நடிகைகளின் பெயர்களுக்குப் பின் வரும் சாதிப் பெயரை நீக்க வேண்டும் - சீமான்

நடிகைகளின் பெயர்களுக்குப் பின் வரும் சாதிப் பெயரை நீக்க வேண்டும் - சீமான்

சென்னை: தங்கள் பெயர்களுக்குப் பின் சாதிப் பெயரை நடிகைகள் போட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டும். அப்படி சாதிப் பெயர் வைத்துள்ள நடிகைகள் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகி வரும் புதிய படம் ‘சிநேகாவின் காதலர்கள்'. இப்படத்தை பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் எழுதி, இயக்கியுள்ளார்.

இப்படத்தை தமிழன் டிவி உரிமையாளர் கலைக்கோட்டுதயம் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனர் சீமான், தயாரிப்பாளர்கள் கேயார், சிவா, சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சீமான் பேசும்போது, "இன்று வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகமாக உச்சரிக்கப்படுகின்றன. தமிழ் படங்களை எடுக்கும் நண்பர்கள் தயவுசெய்து ஆங்கில கலப்பு வசனங்கள் இல்லாமல் முழுக்க தமிழ் வசனங்கள் வரும்படி படத்தை எடுக்க முன் வரவேண்டும்.

மேலும், தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகளின் பெயருக்கு பின்னால் அவர்களின் ஜாதிப் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக நீக்கவேண்டும். இயக்குநர்கள் இதனை ஆதரிக்கக் கூடாது, பார்த்துக் கொண்டு மவுனமாகவும் இருக்கக்கூடாது," என்றார்.

இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் கீர்த்தி ஷெட்டி என்று போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரே நேரத்தில் 'தல-தளபதி' படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

ஒரே நேரத்தில் 'தல-தளபதி' படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறாராம்.

கௌதம் மேனன் அஜீத்தை வைத்து இயக்கும் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அஜீத் படத்திற்கு தான் தான் இசையமைக்கப்போவதாக அனிருத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் சிம்புவை வைத்து எடுத்து வரும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஒரே நேரத்தில் தல, தளபதி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்துள்ளது.

அஜீத்-கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரம் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க தற்போது அஜீத் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறார்.

 

தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்த முதல்வருக்கு நன்றி - இயக்குநர்கள் சேரன், கவுதமன்

தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்த முதல்வருக்கு நன்றி - இயக்குநர்கள் சேரன், கவுதமன்

சென்னை: மூன்று பேரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பு வந்த மறுநாளே அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என இயக்குநர்கள் சேரன், வ கவுதமன் ஆகியோர் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தின.

செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய் தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள்.

அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் வருவான் உயிரோடு என்ற நம்பிக்கையில் காத்திருந்த பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் கதறி அழுத அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை.

எத்தனை முறை நடந்தார், எத்தனை மைல் நடந்தார் என்பதை யார் அறிவார்... இரண்டு வருடங்களுக்கு முன்பு மூவருக்கும் தூக்கு உறுதி என கோர்ட்டும் மத்திய அரசும் உத்தரவிட்டபோது இந்த தாய் எப்படி துடித்தாள் என்பதை அருகில் இருந்து பார்த்தேன்...

கிட்டதட்ட மரணக்குழிக்கு அருகில் சென்று வந்திருக்கும் மூவரின் உயிரையும் மீட்டுகொண்டுவந்த அந்த தாய்க்கு முதல்வணக்கம்.

இதில் பங்கெடுத்த அனைத்து தமிழர்களுக்கும் தலைவர்களூக்கும் நன்றிகள்....
முக்கியமாக தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்து இனத்தின் மானம் காத்த மூவரின் உயிர்காத்த தமிழக முதல்வருக்கும் நன்றி!

-இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

அஜீத்தோடு அனுஷ்கா ஜோடி சேருவது டவுட்டாமே!!

சென்னை: கவுதம் மேனன் படத்தில் அஜீத்தும் அனுஷ்காவும் முதல் முறையாக ஜோடி சேரப் போவதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, 'இருங்க... அவசரப்பட வேணாம்.. அஜீத்துக்கு வேறு ஜோடி தேடிக்கிட்டிருக்கோம்," என்று அதே யூனிட்டிலிருந்து அவசரக் குரல் கேட்கிறது.

அஜீத்தோடு அனுஷ்கா ஜோடி சேருவது டவுட்டாமே!!

மார்ச் மூன்றாம் வாரத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. ஆனால் அதற்குள் அனுஷ்காவால் வரமுடியுமா என்று தெரியவில்லை.

காரணம் அவர் ருத்ரமா தேவி, பாஹூபலி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இரண்டுமே சரித்திரப் படங்கள். நல்ல சம்பளம் வேறு. அன்லிமிடட் கால்ஷீட்டை அள்ளி வழங்கியிருக்கிறார் இரு படங்களுக்கும்.

'ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களின் சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துவதால் அனுஷ்கா இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறாராம்.

ஆனால், ஹீரோயின் அஜித்தை விட படத்தில் கொஞ்சம் இளமையாகத் தெரிய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார் இயக்குநர் (அஜீத் இந்தப் படத்தில் டை வேறு அடிக்கிறார்... !).

இத்தனை சிக்கல் இருப்பதால் அனுஷ்கா இப்படத்தில் நடிப்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்துவிட்டது.

'வீரம்' படத்தில் அஜித்துடன் நடிக்க அனுஷ்காவைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தனர். கால்ஷீட் பிரச்னையால் அனுஷ்கா நடிக்க முடியவில்லை. இப்போதும் அதே சிக்கல்.

எதற்கும் இருக்கட்டுமே என இன்னொரு ஹீரோயினைத் தேடி வருகிறார்கள்.

 

ஹர்மானுடன் காதலில் விழுந்த ”அழகுபிசாசு” பிபாசா பாசு ...

மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசு ஜான் ஆபிரகாமுடன் உறவை முறித்துகொண்ட பின்பு தற்போது நடிகர் ஹர்மான் பவேஜா உடன் புதிய உறவை ஏற்படுத்தி கொண்டுள்ளார். அதை பகிரங்கமாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதுவரையில் அவர் இந்த உறவை அப்பட்டமாக வெளியில் தெரிவிக்காத நிலையில் ஹர்மான் இந்த அழகுப் புயலுடன் காதலுற்று இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஹர்மான் "எங்களுடைய குணாதிசியங்கள் ஒத்துப்போகின்றன.இருவருமே குடும்பத்தினரையும்,நண்பர்களையும் மதிக்க கூடியவர்கள்.மிகவும் எளிமையான,நேர்மையான பெண் அவர்.சிறந்த அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்.உடல் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளில் இருவருமே ஒரே கருத்தை கொண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

ஹர்மானுடன் காதலில் விழுந்த ”அழகுபிசாசு” பிபாசா பாசு ...

இதனைப் பற்றி பத்திரிக்கை சந்திப்பில் பிபாஷா விடம் கேட்டபோது புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.அதன் பின்னர் அவர் தான் ஒரு நல்ல துணைக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறி இருந்தார்.

ஆனால்,நேற்று இரவு அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ஹர்மானுக்கும்,தனக்கும் இடையிலான காதலை ஒத்துக்கொண்டுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் பிபாஷா, "கடைசியில் நான் எனக்கான துணைவரை கண்டு கொண்டு விட்டேன்.ஆம்,நானும்,ஹர்மானும் இணையப் போவது உண்மைதான்.எனக்காக இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி"என கூறியுள்ளார்.

பத்திரிக்கை செய்திகளின் படி பிபாஷா வும்,ஹர்மானும் இந்த வருடத்தில் திருமணம் செய்து கொள்வார்கள் என தெரிய வந்துள்ளது.

 

காதலர் கணவரை பேருந்து நிலையத்தில் கண்ணீருடன் தேடி அலைந்த நடிகை

சேலம்: காதலித்து திருமணம் செய்த நடிகையை அவரது கணவர் சேலம் பேருந்து நிலையத்தில் தனியாக விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் பிரியா(23). அவர் நடித்துள்ள நீ உன்னை காதலி மற்றும் ரயில் நகரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. அவர் கோவையைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்ரடரான மணிகண்டன்(28) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் தம்பதி சூளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அவர்களின் பெற்றோர்களை அழைத்து மணிகண்டன், பிரியாவுக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து மணிகண்டன் தனது மனைவியை தானே அழைத்துச் செல்வதாக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் பிரியாவுடன் சேலம் அருகே உள்ள குள்ளப்பட்டியில் இருக்கும் தனது அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அன்றைய தினம் தங்கிவிட்டு நேற்று காலை அவர்கள் இருவரும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் இரண்டு பேரும் வேறு வேறு இருக்கைகளில் பயணித்தனர். புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது தான் மணிகண்டன் மாயமானது பிரியாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

 

பி வாசுவா.. அவர் யாருன்னே தெரியாதே..! - அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்

மும்பை: பி வாசுவா.. யார் அவர்... அவர் படத்தில் நான் நடிப்பது எனக்கே தெரியாத செய்தி... என்று கூறி அதிர வைத்துள்ளார் நடிகை பி வாசுவா.. அவர் யாருன்னே தெரியாதே..! - அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா ராய்  

இந்த செய்தியைப் படித்த ஐஸ்வர்யா ராய் டென்ஷனாகிவிட்டார்.

உடனடியாக மீடியாவிடம் மறுப்பும் தெரிவித்துவிட்டார். அதுவும் எப்படி... படு காட்டமாக!

"இந்த செய்தியை வெளியிட்டுள்ள இயக்குநர் யாரென்றே எனக்குத் தெரியாது. நானெப்படி இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியும்? என்னிடம் 60க்கும் மேற்பட்டோர் கதை சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரா என்று கூட நினைவில்லை. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. அந்த மாதிரி ஒரு படத்தில் நான் நடிக்கவே இல்லை," என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

அவரது பிஆர்ஓவும் பி வாசுவின் பிரஸ் ரிலீஸுக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பி வாசுவிடம் இதுகுறித்துக் கேட்டால், 'ஐஸ்வர்யாவை அணுகியது உண்மை. கதை அவருக்குப் பிடித்திருந்தது," என பழைய பிளேட்டையே திருப்பிப் போட்டுக் காட்டுகிறார்.

ரஜினி போன்ற சிகரங்களுடன் பணியாற்றிய வாசுவுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள்!

 

நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு

மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக மீண்டும் ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து வெளியே வந்தார்.

நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு

இந்நிலையில், அவரது சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எஞ்சிய மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனைக்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சரண் அடைந்த அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் மருத்துவ சிகிச்சைக்காக 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். அந்த பரோல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிவடைந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவுக்கு இதயம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது.

தனது மனைவியின் சுகவீனத்தை கருத்தில் கொண்டு அவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக தன்னை ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அவரது மனு ஏற்கப்பட்டு, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தன் மனைவியை அவர் அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதியுடன் அவரது பரோல் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து மீண்டும் பரோல் நீட்டிப்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், மான்யதாவின் உடல்நிலையில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகையால் தனக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என்று 3வது முறையாக புனே மண்டல கமிஷனரிடம் மனு செய்தார்.

அந்த மனுவின்பேரில், சஞ்சய் தத்திற்கு மீண்டும் ஒரு மாதம் அதாவது மார்ச் 21ம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!

சென்னை: முதல் சென்னை சர்வதேச குறும்படப் போட்டி பிப்ரவரி 20 முதல் 23 வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் படத்துக்கு ரூ 40000 பரிசு வழங்கப்படுகிறது.

சென்னை திரைப்பட கல்விக் கழகமும் சென்னை நிர்வாகவியல் அமைப்பும் இணைந்து இந்த குறும்படப் போட்டியை நடத்துகின்றன.

சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!

சர்வதேச அளவிலான குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் படங்கள் என மூன்று பிரிவுகளில் குறும்படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இவை கடந்த பிப்ரவரி 2012லிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.

போட்டிக்கான நடுவர்களாக நடிகை ரோகிணி, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், நடிகர் அபிஷேக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள 19 நாடுகளிலிருந்து 350 படங்கள் வந்துள்ளன.

சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்தப் போட்டி நாளை முதல் வரும் பிப்ரவரி 23-ம் தேதி வரை நடக்கிறது.

போட்டியில் வெல்லும் படத்துக்கு முதல் பரிசாக ரூ 40000 மும், இரண்டாம் இடம் பிடிக்கும் படத்துக்கு ரூ 20000மும், சிறப்பு நடுவர் விருது பெறும் படத்துக்கு ரூ 20000மும் வழங்கப்பட உள்ளது.

சென்னை சர்வதேச முதல் குறும்படப் போட்டி.. முதல் பரிசு ரூ 40000!

படங்களை ரஷ்ய கலாச்சார மைய அரங்கிலும், வடபழனி நூறடி சாலையில் உள்ள எஸ்ஆர்எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிட்யூட் அரங்கிலும் திரையிடுகின்றனர்.

விழாவின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கின்றன.