இந்த தொகுப்பாளினிகளோட ஒரே தொல்லையப்பா!

படத்தின் ஆடியோவிழாவிற்கு வரும் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளின் அலம்பல் தாங்க முடியலைப்பா என்று சொல்லும் அளவிற்குத்தான் இன்றைக்கு பெரும்பாலான தொகுப்பாளினிகள் நடந்து கொள்கின்றனராம்.

ஐ பட ஆடியோ வெளியீட்டுவிழாவில் இதை நன்றாகவே உணர்ந்தனர் பட தயாரிப்பாளர்கள். அதேபோல மற்றொரு சம்பவம் இன்னொரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரங்கேறியுள்ளதாம்.

பிரபல டிவியின் அலுவலகம் தொடரில் நடிக்கும் நடிகை ஒருவர் பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகப் போயிருக்கிறார். அவருடன் சென்றவரோ படு கவர்ச்சியாகப் போனாராம்.

அது மட்டுமல்லாது வந்த பிரபலங்களுக்கு பூங்கொத்து கொடுத்தது மேற்படி தொகுப்பாளினிகள்தானாம். படத்தயாரிப்பாளர்கள்தான் பூங்கொத்து கொடுப்பார்கள். வரவேற்று மேடைக்கு அழைத்து வருவார்கள். ஆனால் இந்த தொகுப்பாளிகள் செய்த செயல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாம் தயாரிப்பாளருக்கு.

பிரபலங்கள் மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கும் போதெல்லாம் கிண்டல் அடித்து பேசி சிரித்தாராம் அலுவலகம் நடிகை. அதோடு மட்டுமல்லாது ஆடியோ சிடியை வெளியிடும் போது நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் பிரபலங்களின் அருகில் நின்று போஸ் கொடுத்துள்ளனர். இதுதான் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திவிட்டதாம்.

இது என்ன வந்த வேலையை விட்டு வேண்டாத வேலை பார்த்துக்கிட்டு!இந்த தொகுப்பாளினிகளோட ஒரே குஷ்டமப்பா....... என்று பேசிக்கொண்டனர் நிகழ்ச்சி வந்தவர்கள்.

 

தணிக்கை செய்த பின் தடையில்லை... கத்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

மதுரை: ஒரு படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தலையிட முடியாது என்று கூறி, 'கத்தி' படத்துக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள 'கத்தி' படத்தை தயாரித்திருக்கிறது லைக்கா நிறுவனம். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடாக 22-ம் தேதி வெளிவருகிறது.

தணிக்கை செய்த பின் தடையில்லை... கத்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

இதனிடையே, 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' ஆகிய இரு படங்களும் தமிழர் உணர்வை மீறி வெளியாவதால், அவற்றுக்குத் தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், "தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின், ஒரு படத்தைத் தடை செய்ய முடியாது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

 

'லைகா ஹேப்பி': கத்தி எல்லா ஏரியாவும் விற்றுத் தீர்ந்தது!

எத்தனையோ பிரச்சினைகள் சுற்றிச் சுழன்றடித்தாலும், அசராமல் அடுத்த அடியை எடுத்து வைத்தபடி உள்ளனர் கத்தி தயாரிப்பாளர்கள்.

இந்தப் படத்தை எந்த அரங்கிலும் வெளியிட விட மாட்டோம் என்று பல அமைப்புகள் முழங்கியபடி இருக்க, சத்தமின்றி படத்தை பெரும் விலைக்கு அனைத்து ஏரியாக்களிலும் விற்றுவிட்டனர் லைகா நிறுவனத்தினரும் அய்ங்கரன் நிறுவனத்தினரும்.

தமிழகத்தின அனைத்து ஏரியாவிலும் உள்ள திரையரங்குகள் எம்ஜி எனும் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.

படத்தின் கேரள உரிமையை தமீம் பெற்றுள்ளார். தெலுங்கு உரிமை தாகூர் மதுவுக்குக் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் கோல்டி பிலிம்ஸ் கத்தியின் உரிமை பெற்றுள்ளது.

'லைகா ஹேப்பி': கத்தி எல்லா ஏரியாவும் விற்றுத் தீர்ந்தது!

கனடாவில் 20 அரங்குகள், மலேசியாவில் 120 அரங்குகள், இங்கிலாந்தில் 70 அரங்குகள் என பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் சர்வதேச அரங்குகளில் வெளியாகிறது கத்தி.

வளைகுடா நாடுகள், இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என தமிழர் அதிகம் வாழும் நாடுகளில் மேலும் அதிக அரங்குகளில் வெளியாகிறது கத்தி.

 

இது சிரிப்புக் கப்பல்... உதவியாளர் படத்துக்கு ஷங்கரின் பாராட்டு

கப்பல் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் சிரித்து மகிழும் வகையில், முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக வந்துள்ளது என இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

தனது கனவுப் படமான ஐ-யின் டப்பிங் பணியில் மும்முரமாக உள்ள ஷங்கர், மீண்டும் தனது எஸ் பிக்சர்ஸ் பேனருக்கு உயிர் கொடுக்கிறார்.

இது சிரிப்புக் கப்பல்... உதவியாளர் படத்துக்கு ஷங்கரின் பாராட்டு

தன் உதவியாளர் கார்த்திக் இயக்கியுள்ள ‘கப்பல்' படத்தை எஸ் பிக்சர்ஸ் பேனரில் வெளியிடுகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்துள்ளார் ஷங்கர். கப்பல் படம் சிரிப்பு கலவரமாக வந்துள்ளது என்றும், துவக்கம் முதல் படம் முடியும் வரை பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் விதத்தில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் இந்தப் பாராட்டு படத்து பெரிய விளம்பரமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ், அர்ஜூனன், வெங்கட் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

செங்கோட்டையில் திரிஷாவுக்கு ஓட்டு கேட்ட ஜெயம் ரவி! அஞ்சலியுடன் மோதல்!!

செங்கோட்டை: போடுங்கம்மா ஓட்டு... என்று செங்கோட்டையில் நடிகர் ஜெயம் ரவியும், நடிகை அஞ்சலியும் ஓட்டு வேட்டையாடினர். இது நிஜமான தேர்தல் பிரச்சாரம் இல்லை. படப்பிடிப்புக்கான தேர்தல் பிரச்சாரம்.

இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

நடிகர் ஜெயம்ரவி, நடிகைகள் திரிஷா, அஞ்சலி ஆகியோர் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு தென்காசி, செங்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.