மருமகளுக்கு அடங்கித்தான் போகணும்!… இமான் அண்ணாச்சியின் காமெடி!

Iman Annachi S Kenya Visit

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊராக சென்று ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தைகளை கேட்டு வாங்கும் இமான் அண்ணாச்சி தன்னுடைய சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிக்காக கென்யாவிற்கு சென்று புது கெட்டப்பில் கலக்கினார்.

இந்த வாரம் சன்டிவியில் ஞாயிறன்று காலை கென்யாவில் உள்ள தமிழர்களை வைத்து அவர்களின் தமிழறிவை சோதித்தார் இமான்.

முதலில் திருக்குறள் கேட்ட அவர் அதன் விளக்கத்தையும் கேட்டார். ஒரு தமிழர்,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

என்று குறள் சொன்ன அவர், அதற்கு சொன்ன விளக்கம்தான் அதிரவைத்தது.

அதாவது எவ்வளவு பெரிய மாமியாரா இருந்தாலும் கடைசியில மருமகளுக்கு அடங்கித்தான் போகணும் என்றார். இதை அவர் தெரிந்து சொன்னாரா, இல்லை காமெடிக்காக சொன்னாரா? இமான் அண்ணாச்சிக்குத்தான் வெளிச்சம்.

அதற்குப்பிறகு அவர் சந்தித்த இரண்டு பேரும் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தை மட்டும் தவறாக சொன்னார்கள். கடைசியில் ஒருவர் திருக்குறளை சரியாக சொல்லி விளக்கத்தையும் சரியாக சொன்னார்.

அதெல்லாம் சரி அண்ணாச்சியின் சன் டிவி புகழ் படவாய்ப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறதாமே. தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். இந்த படங்களில் இவருக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 50 ஆயிரமாம். இது தற்போதைய சம்பளம் தான் படம் ஹிட்டாகிவிட்டால் ஆயிரங்களை லட்சமாக்க முடிவு செய்திருக்கிறாராம்.
ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர் அண்ணாச்சி, எவ்ளோ வரி கட்டணும்.. சரியான பதில் சொல்வாரா? இமான் அண்ணாச்சி?

 

சுமார் மூஞ்சி குமார்... இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!!

Itharkagathaane Aasaipattai Balakumara

ரொம்ப நாளைக்கு முன் இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் வந்தது நினைவிருக்கலாம். பாலகுமாரன் தன் சினிமா அனுபவங்களை அதில் எழுதியிருந்தார்.

இப்போது அந்தக் கட்டுரைத் தலைப்பை மட்டும் கடன் வாங்கி புதிதாக ஒரு படத்தை உருவாக்குகிறார்கள். இதில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் சேதுபதி. சுமார் மூஞ்சி குமார் என்பது அவர் பாத்திரத்தின் பெயர்!!

ஜீவாவை வைத்து ரௌத்திரம் என்ற சீரியஸ் படத்தை எடுத்த கோகுல், 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?' படத்தை முழுநீள நகைச்சுவையாக உருவாக்குகிறார். நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையே காட்சிப்படுத்தவிருக்கிறாராம்!

சுப்பிரமணியபுரம் சுவாதி, அட்டகத்தி நந்திதா நாயகிகளாக நடிக்கின்றனர். கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் பரோட்டா சூரி நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு வசனகர்த்தா... பாடலாசிரியர் மதன் கார்க்கி. இசை சித்தார்த் விபின்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தைத் தயாரித்த விஎஸ் ராஜ்குமார்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

 

கார்த்திகா ஆடு மேய்ச்ச கதை!

Karthika Takes Training As Sheppard   

அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்துக்காக தான் ஆடு மேய்த்த கதையைத்தான் பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்கிறாராம் நடிகை கார்த்திகா.

அலைகள் ஓய்வதில்லை புகழ் ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. ‘கோ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தன் அம்மாவை அறிமுகம் செய்த அதே பாரதிராஜாவின் இயக்கத்தில் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இதில் ஆடு மேய்க்கும் கிராமத்துப் பெண் வேடம் அவருக்கு. முன் பின் பழக்கமில்லாத வேலை என்றாலும், ஆடு மேய்க்க பயிற்சி எடுத்து நடித்தாராம் கார்த்திகா (நல்ல கோர்ஸா இருக்கே!)

படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுமே, ஆடுகளுடன் பழக்கம் இருக்கிறதா என்று கேட்டாராம் பாரதிராஜா. அதற்கு கார்த்திகா, ஆடுகளைத் தொட்டதுகூட கிடையாது என்று பதில் சொல்ல... "யாரங்கே... இந்தப் பொண்ணுக்கு ஆடு மேய்க்கும் பயிற்சியை ஒரு நாலு வாரத்துக்கு கொடுங்க..." என்றாராம்.

ஆடுகளை எப்படி மந்தையாக அழைத்துச் செல்வது, விசில் அடித்து ஆடுகளுக்கு எப்படி சைகை கொடுப்பது என அவர்களிடம் விலாவாரியாகக் கற்றுக் கொண்டாராம் ராதா மகள்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்கிறதை விட ஆடுமேய்ப்பது ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சிக்கிட்டன். ஆனால் ரொம்ப இயல்பாக வந்திருப்பதாக இயக்குநர் கூறியபோது, என் கஷ்டத்துக்கு பலன் கிடைச்ச மாதிரி உணர்ந்தேன்," என்றார்.

 

சின்னத்திரைக்கு போன சாயாசிங் சினிமாவில் ரீ என்ட்ரி…

Chaaya Singh Give Reentry Into Cinema

திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஜொலிக்காமல் போகவே ஒரு சில படத்திலேயே விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டிய துரதிருஷ்டத்திற்கு தள்ளப்பட்டார்..

அப்புறம் அதுவும் செட் ஆகவில்லை. ஒரு பாடலுக்கு ஆடினார். சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊர் போன சாயாசிங் நாகம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்டர் ஆனார். அங்கும் என்ன ஆனதோ தெரியவில்லை பாதியிலேயே சீரியலில் இருந்து கழன்று கொண்டார். தன்னுடன் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் சாயாசிங் சத்யம் ராஜசேகரின் 'வாலிபன்' படத்தில் மிக முக்கியமான அழுத்தமான ரோல் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதாம். இவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கதிர்வேலன் காதலி' படத்திலும் செமத்தியான ரோல் என்கிறார்கள்.

எப்படியோ செகண்ட் இன்னிங்ஸ்லாவது சரியாக அமையுமா என்று பார்க்கலாம்.

 

பவர் ஸ்டாரா... யாரந்த ஆளு.. அவர் கூட நான் ஏன் ஆடணும்? - லட்சுமி ராய்

Lakshmi Rai Denies Dance With Power Star

பவர் ஸ்டார் சீனிவாசனை எனக்கு யாரென்றே தெரியாது. அவருடன் நான் ஏன் நடிக்க வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை லட்சுமி ராய்.

சமீப நாட்களாக இந்த சீனிவாசன் தொல்லை தாங்கவில்லை எனும் அளவுக்கு மேடைகளில் அலப்பறை செய்து வருகிறார் பவர் ஸ்டார்.

இவரை சமீபத்தில் ஒன்பதுல குரு எனும் படத்தில் ஒரு பாடலுக்கு கையைக் காலை ஆட்டி காமெடி பண்ண அழைத்தனர்.

உடனே அதற்கு ஒரு தனி பிரஸ் மீட் வைத்த பவர், "ஒரு படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிராயைக் கேட்டிருந்தேன். அவரோ மறுத்துவிட்டார். இப்போது பாருங்கள் அதே லட்சுமி ராயுடன் ஜோடியாக ஆடுகிறேன்," என்று பெருமையாக அடித்துவிட்டார்.

இது உண்மையா என்று லட்சுமிராயிடம் கேட்டால், ரொம்ப கேவலமாக ஒரு லுக் விட்டுவிட்டு, 'பவர் ஸ்டாரா... அந்த ஆள் யார்னுகூட எனக்குத் தெரியாது. ஒரு நாள் ஒன்பதுல குரு ஷூட்டிங், ஒருத்தரைக் கூட்டிட்டு வந்து அறிமுகப்படுத்தினாங்க. அப்ப அவர் பேரைக்கூட நான் கவனிக்கல. அப்புறம்தான் அவர் பேர் சீனிவாசன்னாங்க. அவர் கூட நான் ஏன் டான்ஸ் ஆடப் போறேன்...", என்றார்.

 

ஆதிபகவன் பெயர் மாற்றியது ஏன்? - அமீர் அறிக்கை

Ameer S Statement On Aadhi Bhagavan Release

100-க்கும் மேற்பட்ட புகார்கள் தரப்பட்டதால், சில குழுக்களைத் திருப்திப் படுத்துபம் நோக்கில் ஆதிபகவன் படத்தின் பெயரை மாற்றியுள்ளேன். ஏ சான்றிதழ் பெறவும் ஒப்புக் கொண்டேன். ஆனால் இது குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் அளவுக்கு உள்ள படம் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

அமீரின் ஆதி பகவன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆதிபகவன் படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக ஏற்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக கமிஷனர் அலுவலகம், முதல்வரின் தனிப்பிரிவு போன்றவற்றுக்கு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக எனது ஆதிபகவன் படம் அமீரின் ஆதி - பகவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஏ சான்றிதழுடன் வெளியாகிறது.

ஆரோ 3 டி ஒலி தொழில்நுட்பத்தில், 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

சில குழுக்களைத் திருப்திப்படுத்த இந்தப் படம் ஏ சான்றிதழுடன் இப்போது வெளியாகிறது. ஆனால் இது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய தரமான கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

 

'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்' - இது கவிஞர் வாலியின் பாராட்டு!

Poet Vaali Praises Young Music Director Taj Noor

கவிஞனின் வாக்கு பலித்துவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் ரொம்பவே குஷியாக இருக்கிறார் தாஜ் நூர். வம்சம் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.

இப்போது மல்லுக்கட்டு, கலியுகம், சுவாசமே, அடித்தளம், ஞானக்கிறுக்கன், அதுவேற இதுவேற என அரை டஜன் படங்களுக்கும் மேல் இசையமைத்துக்கொண்டிருப்பவர்.

ஒரு பாடல் பதிவின்போது, இவரது ட்யூனைக் கேட்டுத்தான் கவிஞர் வாலி 'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்..' என்று பாராட்டியுள்ளார்.

தாஜ் நூருடன் ஒரு சந்திப்பு...

நாள்தோறும் இசையமைப்பாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்வியோடு சந்திப்பைத் தொடங்கினோம்.

மியூசிக் என்பது ஏதோ தின்பண்டம் அல்ல, நாலு பேர் கையை வைத்தவுடன் தீர்ந்து போவதற்கு... அது கடல். யார் வேண்டுமானாலும் மூழ்கலாம். முத்தெடுக்கலாம். இசையில் புதுசு புதுசாக எதையாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. சமீபத்தில் கூட கானா பாலாவை பாட வைத்திருந்தேன். வழக்கமாக கானா பாடல் என்றால் அதற்கென சில இன்ஸ்ட்ரூமென்டுகளை மட்டுமே பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நான் அவரை கானா ஸ்டைலில் பாட வைத்து அதன் பின்னணியில் மேற்கத்திய இசையை மிக்ஸ் பண்ணினேன். அந்த பாட்டு புதிதாக வந்திருக்கிறது.

இன்றைய பாடலாசிரியர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு இசையமைப்பாளரிடமிருந்து வாய்ப்புகள் வாங்குவதாக கூறப்படுகிறதே?

எனக்கு அப்படி தோன்றவில்லை. அவரவருக்கு என்று தனித்துவம் இருக்கிறது. அறிவுமதி, யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, மோகன்ராஜ் என்று அத்தனை பேருடனும் நான் இணைந்து இசையை தருகிறேன்.

இவர்களை தவிர தமிழ்சினிமாவின் லெஜன்ட்டுகளான வாலி அவர்களோடும், வைரமுத்து அவர்களோடும் கூட பணியாற்றுகிறேன். அது தனி அனுபவமாக இருக்கிறது.

ஒரு முறை வாலி சார் என் ட்யூனை ரசித்துவிட்டு 'யோவ்... நீ நூர் இல்ல. கோகினூர்' என்றார். எனக்கு அப்படியே சிலிர்த்துவிட்டது. எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் அது! இவர்களை தவிர நிறைய புதியவர்களுக்கும் அவ்வப்போது வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா படங்களிலும் ஒரு குத்துப்பாட்டு வந்துவிடுகிறதே?

கானா, வெஸ்டர்ன், மெலடி மாதிரி குத்துப்பாட்டும் இசையின் ஒரு பிரிவாகிவிட்டது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் டைரக்டரின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் ஒரு இசையமைப்பாளரின் கடமை அல்லவா? அதனால் நான் குத்துப்பாட்டுக்கு எதிரியல்ல. குத்துப்பாட்டோ, தத்துவ பாட்டோ? அதுவும் இசைதானே?

டைரக்டரிடம் கதை கேட்கும்போதே மனசுக்குள் ட்யூன் வந்துவிடுமா?

அப்படி ஒரு சில கதைகளுக்கு நம்மை தூண்டுகிற சக்தி இருக்கிறது. சமீபத்தில் கூட ஒற்றன் இயக்குனர் இளங்கண்ணன் அவர்கள் என்னிடம் கதை சொன்னார். இது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'அடித்தளம்' படத்திற்காக. கட்டிட தொழிலாளர்களின் வாழ்வை அதன் உண்மை மீறாமல் சொல்கிற படம் இது. வருஷம் முழுக்க உழைத்து ஒரு கட்டடித்தை கட்டுகிற கொத்தனார், அந்த வீட்டுக்கு உரிமையாளர் குடிவந்த பின் உள்ளேயே நுழைய முடியாது. அவ்வளவு ஏன்? அவ்வளவு உரிமையாக அந்த தெருவில் சொந்த வீடாக நினைத்து வாழ்ந்த அந்த கட்டிட தொழிலாளியின் குடும்பம் அதன்பின் அங்கு அதே உரிமையோடு நடமாடக் கூட முடியாது. இந்த வலியை அவர் சொல்லும்போதே எனக்குள் ட்யூன் வந்தது.

அடுத்த முயற்சி?

அறிவுமதி அண்ணன் எழுத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தாய்பால்' ஆல்பம்தான்! தமிழ், தமிழர்கள் பற்றி மட்டுமல்ல, 'ஆற்று மணலை அள்ளாதே... அடுத்த தலைமுறை கொல்லாதே' என்று சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை அந்த பாடலில் சொல்லியிருக்கிறார் அவர். இந்த பாடலை முழுமையாக உருவாக்கி உலக தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதுதான் என் ஆசை. இப்பவே கனடா, அமெரிக்கா என்று இந்த பாடல் வெளியீட்டு விழவை எங்கள் நாட்டில்தான் நடத்த வேண்டும் என்று அழைக்கிறார்கள்.


 

ஹிம்மத்வாலாவில் தமன்னாவின் கங்னம்

Tamannaah S Gangnam Style Himmatwala   

கொரிய பாப் பாடகர் ‘சை'யின் கங்னம் ஸ்டைல் நடனம் உலகையே ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நடனம் யு டுயூப்பில் வெளியாகி நூறு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களோ, ரியாலிட்டி ஷோ நாயகர்களோ இதை ஆடாதவர்கள் இல்லை. இந்த ஸ்டைல் நடனத்தை தமன்னா இந்திபடமான ஹிம்மத்வாலா படத்தில் ஆடியிருக்கிறாராம்.

ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா' படம் இந்தியில் மீண்டும் ரீமேக் ஆகிறது. இதை சாஜித் கான் இயக்குகிறார். ஸ்ரீதேவி நடித்த வேடத்தை தமன்னா ஏற்று நடிக்கிறார். ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் தமன்னா ஆடும் ஆட்டத்தின்போது கங்னம் ஸ்டைல் நடன அசைவு வைக்கப்பட்டது. இது பற்றி தமன்னாவிடம் கேட்டபோது"முதலில் குறிப்பிட்ட ஸ்டைலில் நடன அசைவு வைப்பதுபோல் ஐடியா எதுவும் இயக்குனருக்கு இல்லை. திடீரென்று அந்த நடன அசைவு இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். வீடு திரும்பிய நான் அதேபாணியில் உள்ள ஆட்டங்களை வீடியோவில் போட்டுபார்த்து ஆடிப்பார்த்தேன். அது சரியாக வந்தது. மறுநாள் ஷூட்டிங்கில் அந்த ஸ்டைலில் நடனம் ஆடினேன். ‘

‘ஹிம்மத்வாலா' தவிர இந்தியில் வேறு படம் இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறிய தமன்னா, தமிழில் அஜீத் ஜோடியாக ‘சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதுதவிர தெலுங்கில் சில படங்கள் நடிக்கிறேன்."என்றார்

கங்னம் ஸ்டைல் நடனத்தை தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு பாடலில் ஆடுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முத்தம் கொடுக்க முயல்வதாக பயந்து கருணாஸை தள்ளிவிட்ட நடிகை

Actress Pushed Away Karunas During Romance Scene   

காதல் காட்சியில் நடித்தபோது, நெருக்கத்தில் கருணாஸைப் பார்த்து பயந்துபோய் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டாராம் நடிகை ஸ்வேதா பாசு.

சந்தமாமா படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது.

கருணாஸ், ‘சந்தமாமா' என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்வேதாபாசு நடிக்கிறார்.

இந்தப் பட ஷூட்டிங்கின்போது, ஒரு காட்சியில் ஸ்வேதா காதில் கருணாஸ் ரகசியம் சொல்வது போல் படமாக்கினர்.

அப்போது திடீரென நடிகை ஸ்வேதா பாசு கருணாஸை தள்ளிவிட்டார். இதனால் படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாக ஓடினர்.

ஏம்மா அவரைத் தள்ளிவிட்டே... என்று இயக்குநர் ராதாகிருஷ்ணன் நடிகையிடம் கேட்டார்.

அதற்கு, 'இவர் ரொம்ப நெருக்கத்துல வந்தார். முத்தம் கொடுக்கத்தான் வருகிறார் என பயந்து போய் தள்ளிவிட்டேன்," என்றார்.

உடனே கருணாஸ்... அய்யய்யோ... டைரக்டரே சொன்னாலும் நான் முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன், நீ பயப்படாதே என்று போட்டாரே ஒரு போடு!

இது உலகமகா நடிப்புடா சாமி!!

 

கமலுக்கு ஆதரவு தந்தால் தப்பா.. பாரபட்சமாக நடக்காதீர்கள்.. நடிகர் சங்கத்துக்கு விஷால் சூடு

Vishal Slams Nadigar Sangam

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் மற்ற நடிகர் நடிகையர்ஆதரவு தெரிவித்தது போல நானும் தெரிவித்தேன். இது தவறா...குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஆதரவு தெரிவிக்காமல், வெளிப்படையாக,பாரபட்சமின்றி நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கிய, விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில், சிக்கல் ஏற்பட்டபோது, நடிகர், நடிகைகள் பலர், கமலுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரச்னையில், நடிகர் சங்கம் ஆதரவு தெரிவிக்கவில்லை என அப்போது புகார் எழுந்தது. உண்மையும் அதுதான். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரோ அல்லது நிர்வாகிகளோ பகிரங்கமாக கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சரத்குமாரோ,கமலை சந்திக்கவே இல்லை.

இந்நிலையில், பேஸ்புக்கில், விஸ்வரூபம் படப் பிரச்னையில், நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு உதவவில்லை என விஷால் கருத்து தெரிவித்தார். இதற்கு விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் கடிதம் அனுப்பியது.

இதற்கு பதிலளித்து, விஷால் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் காரசாரமாக கூறியிருப்பதாவது:

நமது நடிகர் சங்கத்தின் மூத்த நடிகர் கமல்ஹாசனின், விஸ்வரூபம் படம் தொடர்பாக, எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை, அவருக்கு ஆதரவாக, இணைய தளத்தில் தெரிவித்திருந்தேன். என்னைப் போலவே, பல நடிகர்களும் கருத்து வெளியிட்டனர்.

என் கருத்தில் தவறு இல்லை. நடிகர் சங்க உறுப்பினர்களை, நான் விமர்சிக்கவில்லை. விஸ்வரூம் பட பிரச்னையில், கமலுக்கு ஆதரவாக இருந்தோம். ஆனால், நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தை கூட்டியோ, அவசர பொதுக்குழு கூட்டத்தை கூட்டியோ, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, கமலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நம் சங்க செயல்பாடுகள் மற்றும் வழக்குகள் குறித்து, பல உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். அது போல், நானும் என் கருத்தை தெரிவித்துள்ளேன். நம் சங்கத்தின் சார்பில், இளம் நடிகர்கள், சி.சி.எல்., கிரிக்கெட்டில் பங்கேற்று, பிரதிபலன் பாராமல் விளையாடினோம். அதன் மூலம் வந்த வருவாயை, நலிந்த நடிகர்களுக்கு பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால், நான் நடித்து, சமீபத்தில் வெளியான, சமர் படத்தில், எனக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை பெறுவதற்கு, நான் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், எனக்கு எந்தவிதமான முழுமையான உதவியும் சங்கம் மூலம் செய்யப்படவில்லை.

என் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, என்னை போன்ற இளம் நடிகர்களை புண்படுத்தாமல், சங்கச் செயல்பாடுகளை சங்க உறுப்பினர்களுக்கு ஆதரவாகவும், சங்கத்தை குறிப்பிட்ட சில நபர்களுக்கு ஆதரவாக மட்டும் நடத்தாமல், வெளிப்படையாக செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று விஷால் கூறியுள்ளார்.

விஷாலின் இந்த சூடான,அதிரடியான கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில்வருகிற 28ம் தேதி விவாதிக்கப்படவுள்ளதாம்.

 

துப்பாக்கிக்கு விஜய்க்கு எவ்ளோ கொடுத்தாங்க? ரீமேக்கில் அகஷய் குமாருக்கு ரூ.50 கோடி

Akshay Kumar Gets Rs 50 Crore Thuppaki Remake

மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கில் நடிக்க அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசியுள்ளார்களாம்.

ஏ.ஆர். முருகதாஸ் விஜய், காஜல் அகர்வாலை வைத்து எடுத்த படம் துப்பாக்கி. துப்பாக்கி ரிலீஸாகி நேற்றுடன் 100 நாட்கள் முடிந்துள்ளது. இந்நிலையில் முருகதாஸ் துப்பாக்கியை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அங்கு விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.

நம்ம விஜய்க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய் குமாருக்கு ரூ.50 கோடியை சம்பளமாக பேசியுள்ளனர். இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் மூவீஸ் தயாரிக்கிறது.

என்ன முருகதாஸ் அக்ஷய்க்கு ரூ.50 கோடி சம்பளமாமே என்று கேட்டதற்கு அப்படியா அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகருக்கும் இடையே உள்ள விஷயம். இதில் என் பங்கு எதுவும் இல்லை என்றார்.