தூங்காவனம் போஸ்டர் வெளியானது! மேன்லி லுக்கில் உலக நாயகன் கமல்!!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் அசத்தலான லுக்கில் கமல் காட்சியளிக்கிறார். விரைவிலேயே டிரைலர் வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு 'தூங்காவனம்' என தலைப்பிட்டப்பட்டுள்ளது. திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் திரில்லர் வகை கதையாகும். மற்றொரு சிகப்பு ரோஜாக்களாக இப்படம் அமையும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Kamal's Thoongavanam poster released

இந்நிலையில் படத்தின் போஸ்டர் இன்று மாலை வெளியாகியுள்ளது. டிரைலர் வெகு விரைவில் வெளியாகும் என்று படக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது வெளியாகியுள்ள படத்தில் கமல் சற்றே இளமை லுக்குடன் லேசான தாடியுடன் காணப்படுகிறார். அவரது லுக் மிகவும் மேன்லியாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

 

பிரபல நடிகையின் நிர்வாண படங்கள் லீக்!

மும்பை: பிரபல நடிகை பிரீத்தி குப்தாவின் நிர்வாணப் படம் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் உலா வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி டிவி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை, பிரீத்தி குப்தா. ககானி என்ற நெடுந்தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, இந்தி பேசும் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார். இதற்கிடையில் பிரீத்தி நடித்த, அன்பிரீடம் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானதால், இந்தியாவில் திரையிட அதற்கு தடை விதிக்கப்பட்டது.

Preeti Gupta nude picture leaked

பெண் ஓரினச்சேர்க்கை கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், பிரீத்தி நடித்த முத்தக் காட்சிகளும், நிர்வாண காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. திடீரென இத்திரைப்படத்தில், பிரீத்தி நடித்த நிர்வாணக் காட்சிகளின் புகைப்படங்களும், வீடியோக்களும், சமூக வலைதளங்களில் நேற்று கசியத் துவங்கின.

இதைப்பார்த்து பரபரப்பான ரசிகர்கள், தமது நண்பர்களுக்கு உடனடியாக பகிர்ந்ததை அடுத்து, காட்டுத் தீ போல, பிரீத்தியின் நிர்வாணப் படங்கள் பரவத்துவங்கின.

அனுராக் காஷ்யப் தயாரித்த குறும்படத்தில், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சிகள், வாட்ஸ் ஆப் மூலம் சில மாதங்களுக்கு முன், காட்டுத் தீ போல பரவின. அதைத் தொடர்ந்து தற்போது, பிரீத்தி குப்தா நடித்த நிர்வாணக் காட்சிகளின் வீடியோக்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இனி நோ பர்த்டே பார்ட்டி... குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம்! - விஷாலின் புதுமுடிவு

இனி பிறந்த நாள் விழா விருந்துகளில் பங்கேற்கப் போவதில்லை. மலர்க்கொத்து போன்ற அன்பளிப்புகளை வாங்குவது கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கப் போகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாயும் புலி விரைவில் வெளியாகிறது. அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Vishal's new resolution

இன்னொரு பக்கம் நடிகர் சங்க விவகாரத்தைக் கையிலெடுத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

படப்பிடிப்பு, நடிகர் சங்க வேலைகளில் தீவிரமாக இருந்தாலும், தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் கல்விக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறார்.

நாளை பிறந்த நாள் கொண்டாடும் விஷால், இந்த ஆண்டு புதிய முடிவை எடுத்துள்ளார். இந்த பிறந்த நாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடுகிறார். அதேபோல, இனி பிறந்த நாள் விருந்துகளிலும் கலந்துக் கொள்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறாராம்.

பள்ளி குழந்தைகளின் கல்வி குறித்து இனி அதிக அக்கறை காட்டப் போகிறாராம்.

இனி மாலை, பொக்கே போன்றவற்றை வாங்குவதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சாதனங்களை வாங்கித் தரப் போகிறாராம்.

 

பாயும் புலி... இன்னும் தொடரும் பிரச்சினை.. செப் 4-ல் ரிலீசாகுமா?

விஷாலின் பாயும் புலி படத்துக்கு இன்னும் சிக்கல் தீரவில்லை. திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடர்கிறது.

விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளபடம் ‘பாயும் புலி'. சுசீந்திரன் இயக்கியுள்ளார். வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ள இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ‘பாயும் புலி' படத்துக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திடீர் தடை விதித்துள்ளது.

Paayum Puli issue: Talks going on for smooth release

செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு, திருச்சி போன்ற பகுதிகளில் மட்டும் இந்த படத்தை திரையிடுவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளனர். ‘லிங்கா' படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இன்னும் ஈடுகட்டாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல் என்றும் கண்டித்துள்ளது. தடையை நீக்காவிட்டால் தமிழக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ‘பாயும் புலி' படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.

சென்னையில் நேற்று மாலை தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரிடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்கிறது.

 

பிரபு தேவா தயாரிக்கும் வினோதன்... ஹீரோவாகிறார் ஐசரி வேலன் பேரன்!

பிரபு தேவா ஸ்டுடியோஸ் மூலம் பிரபு தேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்றான 'வினோதன்' படத்தில் நடிக்கும் மறைந்த பிரபல நடிகர் ஐசரி வேலனின் பேரன் புது முகம் வருண் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு இணையாக வேதிகா நடிக்கிறார். இதுகுறித்து வேதிகா கூறுகையில், "இயக்குvர் விக்டர் என்னிடம் கதை சொல்ல அணுகும் போது, பிரபு தேவா சாருடைய நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் என்றவுடன் மிகவும் உற்சாகமானேன்.

Isari Velan's grandson makes debut in Vinothan

கதையைக் கேட்டவுடன் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, அவ்வளவு நேர்த்தியான கதை. 'பரதேசி', 'காவிய தலைவன்' ஆகிய படங்களின் கதாபாத்திரத்தைப் போலவே வித்தியாசமான, மிகவும் சவாலான கதாபாத்திரம்தான் இந்தப் படத்திலும் எனக்கு.

'வினோதன்' மனோதத்துவத்தின் பின்னணியில் உருவாகும் ஒரு த்ரில்லர் கதை. இயக்குநர் விக்டர் தன்னுடைய கதா பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதைக் குறித்து ஒரு ஆய்வே செய்து வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் எனக்கும், கதாநாயகன் வருனுக்கும் ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளார். இந்த வகுப்பு வளர்ந்து வரும் என்னை போன்ற நடிக -நடிகையருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

'வினோதன்' மூலம் என்னுடைய நெடு நாள் கனவு நிறைவு பெற உள்ளது. நான் சிறு வயதில் இருந்தே பிரபு தேவா சாருடைய தீவிர விசிறி. இப்பொழுது ஒரு நடிகையாக அவருடைய தயாரிப்பில் நடிக்க போவதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவருடைய இயக்கத்திலும், அவருக்கு இணையாகவும் நடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்," என்றார்.

 

அடுத்த படம் குடியும் குடித்தனமும் இல்லை... - இயக்குநர் ராஜேஷ்

தனது அடுத்த படத்துக்கு குடியும் குடித்தனமும் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

மேலும் சினிமாவில் எல்லோரும்தான் குடிக்கிற காட்சிகளை வைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Rajesh denies Kudiyum Kudithanamum

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க - விஎஸ்ஓபி- படத்தில் அத்தனை காட்சிகளிலுமே குடிக்கிற காட்சிகளை வைத்திருந்தார் ராஜேஷ். ஒரு காட்சியில் கதாநாயகியே குடிப்பார்.

இதெல்லாம் கடுமையான விமர்சனங்களை படத்துக்கு எதிராகக் கிளப்பின. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குடியும் குடித்தனமும் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இதில் எரிச்சலடைந்த இயக்குநர் ராஜேஷ், "நிச்சயம் இது அல்ல என் அடுத்த படத் தலைப்பு. அதேநேரம், என்னமோ நான்தான் குடிக்கும் காட்சிகளை வைப்பது போல சிலர் பேசுகிறார்கள். எல்லோரும்தான் அந்த மாதிரி காட்சிகளை வைக்கிறார்கள். கதைக்கு தேவை என்பதால் அப்படி வைக்க வேண்டியிருக்கிறது," என்று கூறியுள்ளார்.

அதற்காக சதா சர்வகாலமும் டாஸ்மாக் பாரிலேயே திரைக்கதை நொண்டியடித்தால் எப்படி ராஜேஷ்!

 

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் அஜீத்துக்கு முன்பே கலக்கியவர் ரஜினிதாங்க!- ரசிகர்கள்

சால்ட் அன்ட் பெப்பர்.. அதாவது பாதி நரைச்ச மீதி நரைக்காத தலை முடி பாணி.. இந்தப் பெயர் அஜீத்தின் மங்காத்தா படம் வெளியான பிறகு அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று படங்களில் அஜீத்தும் இந்த கெட்டப்பிலேயே நடித்துவிட்டார். இதனால், சால்ட் அன்ட் பெப்பர் லுக் என்றாலே அஜீத்தான் என பேசி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

Rajini fans reply to Ajith fans

இந்த நிலையில், ரஜினி அடுத்து நடிக்கும் கபாலி படத்தில் அவருக்கும் இந்த சால்ட் அன்ட் பெப்பர் லுக்தான் என்பது உறுதியாகிவிட்டது.

இதனால், தல வழியில் தலைவரும் இப்போது சால்ட் அன்ட் பெப்பரில் நடிக்கிறார் என அஜீத் ரசிகர்கள் சமூக இணைய தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

உடனே ரஜினி ரசிகர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனர்.

Rajini fans reply to Ajith fans

"தல-க்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் நல்லாதான் இருக்கு. ஆனா அதுக்கு வழிகாட்டியே நம்ம தலைவர்தான். அவர் ஆரம்ப காலத்தில் நடிச்ச 6லிருந்து 60 வரை படத்திலேயே சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சில காட்சிகள் வருவார். அடுத்து தர்மதுரையில் அரை மணி நேரம் இந்த கெட்டப்தான். வள்ளி படத்தில் மேக்கப்பே இல்லாமல், உண்மையான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே தோன்றினார்... தல-க்கு வழிகாட்டி தலைவர்தான்," என்று கூறி தர்மதுரை, வள்ளி பட ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.

அஜீத் ரசிகர்களும் இதனை விவாதமாக்காமல், உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா..."ஏ"

சென்னை: டார்லிங் நாயகன் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது சென்சார் போர்டு.

ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக தயாராகியிருக்கிறது.

‘Trisha Illana Nayanthara’ Movie Gets ‘A’ Certificate

செப்டம்பர் 17 ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் சமீபத்தில் சென்சார் போர்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு வயது வந்தவர்கள் (18 வயது மேற்பட்டவர்கள்) மட்டும் பார்க்கும் வகையில் ஏ சர்டிபிகேட் வழங்கியிருக்கின்றனர்.

படத்தில் இடம்பெறும் அளவுக்கு அதிகமான முத்தக் காட்சிகள் மற்றும் பாடல் போன்ற காரணங்களுக்காக படத்திற்கு ஏ சான்றிதழை வழங்கியிருக்கின்றது சென்சார் போர்டு.

தமிழில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற பெயரில் வெளியாகும் இத்திரைப்படம் தெலுங்கில் த்ரிஷா லேடா நயன்தாரா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட இருக்கிறது.

செப்டம்பர் 17 ம் தேதி வெளியாகும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் மற்றும் கவுண்டமணியின் 49 ஓ ஆகிய படங்களுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தம் சீனியர் கவுண்டமணியுடன் மோதத் தயாராகி விட்டார் ஜி.வி.பிரகாஷ், வெற்றிக்கனியை பறிப்பாரா பார்க்கலாம்...

 

சிம்புவின் அடுத்த அதிரடி .. நாளை முதல் அச்சம் என்பது மடமையடா... டீசர்!

சென்னை: இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து படத்தின் டீசரை நாளை வெளியிடத் தீர்மானித்து இருக்கின்றனர் படக்குழுவினர், படத்தின் நாயகன் சிம்பு இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியை உறுதி செய்திருக்கிறார்.

Achcham Yenbathu Madamaiyada Teaser

விண்ணைத்தாண்டி வருவாயா மாபெரும் வெற்றிக்குப் பின்னர் கவுதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தாமரை ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

சிம்பு, ராணா, மஞ்சி மோகன் இணைந்து நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கவுதம் மேனன்.

இந்நிலையில் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " ஒரு அழகான ரொமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் அச்சம் என்பது மடமையடா, திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. கடவுள் அருளால் படத்தின் டீசர் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்"என்று கூறியிருக்கிறார்.

சிம்புவின் திரைவாழ்க்கையில் இனி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லுவது, போன்று அடுத்தடுத்த படங்கள் சாரின் பங்களிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

நீங்க கலக்குங்க எஸ்.டி.ஆர்.....

 

'சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட...'- பா.விஜய்க்கு தாஜ்நூர் போட்ட மாடர்ன் கானா!

கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் நடுவே எப்போதும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும். அதிலும் இரண்டு முக்கியமான திரைப்பட பாடலாசிரியர்களாக தமிழ் திரையுலகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பா.விஜய்யும், சினேகனும் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு இசையமைக்கிறார் என்றால் தாஜ்நூர் இளம் கவிஞர்களின் செல்ல சினேகன் என்பது சொல்லாமலே விளங்கும்! யெஸ்... விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஸ்டாபெர்ரி' திரைப்படத்திற்கு தாஜ்நூர்தான் இசை.

Taj Noor's modern Gana for Pa Vijay

இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்கி அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதற்கப்புறம் சினேகன் ஹீரோவாக நடித்து கவரும் ‘கள்ளன்' என்ற புதிய திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார் தாஜ்நூர். இந்த படங்கள் குறித்தும் அதில் இசையமைப்பாளர் தாஜ்நூரின் பங்களிப்பு பற்றியும் பேசினோம்...

Taj Noor's modern Gana for Pa Vijay

ஸ்டாபெர்ரி படத்தில் சக இசையமைப்பாளர்களையே பாட வச்சுருக்கீங்களாமே?

ஆமாம்... இசையமைப்பாளர்கள் டி.இமான், மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் அற்புதமான இரண்டு ட்யூன்களுக்கு பாடிக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரபல ஹீரோ சித்தார்த்தும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த மூன்று பாடல்களும் வெஸ்டர்ன் ஸ்டைலில் அமைக்கப்பட்டது. அதற்கப்புறம் ஒரு பாடலை நேஷனல் அவார்டு வின்னர் உத்ரா பாடியிருக்கிறார். இவர் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள். இது முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டது.

Taj Noor's modern Gana for Pa Vijay

அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட பின்பு, அதே பாடலை வீட்டில் போய் பாடிக் காட்டினாராம் உத்ரா. அதை கேட்ட உன்னி கிருஷ்ணனும் அவரது மனைவியும் நேரில் வந்து கைகொடுத்து, "மூணு நாள் என்னை உறங்க விடாமல் செய்துவிட்டது" என்று பாராட்டிவிட்டு போனது என்னால் மறக்கவே முடியாது. அது போலவே இன்று முன்னணி இசையமைப்பாளர்களாக இருக்கும் டி.இமானும், ஜி.வி.பிரகாஷ்குமாரும் நேரம் ஒதுக்கி பாடிக் கொடுத்ததையும் மறக்க முடியாது.

Taj Noor's modern Gana for Pa Vijay

ஸ்டாபெர்ரியில் வேறென்ன விசேஷம்?

இதில் மாடர்ன் கானா என்றொரு ஸ்டைலை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட... என்று துவங்கும் அந்த பாடலை நோபில் என்றொரு புது பாடகர் பாடியிருக்கிறார். பாருங்கள்... அதுதான் இந்த வருஷம் எல்லா ஏரியாவிலும் நின்று அடிக்கப் போகிறது. அதற்கப்புறம் பின்னணி இசை கோர்ப்புக்காக அதிக நேரம் எடுத்துக் கொண்டோம்.

கிட்டதட்ட 300 மணி நேரம் ரீரெக்கார்டிங் டி.டி.எஸ் மிக்சிங்குக்காக மட்டும் ஆகியருக்கிறது. அதுமட்டுமில்ல... அந்த பின்னணி இசைக்காக புதுசாவே சவுண்ட் டிசைன் பண்ணியிருக்கோம். ஹாலிவுட்லேர்ந்து ஆன் லைன்ல புதுசு புதுசா ஒலிகளையும் எபெக்ட்சையும் முறைப்படி அனுமதி வாங்கி பயன்படுத்தியிருக்கோம். படம் மிரட்டலா வந்துருக்கு.

வேறு என்னென்ன படங்களுக்கு இசையமைத்து வருகிறீர்கள்?

ஸ்டாபெர்ரி, கள்ளன் தவிர, ‘வெங்காயம்' படத்தின் மூலம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சங்ககிரி ராச்குமாரின் ‘நெடும்பா' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறேன். காந்தாரி, யானைமேல் குதிரை சவாரி, வெள்ளிக்கிழமை 13 ம் நாள் என்று வரிசையாக நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.

Taj Noor's modern Gana for Pa Vijay

நெடும்பா திரைப்படம் முடிந்து பின்னணி இசையமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அந்த படம் மலையகவாசிகள் தொடர்பான படம் என்பதால், நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. நானும் ராச்குமாரும் காடுகளில் பல நாட்கள் திரிந்து காட்டுவாசிகள் பயன்படுத்தும் விதவிதமான இசைக்கருவிகளை வாங்கி வந்தோம். வெறும் மரத்தால் செய்யப்பட்ட கருவிகளும், மூங்கில், தோல் கருவிகள், மூச்சுக்காற்றை பயன்படுத்தும் கருவிகளால் பின்னணி இசையமைத்து வருகிறேன். இந்த படம் ராச்குமாரை இந்தியா முழுக்க பிரபலமாக்கிவிடும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏனென்றால் அந்த கதை அப்படி. அதுமட்டுமல்ல, இந்த படத்திற்காக சென்னை தமிழ், கோவை தமிழ் போலஅவரே ஒரு புதுத் தமிழை உருவாக்கியிருக்கிறார். அது எல்லோராலும் கவனிக்கப்படும்.

வளைகுடா இளைஞர்களின் கண்ணீர் வாழ்க்கை

இது தவிர ‘தமிழ் பிள்ளை' என்றொரு இசை ஆல்பம் தயாராகி வருகிறது. இலங்கை தமிழர்கள் தாயகம் விட்டு பல்வேறு மண்களில் தவித்து வருவதை இசையாக சொல்லிவிட்டோம். ஆனால் நமது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு போய் அவதிப்படும் இளைஞர்களின் வாழ்வை கண்ணீரோடு வெளிப்படுத்துகிற ஆல்பமாக இது இருக்கும். கவிக்கோ அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, இன்குலாப், பழனிபாரதி, யுகபாரதி, இஷாக், இக்பால் ஆகியோர் இந்த ஆல்பத்திற்கான பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

விரைவில் வளைகுடா நாடுகளில் இந்த ஆல்பத்தை லைவ் ஆஸ்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்தி வெளியிடப் போவதாகவும் குறிப்பிட்டார் தாஜ்நூர்.

 

நானும் ரவுடிதான் பர்ஸ்ட் லுக் - கழுத்தில் துண்டு நெற்றியில் திருநீறுடன் தரிசனம் தரும் விஜய் சேதுபதி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருக்கும் ‘நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று மாலை வெளியிட்டார், நேற்று வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.


சிவப்புக் கலர் சட்டை, கழுத்தில் ஆரஞ்சு கலரில் துண்டு மற்றும் நெற்றியில் திருநீறு என முற்றிலும் புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் காட்சியளிக்கிறார்.

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் 'நானும் ரவுடிதான்' படம் உருவாகியிருக்கிறது.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ‘போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார், படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் "அக்டோபர் 2ம் தேதி ‘நானும் ரவுடிதான்' படத்தை வெளியிடுவது என்று உறுதி செய்திருக்கிறோம். மேலும், படத்தின் டீஸர், பாடல்களை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.இதனை படத்தின் நாயகி நயன்தாராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.

அக்டோபர் 2 ம் தேதி விஜயின் நடிப்பில் வெளியாகும் புலி திரைப்படத்துடன் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தின் மூலம் மோதவிருக்கிறார்.