பழம்பெரும் இந்தி நடிகர் பிரானுக்கு தாதா சாஹேப் பால்கே விருது

Veteran Actor Pran Gets Dadasaheb Phalke Award

டெல்லி: பழம்பெரும் இந்தி வில்லன் நடிகர் பிரானுக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு எப்படி எம்.என்.நம்பியாரோ அப்படி ஒரு அதி பயங்கர இந்தி வில்லன்தான் பிரான். முன்னணி இந்தி நாயகர்களுடன் இணைந்து நடித்துக் கலக்கியவர் பிரான்.

பிரானுக்கு தற்போது தாதா சாஹேப் பால்கே விருது தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியத் திரையுலகின் உயரிய விருதாக பால்கே விருது கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் திரையுலகுக்கு பிரான் செய்துள்ள அளப்பறிய பங்குக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இனி சினிமாவில் பாடமாட்டேன்… ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர்

Lata Mangeshkar I No Longer Fit Indian Cinema

திரைப்படங்களின் இனி பின்னணி பாடப்போவதில்லை என்று பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று லதா மங்கேஷ்கரை கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிரபல திரைப்பட பின்னணி பாடகிகளில் ‘கவிக்குயில்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் லதா மங்கேஷ்கர். 13வது வயதில், சினிமாவில் பாடத் தொடங்கிய லதா மங்கேஷ்கருக்கு இப்போது 83 வயதாகிறது.

மராட்டிய திரைப்படம், ‘கஜாபாகு'வில், முதன் முதலாக பின்னணி பாடத் துவங்கிய லதா மங்கேஷ்கர், இதுவரை 36 மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கு மேல் பின்னணி பாடியுள்ளார். சினிமா பாடகராக மட்டுமின்றி புகழ் பெற்ற கஜல் மற்றும் பஜனை பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில், சினிமாவில் பாடியது போதும் என்று முடிவெடுத்திருப்பதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற, ‘தீனாநாத் மங்ககேஷ்கர் விருது' வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லதா மங்கேஷ்கர் பேசியதாவது: "இசை உலகில் எதிர்பார்க்காத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பரிணாம வளர்ச்சி, வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், என்னை அதில் ஐக்கியப்படுத்திக் கொள்ளமுடியவில்லை.

சமீப காலத்தில், திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடினேன். ஆனால் என் பணியை நான் தொடர முடியாத நிலையில் உள்ளேன். இந்த சூழ்நிலையில், பின்னணி பாடகியாக நீடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால், இனி பாடுவதை நிறுத்திக் கொள்ளப்போகிறேன்'' என்றார்.

வட மாநில மக்களின் மனதை தனது இனி குரலால் மயக்கியவர்கள் பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், அவரது சகோதரி ஆஷா போஸ்லே. ரசிகர்களை தனது பாடலால் உருக வைத்த லதா மங்கேஷ்கரின் அறிவிப்பினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவினை அவர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

நம்ம ஸ்ருதி இப்போ அமெரிக்கா ஆன் லைன் ஷாப்பிங் நிறுவன தூதராயிட்டாங்க....

American Swan Signs Up Actress Shru   

சென்னை: அமெரிக்க ஆன் லைன் ஷாப்பிங் நிறுவன தூதராக நடிகை ஸ்ருதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆன்-லைன் மூலமாக, உடைகள், காலணிகள், பேக் உள்ளிட்ட பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பொருட்களை வாங்குவோருக்கு மிகவும் பரீட்சயமான நிறுவனம் அமெரிக்கன் ஸ்வான்.

அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் "ஆன்-லைன் ஷாப்பிங்கில் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். இந்த நிறுவனம் தன் இந்திய விளம்பர தூதராக ஸ்ருதி ஹாசனை நியமித்துள்ளது.

ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தது குறித்து அந்த நிறுவனம்,"எங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பதற்கு உற்சாகமும், இளமை துடிதுடிப்பும் நிறைந்த ஒரு பெண் தேவைப்பட்டார். மேலும் இளைய தலைமுறையினரை கவர கூடிய ஆற்றலும் அவருக்கு வேண்டும். இதையெல்லாம் வைத்து யோசித்தபோது எங்களின் முதல் தேர்வு ஸ்ருதி தான். அதனால் தான் அவரை எங்களின் விளம்பர தூதராக நியமித்தோம்" என்கின்றனர்.

 

'தல' ஷூட்டிங் ரத்தாகல, அதுபாட்டுக்கு நடக்குதாம்...!

Ajith Shooting Is Not Cancelled

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலக வேலைநிறுத்தம் நடப்பதால் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ரத்தாகிவிட்டது என்று வெளியான தகவல்கள் உண்மையில்லை என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார் சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 5ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்ட ஷூட்டிங் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலக வேலைநிறுத்தம் நடப்பதால் அஜீத் பட ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அப்படத்தில் நடிக்கும் விதியுலேகா ராமன் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஆனால் வேலைநிறுத்தம் எதுவும் நடக்கவில்லை என்றும், அஜீத் ஷூட்டிங் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் தயாரிப்பு யூனிட்டுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். மேலும் திட்டமிட்டபடி ஷூட்டிங் வரும் 20ம் தேதி வரை நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் தமன்னா, சந்தானம், விதார்த், ரமேஷ் கன்னா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

 

சித்தியும், சித்தப்பாவும் கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு ஓடினேன் - அண்ணனிடம் போனில் பேசிய அஞ்சலி

Anjali Speaks Her Brother

ஹைதராபாத்: சித்தியும், சித்தப்பாவும் என்னைக் கொடுமைப்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன். சித்தப்பா என்னை தலைமுடியைப் பிடித்து சரமாரியாக அடித்தார். கடுமையாக திட்டினார். அவர் மீதும், சித்தி மீதும் போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டாம் என்று தனது அண்ணன் ரவிசங்கரிடம் போனில் பேசியுள்ளார் நடிகை அஞ்சலி.

மாயமாகிப் போன அஞ்சலியை ஒருபக்கம் அத்தனை பேரும் வலை வீசி தேடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தான் அஞ்சலியுடன் பேசிய ஆடியோ பதிவை வீரப்பன் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ளார் அவரது அண்ணன் ரவிசங்கர்.

இந்த தொலைபேசி உரையாடல் பதிவை தெலுங்கு டிவி சானல்கள் நேற்று ஒளிபரப்பின. அதில் அஞ்சலி கூறியுள்ளதாவது:

ஹலோ... அண்ணா நான் பாலா பேசுறேன். உன் செல்போன் நம்பர் என்னிடம் இல்லே... அதனால் அம்மாவிடம் வாங்கி பேசறேன். நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒன்றும் பயம் இல்லை. என்னோட ஒருத்தர் இருக்கிறார். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதுசரி... நீ ஏண் நான் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தே...? உடனே அந்த புகாரை வாபஸ் வாங்கு.... நான் நல்லாத்தான் இருக்கிறேன். பத்திரமாகவும் இருக்கிறேன். நீ புகார் கொடுத்ததால எனக்கு பிரச்சினை ஆயிடுச்சு...நான் காணவில்லை என்று கொடுத்த புகாரை மட்டும் வாபஸ் வாங்குடா.. அந்த ராட்சசி (சித்தி பாரதிதேவி) மீதும் அந்த ஆளு (சித்தப்பா சூரிபாபு) மீதும் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காத.

நாளை -அதாவது இன்று - நான் நேரில் வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.

சித்தியும், சித்தப்பாவும் என்னை கொடுமைப்படுத்துறாங்க... அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்... ஹைதராபாத் ஓட்டலில் இருந்து நான் வெளியேறிய அன்றும் அந்த ஆள் என்னை தலைமுடியை பிடித்து இழுத்து செருப்பால் அடிச்சான்... கடுமையாக திட்டினான். அவன் என்னை கொடுமை படுத்துனான். இல்லேன்னா நான் ஏண் காணாமல் போகிறேன்.

அவனுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கு...? அவங்க கொடுமை தாங்க முடியாமல்தான் நான் வீட்டை விட்டு ஓடினேன். இந்த விஷயத்தில் நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பியா? அந்த பொம்பளைக்கும் (பாரதிதேவி) அந்த ஆளுக்கும் பயப்படாம நீ எனக்கு ஆதரவாக இருந்தால் நான் வெளியே வர தயாரா இருக்கேன்.. என்று அஞ்சலி பேசியதாக அந்த ஆடியோ பதிவு கூறுகிறது.

இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அஞ்சலி கூறியுள்ளார். இதனால் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் தரப்பிலும் ஒருவித பரபரப்பு காணப்படுகிறது. அஞ்சலி வெளியில் வந்து என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

எனக்கு நிறைய வாத்தியாருங்க இருக்காங்க… கமல்

தொலைக்காட்சிகளில் பார்க்கும் சில நிகழ்ச்சிகள் சுவையானதாக இருக்கும். சில நிகழ்ச்சிகள் தலைவலியை ஏற்படுத்தி ரிமோட் தேடத் தோன்றும்.

விஜய் டிவியில் நேற்று ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது நிறைய விசயங்களை, தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சியாக இருந்தது.

பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதுநாள்வரை பொதுமக்கள்தான் பங்கேற்பாளர்களாக இருந்தனர். நேற்றைய பங்கேற்பாளர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

i have more teachers says kamal

ஒட்டகக்கதையை சொல்லி ஆரம்பித்தார் பிரகாஷ்ராஜ். நிகழ்ச்சிக்கு வந்த கமலிடம் வழக்கம் போல ஹாட் சீட் பற்றி கேட்டார் அதற்கு பதில் கூறிய கமல், ஒவ்வொரு சீட்டில் உட்காரும் போது இது நமக்கு தகுதியானதுதானா என்று கேட்டுக்கொள்வேன் என்றார்.

பிரகாஷ் ராஜ் கேட்ட கேள்விகள் என்னவோ சாதாரணமானதுதான்.

அம்புலிமாமா கதையில் வரும் அம்புலி யார்?

சென்னை பாஷையில் பேமானி என்ற சொல் எதைக்குறிக்கும்?

இப்படி ஒவ்வொரு கேள்விகளும் சாதாரணமானதுதான். ஆனால் அந்த கேள்விகளுக்கு பதிலை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் அதற்கு கமல் சொன்ன விளக்கங்கள் ஆச்சரியப்படத்தக்கவை.

தன்னுடைய வாழ்நாளில் பள்ளி ஆசிரியர் தவிர வேறு யாரெல்லாம் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசான்கள் என்று நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்.

தமிழ் கற்றுக் கொடுத்த கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன், நடிப்பு கற்றுக் கொடுத்த எம்.ஜி.ஆர், சிவாஜி,

தன்னுடைய படங்களில் சிறப்பு பகுதி பாஷைகளைப் பேசி நடிக்கும் போது கூடவே இருந்த லூஸ்மோகன், கோவை சரளா, மகள் ஸ்ருதி என அனைவருமே தனக்கு ஆசான்கள்தான் என்று அடக்கத்தோடு பதிவு செய்தார் கமல்.

நிகழ்ச்சியில் பேசும் போது, வேலை இல்லாத சமயத்தில் தான் முகச்சவரம் செய்ய கற்றுக் கொண்டதாக கூறிய கமல், தன்னுடைய தேவர் மகன், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் வைத்திருந்த மீசை ஸ்டைல் தன் கையால் தானே வடிவமைத்தது என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இதுநாள் வரை பங்கேற்பாளர்களுக்கு கதைகள் சொல்லி விளக்கம் அளித்த பிரகாஷ்ராஜ் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் கூறிய விளக்கங்கள், அனுபவங்களை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யமானதாகத்தான் இருந்தது.

இதுவரை 5000 ரூபாய்களை ஜெயித்திருக்கிறார். இன்றும் நிகழ்ச்சி தொடர்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் கமல் உடன் கவுதமியும் பங்கேற்கிறார்.

 

ரீமா கலிங்கல் - ஆஷிக் அபு ரகசிய காதல் திருமணம்?

மலையாளத்தில் முன்னணி நடிகையான ரீமா கலிங்கலும் மலையாள இயக்குநர் ஆஷிக் அபுவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரீமா கலிங்கல் சமீபத்தில் தமிழில் யுவன் யுவதி படத்தில் நடித்திருந்தார். ஆஷிக் அபு மலையாளத்தில் சால்ட் அண்ட் பெப்பர், டாடி கூல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

aashiq abu rima kallingal married secretly

இருவரும் 22 பீமேல் கோட்டயம் படத்தில் நடித்ததிலிருந்து காதலித்து வந்ததாகவும், திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதனை ஆஷிக் அபு மட்டும் மறுத்துள்ளார்.

நான் திருமணம் செய்தால் அதை வெளியில் சொல்ல எந்த தயக்கமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் ரீமா கலிங்கல் இதுகுறித்து எதுவும் பேச மறுத்துவிட்டார்.