பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் நடிகர் விஜய்!

சென்னை: பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் விஜய்.

சமூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்றவற்றை முன்பெல்லாம் திரையுலகினர் திரும்பிக் கூடப் பார்க்காமல் இருந்தனர்.

ஒரு கட்டத்தில், இந்த சமூக வலைத்தளங்கள்தான் எதிர்கால மீடியா என்பது உறுதியானது. இந்த உண்மை புரிய ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல சினிமா பிரபலங்கள் ட்விட்டர், பேஸ்புக்கில் நுழைய ஆரம்பித்தனர்.

பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ்ஸிலும் கால் பதித்தார் நடிகர் விஜய்!

குறிப்பாக ட்விட்டரில் இல்லாத திரைப் பிரபலங்களே இல்லை என்றாகிவிட்டது. எந்த சமூக வலைத் தளங்களிலும் இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியே ட்விட்டருக்கு வந்துவிட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், தான் எந்த தளத்தில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக இதுவரை காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

ஆனால் ட்விட்டரில் முதலில் கால் பதித்தார். பின்னர் பேஸ்புக்குக்கும் வந்துவிட்டார். இரண்டிலுமே அவரைப் பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அவர் கூகுள் ப்ளஸ் தளத்திலும் அடி வைத்துள்ளார். அவரது சில புகைப்படங்கள் அந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

விஜய்யின் சமூக வலைத் தளப் பக்கங்கள்:

பேஸ்புக்: https://www.facebook.com/ActorVijay

ட்விட்டர்: https://twitter.com/Vijay_cjv

கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/111719954424922134590/posts

 

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் சதுரங்க வேட்டை!

சென்னை: நட்டி என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் சதுரங்க வேட்டை படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்தை இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

தெலுங்கு, இந்தியில் ரீமேக் ஆகும் சதுரங்க வேட்டை!

படத்துக்கு தமிழில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்களிலேயே பெரிய வெற்றி சதுரங்க வேட்டைக்கு கிடைத்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்தியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறதாம்.

அக்ஷய் குமார் அல்லது அஜய் தேவ்கன் ஆகிய இருவரில் ஒருவர் ஹீரோவாக நடிப்பார் என்கிறார்கள்.

தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 

மீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்!

சென்னை: ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கியவர் அபிராமி. ஹோம்லியான் முகத்துடன் வலம் வந்தவர்.

கமலுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த விருமாண்டி படம் மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன்பாக நடிப்புக்கு முழுக்கு போட்டார் அபிராமி.

மீண்டும் வருகின்றார் “அபிராமி” – போலீஸ் அதிகாரியாக மலையாளத்தில் செகண்ட் இன்னிங்ஸ்!

அமெரிக்காவில் வாழ்க்கை நடத்திய அபிராமி, நடிக்கும் ஆசையில் திரும்பி வந்த போது கிடைத்தென்னவோ ஒரே ஒரு டி.வி நிகழ்ச்சி மட்டும்தான்.

இதனால் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பிச் சென்ற அபிராமியை மீண்டும் அழைத்து வந்துள்ளது கேரளா. அது அவருடைய பிறந்த மண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி குட்டியம்மா. இவருடைய வாழ்க்கை வரலாறு "டிரைவர் ஆன் டியூட்டி" என்ற பெயரில் படமாகின்றது.

மனோஜ் பெல்லவா இயக்கும் இத்திரைப்படத்தில் குட்டியம்மா வேடத்தில் அபிராமி நடிக்க இருக்கின்றார்.

சதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை.

இதற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிகினி உடை பொருந்தாததால் யாமி கவுதமுக்கு பறிபோன பட வாய்ப்பு

மும்பை: பிகினி உடை அணிந்து நடிக்க ஒத்துக் கொண்டாலும், அது பொருந்தாததால் படத்திலிருந்து விலக்கப்பட்டு சோகத்தில் ஆழ்ந்துள்ளார் நடிகை யாமி கவுதம்.

ராதாமோகனின் "கெளரவம்" படம் மூலம் தமிழில் கதாநாயகியானவர் யாமி கெளதம். தமிழ், தெலுங்கு, இந்திப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் நடித்து வரும் யாமி தமிழில் நீண்ட நாட்களாக "தமிழ்ச்செல்வனும், தனியார் அஞ்சலும்" என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

பிகினி உடை பொருந்தாததால் யாமி கவுதமுக்கு பறிபோன பட வாய்ப்பு

இந்நிலையில் ஒரு இந்தி பட வாய்ப்பை பெற்ற யாமி அந்தப் பட வாய்ப்பிற்காக ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு அழைக்கப்பட்டார். அப்படத்தில் ஒரு காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

அவரும் ஒப்புக் கொண்டு நீச்சல் உடையை கொடுத்தனர். ஆனால் அந்த உடை அவருக்கு பொருத்தமாக இல்லை என்று சொல்லி அந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர்.

பிகினி உடை அணிந்து நடிக்க சம்மதித்தும் யாமியை அப்படக்குழுவினர் நிராகரித்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

தன்னுடைய முதல் படமான "விக்கி டோனர்" மூலம் சிறந்த நடிகை என்று புகழ் பெற்றவர் யாமி. இந்நிலையில் யாமி நிராகரிக்கப்பட்ட அப்படத்தில் லிசா ஹைடன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இடம் பொருள் ஏவலில் வைரமுத்துவின் பாடலைப் பாடுகிறேனா?- இளையராஜா கடும் மறுப்பு!

சென்னை: இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை தான் பாடப் போவதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

சீனு ராமசாமி இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் படம் இடம் பொருள் ஏவல். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார்.

இடம் பொருள் ஏவலில் வைரமுத்துவின் பாடலைப் பாடுகிறேனா?- இளையராஜா கடும் மறுப்பு!

வைரமுத்து பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில் இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளையராஜா ஒரு பாடலைப் பாடப் போவதாக செய்தி வெளியானது. உடனே அது வைரமுத்து எழுதிய பாடல்தான் என்ற முடிவுக்கு வந்த மீடியா, பெரிய இடைவெளிக்குப் பிறகு வைரமுத்துவின் பாடலை இளையராஜா தன் குரலில் பாடப் போவதாக செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த செய்தியைப் பரப்ப ஆரம்பித்தனர்.

ஆனால் இதனை இசைஞானி இளையராஜா கடுமையாக மறுத்துள்ளார்.

இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் என்ற அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கத்தில் இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் இசையில் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜா ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நடிகர் தனுஷ். வேறு யார் எழுதிய வரிகளையும் அவர் பாடவில்லை. ரசிகர்கள் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

'வைரமுத்து பாடலை இனி எந்தக் காலத்திலும் பாட மாட்டார் இளையராஜா!'

வைரமுத்துவின் பாடலை இனி எந்தக் காலத்திலும் பாடமாட்டார் வைரமுத்து என இசைஞானி இளையராஜா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இசைஞானி ஃபேன்ஸ் கிளப் அதிகாரப்பூர்வ பக்கத்தில், இளையராஜா சார்பாக, அவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

'வைரமுத்து பாடலை இனி எந்தக் காலத்திலும் பாட மாட்டார் இளையராஜா!'

இசைஞானியின் அன்பான ரசிகர்களே இன்று ஒரு வார பத்திரிகையில் இசைஞானி அவர்கள் சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை யுவன் இசையில் பாடப்போவதாக செய்தி வந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான தகவல்.

எந்த காலத்திலும் வைரமுத்து எழுதிய பாடலை பாடப்போவது கிடையாது. இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி தன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

அதோடு கடந்த சில மாதங்களாக வைரமுத்து அவர்கள் எப்படியாவது இசைஞானியுடன் இணைந்து விட வேண்டும் என்று பல வழிகளிலும் முயற்சி செய்து வந்தார்.

பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில், "ராஜாவை எப்படியாவது சமாதானப்படுத்துங்கள். நானே பாடல்களை எழுதுகிறேன்." என்று சொல்லி அனுப்ப, பாலாவும் இதை இசைஞானியிடம் தெரிவித்து அனுமதி கேட்டார். அதற்கு இளையராஜா, "தாராளமாக அவரை வைத்து பாட்டு எழுதிக்கோ... நான் இசையமைக்க மாட்டேன்," என்று கடுமையாக மறுத்து விட்டார். அதன் பிறகே அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந் நிலையில்தான் யுவன் இசையில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப் போவதாக ஒரு செய்தியை பரவ விட்டிருக்கிறார்கள். நேரடியாக கேட்டும் ராஜா சார் மறுத்து விட்டதால், இப்படி கொல்லைப் புறத்தின் வழியாக நுழைய முற்சிக்கிறார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

வெளியில் மேடைகளில், 'நான்தான் ராஜாவை ஒதுக்கி வைத்திருக்கிறேன்' என்பதுபோல் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் அவரோடு எப்படியாவது இணைந்து விடவேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார் வைரமுத்து.

அதே படத்தில் தனுஷ் எழுதிய ஒரு பாடலை பாட வைப்பதற்காக தன் அப்பாவிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துப்போயிருகிறார் இரண்டு மூன்று முறை யுவன்.

"டாடி ஒரு விஷயம் கேட்கணும்..." என்று கூறி, பயம் காரணமாக அதைக் கேட்காமலே விட்டிருக்கிறார். காரணம் ராஜா சார் "என்ன யுவன்" என்று கேட்டாலே யுவனுக்கு வாயடத்துப் போய்விடும்.

அப்படியிருக்கும்போது வைரமுத்து எழுதிய பாடலைப் பாடுங்கள் என்று சொல்ல யுவனுக்கு எப்படி தைரியம் வரும்?

வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டு காலம் நடந்துகொண்டிருக்கும் வைரமுத்துவின் பாடலை ராஜா சார் பாடுகிறார் என்று சொன்னால் நம்புவதற்கு இசைஞானி ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!"

-இவ்வாறு அந்தப் பக்கத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 

விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்!

சென்னை: தமிழினப் படுகொலையாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரிப்பில் விஜய் நடிக்கும் கத்தி படத்தை வெளியிடக் கூடாது என விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மனு கொடுத்தனர் மாணவர்கள் அமைப்பினர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பெரும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. காரணம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான லைக்கா நிறுவனத்தினர்.

விஜய்யின் கத்தி படத்துக்கு தடை கோரி மனு கொடுத்த மாணவர்கள்!

இவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதாகவும், தொழில் ரீதியாக இருவரும் கூட்டாளிகள் என்றும் ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளனர் தமிழ் உணர்வாளர்கள்.

ஆனால் இந்த எதிர்ப்பினை நடிகர் விஜய்யோ, இயக்குநர் முருகதாசோ கண்டு கொள்ளவில்லை. மாறாக இருவரும் தொடர்ந்து கத்தி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தில் வெறியாட்டம் போட்ட கயவர்களிடன் கூட்டாளிகளுடன் தமிழ் சினிமா உலகம் கைகோர்த்திருப்பதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சந்தித்து இந்தப் படத்தை தடை செய்யக் கோரி மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "சிங்கள அரசு தூக்கிப் போடும் எலும்புத் துண்டினைச் சுவைக்கும் சிலர், இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சுமூகமாக வாழ்வது போன்ற மாயையை உலகத்தினர் மத்தியில் ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதன் ஒரு பகுதிதான் இந்த கத்தி படமும்.

தமிழினப் படுகொலையாளிகள் தயாரிக்கும் இந்தப் படத்தைக் கைவிடக் கோரி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தும் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார்கள். தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மனதை இந்த செயல் புண்படுத்தியுள்ளது.

இந்த கத்தி படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து மாணவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் செவி சாய்க்காவிட்டால், பெரும் போராட்டத்தை நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

 

முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

தனுஷ் நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரி படம், முதல் வாரத்தில் ரூ 20 கோடியை வசூலித்துள்ளது.

தனுஷ், அமலா பால் நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கிய படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது.

முதல் வாரம் ரூ 20 கோடி வசூல் குவித்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி!  

படத்துக்கு ஆதரவாகவே பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்தன. அதையும் தாண்டி படத்துக்கு ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் பெரும் பலமாக அமைந்துவிட்டது.

படம் வெளியான முதல் வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ 20 கோடியை இந்தப் படம் அள்ளிவிட்டது.

இது தவிர, வெளிநாட்டு வசூல், தொலைக்காட்சி உரிமை, அண்டை மாநில வசூல் போன்றவை ரூ 15 கோடியைத் தாண்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷுக்கு தமிழில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படம் இதுவே.

 

விஜய்க்கு பட்டம் தரும் மதுரை விழா.. தடை விதிக்கிறது தமிழக அரசு!

விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தருவதற்காக மதுரையில் ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்துள்ள விழாவுக்கு தமிழக அரசு இன்னும் அனுமதி தரவில்லை.

மேலும் இந்த விழாவை தவிர்க்குமாறு சற்று கண்டிப்போடு கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விஷயம் தெரிந்து ஆடிப் போயுள்ளார்களாம் விஜய்யும் அவருக்கு விழா எடுக்கும் குழுவினரும்.

விஜய்க்கு பட்டம் தரும் மதுரை விழா.. தடை விதிக்கிறது தமிழக அரசு!

இந்த விழாவுக்கு தடை விதிக்க தமிழக அரசு தெரிவித்துள்ள காரணமும் தவிர்க்க முடியாதது என்றே தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் 15-ம் தேதி மாநிலமெங்கும் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடும் நேரத்தில், வெறும் விளம்பரத்துக்காக எடுக்கப்படும் இந்த விழாவால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த விழாவைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இன்னொரு பக்கம் விஜய் நடித்த கத்தி படத்தை வெளியாக விடாமல் தடுக்கும் முயற்சியில் மாணவர் அமைப்பு மற்றும் தமிழுணர்வாளர்கள் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

அத்திப்பூக்கள் சீரியல் இயக்குநர் எடுக்கும் அகத்திணை திரைப்படம்

சன் டிவியில் அத்திப்பூக்கள் நெடுந்தொடரை இயக்கிய இயக்குநர் மருது, தற்போது அகத்திணை என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

சின்னத்திரையில் இருந்து மெட்டிஒலி திருமுருகனுக்குப்பின்னர் மற்றொரு இயக்குநர் பெரியதிரைக்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் அகத்திணை. கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராமச்சந்திரன்,பிளாக்பாண்டி, பக்கோடா பாண்டி, சிவாநாராயணமூர்த்தி, அல்வாவாசு, மாஸ்டர்அதித்யா, செந்தில்குமார், பூவிதா, ரேவதி பாட்டி, செல்வி, ஹரிணி ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் T.R.ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அத்திப்பூக்கள் சீரியல் இயக்குநர் எடுக்கும் அகத்திணை திரைப்படம்

அத்திப்பூக்கள் டூ அகத்திணை

அகத்தினை படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் யு.பி.மருது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அத்திப்பூக்கள்' என்ற தொடரை இயக்கியவர். அகிலன் ஒளிப்பதிவு செயும் இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார்.

மக்கள் ஆதரவை நம்பி

படம் குறித்து இயக்குனர் மருது, "எனக்கு சின்னத் திரையில் அத்திப்பூகள் மூலமாக ஆதரவு கொடுத்த மக்கள் வெள்ளித் திரையில் 'அகத்திணை' படத்திற்கும் ஆதரவு கொடுப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

ஒழுக்கமான காதல்

அகத்திணை என்பதற்கு ஒழுக்கமான காதல் என்று அர்த்தம். காதலுக்காக எதையும் தியாகம் செய்யலாம், காதலை தவிர என்பதை உணர்வு பூர்வமாக சொல்லக்கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதை தான் இந்த ‘அகத்திணை'.

சங்க இலக்கியத்தில்

பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றிய உணர்வுகளை அகத்திணையில் பாடப்பட்டுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று 'அகத்திணை' என்று பெயர் வைத்துள்ளோம்.

அப்பா - மகள் பாசம்

தன் மனைவியை இழந்த கணவன்...இனி வாழும் வாழ்க்கை தன் மகளுக்காக என ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னை அர்ப்பணித்து பாதுகாத்து பாசத்துடன் மகளை வளர்த்து வருகிறார். தந்தை மகள் பாசத்திற்கு இடையே தன் உயிரை காப்பாற்றிய நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் மகள்.

அப்பாவா?காதலனா?

தந்தை பாசம் ஒருபக்கம்...காதல் மறுபக்கம், காதலா, பாசமா என்று அவள் எடுக்கும் முடிவு, இறுதியில் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது கதை." என்று தெரிவித்தார்.

விரைவில் வெள்ளித்திரையில்

படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

 

ஜிகர்தண்டா விவகாரம்: சித்தார்த்துக்கு சரத்குமார் ஆதரவு!!

நாகர்கோவில்: ஒரு திரைப்படம் வெளிவரவேண்டும் என்பதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உள்ளது என்று நடிகர் சங்கத்தலைவரும். சமக எம்.எல்.ஏவுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஜிகர்தண்டா படம் கடந்த 25ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. திடீர் என்று ஆகஸ்ட் 1 ம் தேதிதான் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் கதிரேசன் அறிவித்தார். அதற்கு காரணமும் சொல்லியிருந்தார்.

ஜிகர்தண்டா விவகாரம்: சித்தார்த்துக்கு சரத்குமார் ஆதரவு!!

ஆனால், எங்களிடம் கேட்காமல் எப்படி தேதியை தள்ளிவைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் குமுறியிருந்தார். இதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சம்பளம் வாங்கிக்கொடுக்கும் நடிக்கும் சித்தார்த் பட ரிலீசை பற்றி கவலைப்பட தேவையில்லை. ரிலீஸ் என்பது பணத்தை கொட்டி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளரின் முடிவு என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

சரத்குமார் ஆதரவு

இதையடுத்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சித்தார்த்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அவர் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘'ஒரு சினிமா வெளி வருவதில் அதில் நடித்த நடிகருக்கும் அக்கறை உள்ளது. ஜிகர்தண்டா பட விவகாரத்தில் அந்த படம் வெளி வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நடிகர் சித்தார்த் பேசி உள்ளார். தயாரிப்பாளர் இப்பிரச்சினையை பெரிதாக்கி இருக்க வேண்டாம்''என்று கூறினார்.

சட்டப்பேரவை பிரச்சினை

நடிகர் சங்கத்தலைவராக கருத்து கூறிய சரத்குமார், சமக எம்.எல்.ஏவாக சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றியும் செய்தியாளர்களிடம் பேசினார்.

சிறப்பான ஆட்சி

அ.தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்கள். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி வருகிறார்.

மீனவர் நலனில் அக்கறை

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினார். மீனவர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.

திமுகவினர் நிறைவேற்றினார்களா?

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தபின்னரும் பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். அனுமதிக்கப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசுவதற்கு பதில் அனுமதிக்கப்படாத கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்து பேசுகிறார்கள். தி.மு.க.வினர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படுகிறார்கள்.

குறைந்து வரும் செல்வாக்கு

தமிழகத்தில் தற்போது தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு செல்வாக்கு கிடையாது. இப்போது அவர்கள் இருக்கும் செல்வாக்கையும் இழந்து வருகிறார்கள் என்றார் சரத்குமார்.