ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்த நடிகர் : ரசிகர்கள் கோபம்

Actor criticized AR Rahman

சென்னை: ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர். ஆனால், அவர் இசையில் பாடல் வரிகளை கேட்க முடியவில்லை என்றார் கிரிஷ் கர்னாட். இதற்கு ரகுமான் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவர் கிரிஷ் கர்னாட். பல்வேறு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் புத்தகங்களும் எழுதி இருக்கிறார். இவர் சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமானை விமர்சித்தார்.

மும்பையில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசும்போது,'ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர். அவரது இசை கோர்ப்பு அழகும், அதிக சக்தியுடனும் இருக்கும். ஆனால் கடைசியில் ஒன்று மட்டும் மிஸ்ஸாகிறது. அதுதான் பாடல் வரிகள்' என்றார். கிரிஷ் கர்னாடின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அவரது பேச்சை கேட்ட ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் இணைய தளங்களில் கிரிஷ் கர்னாடுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 'ரகுமான் எப்போதுமே பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் தருபவர். இது எப்படி கிரிஷ் கர்னாடுக்கு தெரியாமல்போனது' என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
 

ரஜினியை இயக்க அனுபவம் போதாது : ஐஸ்வர்யா

Experience is not enoughto operating Rajini  : Aishwarya சென்னை: 'ஒரு படம் மட்டுமே இயக்கிய எனக்கு அப்பா ரஜினியை இயக்க அனுபவம் போதாது' என்று மகள் ஐஸ்வர்யா கூறினார். தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கியதுடன், செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஐஸ்வர்யா. இவர் கூறியதாவது: நான் ரஜினியின் மகளாக இருக்கலாம், தொழில் முறையில் அவர் நடிகர். எந்தவொரு படத்தில் நடிப்பதாக இருந்தாலும் முதலில் அவர் அதை ஏற்க வேண்டும். 'ரஜினியை வைத்து படம் இயக்குகிறீர்களா?' என்கிறார்கள். அவருடன் பணியாற்றுவதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. ஒரு படம்தான் இயக்கி இருக்கிறேன். வீட்டில் இருக்கிறார். கால்ஷீட் ப்ரியாக வைத்திருக்கிறார் என்பதால் அவர் என்னுடன் பணியாற்றுவார் என்று கூற முடியாது. சினிமாவை பொறுத்தவரை சிறந்தது எதுவென்றால் காத்திருப்பதுதான்.

அடுத்த படம் இயக்குவதற்கு அவசரப்படவில்லை. எனக்கு ஸ்கிரிப்ட்டில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே என் பணியை தொடங்க முடியும். என் தங்கை சவுந்தர்யா, அப்பா நடிப்பில் கோச்சடையான் இயக்குகிறார். அவரது கடின உழைப்பு எனக்கு தெரியும். ஆனால் படத்தில் ஒரு காட்சி கூட இன்னும் நான் பார்க்கவில்லை. ஜனவரியில் ரிலீஸ் ஆகும். என் கணவர் தனுஷ் தற்போது இந்தியில் 'ராஞ்சா' படத்தில் நடித்து வருகிறார். அதற்கான திறமை அவருக்கு இருக்கிறது. அதன் ஷூட்டிங் டில்லியில் நடந்தபோது நான் போயிருந்தேன். தென்னிந்தியாவிலிருந்து யாரையும் அவ்வளவு எளிதாக இந்தி படங்களில் ஏற்பதில்லை, '3' படத்தை இயக்கியபோது இந்தியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். விநியோகஸ்தர் யாரும் கிடைக்கவில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் இந்தியில் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.

 

தோழியின் விபரீத காதல் கதை படமாகிறது

Friend's monster love story making movie சென்னை: புதுமுக நடிகர் அக்ஷய் எழுதி இயக்கி நடிக்கும் படம் 'உனக்கு 20 எனக்கு 40'. ஷாலினி, அம்ருதா ஹீரோயின். இப்படம் பற்றி அக்ஷய் கூறியதாவது: ஷாலினி, அம்ருதா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள். ஷாலினியின் வீட்டுக்கு அம்ருதா வருகிறார். அப்போது ஷாலினியின் தந்தை மீது காதல் கொள்கிறார். இருவரும் காதலிக்க தொடங்கியதும் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது. இதன் முடிவு என்ன என்பது கதை. இதில் சிங்கம்புலி, வையாபுரி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.எஸ்.செல்வம் ஒளிப்பதிவு. ஜோய் மேக்ஸ்வெல் இசை. இதன் ஷூட்டிங் பொள்ளாச்சி, கொடைக்கானல், கோவா, சென்னை மற்றும் கேரளாவில் நடந்துள்ளது.
 

கிசு கிசு - ஹீரோயின் கப்சா

Heroin tell lie நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

அலைபாயும் நடிகரும், ஐ காட் ஹீரோவும் நடிச்ச ஹண்ட் படத்த இந்தில இயக்கறதா லிங்கு இயக்கம் பிளான் பண்ணாராம்... பண்ணாராம்... ஆனா அதுக்கான ஹீரோக்கள தேர்வு செய்யறதுல சிக்கல் நீடிக்கறதால இந்தில இயக்கற பிளான டிராப் பண்ற ஐடியாவுல இருக்காராம். இதுக்கிடைலே பாலிவுட் இயக்கம் யாராவது இயக்க முன்வந்தா அங்குள்ள தயாரிப்புங்க படத்த தயாரிக்க தயாருன்னு சொல்றாங்களாம். இதுவர எதுவும் முடிவாகாததால படத்தோட டைட்டில போலவே படத்தோட நடிகர், டெக்னிஷியனையும் ஹண்ட் பண்ற வேலதான் நடக்குதாம்... நடக்குதாம்...

ªஐனி ஹீரோயின் ஹஸ்பெண்டோட செட்டிலானப்பறமும் சான்ஸ் வருதாம்... வருதாம்... இதுல சவுத்லயிருந்துதான் கால்ஷீட் கேட்டு தகவல அனுப்பறாங்களாம். ஒரு சில இயக்கங்க தகவல் மட்டும் அனுப்பிட்டு கால்ஷீட் வாங்கிட்டதா புருடா விட்றாங்களாம். இத கேள்விப்பட்ட நடிகை, 'எங்கிட்ட கால்ஷீட் கேக்கறது நிஜம்தான். ஆனா எந்த படமும் நான் ஏத்துக்கல. கால்ஷீட் கொடுத்தேன்'றது கப்சான்னு ஸ்டேட்மென்ட் விட்றாராம்... விட்றாராம்...

இளைய கிங் இசையோட கார்த்தி கிங்கான மூத்த வாரிசு மியூசிக் பீல்டுலருந்த கவனத்த டைரக்ஷன் துறைக்கு திருப்பிட்டாராம்... திருப்பிட்டாராம்... மியுசிக் இன்ஸ்ட்ருமென்ட்டும் கையுமா இருந்தவர் இப்ப பேப்பரும் பேனாவுமா இருக்காராம். ஸ்கிரிப்ட் எழுதறதுல நேரத்த கழிக்கறாராம். சரியான சான்ஸ் கெடச்சா உறவுக்கார வெங்கட இயக்கம்போல் இவரும் இயக்கறதுக்கு வந்துடுவாராம்... வந்துடுவாராம்...
 

'டிஸ்யூ பேப்பர்' விவகாரம்: சோனாவிற்கு வருத்தம் தெரிவித்த வார இதழ்

Magazine Says Sorry Sona   

சென்னை: நடிகை சோனாவிடம் பிரபல வாரஇதழ் ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்த நடிகை சோனா ஆண்கள் எனக்கு டிஸ்யூ பேப்பர் மாதிரி என்று கூறியிருந்தார். இதனால் கொதித்து எழுந்த ஆண்கள் சோனாவின் வீடு முன்பு முற்றுகையிட்டு கைதானார்கள். இந்த நிலையில் சோனா தன்னுடைய பேட்டியில் ஆண்களைப் பற்றி அப்படி கூறவே இல்லை என்றும் அந்த வார இதழ்தான் அப்படி எழுதிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

பேட்டியின் போது தான் கூறிய சில வார்த்தைகள் தவறான பொருள்படும்படி வெளியாகி உள்ளதாகவும், இதனால் தனக்கு தேவையற்ற சங்கடங்கள் எழுந்ததோடு தன் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியருக்கு சோனா கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள வார இதழ் ஆசிரியர், குறிப்பிட்ட பேட்டியில் இடம்பெற்ற கருத்தில் பிழை ஏற்பட்டிருப்பதாக சோனா கருதும் நிலையில் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

 

ஷாப்பிங் போகிறதில் பெண்கள் கூட என்னிடம் தோற்றுவிடுவார்கள்: சிம்பு பெருமிதம்

Girl S Couldn T Beat Me Shopping Simbu

சென்னை: ஷாப்பிங் போகும் விஷயத்தில் தன்னிடம் பெண்கள் கூட தோற்றுவிடுவார்கள் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு ஷாப்பிங் என்றால் அவ்வளவு இஷ்டமாம். கடை கடையாக ஏறி இறங்கி தனக்கு பிடித்ததை வாங்க மெனக்கெடுபவராம். அவ்வளவு பொறுமையாக மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்வாராம் சிம்பு. அதனால் சிம்பு ஷாப்பிங் கிளம்புகிறார் என்றாலே அவரது நண்பர்கள் ஓட்டம் பிடித்துவிடுவார்களாம்.

யார் அவருடன் மணிக்கணக்கில் அலைவது என்று இடத்தை காலி செய்துவிடுவார்களாம்.

இது குறித்து சிம்பு கூறுகையில்,

ஷாப்பிங் செய்யும் பொறுமை, ஆசை ஆகியவற்றில் பெண்கள் கூட என்னிடம் தோற்றுவிடுவார்கள் என்றார்.

என்ன பெண்களே சிம்பு சொல்வதைக் கேட்டீர்களா?

 

இந்தி துப்பாக்கிக்கு பிறகு அஜீத்தை இயக்கும் முருகதாஸ்?

Ajith Murugadoss Film Almost Confirmed

சென்னை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அஜீத் குமாரை மீண்டும் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் படத்தின் ஹீரோ அஜீத் குமார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவேயில்லை. இந்நிலையில் அஜீத்தை வைத்து படம் எடுக்க ஆசையாக இருப்பதாகவும், அவருக்காக ஸ்கிரிப்ட் கூட தயாரித்துவிட்டதாகவும் முருகதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் அஜீத் கூறினால் கையில் உள்ள படத்தை விட்டுவிட்டு வரத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஜீத்தை முருகதாஸ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு சிவா இயக்கத்தில் நடிக்கிறார். முருகதாஸ் தமிழில் ஹிட்டான துப்பாக்கியை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குநராகும் யுவன் சங்கர் ராஜா!

Yuvan Direct Movie

இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

யுவனின் தந்தை இசைஞானி இளையராஜா, ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். ஆரம்பத்தில் சகோதரர் பாஸ்கருடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்ட அவர், பின்னர் தனியாக இளையராஜா பிக்சர்ஸ் என்ற பெயரில் சில படங்களைத் தயாரித்தார்.

இடையில் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.,

தந்தையைப் போலவே மகன் யுவன் சங்கர் ராஜாவும் தயாரிப்பில் ஈடுபட விரும்பி, செல்வராகவனுடன் இணைந்து ஒயிட் எலிபென்ட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தைக் கைவிட்டார்.

இப்போது பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடும் யுவன் சங்கர் ராஜா, அடுத்து தன் சொந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.

தான் இயக்கப் போகும் படத்தில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், கார்த்திக் ராஜா ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், தந்தை இளையராஜா விரும்பினால் இசையமைப்பார் என்றும் கூறியுள்ளார்.

தான் இயக்கும் கதை விவாதத்திலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார் யுவன். ஆனால் இசையமைப்புதான் முழுநேர பணி என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

என்றென்றும் புன்னகை... நிர்வாண போஸ் கொடுத்த ஆன்ட்ரியா!

‘என்றென்றும் புன்னகை' படத்தில் நடிகை ஆன்ட்ரியா à®"வியக் கல்லூரி மாணவர்களுக்கு நிர்வாண போஸ் கொடுத்து நடித்திருக்கிறாராம்.

படமோ, நிகழ்ச்சியோ எதில் பங்கேற்றாலும் பரபரப்பை பற்ற வைத்துவிடுவார் ஆன்ட்ரியா. அனிருத்துடனான இவருடைய முத்தக் காட்சி இணைய உலகில் பிரபலம்.

endrendrum punnagai andrea jeremiah   
விரைவில் வெளியாக உள்ள விஸ்வரூபம் படத்தில் கவர்ச்சி, கமலுடன் முத்தக்காட்சி என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம். அதையடுத்து இப்போது என்றென்றும் புன்னகை படத்தில் மாடல் அழகியாக நடிக்கிறார்.

இயக்குநர் வாமனன் இயக்கியுள்ள என்றென்றும் புன்னகை படத்தில் ஜெயம்ரவி, ஜீவா, வினய், திரீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியாவும் மாடல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

அழகாய் உடுத்தி கேட்வாக் செய்யும் மாடல் இல்லை. à®"வியக் கல்லூரி மாணவர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடலாம். இதில்தான் அதிரடியாக நிர்வாணமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.

இது பற்றி ஆன்ட்ரியா கருத்து கூற மறுத்துவிட்டார். எனினும் கதபாத்திரம் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் அதன்மீதுள்ள சுவராஸ்யமும், எதிர்பார்ப்பும் குறைந்து விடும் என்று கூறியுள்ளார். இந்த மாதிரியான கதாபாத்திரம் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவுகிறது என்று கூறிய ஆன்ட்ரியா, படம் வந்த பிறகு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று போல்டாக தெரிவித்துள்ளார்.

 

ஏ.எம்.ரத்னம் மகன் ஜோதிகிருஷ்ணா திருமணம்: கமல், ஷங்கர் நேரில் வாழ்த்து!

பிரபல தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்-பத்மஜா ஆகியோரின் மூத்த மகன் ஜோதிகிருஷ்ணா- ஐஸ்வர்யா திருமணம் இன்று காலை சென்னையில் உள்ள ஹோட்டலில் நடந்தது.

எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊலலல்லா போன்ற படங்களை இயக்கியவர் ஜோதிகிருஷ்ணா. ஊலலல்லா படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

jothikrishna weds aishwarya today   
இவருக்கும் ஐஸ்வர்யா என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பபட்டது.

அதன்படி இன்று மேளதாளம் முழங்க காலை சரியாக 10.12-க்கு மணப்பெண் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டினார்.

இயக்குனர்கள் ஷங்கர், விஷ்ணுவர்த்தன், ராம்கி, விஜயபத்மா, பாடகர் ஹரிஹரன், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேசன் சிவா, ஞானவேல் ராஜா, கமீலா நாசர் உள்ளிட்டோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

உலகநாயகன் கமல்ஹாஸன், இந்தத் திருமணத்துக்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி, பரிசளித்தார். கமல் நடித்த இந்தியன் படத்தைத் தயாரித்தவர் ஜோதிகிருஷ்ணாவின் தந்தை ஏஎம் ரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சவால்களை விரும்புபவர் என் மகன் விஜய்... - எஸ்ஏசி பெருமை

Sac Hails His Son Vijay As Lover Challenges

என் மகன் விஜய் ஒரு கடின உழைப்பாளி. பெரும் சவாலாகத் திகழ்ந்த திரைப்படத் துறையில் ஜெயித்தவர் என்று புகழாரம் சூட்டினார் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன்.

30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கி வெளியிட்டு வெற்றி பெற்ற ‘சட்டம் ஒரு இருட்டறை' படம் இப்போது அதே பெயரில் ரீமேக் ஆகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவி சினேகா பிரிட்டோ இந்தப் படத்தை இயக்குகிறார்.

விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாக அரங்கில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, "என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க ஆசைப்பட்டோம். ஆனால் அவர் நடிகராக விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன்.

அதன்பிறகு நடிப்புத் துறையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். சவால்களை விரும்புபவர் விஜய்.

பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான். அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்.

‘நாளைய தீர்ப்பு' படம் வெளிவந்தபோது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார்கள். இப்போது என்னை நடிகர் விஜய்யின் தந்தை என்று கூறுகிறார்கள். இந்த நிலையை ஒவ்வொரு தந்தைக்கும் மகன்கள் மகள்கள் உருவாக்கித் தரவேண்டும்," என்றார்.

 

தலைப்பில் 'தல'? வேண்டவே வேண்டாம்! - அஜீத் எதிர்ப்பு

Ajith Denies Thala

தனது புதிய படத்துக்கு தல என தலைப்பு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அஜீத்.

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இந்தப் படத்துக்கு ரசிகர்களே 'தல' என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர்.

இந்தத் தலைப்பே நன்றாக இருப்பதால், அதையே வைத்துக் கொள்ளலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொல்ல, டைட்டில் பிடிபடாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த இயக்குனருக்கும் அந்த யோசனை ஓகேவாகிவிட்டது.

ஆனால் அஜீத் அதனை ஏற்கவில்லையாம்.

"தல என்றால் என்னை மட்டுமே குறிப்பது போலாகிவிடும். கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள்," என்று கூறிவிட்டாராம்.

எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய முயன்றும் அஜீத் பிடிவாதமாக இருந்ததால், இப்போது வேறு பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

 

நடனம் மூலம் மைக்கேல் ஜாக்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் பிரபுதேவா!

Prabhudheva Pay Tribute Michael Jackson

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய நடனப்புயல் பிரபுதேவா இந்திப்படம் ஒன்றில் நடனமாடியுள்ளார்.

இந்தி நடன அமைப்பாளரும் இயக்குநருமான ரெமோ டிசோசாவும், நம் ஊர் பிரபுதேவாவும் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர்கள். இதனை நிருபிக்கும் விதமாக இவர்கள் இருவரும் இணைந்துள்ள எனிபடி கேன் டான்ஸ்( ஏபிசிடி) என்ற இந்திப்படத்தில் அவரைப் போலவே நடனமாடியுள்ளனராம். இதில் பிரபுதேவா உடன் நடிகை மாதுரி தீட்சித், டான்ஸ் இந்தியா டான்ஸ் ஷோவில் வெற்றி பெற்ற சல்மான்கான், தர்மேஷ், பிரின்ஸ், மயூரேஷ், விருஷாலி ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் தாராவி பகுதிகளில் இந்த பாடல் காட்சியை படமாக்கப் பட உள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள டிசோசா, பிரபு தேவாவின் நடனவாழ்க்கையில் இது மறக்க முடியாத அனுபவம் என்றார். மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். நாங்கள் நடனத்தின் மூலம் எங்களுடைய திரைப்படத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்றார்.

3டியில் தயாராகும் எனிபடி கேன் டான்ஸ் திரைப்படத்தை யுடிவி நிறுவனத்தினர் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஸ்வரூபம் ஆடியோ... கமல் பாடிய மூன்று பாடல்கள்!

Vishwaroopam Tracklist   

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தின் பாடல்கள் சிடி வெளியாகும் முன்பே, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களில் மூன்றை கமல் பாடியுள்ளார்.

சோனி நிறுவனம் இந்த பாடல் லிஸ்டை வெளியிட்டுள்ளது.

படத்தின் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல், படத்துக்கான தீம் பாடல். சூரஸ் கான் இதைப் பாடியுள்ளார்.

இந்தப் பாடலைத் தொடர்ந்து, துப்பாக்கி எங்கள் தொழில் எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை கமலும் பென்னி தயாளும் பாடியுள்ளனர்.

உன்னைக் காணாது நான் என்ற பாடலை கமலும் சங்கர் மகாதேவனும் பாடியுள்ளனர், அணு விதைத்த பூமியிலே என்ற பாடலை கமலுடன் நிகில் டிசோசா பாடியுள்ளார். விஸ்வரூபம் என்ற பாடலை ஷானே மென்டோன்ஸா ரீமிக்ஸ் செய்துள்ளார்.

இவற்றில் மூன்று பாடல்களை கவிஞர் வைரமுத்துவும், இரண்டு பாடல்களை கமல் ஹாஸனும் எழுதியுள்ளனர்.

 

நடன இயக்குநர் ஷோபிக்கு நாளை கல்யாணம்…. காதலியை மணக்கிறார்

Dance Master Shobi Wed Lover Tomorrow

பிரபல தமிழ் திரைப்பட நடன நடன இயக்குனர் ஷோபியின் திருமணம் நாளை சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரத்திடம் உதவியாளராக இருந்தவர் ஷோபி. தமிழ் திரை உலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கிப் படத்தில் இடம் பெற்ற கூகுள் கூகுள் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இவரது திருமணம் நாளை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெறுகிறது. மாலையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இது காதல் திருமணம்.

ஷோபி கரம் பிடிக்கும் காதலியும் ஒரு டான்ஸர்தானாம். நீண்டநாள் காதலித்து வந்தவரையே கரம் பிடிக்கிறார் ஷோபி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபி கமல்ஹாசனின் கரம் பட்டு சினிமாவுக்குள் டான்ஸ் மாஸ்டராக நுழைந்தவர் ஆவர். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில்தான் இவர் முதன் முறையாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினார். தொடர்ந்து மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களிலும் நடனம் அமைத்துள்ளார். விருமாண்டி படத்திலும் டான்ஸ் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை மறைந்த பால்ராஜ் ஒரு பழம்பெரும் டான்ஸ் மாஸ்டர்.

 

நேரு ஸ்டேடியத்தில் விஸ்வரூபம் இசை வெளியீடு!

Vishwaroopam Audio Release At Nehru Stadium   

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் இசை வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

விஸ்வரூபம் படம் எப்போதோ முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் படத்தின் இசை உரிமை மற்றும் படத்தின் விநியோக உரிமை பிரச்சினை தொடர்ந்ததால், படம் வெளியாவது இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் இஸ்லாமிய அமைப்புகள் வேறு தொடர்ந்து இந்தப் படத்துக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சங்கர் எஷான் லாய் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

படத்தின் இசையை கடந்த நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளன்று, மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் பருவநிலை சரியில்லை என்று கூறி அப்போது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் கமல்.

இப்போது ஆடியோ உரிமையை சோனி வாங்கிவிட்டதால், இசை வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

 

நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வைர நகைகள் திருட்டு... வேலைக்காரப் பெண் கைது

Actress Ramya Krishnan Maid Arrested For Stealing

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணனின் சென்னை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், தங்க நகைகள் திருட்டுப் போயின. இதுதொடர்பாக அவர் கொடுத்த போலீஸ் புகாரின் பேரில் வீட்டு வேலைக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வேலைக்காரப் பெண் கடந்த 7 வருடமாக ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்தவராம்.

ரம்யா கிருஷ்ணனின் வீடு சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. அங்கு தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் வீட்டில் இருந்த நகைப் பெட்டியை ரம்யா கிருஷ்ணன் திறந்து பார்த்தபோது அதில் இருந்த வைர நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளைக் காணவில்லை என்று தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா கிருஷ்ணன், தனது தாயாருடன் நீலாங்கரை காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வேலைக்காரப் பெண் ஜோதியைக் கைது செய்தனர். அவர்தான் நகைகளைத் திருடியதாக தெரிய வந்துள்ளதாம். அவரிடமிருந்து நகைகளை மீட்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனராம்.