உதடுகள் மரத்துப் போய் டம்மியாகி விடாமல் இருந்தால் சரித்தான் மகேஷ்...!
 

'குண்டக்க மண்டக்க' படங்களைப் போட்டி போட்டு ரிலீஸ் செய்த ஷெர்லின், பூனம்!

Hot Weekend Poonam Pandey Sherlyn   
மும்பை: ஷெர்லின் சோப்ராவுக்கும், பூனம் பாண்டேவுக்கும் இதே வேலையாகப் போய் விட்டது. டிரஸ்ஸைக் கழற்றி கழற்றி, போட்டோ எடுத்து எடுத்து டிவிட்டரில் போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கிறார். இந்த சனியும், ஞாயிறும் இவர்கள் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு ஏதி பயங்கர கவர்ச்சிப் படங்களைப் போட்டு விட்டதில் டிவிட்டருக்கே வியர்த்துப் போயிருக்கும்.

பிளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெறப் போகும் முதல் இந்தியப் பெண் என்ற பெயரை சமீபத்தில்தான் பெற்றார் பூனம் பாண்டே. இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் டிரஸ்ஸை கழற்றிப் போட்டு விட்டு நிர்வாணமாவேன் என்று அறிவித்து அகில உலகப் புகழ் பெற்றவர் பூனம்.

இந்த இரு செக்ஸி அழகிகளும் சேர்ந்து டிவிட்டரைப் பாடாய்ப் படுத்தி வருகிறார்கள்.

சனிக்கிழமையன்று ஷெர்லின் சோப்ரா, தனது கவர்ச்சிகரமான படங்களைப் போட்டு விட்டார். இந்தப் படங்கள் ஏடாகூடமாக இருக்கும், பயந்து விடாதீர்கள் என்றும் ஒரு வார்னிங் மெசேஜையும் கொடுத்திருந்தார்.

இதைப் பார்த்த பூனம் பாண்டே, உடனே ஞாயிற்றுக்கிழமை காலாங்கார்த்தலேயே கவர்ச்சியை அள்ளி வீசினார் தனது டிவிட்டர் பக்கத்தில். இப்படி இருவரும் காலையிலும், மாலையிலுமாக அள்ளி வீசிய கவர்ச்சிக் களியாட்டத்தால் இருவரது ரசிகர்களும் ஏக குஷியாகி விட்டனர்.

இருந்தாலும் ஷெர்லினை விட இப்போதைக்கு பூனத்திற்குத்தான் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதாம். டிவிட்டரில் பூனத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை 2,80,000 ஆக உள்ளது. அதேசமயம், ஷெர்லினுக்கு 1,20,000 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னவோ போங்கம்மா...!
 

தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த காஞ்சிபுரம் தியேட்டர் உரிமையாளர்கள்!


Producers Deep Shock Over Kanchipuram   
சென்னை: இனி புதிய படங்களுக்கு மினிமம் கேரண்டி எனும் முறையில் பெரும் தொகையை செலுத்த மாட்டோம் என காஞ்சிபுரம் நகர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் முகமூடி படத்தை இரண்டு நாட்கள் கழித்துதான் காஞ்சிபுரத்தில் படத்தைத் திரையிட்டனர்.

இது தயாரிப்பாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பொதுவாக பெரிய படங்களை வாங்கும்போது, அதை மினிமம் கேரண்டி முறையில் வெளியிடுவது வழக்கம். ரஜினி படங்களுக்கு ரூ 1 கோடி வரை இப்படித் தரப்படும். கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் படங்களுக்கும் குறித்த தொகை இப்படித் தரப்படும்.

ஆனால் சமீப காலமாக இப்படித் தரப்பட்ட தொகையை வசூலிக்க முடியாமல் காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகள் திணறிக் கொண்டிருக்கின்றன. ஏழாம் அறிவு, பில்லா 2, சகுனி, வேலாயுதம், நண்பன் போன்ற படங்களுக்கு பெரும் தொகை தரப்பட்டதாம். ஆனால் அந்தப் படங்கள் மினிமம் கேரண்டி தொகையை வசூலிக்க முடியாமல் தியேட்டர் உரிமையாளர்களை ஏமாற்றிவிட்டன.

இதனால் இப்போது காஞ்சிபுரம் தியேட்டர்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர். இனி எக்காரணம் கொண்டும் எந்தப் படத்துக்கும் மினிமம் கியாரண்டி தொகை தரமுடியாது என்றும், சாதாரணமாக ஒரு தொகையை அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு படங்களைத் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்த நிபந்தனைக்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாததால், முகமூடி படத்தைத் திரையிட காஞ்சிபுரம் திரையரங்குகள் மறுத்துவிட்டன. வேறு வழியின்றி ரூ 5 லட்சம் மட்டும் பெற்றுக் கொண்டு அந்தப் படத்தை தயாரிப்பாளர் கொடுத்ததால், ஞாயிற்றுக் கிழமை திரையிட்டுள்ளனர்.

தியேட்டர்காரர்களின் இந்த ஒற்றுமை தயாரிப்பாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

பெங்களூரில் ரஜினி படித்த பள்ளியின் நவீன கட்டடப் பணி தொடங்கியது!

Rs1 53 Crore Gift Rajinikanth S Childwood School

பெங்களூர்: பெங்களூரில் நடிகர் ரஜினி காந்த் படித்த பள்ளியில் நவீன கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நேற்று கர்நாடக துணை முதல்வர் ஆர்.அசோக் தொடக்கிவைத்தார்.

பெங்களூர், கவிபுரம், குட்டஹள்ளியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில்தான் நடிகர் ரஜினி காந்த் 7-ம் வகுப்பு வரை கல்வி பயின்றார். மிகவும் பழமை வாய்ந்த இந்தப் பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க ரஜினி ரசிகர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி இதற்காக பெருமளவு நிதி திரட்டிக் கொடுத்துள்ளது.

மேலும் மூத்த கன்னட நாடகக் கலைஞர் மாஸ்டர் ஹீரணையா, ரஜினியுடன் படித்த கவிகங்காதரேஷ்வரா கோயில் அர்ச்சகர் சோமசுந்தர தீட்சிதர் உள்பட பலர் அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், பசவனகுடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரவிசுப்பிரமணியனின் முயற்சியால் பள்ளியின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு ரூ.1.67 கோடியில் அதிநவீன கட்டடம் கட்ட அரசு முன்வந்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, விழாவில் கர்நாடக துணை முதல்வர் ஆர்.அசோக் பேசியது:

நடிகர் ரஜினிகாந்த் படித்த ஆரம்பப் பள்ளி ஏதோ ஒரு மடத்திற்கு சொந்தமானது என்று பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். அது எந்த ஒரு மடத்திற்கும் சொந்தமானது அல்ல. அது அரசின் ஆரம்பப் பள்ளி. மூத்த நாடகக் கலைஞர் மாஸ்டர் ஹீரணையா மற்றும் ரவிசுப்பிரமணியனின் பெரும் முயற்சியால் இப்போது இந்தப் பள்ளி அதிநவீன முறையில் கட்டப்படுகிறது.

இந்த ஆரம்பப் பள்ளி கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத் திகழும்படி கட்டப்படும்.

இதில் படிக்கும் ஏழைகள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் நடிகர் ரஜினி காந்தைப் போல உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும். அதுமட்டுமல்லாது நாட்டின் பிரதமராக, மாநிலத்தின் முதல்வராக, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களாக வந்து நாட்டின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.

பாஜக தேசிய பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அனந்த்குமார் பேசியது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உலகப் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். இது நமக்கு பெருமை. அவர் படித்த ஆரம்ப் பள்ளியை இடித்துவிட்டு, ரூ. 1.67 கோடியில் நவீன முறையில் கட்டடம் கட்டப்படவுள்ளது.

மாநில அரசு ரூ.81.5 லட்சமும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 25 லட்சமும், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 20 லட்சமும், பெங்களூர் மாநகராட்சி ரூ. 10 லட்சமும் வழங்குகிறது. மீதமுள்ள தொகை நன்கொடையாக பெறப்படுகிறது.

உரியகாலத்திற்குள் நவீன கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்தை அழைக்க வேண்டும்," என்றார்.

நிகழ்ச்சியில் ஜவுளித்துறை அமைச்சர் வர்த்தூர் பிரகாஷ், மேயர் வெங்கடேஷ்மூர்த்தி, எம்.எல்.ஏ. ரவிசுப்பிரமணியா, கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதி தலைவர் ரஜினி முருகன்ஜி, சாய்கோல்டு சரவணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஆதிபகவன் - கனடாவில் ஆடியோ ரிலீஸ்!!

Aadhi Bhagavan Audio Release Canada   

அமீர் இயக்கத்தில், ரொம்ப நாளாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆதி பகவன் படத்தின் இசை வெளியீடு கனடாவில் நடக்கும் எனத் தெரிகிறது.

ஜெயம் ரவி- நீது சந்திரா நடித்துள்ள ஆதி பகவன் படத்தை, திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் தயாரித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளன.

இதுவரை அமீர் இயக்கிய அத்தனைப் படங்களுக்குமே யுவன்தான் இசை தந்திருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்துப் படங்களின் பாடல்களுமே பெரும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பருத்திவீரன் பாடல்கள் க்ளாஸிக் எனும் அளவு அழகாக அமைந்திருந்தன.

ஆதிபகவன் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாக யுவன் சங்கர் ராஜாவும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்த அமீர், ஹஜ் சென்று வந்தார். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படுவிறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

வரும் செப்டம்பர் 29-ம் தேதி கனடாவின் தலைநகரில் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

கனடாவில் தமிழ் சினிமா இசை வெளியீடு நடப்பது இதுவே முதல்முறை.

 

மலையாள நடிகை 'செம்மீன்' ஷீலா காங்.கில் சேருகிறார்- சென்னையிலிருந்து கேரளாவுக்கு இடம் பெயருகிறார்!

Chemmeen Sheela Join Congress

சென்னை: பழம்பெரும் மலையாள நடிகை 'செம்மீன்' ஷீலா காங்கிரஸ் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். தனக்கு நல்ல பதவி கொடுத்தால், தற்போது வசித்து வரும் சென்னையிலிருந்து சொந்த மாநிலமான கேரளாவுக்கு இடம் பெயரவும் அவர் முடிவு செய்துள்ளார்.

கேரள பெண்கள் மற்றும் சிறார்களின் நலனுக்காக தான் பாடுபடத் தயாராக இருப்பதாகவும் ஷீலா கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று கேரளாவைச் சேர்ந்தவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியைச் சந்தித்துப் பேசினார் ஷீலா. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேரம் வரும்போது அனைத்தும் தெரிய வரும். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

கேரள பெண்கள் மற்றும் சிறார்களின் நலனுக்காக பாடுபடத் தயாராக இருக்கிறேன். எனக்குப் பதவி கொடுக்கப்பட்டால் அதை ஏற்பேன். அப்படி ஒரு நிலை வந்தால் நான் சென்னையிலிருந்து கேரளாவுக்கு நிரந்தரமாக இடம் பெயரவும் தயாராக இருக்கிறேன்.

அரசியலில் சேருவது என்பது எளிதான முடிவாக இருக்கவில்லை. பல மாதங்கள் யோசித்த பின்னர்தான் இந்த முடிவுக்கு வந்தேன். அரசியலில் நுழைந்து எந்தப் பலனையும் நான் அனுபவிக்கப் போவதில்லை. அதில் விருப்பமும் இல்லை. மக்களுக்காகப் பணியாற்றும் திருப்தி கிடைக்கும். அது போதும்.

சினிமாக்காரர்களை கேரளாவில் அரசியல்வாதிகளாக மக்கள் பார்ப்பதில்லை. இருப்பினும் அரசியலால் நான் பணம் சம்பாதிக்கவோ அல்லது புகழைப் பெறவோ வரவில்லை என்பதால் மக்கள் என்னை ஏற்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் ஷீலா.

மறைந்த எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர் ஷீலா. அவர் நடித்த பாசம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஷீலா. அப்போது அவருக்கு வயது 19தான். அதன் பின்னர் அவர் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிரேம் நசீருடன் இணைந்து 110 படங்களில் ஜோடியாக நடித்து உலக சாதனை படைத்தவர். இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கில் 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் ஷீலா.

இவர் நடித்த செம்மீன் படம் மிகவும் புகழ் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்படலானார்.

தமிழில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார்.

மலையாள ரசிகர்களை ஒரு காலத்தில் தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்த ஷீலாவுக்கு தற்போது வயது 70 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

டி.ஆர்.பிக்காக யாரையும் அழ விட மாட்டேன்: அபர்ணா

Aparna Pillai Turns Director

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நடிகையாக அறிமுகமான அபர்ணா இன்றைக்கு பிரபல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், கேம்ஷோ ஒன்றின் கிரியேட்டிவ் ஹெட், இயக்குநராக ஆக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சினிமா நடிகையாக இருந்தவர்கள் சீரியலில் நாயகிகளாகத்தான் களம் இறங்குவார்கள். ஆனால் நடிகை அபர்ணா அஞ்சரைப்பெட்டி என்ற சமையல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக சின்னத்திரையில் கால் பதித்தார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து ஜீ தமிழில் ‘ஆயிரத்தில் ஒருவன்' என்ற வித்தியாசமான கேம்ஷோவினை இயக்கி வருகிறார். சின்னத்திரையில் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியுள்ள அபர்ணா தனது அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

சினிமாவில் நான் நடிக்க வந்ததே விபத்துமாதிரிதான். எனக்கு ஆன் ஸ்கிரீனில் வருவதை விட இயக்கம் தொடர்பான டெக்னிக்கலான விசயங்கள்தான் பிடிக்கும். நடிப்பு, நடனத்தை தாண்டி இயக்கம்தான் எனக்கு பிடித்தமானது. அதனால்தான் திருமணம் செய்து செட்டில் ஆனா பின்னர் சின்னத்திரையில் சமையல்நிகழ்ச்சி, கேம்ஷோ என்று அடுத்த ரவுண்ட் துவக்கியிருக்கிறேன்.

ஆயிரத்தில் ஒருவன் கேம்ஷோ ஆடியன்சுக்கு பிடித்தமானதாக மாறிவருகிறது. என்னோட கேம்ஷோவில கலந்து கிட்டவங்களுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பரிசு கிடைக்கணும். பார்க்கிறவங்களும் மகிழ்ச்சி அடையணும். அதுபோலதான் டிசைன் செய்திருக்கிறேன்.

ரியாலிட்டி ஷோ, கேம்ஷோவோ அதுல யாருமே அழக்கூடாது. அழுதா பிரச்சினை தீரப்போறதில்லை. நான் இந்த நிகழ்ச்சியை டிசைன் செய்யும்போதே என்னோட நிகழ்ச்சியில் யாரும் அழக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். இதையும் மீறி என் நிகழ்ச்சியில் சிலர் அழுகிறார்கள். அதன் வலி உண்மையானதாக இருந்தால் மட்டுமே நான் ஒளிபரப்பு செய்கிறேன். நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ஐ உயர்த்துவதற்காக நான் யாரையும் கட்டாயப்படுத்தி அழ வைப்பதில்லை.

கேம்ஷோவோ, சமையல் நிகழ்ச்சியோ மக்களுக்கு பிடித்தமானதாக கொடுக்கவேண்டும் என்பதே என் நோக்கம் என்று கூறிவிட்டு அடுத்த எபிசோடுக்கு தயாரானார் அபர்ணா.

 

தீபிகா, கரீனாவின் ஜீன்ஸை ஏலம் எடுத்தீங்கன்னா, நாலு குழந்தைங்க நல்லாருப்பாங்க!

Bollywood Stars Auction Their Jeans To Raise Funds

மும்பை: பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், கரீனா கபூர், அனுஷ்கா, பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணவத் உள்ளிட்ட்டோர் அணிந்த பழைய ஜீன்ஸ்களை ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்குக் கொடுக்கவுள்ளனராம்.

பெங்களூரைச் சேர்ந்த பரிக்ரமா என்ற அமைப்பு இந்த ஏலத்தை நடத்தவுள்ளது. இதில் கிடைக்கும் பணத்தை ஜெனரேஷன் என்ற பெயரில் தான் அமைக்கும் புதிய பிரிவின் கீழ், ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வழங்கவுள்ளதாம் பரிக்ரமா.

இந்த ஏலத்தில் நடிகர், நடிகைகள் பயன்படுத்திய ஜீன்ஸ் பேன்ட்டை மட்டும் ஏலம் விடுகின்றனராம். அமிதாப் பச்சன் இதற்காக தனது கையெழுத்திட்ட இரண்டு ஜீன்ஸ் பேண்ட்டுகளைக் கொடுத்துள்ளாராம். இதேபோல ஷாஹித் கபூர், சைப் அலி கான், அனில் கபூர் ஆகியோரும் தங்களது ஜீ்ன்ஸ்களைக் கொடுத்துள்ளனராம்.

இந்த ஏலத்திற்காக ஜீன்ஸ்களை கொடுத்துள்ள நட்சத்திரங்கள் அதில் தங்களது கையெழுத்தையும் போட்டு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஞாயிறுக்கிழமை காதலுக்கு லீவ்!

Neeya Naana Program Teenage Children Vs Parents

விவாத நிகழ்ச்சிகள் சில சமயம் வித்தியாசமாக அமைவதுண்டு. அதுபோலத்தான் இந்தவாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் டீன் ஏஜ் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் கருத்து மோதல்களைப் பற்றி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் சுவையானதானகவும், அனைவரையும் யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைகள் குழந்தைகள் தொடங்கி இளம் வயதினர் வரை அனைவரும் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. பேஸ்புக்கில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்யும் தங்களின் பிள்ளைகள் தங்களுடன் சில மணிநேரங்கள் பேச நேரம் ஒதுக்குவதில்லை என்பது பெரும்பாலான பெற்றோர்களின் மனக்குறை. அதேபோல் பெற்றோர்கள் தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். ரிமோட் கண்ட்ரோல் போல பெற்றோர்கள் செயல்படுகின்றனர் என்பது பிள்ளைகளின் குற்றச்சாட்டு.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோர் இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்பட்டு வரும் உளவியல் ரீதியான சிக்கல் பற்றி அழகாக கூறினார்கள்.

இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகள் கடைபிடிக்க வேண்டிய பத்து கட்டளைகளை அழகாக கூறினார் இயக்குநர் கரு. பழனியப்பன். சுஜாதாவின் பத்து சிந்தனைகள் எனப்படும் அவை அனைவரும் பின்பற்ற வேண்டியவைதான். அதில்தான் காதலுக்கு எந்த நாளை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால் ஞாயிறுக்கிழமை கண்டிப்பாக காதல் வேண்டாம். அன்றைய தினம் காதலுக்கு விடுமுறை விடுங்கள் என்றார்.

தொடர்ந்து அவர், கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... ஒன்றின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வைக்கவேண்டும். பெற்றோர்கள் செய்யும் வேலையை தட்டாமல் செய்யுங்கள் கிளாஸ் கட் அடித்துவிட்டு மேட்னி ஷோ போகாதீர்கள். ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது பொதுவானதை படியுங்கள்.

தினசரி 5 ரூபாயாவது சம்பாதியுங்கள். அன்றாடம் சோற்றுக்காக அலைபவர்களைப் பற்றி ஒருமுறை சிந்தியுங்கள். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

ஒன்பது மணிக்கு மேல் வெளியில் தங்கவேண்டாம்

உறங்குவதற்குமுன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தினசரி நடந்த நிகழ்வுகளை உரையாடுங்கள். ஆகிய சுஜாதாவின் கட்டளைகளை சொல்லி முடித்த உடன் அதனை ஆமோதிக்கும் வகையில் பெற்றோர்களும், இளம் தலைமுறையினரும் பலத்த கரவொலி எழுப்பினர்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே பெற்றோர்கள் யாரும் தங்களின் பிள்ளைகள் கெட்டுப்போகவேண்டும் என்று நினைப்பதில்லை. எனவே பெற்றோர்களின் கண்காணிப்பை கண்டு கோபம் கொள்ளாதீர்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருமே வலியுறுத்திப் பேசினார்கள்.

 

ரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் அமிதாப்!

Amitabh Bachchan Playing Pakistani

சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி தயாரித்து இயக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் அமிதாப்பச்சன்.

மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டி, சவுன்ட் டிசைனராக உள்ளார். 'ஸ்லெம்டாக் மில்லினியர்' என்ற ஆங்கில படத்தில் சிறந்த சவுன்ட் டிசைனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர்.

இவர் தற்போது சொந்தமாக மலையாளப் படமொன்றை தயாரித்து இயக்கியும் வருகிறார்.

இன்றைய தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி அதன் மூலம் ஐ.டி.துறையில் பணிபுரிபவர்களின் மன நெருக்கடிகளையும் பண்பாட்டு சீரழிவுகளையும் எடுத்து கூறும் வகையில் இப்படத்தை ரசூல் பூக்குட்டி தயாரித்து வருவதாக கூறி உள்ளார்.

இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் நடிக்கிறார். ஒரு பாகிஸ்தானியாக அவர் இந்தப் படத்தில் வருகிறார்.

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறுகையில், "ஐ.டி. துறை மற்றும் அதன் பணியாளர்களின் நிலைதான் படத்தின் கரு. இப்படி ஒரு விஷயத்தை நாடறிந்த பெரிய நடிகர் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க திட்டமிட்டேன். கதையைக் கேட்ட அவர் முழு மனதுடன் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் நட்புறவையும் விளக்கும் கதை என்பதால் அமிதாப்பச்சன் இப்படத்தில் பாகிஸ்தானியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்," என்றார்.