ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமா பிடிக்காது! - கே எஸ் ரவிக்குமார் அதிரடி

ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமா பிடிக்காது! - கே எஸ் ரவிக்குமார் அதிரடி

சென்னை: சினிமா விமர்சனம் என்ற பெயரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு டிவியில் திட்டிக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது, என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

மாஸ்டர் மகேந்திரனை நினைவிருக்கிறது... இப்போது வளர்ந்து இளைஞர் மகேந்திரன் ஆகிவிட்டார்

அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் விழா. பாரதிபாலகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேருக்கு நேராகவே விமர்சித்தார், அதாவது கோட் சூட் போட்டுக் கொண்டு முன்பு டிவியில் அவர் திரைவிமர்சனம் செய்ததற்காக!

கேஎஸ் ரவிக்குமார் பேச்சிலிருந்து...

மாஸ்டர் மகேந்திரனை ‘நாட்டாமை' படத்தில் 3 வயசு பையனா அறிமுகப்படுத்தினேன். இப்போ ஹீரோவா வளர்ந்திருக்கான். வாழ்த்துகள்.

இந்தப்படத்தோட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை எனக்கு முதல்ல சுத்தமா பிடிக்காது. ஏன்னா ஒரு டிவியில கோட் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு என்னமோ சினிமாவையே அவர்தான் கண்டுபிடிச்ச மாதிரி பேசுவார். ரொம்ப கடுப்பா இருக்கும்.

அது எவ்ளோ நல்ல படமா இருந்தாலும் கடைசியில தெனாலி - சுண்டெலி, பஞ்ச தந்திரம் - மாய மந்திரம்னு திட்டுவாரு. நல்லா ஓடற படத்தைக் கூட இப்படித்தான் கமெண்ட் அடிப்பாரு.

அதையெல்லாம் இவரே எழுதினாரா அல்லது வேற ஆள் எழுதிக் கொடுத்துப் படிச்சாரா தெரியல.. ஆனா கோபம் இவர் மேலதான்.

ஆனா அவரே ‘சுப்ரமணியபுரம்' படத்தில் அத்தனை பேரையும் தலையாட்ட வெச்சிட்டார். அவருக்குள்ள இப்படி ஒரு இசைத் திறமை இருப்பது தெரியாத காலகட்டத்தில் அவரை வெறுத்தேன். இப்போது ரசிக்க வச்சிட்டார்.

நல்லவேளையா மியூசிக் டைரக்டரா ஆனதுக்கப்புறம் அவர் அந்த கோட்டை கழட்டி வெச்சிட்டு வந்திருக்கார், நல்லது," என்றார் ரவிக்குமார்.

இதையெல்லாம் என்ன ரியாக்ஷன் காட்டுவது என்றே தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.

 

‘பிரியாணி’ ரசிகையாம் கும்கி...

சென்னை: மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள லட்சுமிகரமான நடிகை சரியான சாப்பாட்டு ரசிகையாம். அதிலும் குறிப்பாக பிரியாணி பிரியையாம். படப்பிடிப்பு இடைவேளைகளில் தட்டு நிறைய பிரியாணியை கொட்டி வைத்து ஒரு பிடி பிடிக்கிறாராம்.

நடிகை பிரியாணி சாப்பிடுவதைப் பார்த்தால், பார்ப்பவர்களுக்கே மயக்கம் வந்து விடும், ஆனால், நடிகைக்கு மட்டும் வெயிட் ஏறவில்லையாம். மற்ற நடிகைகளைப் போல் மணிக்கணக்காக ஜிம்மில் பயிற்சியும் எடுத்துக் கொள்வதில்லையாம் நடிகை.

இவ்வளவு சாப்பாடு சாப்பிட்டும் நடிகையின் உடல் எடை கூடாததன் மர்மம் என்னவென்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனராம் மற்ற நடிகைகள்.

 

'யாரால கெட்டேன்... நோரால கெட்டேன்!'

வாய் வாய் என்னவாய்... என ஒரு வசனம் வரும் கவுண்டமணி நடித்த கோயில் காளை படத்தில்.

இப்போது உச்சத்திலிருப்பதாக சொல்லப்படும் இளம் காமெடி நடிகரின் நிலையை, மேலே சொன்ன தலைப்பை வைத்துதான் கமெண்ட் அடிக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

சினிமா எப்போது இழுத்தணைக்கும் எப்போது எட்டி உதைக்கும் என்பது புரியாத ஒன்று.

காமெடியனின் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அவர் இல்லாவிட்டால் நடிக்கவே மாட்டேன் என்று சொன்ன ஹீரோக்களே தடுமாறும் அளவுக்கு வந்துவிட்டார்களாம், காமெடியனுக்கு எதிரான நிலையைப் பார்த்து.

படத்துக்குப் படம் காமெடி என்ற பெயரில் பல சீரியஸான விஷயங்களை இவர் கலாய்ப்பது ஒரு பக்கம் என்றால்... உலக நாயகன் போன்ற முன்னணி ஹீரோக்களையும் அவர்களின் படங்களையும்கூட கலாய்ப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள்.

முன்பு திரைமறைவில் வெளியாகி வந்த இந்த அதிருப்தி, இப்போது விழா மேடைகளிலேயே வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இன்னொரு பக்கம், காமெடி கிங்கும் வைகைப் புயலும் அதிரடிப் பாய்ச்சலில் களமிறங்கியுள்ளதால், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் மீண்டும் அந்த இரு ஜாம்பவான்களையும் நாட ஆரம்பித்துள்ளார்களாம்.

போகிற போக்கில் சொந்த செலவில் சூனியம்-ங்கிற வசனம் நமக்கே ஒர்க் அவுட் ஆகிடும் போலிருக்கே என கவலையில் இருக்கிறாராம் காமெடி.

குறிப்பு: நோர் என்றால் தெலுங்கில் வாய் என்று அர்த்தம்!

 

சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்

சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்

கொச்சி: நடிகை சரிதாவை சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன், என்று நடிகர் முகேஷ் பதில் கூறியுள்ளார்.

சரிதாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்துவிட்ட நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள பதிவு அலுவலகத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. 2007-ம் ஆண்டு முதல் அவரை விவாகரத்து செய்ய தயாராக இருந்து வருகிறேன். ஆனால் தட்டிக்கழித்தே வந்தார். விவாகரத்து பெறாமல் முகேஷ் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினர் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

சரிதாவின் குற்றச்சாட்டுகளை முகேஷ் மறுத்துள்ளார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "சரிதா குற்றச்சாட்டுகள், முற்றிலும் தவறானவை. தேவிகாவை முகேஷ் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளார். சரிதாவை சட்டரீதியாக பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார். தேவையான ஆவணங்களை ஒப்படைத்திருக்காவிட்டால் திருமணத்தை அரசு அதிகாரி நடத்தி வைத்திருக்கமாட்டார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அஜீத் பட வாய்ப்பு.... எல்லாம் என் பேர் ராசி - குஷியில் நடிகை

அஜீத் பட வாய்ப்பு.... எல்லாம் என் பேர் ராசி - குஷியில் நடிகை

என் பெயரை மாற்றிக் கொண்ட ராசி காரணமாகவே அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக நடிகை மனோசித்ரா கூறியுள்ளார்.

‘அவள் பெயர் தமிழரசி' என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நந்தகி. தொடர்ந்து ‘தாண்டவக்கோனே' என்ற படத்திலும் நடித்தார்.

ஆனால் அவருக்கு எதிர்ப்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையமில்லை.

எனவே எண் ராசி பார்த்து தன்னுடைய பெயரை ‘மனோசித்ரா' என மாற்றிக் கொண்டார்.

இந்த பெயர் ராசி தற்போது இவருக்கு கைகொடுத்து விட்டதாம். அஜீத் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘வீரம்' படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் மனோசித்ரா.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமே தன் பெயர் மாற்ற ராசிதான் என்று கூறி வருகிறாராம் நந்தகி எனும் மனோசித்ரா.

வீரம் படத்தில் அஜீத் - தமன்னா நடிக்கிறார்கள். இன்னொரு ஜோடியாகத்தான் விதார்த்தும் மனோசித்ராவும் நடிக்கின்றனர்.

தமன் இசையில், சிவா இயக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. வேட்டி சட்டையில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் அஜீத்.

 

ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன்

மும்பை: தனது மருமகளை செய்தியாளர்கள் ஐஸ்வர்யா என்று அழைத்ததால் ஜெயா பச்சன் ஆத்திரம் அடைந்தார்.

பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் கொடுத்த விருந்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் ஜெயா பச்சனுடன் கலந்து கொண்டார்.

ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன்

விருந்து நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்புகையில் பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று அவர்களை அணுகினார்கள். அப்போது ஜெயா பச்சன் கோபத்தில் செய்தியாளர்களை திட்டிவிட்டார்.

என்ன ஐஸ்வர்யா, ஐஸ்வர்யான்னு கூப்பிடுறீங்க, அவர் என்ன உங்களுடன் ஒன்றாக படித்தவரா? ஒழுங்காக ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று முழுப்பெயரை சொல்லுங்கள் என்று பொறிந்து தள்ளிவிட்டார்.

இதை கேட்ட செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

ஆரம்பம் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி

அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்' திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பம் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி  

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் முட்டி மோதியதாம்.

சன் டிவி, விஜய் டிவி, புதுயுகம், கலைஞர் டிவி என பல சேனல்கள் போட்டி போட சத்தமில்லாமல் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி கைப்பற்றி விட்டதாம்.

15 கோடி ரூபாய் கொடுத்து ஆரம்பம் படத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம், தலைவா படங்களுக்கு நேர்ந்த தடைகள் தங்களின் படத்திற்கு வரக்கூடாது என்றுதான் ஆரம்பம் படத்தை ஆரம்பத்திலேயே ஜெயா டிவிக்கு விற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே விஜயதசமி நாளில் ‘மேக்கிங் ஆப் ஆரம்பம்' ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.