மணிரத்னத்தின் புதிய படத்தில் சுருதிஹாசனுடன் இணைகிறாரா நயன்தாரா?

சென்னை: ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தைப் பற்றி தினசரி ஒரு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது நயன்தாரா மணிரத்னத்தின் படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய செய்திகள் வெளியாகி உள்ளன.

மணிரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் இருவருடன் இணைந்து சுருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று முதலில் கூறினார்கள். தற்போது அதில் இன்னொரு நாயகியாக நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Nayanthara’s in Manirathnam Next Movie?

தமிழின் முன்னணி நாயகியாக இருந்தாலும் கூட இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் என்று பெயரெடுத்த, மணிரத்னத்தின் படங்களில் இதுவரை நயன்தாரா நடித்தது இல்லை.

இதனை ஒரு குறையாக எல்லோரும் கூறிவந்த நிலையில் தற்போது நயன்தாராவின் நீண்ட நாள் கனவு நிறைவேற இருக்கிறது, முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் தற்போது எழுந்துள்ளது.

ஆனால் முறையான அறிவிப்புகள் வெளியாகும் வரை எதையும் திட்டவட்டமாகக் கூற முடியாது, எனவே நயன்தாராவின் கனவு நிறைவேறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்

 

எந்திரன் படத்தின் 100 நாள் வசூலை வெறும் 9 நாட்களில் முறியடித்தது பாகுபலி

சென்னை: தென்னிந்தியத் திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ஷங்கரின் எந்திரன் படம் இதுவரை தக்க வைத்திருந்தது, தற்போது அந்த சாதனையையும் முறியடித்து இருக்கிறது பாகுபலி திரைப்படம்.

2010 ம் ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படம் 100 நாட்கள் ஓடி 290 கோடியை வசூல் செய்தது, ஆனால் பாகுபலி திரைப்படம் வெறும் 9 நாட்களில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது.

Baahubali Beats Endhiran's Lifetime Record?

பாகுபலி வெளிவந்து இன்றோடு 10 தினங்கள் ஆகின்றன, 9 வது நாளான நேற்றுடன் படம் இதுவரை சுமார் 300 கோடியை வசூலித்து புதிய வரலாற்றைப் படைத்து இருக்கிறது, பாகுபலி வெளியான நாள் முதலே பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.

வெளியான முதல் நாளே 50 கோடியை வசூலித்தது, 2 நாட்களில் 100 கோடியைத் தாண்டியது மற்றும் மிக வேகமாக 200 கோடியை வசூலித்தது, போன்ற சாதனைகளில் தற்போது எந்திரன் படத்தின் வசூலை முறியடித்ததும் இணைந்துள்ளது.

படம் கண்டிப்பாக 500 கோடியைத் தொடும் என்று டோலிவுட் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன, 500 கோடியை படம் வசூலிக்கும் பட்சத்தில் ஒரு புதிய வரலாறையே பாகுபலி உருவாக்கக் கூடும்.

பாகுபலி 500 கோடியைத் தொடுமா? என்று பார்க்கலாம்...

 

மெட்ரோ ரயிலில் சென்னையைச் சுற்றிப் பார்த்த த்ரிஷா

சென்னை: சென்னையில் மெட்ரோ டிரெயின் அறிமுகமாகி பலரின் வரவேற்பையும் பெற்று வரும் வேளையில், நடிகை த்ரிஷா 2 தினங்களுக்கு முன்னர் மெட்ரோ ட்ரெய்னில் சென்னையைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.

வெள்ளிகிழமைகாலை 7.20 மணிக்கு ஆலந்தூர் ரெயில் நிலையம் சென்ற த்ரிஷா அங்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் உள்ளே வந்திருக்கிறார். அங்கு மெட்டல் டிடெக்டர் கொண்டு த்ரிஷாவை பெண் பாதுகாவலர்கள் பரிசோதித்தனர்.

Last Friday Trisha Travelled On Metro Train

எஸ்கலேட்டர் மூலமாக 4 வது மாடிக்குச் சென்ற த்ரிஷா கோயம்பேடு செல்லும் மெட்ரோ டிரெயினில் ஏறி உள்ளே சென்றார், அவரைப் பார்த்ததும் சந்தோசமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பயணிகளுடன் பயணம் செய்த த்ரிஷா அரும்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டார். மெட்ரோ பயணம் குறித்து த்ரிஷா கூறும்போது " மன்மதன் அம்பு திரைப்படத்தின் போது ஐரோப்பிய மெட்ரோ ட்ரெயின்களில் பயணம் செய்து இருக்கிறேன்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது நமது மெட்ரோ ட்ரெயின்கள் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கின்றன, மெட்ரோ ட்ரெயினில் சென்னையைச் சுற்றிப் பார்த்தபோது த்ரில்லிங்காகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்று கூறியுள்ளார்.

 

ராஜமௌலியும், ஜூலை மாதக் காதலும்!

ஹைதராபாத்: இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக பாகுபலி திரைப்படத்தின் மூலம் உருவெடுத்திருக்கும் இயக்குநர் ராஜமௌலிக்கு ஜூலை மாதத்தின் மீது அப்படி என்ன காதலோ தெரியவில்லை.

அவரின் ஆரம்பகாலத் திரைப்படங்கள் தொடங்கி தற்போதைய பாகுபலி வரை பெரும்பான்மையான திரைப்படங்கள் ஜூலை மாதத்தில் தான் வெளியாகி உள்ளன. ராஜமௌலியின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நம்பர் 1 ஜூலை மாதத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

Rajamouli to Continue the July Sentiment

தொடர்ந்து மகதீரா, நான் ஈ போன்ற வெற்றிப் படங்களும் ஜூலை மாதத்தில் தான் வெளியானது, தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பாகுபலி திரைப்படமும் ஜூலை மாதத்தில் தான் வெளியாகியது.

எனவே சென்டிமெண்டாக பாகுபலி படத்தின் 2 வது பாகத்தையும் 2016 ஜூலை மாதத்தில் தான் வெளியிட இருக்கிறாராம் ராஜமௌலி. இந்தியில் பாகுபலி படத்தை வாங்கி பிரபலப்படுத்திய கரண் ஜோகரும் ஜூலை மாதமே படத்தை வெளியிடுங்கள் என்று ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறாராம்.

படம் பாதிக்கு மேல் முடிந்து விட்டது இன்னும் 100 நாட்கள் ஷூட்டிங் சென்றால் பாகுபலி முழுவதுமே முடிந்து விடுமாம், ஆனாலும் ஜூலை மாத செண்டிமெண்ட் காரணமாக படத்தை அடுத்த வருடம் ஜூலையில் தான் வெளியிட இருக்கிறாராம் ராஜமௌலி.

 

விமர்சனங்களால் பாதிக்கப்படாத மாரி.. "விஐபி"யை வீழ்த்தி வசூல் சாதனை

சென்னை: தனுஷின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று(ஜூலை 17) வெளிவந்த மாரி திரைப்படம், இதுவரை தனுஷ் திரைப்படங்கள் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளது. ஆமாம் மாரி படம் முதல் நாளில் மட்டும் சுமார் 6.54 கோடியை தமிழ்நாட்டில் வசூலித்து சாதனை செய்துள்ளது.

படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கூட படம் வசூலில் சாதனையை நிகழ்த்தி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கி உள்ளது. தனுஷின் படங்களில் அதிகம் வசூல் செய்த வேலை இல்லாப் பட்டதாரி படமே முதல் நாளில் 4.45 கோடியை மட்டுமே வசூலித்து இருந்தது.

'Maari' Opening Day Box Office Collection

ஆனால் மாரி திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் 2 வது நாளான நேற்று சுமார் 6 கோடியைத் தாண்டி இருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகிறார்கள்.

இன்று அனைவருக்கும் விடுமுறையாக இருப்பதால் இன்றைய வசூலும் அதிகமாகவே இருக்கும் என்று திரைத்துறையைச் சார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மாரி படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் கேட்காததால் தனுஷே வாங்கிக் கொண்டார், மேலும் தனது சம்பளத்தில் இருந்தும் குறிபிட்ட அளவுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார்.

இந்த எல்லா சோகங்களுக்கும் முடிவு கட்டுவது போல மாரி திரைப்படம் வசூலில் சாதனை செய்து வருவதால் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ், அதே நேரம் மாரி படக்குழுவினரும் படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாக்ஸ் ஆபிஸில் சல்மானின் பஜ்ரங்கி பைஜானை கவிழ்த்தது பாகுபலி

மும்பை: 2015 ன் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம், சல்மானின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று மற்றும் பாக்ஸ் ஆபிசில் சல்மானின் இரண்டாவது மிகப்பெரிய படம். இவ்வளவு விஷயங்கள் இருந்தும் கூட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பாகுபலியின் அருகில் கூட நெருங்கவில்லை சல்மானின் பஜ்ரங்கி பைஜானால்.

ஆமாம் இந்தியாவில் வெளியான முதல் நாளே அதிகம் வசூலித்த திரைப்படம்(50கோடி) என்ற பெருமையைப் பெற்று இருக்கிறது ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம், இதற்கு முன்னால் ஷாரூக்கானின் ஹேப்பி நியூ இயர் திரைப்படம் தான் முதல் நாளில் அதிகம் வசூலித்த திரைப்படமாக (44.97 கோடி) இருந்தது.

'Bajrangi Bhaijaan' Becomes Highest Opener of 2015 but Fails to Beat 'Baahubali'  Record

ஷாரூக்கானின் சாதனையை பாகுபலி முறியடித்தது. ஆனால் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் முதல் நாளில் வெறும் 27.25 கோடியை மட்டுமே வசூலித்தது.

இதுவரை இந்திய அளவில் இந்தித் திரைப்படங்களே முதல் நாள் வசூலில் சாதனைகளைச் செய்து வந்தன, ஆனால் முதன்முறையாக ஒரு தென்னிந்தியத் திரைப்படம்(பாகுபலி) முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

பாகுபலியின் வசூல் ரெக்கார்டை மற்ற படங்கள் முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம், அல்லது முறியடிக்காமலும் போகலாம் எது எப்படியோ தென்னிந்தியத் திரைப்படம் ஒன்று இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.