தொடங்கியது சூர்யாவின் சிங்கம் 2!

singam 2 starts rolling இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் புதிய படங்களின் பூஜைகள் இன்று சென்டிமெண்டாக நடந்து வருகின்றன.

சூர்யா நடிப்பில் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என்ற பெயரில் தயாராகிறது.

இதில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்காவும் ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார்.

எஸ் லட்சுமணன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க ஏராளமான புதுமுகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.

நாயகன் சூர்யா, நாயகிகள் அனுஷ்கா, ஹன்ஸிகா, சூர்யாவின் தம்பி கார்த்தி, நடிகர் சிவகுமார், இயக்குநர் லிங்குசாமி உள்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
 

இப்போ தண்ணி பார்ட்டிகளுக்குப் போவதில்லை! - மனீஷா கொய்ராலா

Manisha Says No Late Night Parties

நடிகை மனீஷா கொய்ராலா இப்போது மதுவிருந்துகளைத் தவிர்த்துவிட்டதாகவும், இதனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், சாம்ரட்டஹலுக்கும் 2010-ல் திருமணம் நடந்தது.

சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மனிஷா கொய்ராலா மும்பையில் தனியாக வசிக்கிறார். தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகும் மனிஷா கொய்ராலா தொடர்ந்து மதுவிருந்துகளில் பங்கேற்று தள்ளாடித் தடுமாறி, செய்திகளில் இடம்பெற்று வந்தார்.

இதனால் அவரது இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது.

இந்த நிலையில் இப்போது தான் ரொம்ப மாறிவிட்டாகக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "நான் ரொம்ப மாறிட்டேன். எதற்கும் ஆசைப்படுவதில்லை. விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். இப்போது வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மனஅமைதியை கொடுக்கிறது. இதனால் என் உடல் நிலையிலும் நல்ல ஆரோக்கியத்தை உணர்கிறேன்," என்றார்.

 

தள்ளிப் போனது நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!

Naduvula Konjam Pakkatha Kanom Postponed   

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்... இது நாளை மறுதினம் வெளியாகவிருந்த ஒரு படத்தின் தலைப்பு.

விஜய் சேதுபதி, காயத்ரி, தனலட்சுமி நடித்துள்ள இந்தப் படத்தை பாலாஜி தரணிதரன் என்ற புதியவர் இயக்கியுள்ளார். வேத் சங்கர் இசையமைத்துள்ளார்.

நேற்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. பின்னர், ஒரு மணி நேரம் கழித்து இயக்குநர்கள் மற்றும் திரையுலகினருக்கான காட்சியும் நடந்தது.

படம் பார்த்த அனைவரும் பாராட்டித் தள்ளினர்.

விஐபி காட்சிக்கு வந்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'இந்தப் படம் ரொம்ப ப்ரெஷ்ஷாக இருந்தது. அருமையாக செய்திருந்தனர். பாராட்டுக்கள்," என்றார்.

பத்திரிகையாளர்கள், விமர்சகர்களும் படத்தைப் பாராட்டிய நிலையில், இதன் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

அநேகமாக இரு வாரங்களுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகக் கூடும்.

 

கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார் அஜீத்தின் மச்சான் ரிச்சர்ட்

Ajith Brother In Law Tie Knot Kannadasan Granddaughte

சென்னை: நடிகர் அஜீத்தின் மைத்துனரும், நடிகை ஷாலினியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, கவியரசு கண்ணதாசனின் பேத்தி சத்யலட்சுமியை மணம் செய்யவுள்ளார்.

செப்டம்பர் 23ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெறவுள்ளது. திருமண தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து ரிச்சர்ட் கூறுகையில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாதங்களுக்குள் திருமணம் நடைபெறும். இது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்த திருமணம்தான். இரு வீட்டாரும் நீண்ட கால நண்பர்கள். அந்த அடிப்படையில் எனக்கும், சத்யலட்சுமிக்கும் 3 வயதிலிருந்தே நல்ல நட்பு இருந்தது. இப்போது அது திருமணத்தில் முடிகிறது என்றார்.

சத்யலட்சுமி பல் மருத்துவர் ஆவார். ஏஜி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் வெளியாகவுள்ள முதல் படம் பொன்மாலைப் பொழுது. விரைவில் இது திரைக்கு வரவுள்ளது. இதில் சத்யலட்சுமியின் சகோதரர் ஆதவ் ஹீரோவாக நடித்து அறிமுகமாகிறார்.

ரிச்சர்ட் தமிழில் தற்போது ரெண்டாவது படம், கூத்து, சுற்றுலா, ஜடாயு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பழம்பெரும் நடிகர் பெரிய கருப்பு தேவர் மரணம்

Veteran Actor Periya Karuppu Thevar Dies

சென்னை: பழம் பெரும் நாடக நடிகரும், திரைப்பட நடிகரும், கிராமியப் பாடகருமான பெரிய கருப்பு தேவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மதுரை மாவட்டம் கருமாத்தூரைச் சேர்ந்தவர் பெரியகருப்புத் தேவர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த பிரபலமான நடிகர். கிராமியப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். திரைப்படங்களிலும் நிறைய நடித்துள்ளார். மண்வாசனை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் இவர் பாடிய பாடல் பிரபலமானது. கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

75 வயதான பெரிய கருப்புத் தேவருக்கு அன்ன மயில் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். அன்ன மயில் ஏற்கனவே இறந்து விட்டார். குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார் பெரிய கருப்புத் தேவர்.

சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் பால் பாண்டிக்குக் குழந்தை பிறந்திருந்தது. பேரன் பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்த பெரிய கருப்புத் தேவர் பேரனைப் பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சிரித்தபடி கூறியுள்ளார். அப்போது அவருக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நேற்று அவர் மரணமடைந்தார்.

திரையுலகினர் இரங்கல் செலுத்துவதற்காக பெரிய கருப்புத் தேவரின் உடல் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டது. பின்னர் கருமாத்தூருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பெரிய கருப்புத் தேவரின் ஒரு மகனான விருமாண்டி திரைப்பட இணை இயக்குநராகவும், இன்னொரு மகன் கார்த்திக் கலை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

 

கரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: சல்லு குண்டு

Salman Drops Bomb On Saifeena Wedding

பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் சைப் அலி கான் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி நடக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் மணமக்கள் இது பற்றி பேச மறுக்கின்றனர். அதனால் அவர்கள் திருமணம் நடக்குமா, நடக்காதா என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் திருமணம் பற்றி நடிகர் சல்மான் கானிடம் கேட்டதற்கு, அவர் கூறுகையில்,

எனக்கு இதுவரைக்கும் அழைப்பிதழ் வரவில்லை. அதனால் திருமணம் நடக்கும் என்று எனக்கு தோணவில்லை என்றார்.

சரி நீங்கள் திருமணம் செய்து கொண்டால் யார், யாரையெல்லாம் அழைப்பீர்கள் என்று கேட்டதற்கு, திருமணம் ஒருவருடைய சொந்த விஷயம். அதனால் நான் திருமணம் செய்து கொள்ளும்போது யாரையும் அழைக்க மாட்டேன் என்றார்.

ஏற்கனவே சைப், கரீனா திருமணம் பற்றி சந்தேகங்கள் இருக்கையில் சல்லு வேறு பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளார். ஒரு வேளை காதலர்களாகவே இருக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டார்களோ?

 

படப்பிடிப்பில் மயங்கிய நடிகை மோனல்!

Monal Kajar Faints At Shooting Spot   

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை மோனல் கஜார் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து பரபரப்பேற்படுத்தினார்.

பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் ‘வானவராயன் வல்லவராயன்' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி 'கழுகு' கிருஷ்ணா.

இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நெருக்கமாக நடித்துக் கொண்டிருந்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானர்கள்.

உடனே, மோனலை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து மோனலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூச்சுத் திணறலும் அஜீரண கோளாறும் இருந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

போரடிக்கும் சீரியல்கள்: கரண்ட் செலவையாவது மிச்சப்படுத்துங்கப்பா!

Sun Tv Serials Become More Boring

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் வரவர போரடிப்பதாக இல்லத்தரசிகள் குமுறத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தங்கம் தொடரில் வில்லத்தனம் சகிக்கமுடியவில்லை என்பது நேயர்களின் கருத்தாகும்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தங்கம் தொடரில் அநேகமாக எல்லோரும் ஐ.ஏ.எஸ் படித்துவிடுவார்கள் போல. ஆரம்பத்தில் கதாநாயகி ரம்யா கிருஷ்ணன்தான் ஐ.ஏ.எஸ் படித்தார். பின்னர் கலெக்டரை திருமணம் செய்து கொண்டு நீண்ட நாட்களாக சப் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இப்பொழுது அவரது தங்கை ரமா ஐ.ஏ.எஸ் படிக்கிறார். இவர்களுக்கு இடையே எட்டாவது மட்டுமே படித்த இளவஞ்சி ஐ.ஏ.எஸ் படிக்கப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இதில் டுடேரியலுக்கு வேறு போய் வந்தார். இவற்றை எல்லாம் பார்த்து ஐ.ஏ.எஸ் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கேஸ் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த தொடரில் தாய்மாமன் குலசேகரன்தான் வில்லன் என்றால் பங்காளி குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி வில்லியம்ஸ் அதை விட வில்லத்தனம் செய்கிறார். அவருக்குத் துணையாக அவருடைய மகன்களும், மகளும் செய்யும் வில்லத்தனம் சகிக்கமுடியாத ரகமாக மாறிவருகிறது. இவற்றை பார்க்கும் போது இனி சொந்தக்காரங்களை நம்புவதற்கு கூட யோசிப்பார்கள்.

இந்த தொடரில் வந்தனா, சாந்தி வில்லியம்ஸ் இணைந்து செய்யும் வில்லத்தனம் சகிக்க முடியவில்லை என்று எரிச்சலடைகின்றனர் இல்லத்தரசிகள். அதுவும் விஜயகுமாரின் குடும்பத்தை அழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர்கள் செய்யும் வில்லத்தனம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது.

யாரென்றே தெரியாமல் கலெக்டரின் பி.ஏ. வாக வந்தபோது யார் இந்த வந்தனா என்று கேட்க வைத்தவர். பின்னர் திடீரென்று சாந்தி வில்லியம்ஸ்சின் மகளாக வந்து ஐயா குடும்பத்திற்கு எதிராக வில்லத்தனம் செய்து வருகிறார். கடைசி மகள் சாருவை கடத்துவதாகட்டும், கோவில் பூசாரியை தேடி சென்று ரகசியத்தை தெரிந்து கொள்வதாகட்டும் இவர்களின் வில்லத்தனம் கொஞ்சம் எரிச்சல் ரகமாக இருப்பதாக சொல்கின்றனர்.

இதுபோன்ற சீரியல் வில்லத்தனங்களைப் பார்த்து நேரத்தையும், மின்சாரத்தையும் வீணாக்குவதை விட பேசாமல் டிவியை நிறுத்திவிட்டு ரெஸ்ட் எடுத்தால் மின்சாரம் மிச்சமாவதோடு, காசும் மிச்சமாகும் என்கின்றனர் இல்லத்தரசிகள். நல்ல முடிவுதான் போங்கள்.

 

'டைட்டானிக்'கை பார்த்து இன்னும் அழுது புலம்பும் ரிச்சா!

Titanic Makes Sexy Telugu Heroine Cry   

டைட்டானிக் படம் வந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் கூட அப்படத்தை பார்க்கும்போதெல்லாம் அழுது விடுகிறாராம் ரிச்சா கங்கோபாத்யாயா.

டைட்டானிக் படத்தை 11வது முறையாக சமீபத்தில் டிவியில் பார்த்தபோது தன்னையும் அறியாமல் அழுது விட்டதாக கூறியுள்ளார் ரிச்சா. இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜாக் மற்றும் ரோஸ் நடிப்பு என்னை சிலிர்க்கச் செய்து விட்டது என்று சிலிர்த்துக் கூறியுள்ளார்.

தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்துள்ள ரிச்சா, தெலுங்கில் ரவிதேஜாவுடனும், நாகர்ஜூனா மகனுடனும் நடித்து வருகிறார்.

பெண்கள் உணர்ச்சிகரமானவர்கள்தான், அதற்காக இத்தனை வருடங்கள் தாண்டியுமா அழுவுறது... ஒஸ்தி ரிச்சா, இது கொஞ்சம் சாஸ்திதான்...!

 

பிள்ளையார் சதுர்த்தியன்று புதுப்படத்துக்கு பூஜை போட்ட திருப்பதி பிக்சர்ஸ்

Prabhu Son S Second Movie Launches

இயக்குநர் லிங்குசாமியும் அவர் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸும் இணைந்து நடத்தும் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்துக்கு இன்று பூஜை போட்டது.

இந்தப் படத்தை இயக்குபவர், எங்கேயும் எப்போதும் என்ற வெற்றிப்படம் தந்த சரவணன். அவருக்கு இது இரண்டாவது படம். முதல் படமான கும்கி விரைவில் வரவிருக்கிறது. அந்தப் படத்தைத் தயாரித்ததும் திருப்பதி பிக்சர்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கு சத்யா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, ஆர்கே விஜயமுருகன் கலையை கவனிக்கிறார்.

படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது. நடிகர் பிரபு, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 

சிவாஜி 3 டி பிரிமியர்: ஜப்பானில் ஸ்ரேயாவுக்கு உற்சாக வரவேற்பு

Shriya Enjoys Sivaji 3 D Premier Show   

டோக்யோ: சிவாஜி 3டி படத்தின் சிறப்புக் காட்சிக்காக டோக்யோ சென்ற அப்படத்தின் நாயகி ஸ்ரேயாவுக்கு ஜப்பான் ரஜினி ரசிகர்கள் மிக உற்சாகமான வரவேற்பளித்தனர்.

ரஜினி - ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘சிவாஜி' படம் 2007-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பெரும் லாபம் ஈட்டியது. உலகளாவிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவுக்குப் பெற்றுத் தந்தது.

‘சிவாஜி' படத்தை தற்போது ரூ 17 கோடி செலவில் ‘3டி'யில் உருவாக்கியுள்ளனர். . ‘3டி' டிரெய்லரை சமீபத்தில் சென்னையில் ரிலீஸ் செய்தனர். இதில் ரஜினி பங்கேற்று பாராட்டினார்.

ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ரசிகர் மன்றங்களும் உள்ளன. ரஜினியின் சமீபத்தில் படங்கள் அனைத்துமே ஜப்பானில் திரையிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் அங்கு வெளியான ரஜினியின் எந்திரனை ஜப்பானே கொண்டாடியது.

எனவே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘சிவாஜி 3டி'யின் சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடு செய்திருந்தது ஏவிஎம்.

படத்தைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கென சென்னையிலிருந்து நடிகை ஸ்ரேயாவும் டோக்கியோ சென்றிருந்தார்.

அங்கு ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். படம் திரையிடப்பட்ட தியேட்டருக்கு முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து ஜப்பான் பாரம்பரியபடி கை ரிக்ஷாவில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அழைத்து சென்றனர்.

ஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ரேயாவை பேட்டி கண்டன.

ஸ்ரேயா கூறுகையில், "டோக்கியோ அழகான நகரம். இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள். ரஜினி சார் மீது அவர்கள் வைத்துள்ள அன்பும் மரியாதையும் வியக்க வைக்கிறது.

‘சிவாஜி'யில் தமிழ்செல்வி கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்த ரஜினி சாருக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ரஜினி மற்றும் ஷங்கருடன் பணிபுரிந்தது என் அதிர்ஷ்டம்," என்றார்.

 

'சூப்பர் மாடல்' படத்துக்காக 'சூப்பர்' போஸ் கொடுத்த வீணா மாலிக்!

Veena Malik Raunchy Photoshoot Supermodel Movie   

ரவி அலவாத் என்பவர் தயாரிக்க நவீன் பத்ரா இயக்கும் படம்தான் இந்த சூப்பர் மாடல். இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள கவர்ச்சிகரமான புகைப்படக் குவியலை ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள போஸ் அனைத்துமே ஏடாகூட கவர்ச்சியில் உள்ளன. உடல் பாகங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் இப்படங்களில் வீணா.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை ஒரு சூப்பர் மாடலாக உணர வைத்துள்ளது இந்த போட்டோஷூட். எனது கவர்ச்சிகரமான உடலை வெளிப்படுத்த இது உதவியுள்ளது. இந்தப் படங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு பொறி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இப்படம் குறித்து பத்ரா கூறுகையில், சூப்பர் மாடல் படத்தை நான் தீர்மானித்தவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் வீண்தான். அவர்தான் இதற்குப் பொருத்தமானவர். சரியான உடல் வாகு அவருக்கே உண்டு. கடுமையாகவும் உழைக்கிறார், முகம் சுளிக்காமல் ஒத்துழைக்கிறார் என்று புகழாரம் பாடுகிறார்.

இந்தப் படத்தில் அவருடன் ஜோடி போடுபவர் அஷ்மித் படேல் ஆவார்.

 

குரோர்பதி 6க்கு போட்டியாக களமிறங்கும் ‘பிக் பாஸ் 6’

Bigg Boss 6 On Prime Time From October 07

சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 7 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கலர்ஸ் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ஆங்கிலச் சேனலில் வரும் பிக் பிரதர் ரியாலிட்டி ஷோவைப் போல கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. நிகழ்ச்சி பற்றி சில சர்ச்சைகள் எழுந்தாலும் ஒரளவு ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த நிலையில் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 6வது சீசன் அக்டோப‌ர் 7 ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் தொகுத்த‌ளிக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ்தான் முதல் வெற்றியாகவும் முதன்மை வெற்றியாகவும் இருந்தது. இன்னொன்று அமிதாப் பச்சனின் குரோர்பதி. தற்போது குரோர்பதி சீசன் 6 தொடங்கியுள்ளது. சில நாட்களிலேயே ஒருவர் கோடீஸ்வரர் ஆகி டிஆர்பியை எகிற வைத்திருக்கிறார். இதற்கு போட்டியாக களமிறங்கும் பிக் பாஸ் சீசன் 6 சில வாரங்களில் தொடங்க உள்ளது. சீசன் 5ல் சல்மான்கானுடன் சஞ்சய் தத்தும் சேர்ந்து தொகுத்தளித்தார். ஆனால் இந்தமுறை சல்மான் தனியாக நிகழ்ச்சியை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்.பி.சியில் காம்பயரிங் செய்யும் குரங்கார்!

Monkey Becomes Compere Nbc Animal Practice

அழகுப் பெண்களும் ஹேண்ட்ஸ்சம் ஆன ஆண்களும் மட்டும்தான் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரவேண்டுமா என்ன? விலங்குகளும் கூட நிகழ்ச்சித் தொகுப்பாளராக முடியும் என்று சொல்லியிருக்கின்றனர் என்.பி.சி சேனல்காரர்கள்.

ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "அனிமல் பிராக்டிஸ்" நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒரு குரங்கு என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் நம்பித்தான் ஆகவேண்டும். அதுவும் இது சதாரண குரங்கு அல்ல ஜார்ஜ் ஆப் த ஜங்கிள், நைட் அட் த மியூசியம், ஹேங் ஓவர் - 2, என 20 படங்களுக்கு மேல் நடித்த கிரிஸ்டல் தான் இப்போது என்பிசி சேனலின் ‘அனிமல் பிராக்டிஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளையும் களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

சினிமா நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது செய்தி அல்லதான். என்றாலும் சினிமாவில் நடித்த குரங்கு ஒன்று சின்னத்திரைக்கு வந்திருப்பது செய்திதானே.

 

ஊடகங்களின் ஹாட் ஜோடி ஜி.வி. பிரகாஷ்– சைந்தவி

Celebrity Couple G V Prakash Saindavi

இன்றைக்கு ஊடகங்களில் அதிக அளவில் பேசப்படும் பிரபல ஜோடிகள் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி. சன் டிவியில் தொடங்கி விஜய் டிவி, கலைஞர் டிவி, உள்ளிட்ட பிரபல சேனல்களில் இவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவர்களுக்காக ஸ்பெசல் பக்கங்களை ஒதுக்கி சிறப்பு பேட்டிகளை வெளியிடுகின்றன வார இதழ்கள்.

சன் டிவியில் ஸ்டார் கவுண்டனில் ஜி.வி. பிரகாஷ் பேட்டி என்றால் அதில் பிரகாஷ் பற்றிய இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் சைந்தவி. சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடி பங்கேற்றனர். செல்லக்குழந்தைகளின் அழகான குரல்களுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை சொல்லிய இந்த ஜோடி சிறப்பாக பாடல்களையும் பாடி அசத்தினர்.

ரேடியோ மிர்ச்சி விருது வழங்கும் விழாவில் இந்த ஜோடி பங்கேற்றதுதான் விஜய் டிவியில் ஹைலைட் ஆக காண்பிக்கப்பட்டது. பரிசு வாங்கவோ, பாடல் பாடவோ, ஜி.வி. பிரகாஷ் மேடையேறும் போதெல்லாம் கேமராவின் கண்கள் சைந்தவியை காட்டியது.

சில மாதங்களுக்கு முன்பு வரை சிநேகா - பிரசன்னா ஜோடி ஊடகங்களின் கண்களில் சிறப்பு கவனம் பெற்றது. அதேபோல் இப்போது ஜி.வி.பிரகாஷ் - சைந்தவியை சுற்றி வருகின்றன ஊடகங்களின் கேமராக்கள்.