ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு… ஈராஸ் திட்டம் என்ன?

Eros Produce Another Rajini Film

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எப்போதுமே அடுத்த படம் பற்றி எந்த தகவலையும் கசிய விடமாட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

தனது மகள் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘கோச்சடையான்' ரிலீஸ் வரைக்கும் தனது அடுத்த படத்தை பற்றி பேச வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார் அவர்.

இதற்கு காரணம், தற்போது தம்மைப் பற்றி வெளியாகும் செய்திகள் முழுவதும், ‘கோச்சடையான்' படம் தொடர்பானதாகவே இருக்க வேண்டும் என்பதனால்தான்.

ஆனால் கோச்சடையானை தயாரிக்கும் ஈராஸ் பட நிறுவனம், அடுத்ததாகவும் ரஜினியை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும், அதை கே.வி.ஆனந்த் இயக்குவதாகவும் அறிவித்துவிட்டது. ஈராஸ் நிறுவத்தின் சார்பில், அந்த நிறுவனத்தின் முதன்மை நிதித்துறை அதிகாரி கமால் ஜெயின் அந்த அறிவிப்பை வெளியிட்டார்

ரஜினியின் திட்டத்தையும் மீறி அப்படியொரு அறிவிப்பு வர என்ன காரணம்? அதுவும் அவர்களது சி.எஃப்.ஓ.வை வைத்து அறிவிப்பை ஏன் வெளியிட்டார்கள்? என்றார் காரணமில்லாமல் இல்லை.

ஷேர் மார்க்கெட்டில் ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்வதற்காக செய்யப்பட்ட யுக்திதான் இது என்கிறார்கள்.

ஈராஸ் நிறுவனம், கடந்த 13-ம் தேதி தமது வருமானம், கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் அதிகரித்துள்ளது என அறிவித்தது. இருந்தும், பங்குகளின் விலை உயரவில்லை. இதையடுத்து கடந்த மாத இறுதியில் ரஜினி படம் பற்றிய அறிவிப்பை ஈராஸ் நிறுவனத்தின் முதன்மை நிதித்துறை அதிகாரி வெளியிட்டார். அதையடுத்து, ரூ.195-200 ரேஞ்சில் ஈராஸ் பங்குகள் விற்பனையாகின. தற்போது பழையபடி ரூ180-185 ரேஞ்சுக்கு வந்துவிட்டனவாம்.

 

அமீர் வீட்டை முற்றுகையிடச் சென்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

Police Arrests 21 Hmk Cadres

சென்னை: தலிபான் தீவிரவாதிகளை, விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய சினிமா இயக்குநர் அமீருக்குக் கண்டனம் தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்தில் அமீர் அளித்த பேட்டியில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அப்போது தலிபான் தீவிரவாதிகளும், விடுதலைப் புலிகளும் ஒன்றுதான் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்குக் கண்டனம் வெடித்துள்ளது.

இணையதளங்களில் அமீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலும் அமீரை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று காலை சென்னை தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் முற்றுகையிட்டனர். தலிபான்களோடு விடுதலைப்புலிகளை ஒப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர்.

 

கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்த அஞ்சலி... படப்பிடிப்பு நிறுத்தம்

Anjali Eletrocuted Shooting Spot

சென்னை: ஊர் சுற்றிப் புராணம் படத்தில் நடித்து வரும் அஞ்சலி படப்பிடிப்பில் கரண்ட் ஷாக் அடித்து மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு ரத்தானது.

டைரக்டர் மு.களஞ்சியம் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்யும் புதிய படம் ஊர் சுற்றி புராணம். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள தனியார் சத்திரத்தில் நடைப் பெற்று வருகிறது.

படப்பிடிப்புக்காக ஓட்டல் செட் போடப்பட்டிருந்தது. நேற்று ( சனிக்கிழமை) களஞ்சியம் மற்றும் அஞ்சலி சம்மந்தப் பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. வாசற் படிக்கட்டில் இருந்து அஞ்சலி வீட்டின் உள்ளே வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அஞ்சலி செருப்பு அணியாமல் உள்ளே நடத்து வந்தார்.

வீட்டின் உள்ளே நடந்து வந்த அஞ்சலி தற்செயலாக கீழே இருந்த வயர் மீது கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசியெறியப்பட்டு அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அஞ்சலியை திருப்போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஞ்சலிக்கு சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் வழக்கம் போல படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு திரும்பினார். ஆனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படவே அஞ்சலி சென்னை திரும்பினார்.

இந்த விபத்து குறித்து பேசிய இயக்குனர் மு.களஞ்சியம், மின் ஒயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது நடிகை அஞ்சலி கால் வைத்து விட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு மூர்ச்சையானார். மருத்துவ சிகிச்சைக்குபின் தற்போது நலமோடு இருக்கிறார். திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிவித்தார்.

 

தெலுங்கு நடிகர் நர்லா தேஜா ரிஷிகேஷ் ஆற்றில் மூழ்கி பலி

Telugu Actor Drowned River

ரிஷிகேஷ்: ரிஷிகேஷ் சுற்றுலா சென்ற தெலுங்கு நடிகர் நர்லா தேஜா அங்கு ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘முராரி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நர்லா தேஜா. இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் என்.ஸ்ரீதரின் மகன் நர்லா தேஜாவிற்னு தற்போது 17 வயதாகிறது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள மிர்பிரி அகாடமியில் படித்து வந்த அவர், கடந்த 5-ந்தேதி ரிஷிகேசில் நடந்த சர்வதேச யோகா பயிற்சியில் பங்கேற்க 20 மாணவர்களுடன் சென்றனர்.

அப்போது தேஜா உள்பட 6 மாணவர்கள் அங்குள்ள ஆற்றில் இறங்கி நீந்தினார்கள். அப்போது திடீரென தேஜா ஆற்றில் மூழ்கினார். அவரை மற்ற மாணவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நடிகர் நர்லாதேஜா மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி மற்ற மாணவர்கள் தேஜாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் எஸ்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.