துபாயில் ஹேப்பி நியூ இயர் ஷூட்டிங்: குடும்பத்தோடு செல்லும் ஷாருக்கான்

துபாயில் ஹேப்பி நியூ இயர் ஷூட்டிங்: குடும்பத்தோடு செல்லும் ஷாருக்கான்

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் நடக்கும் ஹேப்பி நியூ இயர் படப்பிடிப்புக்கு தனது குடும்பத்தாரையும் அழைத்துச் செல்கிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றி ஜோடியான ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் ஃபரா கானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்கள் துபாயில் நடக்கிறது. 3 மாதங்கள் தனது குடும்பத்தாரை பிரிய மனமில்லாத ஷாருக்கான் அவர்களையும் தன்னுடன் துபாய்க்கு அழைத்துச் செல்கிறார்.

அவருடன் அவரது மனைவி கௌரி, மகன் ஆர்யன், மகள் சுஹானா, குட்டிப் பையன் ஆப்ராம் ஆகியோர் துபாய் செல்கின்றனர். ஷாருக்கின் சகோதரியும் அவர்களுடன் செல்கிறார்.

ஷாருக்கானுக்கு துபாயின் முக்கிய பகுதியில் சொந்தமாக வில்லா உள்ளது. ஃபரா கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் தான் தீபிகா இதே ஷாருக் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவகார்த்திகேயனின் கெரியருக்கு ஆப்பு வைக்க வதந்தியை பரப்பும் விஷமிகள்

சிவகார்த்திகேயனின் கெரியருக்கு ஆப்பு வைக்க வதந்தியை பரப்பும் விஷமிகள்

சென்னை: சிவகார்த்திகேயன் அசுர வேகத்தில் வளர்வதைப் பார்த்து வயித்தெரிச்சல் படுபவர்கள் தான் அவரைப் பற்றி வதந்தியை பரப்பி வருவதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். கை நிறைய படங்களுடன் ஜாலியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவருக்கும் பிந்து மாதவிக்கும் இடையே காதல் என்றும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது.

இதை கேட்டு ஆடிப்போன சிவகார்த்திகேயன் அய்யய்யோ நான் என் மனைவியைத் தவிர வேறு யாரையும் காதலிக்கவில்லை, இது வெறும் வதந்தி என்றார். சிவா இப்படி அலறுகிறார் ஆனால் ஏன் அவரைப் பற்றி அப்படி ஒரு பேச்சு வந்தது என்று கோலிவுட்டில் உள்ள சிலர் அலசி ஆராய்ந்தனர்.

இறுதியில் சிவாவின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சிலர் வயித்தெரிச்சலில் அவரது கெரியரை டேமேஜ் செய்ய இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பு வருவது தெரிய வந்துள்ளது.

 

மாமா ஏ.ஆர். ரஹ்மான் வழியில் ஹாலிவுட் போகும் ஜி.வி.பிரகாஷ்

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹாலிவுட் படத்தில் இசையமைக்க கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன்.

25 திரைப்படங்கள் வரை இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிக்கு இசையமைக்க கையெழுத்திட்டுள்ளாராம்.

இதனை அவரே டுவிட்டர், ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க போகிறேன். இதுகுறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட பட நிறுவனமே விரைவில் அறிவிக்கும். அதுவரைக்கும் பொறுத்திருங்கள் என்று கூறியிருக்கிறார்.

மாமா ஏ.ஆர். ரஹ்மான் வழியில் ஹாலிவுட் போகும் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷின் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட்டில் கால்பதித்து இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி வந்தார். அதுபோல், ஜி.வி.பிரகாஷும் ஹாலிவுட்டில் வெற்றி பெறுவாரா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

வெயில் தொடங்கி ‘ராஜா ராணி' வரை நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த ஜி.வி.பிரகாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் இசையமைத்த இவர், சமீபத்தில்தான் இந்தி படம் ஒன்றிலும் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.