நடிகவேளின் ராஜபாட்டை- எம்ஆர் ராதா பிறந்த நாள் நாடகப் போட்டி

நடிகவேள் என்று புகழப்பட்ட எம்ஆர் ராதாவின் பிறந்த நாளையொட்டி நடிகவேளின் ராஜபாட்டை என்ற புதிய நிகழ்ச்சியை புதுயுகம் தொலைக்காட்சியும் ராதிகாவின் ராடன் நிறுவனமும் நடத்தின.

Nadigavelin Rajapattai celebrates MR Radha birthday

நடிகவேள் எம்ஆர் ராதாவின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடும் வகையில் அவர் நேசித்த நாடகக்கலையை மைய்யமாக வைத்து தமிழகம் முழுவதும், நாடகப்போட்டி நடத்தி சிறந்த 3 அணிகளுக்கு தலா 100000, 75000 மற்றும் 50000 ரொக்கம் பரிசளித்தனர்.

Nadigavelin Rajapattai celebrates MR Radha birthday

மிகப்பெரிய அளவில் நடந்த இந்த இறுதிபோட்டிக்கு இயக்குநர் கே பாக்யராஜ் , நடிகை ஸ்ரீபிரியா, நடிகைராதிகா சரத்குமார், மற்றும் கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த அணியை தேர்வு செய்தனர்.

Nadigavelin Rajapattai celebrates MR Radha birthday

பிரம்மாண்டமான மேடையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், பார்த்திபன், சிவகார்த்திகேயன், ராதாரவி, ராம்கி, நடிகைகள் பி சரோஜாதேவி, நிரோஷா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் கே.ஸ்.ரவிகுமார், விக்ரமன், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Nadigavelin Rajapattai celebrates MR Radha birthday

இந்நிகழ்ச்சியை பரத் மற்றும் நீலிமா ராணி தொகுத்து வழங்கினர். விரைவில் புதுயுகம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 

எம்எஸ்விக்கு சென்னையில் சிலை!- இளையராஜா

சென்னையில் அமரர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு சிலை அமைக்கப்படும் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

மறைந்த இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு அஞ்சலி கூட்டம், தமிழ்நாடு இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்தது.

இதற்கு முன்னிலை வகித்த இசை அமைப்பாளர் இளையராஜா, மேடையில் எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தை திறந்து வைத்தார்.

Big statue for MS Viswanathan, says Ilaiyaraaja

அப்போது அவர் கூறுகையில், "இசைமேதை எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால் அதை நானே செய்து விடுவேன்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவருக்கு சிலை வைக்க முடிவு செய்து விட்டனர். அவருக்கு சென்னையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய இசை நமக்கு ஊக்க மருந்தாக இருக்கும்," என்றார்.

Big statue for MS Viswanathan, says Ilaiyaraaja

கூட்டத்தில் பேசிய கங்கைஅமரன், "எம்.எஸ்.விஸ்வநாதன் சிலையை சென்னையில் வைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது. அதை நானே முன் நின்று செய்வேன்," என்றார்.

கூட்டத்துக்கு சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் முத்துலிங்கம், பெப்சி தலைவர் சிவா, இசை அமைப்பாளர்கள் இமான், ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், எஸ்.எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், சைந்தவி, பாடகர்கள் எஸ்.பி.பி.சரண், வாணி ஜெயராம், ஹரிஹரண், உன்னிகிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

 

கலாமும் எம்எஸ்வியும் இந்த நாட்டின் கர்வ காரணங்கள்!- இளையராஜா பேச்சு

மறைந்த டாக்டர் அப்துல் கலாமும், மாமேதை எம்எஸ் விஸ்வநாதனும் இந்த நாட்டின் கர்வ காரணங்கள் என்று புகழஞ்சலி செலுத்தினார் இசையமைப்பாளர் இளையராஜா.

மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

Dr Kalam and MSV are the pride of the nation, says Ilaiyaraaja

இசைஞானி இளையராஜா முன்னிலை வகிக்க இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கவிஞர் முத்துலிங்கம், பெஃப்சி தலைவர் சிவா, அகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இளையராஜா எம்.எஸ்.வி.யின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது, "இன்றைக்கு இசைக்கலைஞர்கள் சங்கத்தில் எம்,.எஸ்.வி அவர்களின் நினைவஞ்சலி நடந்து கொண்டிருக்கிர்து. இந்த சங்கம் உருவாவதற்கு முக்கிய காரணமே அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்தான்.

இந்த சங்கத்தை உருவாக்க பிலிப்ஸ், மங்களமூர்த்தி, ஹென்றி டேனியல், ஃபாப்ஸ் போன்ற கலைஞர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

அந்த காலத்தில் இசை என்கிற தொழில் எப்படி நடந்தது என்று இன்று உள்ள இசையமைப்பாளர்களுக்குத் தெரியாது. அப்போதெல்லாம் இசைக் கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரமே இல்லை. கம்பெனி வேன் வரும் இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவராக ஏற்றிக்கொண்டு ஸ்டுடியோவிற்கு வருவார்கள். அவங்களுக்கு முன்னவே அண்ணன் வந்திருப்பார்.

Dr Kalam and MSV are the pride of the nation, says Ilaiyaraaja

இன்று உள்ளதைபோல் ஸ்பாட் பேமண்ட் அப்போது கிடையாது. பாட்டெல்லாம் மொத்தமாக வசித்து முடித்து விட்டு படம் வெளியாகி பல நாட்களுக்குப் பிறகு அந்த கம்பெனிக்குப் போய் இசைக் கலைஞர்கள் வரிசையில் நின்று தங்களுடைய பெயரை பதிவு செய்து டிக் அடித்த பிறகே சம்பளம் பெற்றனர். அதுவும் இடையில் உள்ள சிலர் தங்களுடைய கமிஷனை எடுத்துக்கொண்ட பிறகே கொடுப்பார்கள்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் முழுச் சம்பளம் கிடைக்கும். அண்ணன் சாப்பிட மறந்து போய் உழைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவரிடம் டியூன் வாங்குவதில் குறியாக இருந்தவர்கள் அவர் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றுகூட நினைத்ததில்லை. இதை அண்ணன் உண்ர்ந்திருந்ததனால்தான் இந்த சங்கம் தோன்றியது.

சாப்பிடக்கூட நேரமே இல்லாமல் உழைத்துக்கொண்டிருந்த இசைக் கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தையும், அந்த இடத்திலேயே சம்பளம் கிடைக்கும் முறையையும் கொண்டுவருவதற்கு மூல கரணமாக இருந்தவர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்தான்.

இதே போல் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் அண்ணன் முதல் ஆளாக இருந்தார். கவிஞர்கள் பாபநாசம் சிவனும் கண்ணதாசனும் எனக்கு இரு கண்களை போன்றவர்கள் என்றவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக் கண்ணைப் போன்றவர் என்றார். இப்படி இன்று காமகோடியான் வரைக்கும் ஊக்குவித்துக்கொண்டிருந்தார்.

அண்ணன் இசையமைத்த படம் பெயர் தெரியாவிட்டாலும் இன்றளவுக்கும் அவருடைய பாட்டு அந்த படத்தின் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும். ‘நான் ஆணையிட்டால்' என்று பாட்டு ஒலித்தால் அந்த படத்தின் ஷாட்டு மறந்து போயிருக்கும், ஆனால் பாட்டு நினைவிலிருக்கும். ஒரு பாட்டு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணன் வடிவமைத்தார்.

இத்தாலி நாட்டில் பெர்டி என்ற கம்போஸர் இருந்தார். அந்த நாட்டின் தலைசிறந்த கவிஞர் இறந்து போய்விட்டார். பெர்டி நூறு தலைசிறந்த இசைக் கலைஞர்களை வைத்து அந்த கவிஞருக்கு அஞ்சலி இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, "இந்த இத்தாலி நாடு கர்வம் கொண்டிருந்த இசைக் கலைஞன் மறைந்த பிறகு இந்த நாடு எதை நினைத்து கர்வம் கொள்ளப்போகிறது," என்றார்.

அதேபோல இன்றைக்கு நாமெல்லாம் கர்வம் கொள்கிற மாதிரி அண்ணன் இருந்தார். கவிஞர் எவ்வளவோ கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம் மக்களை போய்ச் சேர்ந்ததா? அண்ணன் எம்.எஸ்.வி. இசையமைத்தப் பிறகுதான் அவை அதிக அளவில் மக்களைச் சென்றடைந்தன. அந்த மெட்டுக்களில்தான் அண்ணன் பாவலர் வரதரஜான் கம்யூனச கருத்துக்களை எழுதிப் பாடி வந்தார்.

அப்படி ஒரு முறை மதுரை ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தோம். அதே காலனியில் தன்னுடைய உறவினரைப் பார்க்க வந்திருந்த அண்ணன் எம்.எஸ்.வி, கச்சேரி நடக்கும் மேடைக்கு இரண்டு வீடுகள் தள்ளி தங்கியிருந்தார். இது எங்களுக்கு தெரியாது. நாங்கள் கம்யூனிஸ்டு ஆபிஸில் படுத்திருந்தபோது, ஒரு ஊழியர் வந்து அண்ணன் எங்கள் கச்சேரியைக் கேட்டதாக சொன்னார். எங்களுக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை. சிலநாட்களில் சென்னை வந்து அண்ணனைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினோம்.

இன்று இளைஞர்களுக்கெல்லாம் ஊக்கமாக இருந்த கலாம் மறந்து விட்டார். நமது ரத்த நளங்களில் கலந்து விட்ட அண்ணன் எம்.எஸ்.வி மறைந்து விட்டார்.

இந்த நாட்டின் கர்வ காரணங்கள் மறைந்து விட்டார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம், அவர்களுடைய இசையும், கலாம் தந்த ஊக்கமும் வருகின்ற சமுதாயத்திற்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும்," என்றார்.

எம்.எஸ்.வியின் நண்பர் கிட்டாரிஸ்ட் பிலிப்ஸ், பிரசாத், காந்தி கண்ணதாசன், மகன் முரளி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

ஆரஞ்சு மிட்டாய்- விமர்சனம்

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ஆறுமுகம் பாலா, ஆஷ்ரிதா

ஒளிப்பதிவு: பிஜு விஸ்வநாத்

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: பிஜு விஸ்வநாத்

இளம் வயது.. விதவிதமான வண்ணமயமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். ஆனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் ஆரஞ்சு மிட்டாய் மாதிரி மாற்று சினிமா முயற்சிகளை மேற்கொள்ளும் விஜய் சேதுபதியைப் பாராட்டத்தான் வேண்டும்.

அகஸ்தியா பட்டியில் வசிக்கும் பெரியவரான விஜய் சேதுபதிக்கு திடீர் நெஞ்சுலி. உடனே ஆம்புலன்ஸுக்கு போன் பறக்கிறது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ராஜ் திலக்கும் ஆறுமுகம் பாலாவும் ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

Orange Mittai Review

அந்த கிராமத்துக்குள் வாகனம் செல்லுமளவுக்கு வழி இல்லாததால், நடந்து போய் விஜய் சேதுபதியை அழைத்து வரப் போகிறார்கள். விஜய் சேதுபதியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், கிண்டலும் கேலியுமாக லூட்டியடிக்கிறார் பெருசு விஜய் சேதுபதி.

வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகனை இழந்து தனிமையில் தவிக்கும் விஜய் சேதுபதியின் கதையும், தந்தையை இழந்து, காதலியை மணக்கப் போராடும் ராஜ் திலக்கின் ப்ளாஷ்பேக்கும் விரிகின்றன.

உண்மையில் விஜய் சேதுபதி நோயாளிதானா? எதற்காக ஆம்புலன்ஸை வரவழைக்கிறார்? ராஜ் திலக் தன் காதலியுடன் இணைந்தாரா? என்பது மீதிக் கதை.

Orange Mittai Review

ஒரு தயாரிப்பாளராக பாராட்டுப் பெறும் விஜய் சேதுபதி, நடிகராக இன்னும் ஒரு மேலே நிற்கிறார். அவரது வேடப் பொருத்தம் கச்சிதம். ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென இறங்கி ஆட்டம் போடும் அவரைப் பார்த்து சிரித்தாலும், மகனுக்கும் தந்தைக்குமான உறவைச் சொல்லும் கட்டத்தில் நெகிழ வைக்கிறார்.

வேடப் பொருத்தம் கச்சிதமாக இருந்தாலும், சில காட்சிகளில் அவரது வயதுக்கும் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லாதது தெரிகிறது.

ரமேஷ் திலக்குக்கு இந்தப் படம் பெரிய புரமோஷன். உணர்ந்து நடித்திருக்கிறார். அதே போலத்தான் ஆறுமுகம் பாலாவும்.

Orange Mittai Review

ரமேஷ் திலக்கின் காதலியாக வரும் ஆஷ்ரிதா பரவாயில்லை, நடிப்பு, தோற்றம் இரண்டிலும்தான்.

பிஜூ விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு புதிய நிறத்தைத் தருகிறது. ஆனால் ஜஸ்டின் பிரபாகரன் இசை எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசையில் ஏக இரைச்சல்.

வாரிசு இருந்தும், தனிமை ஒரு வயதான தந்தையை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை ஓரளவு நன்றாகவே சொல்லியிருக்கிறார்கள். படத்தின் இன்னொரு ப்ளஸ் 101 நிமிடங்கள் மட்டுமே ஓடுவது. அட பரவாயில்லையே அதற்குள் முடிந்து விட்டதே என்ற நிம்மதி!

Orange Mittai Review

வித்தியாசமான கதைகளை, களங்களை படமாக்குவது வரவேற்புக்குரியதுதான். ஆனால் அதைவிட முக்கியம், அதை சுவாரஸ்யமாகத் தருவது. அந்த விஷயத்தில்தான் கொஞ்சம் வேப்பெண்ணை டேஸ்ட் இந்த ஆரஞ்சு மிட்டாயில்!

 

ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே.. ரீட்வீட் செய்து கன்பர்ம் செய்தார்!

சென்னை: ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது, படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யாரும் இல்லை என்று முன்பு செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது நடிகை ராதிகா ஆப்தே படத்தில் நடிக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சை கிளப்பிய விவாதங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

Rajini's Next  Movie Radhika Apte Confirmed

இதனை ராதிகா ஆப்தே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். வடஇந்திய பத்திரிக்கை ஒன்று ரஜினி படத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறார் என்று செய்தி வெளியிட, அதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வழக்கமாக ஆடிப்பாடுகிற ஹீரோயினாக இல்லாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ராதிகா ஆப்தே என்று கூறுகிறார்கள்.

ஹன்டர் மற்றும் படல்பூர் போன்ற ஹிந்திப் படங்களில் நடித்த ராதிகா ஆப்தே, தமிழில் நடிகர் அஜ்மலுடன் வெற்றிசெல்வன் மற்றும் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த அழகுராஜா போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட பல சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.

 

படத்துல சீன் இல்லையா... கவலை வேண்டாம்.. யூடியூபில் பார்க்கலாமே!

சென்னை: படத்தின் நீளம் மற்றும் காட்சிகளில் வன்முறை ஆபாசம் ஆகியவை அதிகம் இருந்தால் அத்தகைய காட்சிகளை சென்சார் போர்டு வெட்டித் தள்ளுவது வழக்கம். நீக்கப்பட்ட அந்தக் காட்சிகளை சில இயக்குனர்கள் அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சில பேர் அதனை அப்படியே விட்டுவிடுவார்கள், முன்பு ஹாலிவுட் படங்களின் காட்சிகள் இவ்வாறு நீக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பட நிறுவனங்களே அதனை யூடியூபில் வெளியிட்டு விடுவார்கள்.

Tamil Cinema New Trend

படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பரங்கள் போன்று இந்த வெட்டப்பட்ட காட்சிகளை ஹாலிவுட்டினர் பயன்படுத்தி வந்தனர், தற்போது அது தமிழ் சினிமாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

படத்தின் நீளம் கருதி சென்சார் போர்டு வெட்டிதள்ளிய காட்சிகளை படத்தின் தயாரிப்பாளர் வாங்கி யூ டியூபில் வெளியிடுவது, படத்தில் நீக்கப்பட்ட தனது காட்சிகளை சம்பந்தப்பட்ட காமெடி நடிகர் வாங்கி யூடியூபில் வெளியிடுவது போன்ற செயல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்தன.

ஹாலிவுட் போன்று தமிழிலும் வெட்டப்பட்ட காட்சிகளுக்கென தனி வெப்சைட் தொடங்க சிலர் முயற்சிக்க, இதைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களை அழைத்து நீங்களே வெளியிடுங்கள் இதனால் உங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறி இருக்கிறது.( யூடியுபில் நிகழ்ச்சிகளின் இடையே ஓடும் விளம்பரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வருமானத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு யூ டியூப் அளிக்கும்).

ஆஹா இது நல்ல வழியாக இருக்கின்றதே என்று நினைத்த தயாரிப்பாளர்கள் தற்போது படத்தில் வெட்டப்படும் காட்சிகளை தாங்களே யூடியூபில் வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர்.

இனி இத வச்சும் படத்துக்கு வெளம்பரம் தேடுவாங்களோ?

 

எதையும் அரசியலாக்காதீர்கள்!- விஷால் பேச்சு

எதையும் அரசியலாக்காதீர்கள்.. நான் கேரளாவுக்கு எதிரியல்ல, என்று 'பாயும்புலி' இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசினார்.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விஷால், காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் 'பாயும் புலி'. சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

Dont politicise my speeches, says Vishal

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் பாடல் குறுந்தகட்டை வெளியிட கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சிவா பெற்றுக் கொண்டார்.

விழாவில் விஷால் பேசும்போது, "இங்கே நான் பாயும்புலி படத்தைப் பற்றி விரிவாகப் பேசப் போவதில்லை. இங்கே வருகிற விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுக்கவில்லை. அதற்கு ஆகிற செலவுத் தொகையை இரண்டு ஏழை மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாகக் கொடுக்கலாம் என்றேன். அதை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார். அதன்படி வழங்கப் பட்டுள்ளது. பூங்கொத்து வாடிவிடும். கல்விக்கு உதவுவது, இரண்டு பேர் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

Dont politicise my speeches, says Vishal

உடனே நான் பூங்கொத்து தயாரிப்பவர்களுக்கு எதிரி போல பேச ஆரம்பிக்க வேண்டாம். ஏனென்றால் நான் எது பேசினாலும் அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள்.

நான் வாயில்லாத ஜீவன்களுக்குக் குரல் கொடுத்தேன். தெரு நாய்கள் கொல்லப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதை அரசியலாக்கி விட்டார்கள். 'பாய்க்காட் கேரளா' வரை பேச ஆரம்பித்து விட்டார்கள் அரசியலாக்கி விட்டார்கள். நான் கேரளாவுக்கு எதிரியல்ல. எதையும் அரசியலாக்கி விட வேண்டாம். அடிமாடுகள் துன்புறுத்தப்படுவதற்கும் அப்படித்தான் குரல் கொடுத்தேன். விமர்சிக்கப்பட்டேன் வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா?

Dont politicise my speeches, says Vishal

இங்கே மேடையில் பல பெரிய சாதனையாளர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் முதல்படம் 'செல்லமே' வந்த போது என்னை முதன்முதலில் வாழ்த்தியவர் வைரமுத்து சார்தான். அவரது வாழ்த்து நம்பிக்கை ஊட்டியது. அதை என்றும் மறக்க மாட்டேன். எனக்கு சொத்தாக இருப்பது நண்பர்கள்தான். வேறு சொத்து எனக்கு இல்லை. அவர்கள் இல்லாமல் நானில்லை.

சினிமா என் தொழில். சினிமா என்தாய். அதற்கு பாதிப்பு வரும் போது நிச்சயம் எனக்குக் கோபம் வரும். அப்படித்தான் திருட்டு விசிடிக்கு எதிராகப் போராடினேன். இதில் அரசியல் நோக்கமும் இல்லை,ஆர்வமும் இல்லை விளம்பர நோக்கமும் இல்லை. என்னைப் போல எல்லாரும் நினைத்தால் சினிமா இன்னும் நன்றாக இருக்கும். 'பாயும் புலி 'படக்குழுவினருக்கும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

விழாவில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரி வேந்தர், கவிஞர் வைரமுத்து, தமிழ்திரைப்பட சங்கச் செயலாளர் டி.சிவா, பட அதிபர்கள் எஸ்.மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், அன்புச்செழியன், கே.ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், சுசீந்திரன், பாண்டிராஜ்,

நடிகை காஜல் அகர்வால், நடிககர் சூரி, விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோரும் பேசினார்கள்.

முன்னதாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவப்படம் திறந்து வைக்கப் பட்டது

 

பரவை முனியம்மாவுக்கு உதவி.. முதல்வருக்கு நன்றி சொன்ன விஷால்

பரவை முனியம்மாவுக்கு ரூ 6 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு உதவி செய்துவந்தனர்.

Vishal and other stars thanked CM Jayalalithaa for helping Paravai Muniyamma

ஏழ்மை காரணமாகவும், முதுமை காரணமாகவும் பரவை முனியம்மாவால் செலவுகளைச் சமாளிக்க முடியாத சூழல். இதை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலமாக 6 லட்சம் நிதியுதவியும், மாதந்தோறும் ரூ6.ஆயிரம் உதவித் தொகையும் கட்சி நிதியில் இருந்து வழங்கப்படும் அறிவித்தார்.

இது பரவை முனியம்மாவின் வறுமைச் சூழலைப் போக்க பெரிதும் உதவியுள்ளது. உடல்ரீதியாக சற்று முன்னேற்றம் ஏற்படவும் அவருக்கு உதவியுள்ளது.

விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து சரத்குமார், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

பரவை முனியம்மா மிகவும் நெகிழ்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் ! வைரமுத்து கண்டிப்பு

அடுத்த மேடையில் காஜல் அகர்வால் தமிழில் பேச வேண்டும் என்று 'பாயும் புலி' இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசினார்.

நேற்று நடந்த 'பாயும்புலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து பேசுகையில், "ஒரு மேடையில் பேசுகிறவர்களுக்கு தருகிற மரியாதை அங்கு கட்டிக் காக்கிற கனத்த மௌனம்தான்.

கரவொலிகளால் கருத்துகள் காயப்பட்டுவிடக் கூடாது. நல்ல மௌனம்தான் கருத்துகளை வாங்கி வைத்துக் கொள்கிற நல்ல வாகனம்.

Vairamuthu urges Kajal to speak in Tamil

'பாயும்புலி' படத்தை வாழ்த்துவதில் எனக்கு உரிமை இருக்கிறது. முழுப்படத்தையும் பார்த்தவன் என்கிற முறையில் எனக்கு உரிமை உண்டு. சுசீந்திரன் அப்படி இயக்கியுள்ளார். விஷால் உயரமானவர்தான், சுசீந்திரனின் இந்தப் படத்துக்குப் பிறகு ஓரங்குலமாவது உயர்வார். காரணம் படத்தின் நம்பகத் தன்மை அப்படி உள்ளது.

சினிமாவே நம்ப வைக்கப்படுகிற தொழில் நுட்பப் பொய்தான். பொய்யின் அடியிலுள்ள சத்தியத்தை நம்ப வைப்பதுதான் சினிமா, அதற்குத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறோம்.

விஷாலின் கலை வரலாற்றில் இது ஒருமுக்கிய படம். இப்படத்துக்கு நான் ஒன்றரை நிமிடப் பாட்டு எழுதியுள்ளேன்.

Vairamuthu urges Kajal to speak in Tamil

ஒன்றரை நிமிடத்தில் பாட்டு என்கிற போது அதுவே தண்டனைதான். சாலையின் குறுக்கே கடக்கும் பயந்த பெண்ணைப் பற்றியது தான் 'யாரந்த முயல்குட்டி ' பாட்டு.

ஆண்களுக்கு பயந்த பெண்களைப் பிடிக்கும் ;பெண்களுக்கு முட்டாள் ஆண்களைப் பிடிக்கும். .

'யாரந்த முயல்குட்டி' இதுதான் பல்லவி.

'யாரந்த முயல்குட்டி,
உன் பேரென்ன முயல்குட்டி ?
வெள்ளை வெள்ளையாய், வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்,
யாரந்த முயல்குட்டி ' என்று எழுதினேன்.

அதில் நடித்த காஜல் இப்போது தமிழ்நாட்டு நடிகையாகி விட்டார். தமிழ்க் குடிமகளாகி விட்டார். அவரை நான் ஆசீர்வதிக்கிறேன்.

Vairamuthu urges Kajal to speak in Tamil

ஆனால் அடுத்த மேடையில் அவர் தமிழில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

ஏழைகளின் ஆப்பிள் வாழைப் பழம். பாமரனின் கவிதை சினிமாப் பாடல். நான் 8000 பாடல்கள் எழுதியிருக்கிறேன். 7965 பாடல்கள் மெட்டுக்கு எழுதியிருக்கிறேன். 35 தான் பாட்டுக்கு மெட்டு, கவிதைக்கு மெட்டு என்று அமைத்திருக்கிறார்கள்..
சுசீந்திரன் குறைந்தபட்ச உத்திரவாதமுள்ள இயக்குநர். அவர் இயக்கியவை எல்லாமே வெற்றிப் படங்கள்தான்.

ஒரு படம் எங்கே உட்காரும்? ஒன்பதாவது ரீலில் கதை உட்கார்ந்தால் பிறகு எழவேண்டும். எழவில்லை என்றால் படம் எழாது.

சுசீந்திரனின் வெற்றிச் சூத்திரம் என்ன தெரியுமா? ராமாயணத்தில் வனவாசம் வரும் போது கதை உட்கார்ந்து விடும். அங்கே மாரீசன் என்கிற பாத்திரத்தை வைத்து வால்மீகி கதையை எழ வைத்திருப்பார். மகாபாரதத்தில் அஞ்ஞாத வாசம் வரும் போது கதைபோரடிக்கும்.கதை உட்காரும் இடம் அது. அப்போது கீசகன் என்கிற பாத்திரத்தைக் கொண்டு வந்து வைப்பார் வியாசர். அதன் பிறகு கதை இறக்கை கட்டிப் பறக்கும்.

அப்படித்தான் சுசீந்திரன் படங்களில் இடையில் ஒரு பாத்திரம் வந்து கதையை வேகப் படுத்தும். இதுதான் சுசீந்திரனின் சூத்திரம். இதை வளரும் இயக்குநர்களுக்கும் எதிர்கால இயக்குநர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். என் வரிகளுக்கு இசையமைத்த இமானுக்கு நன்றி,'' என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.