'ஜுராசிக் வேர்ல்ட்'... வாங்குவதற்குக் கடும் போட்டி.. தமிழகத்தில்!

சென்னை: தமிழின் முன்னணி திரைப்பட நிறுவனங்களின் கவனம் தற்போது ஆங்கிலப் படங்களின் மீது திரும்பியிருப்பதால் ஆங்கிலப் படங்களின் தமிழ்நாடு உரிமையை வாங்க தற்போது கோடிக்கணக்கில் பணம் செலவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல்லாம் இந்த அவென்ஜெர்ஸ் மற்றும் பாஸ்ட் பியுரியஸ் படங்களால் ஆரம்பித்தது. தற்போது ஜூன் மாதம் 12 ம் தேதி வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தை வாங்க திரைப்பட நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

Jurassic world movie highly sell tamilnadu market

முன்பு லட்சக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய ஆங்கிலப் படங்களின் உரிமை தற்போது கோடிக்கணக்காக மாறியிருக்கிறது. ஜுராசிக் வேர்ல்ட் படத்தை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டதில் தற்போதைய விலை இரண்டரைக் கோடியாம்.

இவ்வளவு விலை கொடுத்து வாங்க என்ன காரணம் என்று விசாரித்தால் ஆங்கிலப் படங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதால் கண்டிப்பாக நஷ்டம் இல்லை,விளம்பரம் செய்ய தேவை இல்லை படம் நன்றாக இருந்தால் ஒன்றிலிருந்து ஒன்றரைக்கோடி வரை லாபம் பார்த்து விடலாம் போன்ற காரணங்களைச் சொல்கிறார்கள்.

இந்த படம் யார் கைக்கு செல்லும் என்று இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

 

"டார்லிங்" பேயை விடுங்க... தமிழ் சினிமாவைக் கலக்கும் ஆண் "பேய்கள்"

சென்னை: எத்தனை நாளைக்கு தான் பெண்களே பேயாக நடிப்பது என்று யோசித்தார்களோ என்னவோ தமிழ் சினிமாவில் வரிசையாக ஆண் பேய்களின் ஆதிக்கம் ஆரம்பித்து உள்ளது.

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ, பெண்களையே பேய்களாக்கி விட்டனர். காஞ்சனா பேய், கங்கா பேய், டார்லிங் பேய் என்ற பெண் பேய்கள் ஏகத்திற்கு வலம் வந்தன.

demonte colony movie

ஆனால், பேய் என்றால் அது பெண்கள் தான் என்று இருந்த தமிழ் சினிமாவில் மாற்றம் உருவாக ஆரம்பித்து விட்டது.தமிழ் சினிமாவில் இது பேய்களின் வருடம் போல. முன்னணி நடிகர்கள் தொடங்கி அறிமுக நடிகர்கள் வரை பேய் படமா ஓகே ஷூட்டிங் போய்டலாம் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில், நாளை வெளியாக இருக்கும் டிமாண்டி காலனி படத்தில் அருள்நிதி பேயாக வருகிறாராம். அதே போல கமர்கட்டு படத்திலும் யுவன், ஸ்ரீராம் இருவருமே பேயாக வருகிறார்களாம்.

சூர்யா நடித்து வெளிவர இருக்கும் மாஸ் திரைப்படமும் பேய் படம் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

 

மும்பையின் 'லேடி ரஜினி' சோனாக்ஷி: சொல்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்

மும்பை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை மும்பையின் லேடி ரஜினி என்று அழைத்துள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற இந்தி படத்தை எடுத்து வருகிறார். 2011ம் ஆண்டு வெளியான மௌனகுரு படத்தின் இந்தி ரீமேக் தான் அகிரா. இதில் சோனாக்ஷியுடன் கொங்கனா சென் சர்மாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு இடையே சோனாக்ஷி டப்ஷ்மாஷ் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற ரஜினி பட வசனத்திற்கு வாய் அசைத்துள்ளார்.

இந்த டப்ஷ்மாஷ் வீடியோவை முருகதாஸ் ட்விட்டரில் வெளியிட்டு அதற்கு மும்பையின் லேடி ரஜினி என்று தலைப்பு கொடுத்துள்ளார். முருகதாஸின் ட்வீட்டை தனது ட்விட்டர் கணக்கில் போட்டு ஹாஹாஹாஹா என்று தெரிவித்துள்ளார் சோனாக்ஷி.

நான் சூப்பர்ஸ்டார் ஹீரோயின் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுபவர் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜாக்கி சானுடன் நடிக்கவில்லை... அமீர் கான்

மும்பை: ஜாக்கிசானுடன் நான் இணைந்து நடிக்கவில்லை என்று நடிகர் அமீர்கான் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா சீனா இடையே ஏற்பட்ட நல்லுறவின் காரணமாக இரண்டு நாடுகளும் இணைந்து படங்கள் தயாரிக்க உள்ளன. முதலில் இரு நாட்டின் பாரம்பரியங்களையும் இணைத்து குங்க்பூ யோகா என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தனர்.

 Aamir KhanI not doing film with Jackie

இந்தப் படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் இணைந்து நடிப்பதாக இருந்தது.அனால் அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தற்போது அமீர் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

தற்போது நடித்துவரும் டங்கல் படத்தால் வேறு படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சினை ஏற்பட்டதால் இந்த முடிவாம்.

ஜாக்கி சானுடன் இணைந்து நடிக்க முடியாதது வருத்தமே என்று வருந்தியிருக்கிறார் அமீர். அடுத்த வருடம் ஜூன் வரை அமீரின் கால்ஷீட் புல்லாம். எதிர்காலத்தில் இதுபோன்ற படம்வந்தால் அதில் நிச்சயம் நடிப்பேன் என்று மேலும் கூறியிருக்கிறார்.

ஆமிர் இல்லை.. அப்ப வேற யாரு நடிக்கப் போறாங்க!

 

தண்ணீருக்கு அடியில் ஷாருக்கான் சண்டை!

மும்பை: சென்னை எக்ஸ்பிரஸ் என்ற மெகா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரோஹித் ஷெட்டி நடிகர் ஷாருக்கானை இயக்கும் இரண்டாவது படம் தில்வாலே. இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் கஜோல்.

Shah rukh khan to shoot water stunts for Dilwale in Mauritius

இவர்களுடன் வருண் தவான், கீர்த்தி சனேன் ஆகியோரும் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். ரோகித் ஷெட்டியின் படம் என்றால் கமர்சியலும் ஆக்சனும் கலந்தே இருக்கும்.

இந்தப் படத்திலும் அப்படி ஒரு அதிரடியான சண்டைக் காட்சியை எடுக்க இருக்கிறார்களாம். தண்ணீருக்கு அடியில் நடைபெறும் அந்த சண்டை மொரிசியசில் படம் பிடிக்கப் பட உள்ளதாம்

தற்போது கோவாவில் ஷூட்டிங் நடைபெறுகிறது இதை முடித்து விட்டு மொரிசியஸ் கிளம்புகிறது தில்வாலே படக் குழு.

 

55 வயதைத் தொட்டார் மோகன்லால்!

திருவனந்தபுரம்: மோகன்லால் விஸ்வநாதன் ஐயர் என்ற நடிகர் மோகன்லாலின் பிறந்த நாள் இன்று. 1960 ம் ஆண்டில் பிறந்த மோகன்லால் இன்று தனது 55 வது வயதைத் தொட்டிருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இதுவரை சுமார் 324 படங்களில் நடித்திருக்கிறார். இவற்றில் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களும் அடக்கம்.

Mohanlal Turns 55

நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர் போன்ற பன்முகத் திறமைகளை கொண்டவர்.

1978ம் ஆண்டு திரையோட்டினம் என்ற மலையாள படத்தில் அறிமுகமானாலும் சிலபல காரணங்களால் அந்த படம் வெளிவாராமல் போய்விட்டது. எனவே இவரது அடுத்தப் படமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் தான் ஒரு ஹீரோவாக இவரை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

நடிகர் மோகன்லாலைப் பற்றிய சில சுவையான தகவல்கள்:

6ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் நடந்த ஒரு விழாவில் சிறந்த நடிகர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் முதல் ஹீரோ மோகன் லால்தான். படம் இருவர்.

இவர் நடித்த குரு படம் தென்னிந்திய மொழிகளில் இருந்து முதல் முறையாக சிறந்த அயல் மொழித் திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப் பட்டது.

நமது பெருமை மிக்க இந்திய ராணுவத்தால் மரியாதை செய்யப்பட்ட முதல் இந்திய நடிகர்.

நான்கு தேசிய விருதுகளை வாங்கி இருக்கிறார். வனப்பிரஸ்தம், பரதம் போன்ற படங்களில் நடித்தற்காக 2 தேசிய விருதுகள், வனப்பிரஸ்தம் படத்தைத் தயாரித்ததற்காக 1 தேசிய விருது , கிரீடம் படத்திற்காக ஒரு ஸ்பெஷல் ஜூரி விருது என மொத்தம் நான்கு தேசிய விருதுகள்.

மொத்தம் 9 கேரள அரசின் விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறார்.

2001 ம் ஆண்டு மற்றும் ஒரு சிறப்பாக பத்மஸ்ரீ விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது அரசு.

கொரிய தற்காப்புக் கலைகளுக்கான ப்ளாக் பெல்ட்டை கொரிய மாஸ்டரான லீ ஜென்ஜோங்கி என்பவர் 2013 ம் ஆண்டு மோகன்லாலுக்கு வழங்கி லாலை கவுரவித்தார்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சேட்டா....!

 

தொடர்ந்து தம் அடிப்பது போல காட்சியா... தனுஷிற்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

சென்னை: நேற்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்ட தனுஷின் மாரி பட டீசருக்கு ரசிகர்களிடையே தொடர்ந்து எதிர்ப்புகள் வெளியாகி வருகின்றன.

படத்தில் தனுஷ் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து சிகரெட் பிடிப்பது போல காட்சிகளை தனுஷ் தன் படத்தில் வைப்பதா என்று கடுமையான கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு உள்ளனர்.

Why do Dhanush always need cigarettes?

படத்தின் டீசர் முழுதுமே புகைபிடித்துக் கொண்டு தனுஷ் நடந்து வருவது போன்றே உள்ளது. ஏற்கனவே தனது வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் புகைப்பது போன்ற காட்சிகளை தனுஷ் வெளியிட்ட போது பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. நேற்று மாரி டீசரினால் இப்பிரச்சினை மீண்டும் கிளம்பியுள்ளது.

மாமனார் ரஜினிகாந்தே தனது படங்களில் புகைப்பது போன்ற காட்சிகளை நீக்கியுள்ள நிலையில் மருமகன் தனது படங்களில் (மரியான், அநேகன், வேலை இல்லாப் பட்டதாரி ) தொடர்ந்து புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தேசிய விருது பெற்ற நடிகருக்கு சமூகப் பொறுப்பு சற்றும் இல்லையா? புகை பிடிப்பது தான் ஆண்மையின் அடையாளமா? டீசர் கண்டிக்கத்தக்க ஒன்று போன்ற கேள்விகளால் சூடாகிக் கிடக்கின்றன சமூக வலைதளங்கள்.

 

நான் பாஸ்கர் இல்லைண்ணே.. ரேஞ்சுக்கு புலம்பி வரும் பாண்டிராஜ்!

சென்னை: எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தாரோ தெரியவில்லை இது நம்ம ஆளு படம் முடிவதற்குள் பாதி ஆளாகி விடுவார் போல இயக்குனர் பாண்டிராஜ்.

இது நம்ம ஆளு படம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்தப் படத்தின் வியாபாரமே பெரிய அளவில் இருந்தது, சிம்புவின் முன்னாள் காதலியான நடிகை நயன்தாரா பழைய கசப்புகளை மறந்து இதில் நடிக்க சம்மதித்து இருந்தார்.

T.R Pressurizes Pandiraj To Complete Idhu Namma Aalu

ஆனால் அடுத்தடுத்து சிம்புவின் கால்ஷீட் பிரச்சினை, சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்க தாமதப்படுத்துகிறார் என்று அடுக்கடுக்காக எழுந்த பிரச்சினைகளால் ஏண்டா இந்தப் படத்தை ஆரம்பித்தோம் என்று ஏற்கனவே நொந்து போயிருந்த பாண்டிராஜ் தற்போது சிம்புவின் அப்பா டி.ராஜேந்திரரின் புகாரால் இந்தப் படத்தைக் கைவிடலாமா என்று என்னும் அளவிற்கு தர்ம சங்கடத்திற்கு ஆளாகி விட்டார்.

சிம்புவின் வாலு,வேட்டை மன்னன் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக தாமதமான நிலையில் இது நம்ம ஆளு படமும் பிரச்சினையால் பாதியிலே நிற்கிறது. இந்த நிலையில் நடிகர் சிம்புவின் அப்பாவும் இது நம்ம ஆளு படத்தின் தயாரிப்பாளருமான இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்குனர் பாண்டிராஜ் தனது படத்தை முடித்துக் கொடுக்காமல் அடுத்த படங்களுக்கு சென்று விட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

பணம் இருந்தால் சொல்லுங்கள் படத்தை முடித்துக் கொடுக்கிறேன் என்று சற்று காட்டமாகவே இதற்கு பதில் அளித்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

சிம்புவ வச்சுப் படம் எடுத்து முடிப்பதற்குள் பாண்டிராஜ் ரொம்பத் தேய்ந்து விடுவார் போலயே!

 

எங்க அந்த ஹீரோவை காணலையே!

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சித்தி தயாரிக்கும் சீரியலில் நடித்த காரணத்தினால்தான் பிரபலமானார் அந்த ஹீரோ.

ட்விட்டர், ஃபேஸ்புக் என ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு உயர்ந்தார் அந்த ஹீரோ. கடந்த சில நாட்களாக அந்த ஹீரோவை சின்னத்திரையில் பார்க்க முடியவில்லை.

காரணம் என்னவாக இருக்கும் என்று தேடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால் மதுரைக்கார அந்த சின்னத்திரை ஹீரோவிற்கு பெரியதிரையில் ஜொலிக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

அதற்கான தீவிர முயற்சியில் திருவினையாகிவிட்டதாம். விரைவில் பெரிய திரையில் படத்தை பார்க்கலாம் என்கின்றனர்.

 

30 லட்சம் பேரைத் திரும்பிப் பார்க்க வைத்த” மாஸ்” டீசர்!

சென்னை: சூர்யாவின் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ் திரைப்பட டீசர் கடந்த மாதம் 24 ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த டீசரைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

அஜித், விஜய் படங்களுக்கு அடுத்து ரசிகர்கள் அதிகம் பேர் நடிகர் சூர்யாவின் டீசரைப் பார்த்து ரசித்திருப்பதால் அடுத்த மாஸ் ஹீரோ சூர்யா தான் என்று அவரது ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆதவன் படத்திற்குப் பின் நயன்தாராவுடன் சூர்யா சேர்ந்து நடிப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காதல் காட்சிகளை எதிர்பார்த்தனர், ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி அந்த ஆர்வத்தில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டார்.

இதுவும் பேய்ப் படம்தான். ஆனால் இதுவரை வந்த பேய்ப் படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான பேய்ப்படம் என்கிறார்கள்.

எடுக்கிறது பேய்ப்படம், அதில என்ன வித்தியாசம் வேண்டி இருக்கு...!