ஆபத்தான கார், பைக் சேசிங் காட்சிகளுக்கு டூப் போடாத டாம் க்ருஸ்!

டாம் க்ருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.

அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென பெரும் ரசிகர்க்ளைக் கொண்ட மிஷன் இம்பாசிபிள் தொடரின் இந்த பாகத்தில் ரசிகர்களுக்கு மேலும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

M3 the signature car for Mission Impossible : Rouge Nation

படத்தின் மோட்டார் ஸ்டன்ட் பயிற்சியாளர் வேட் ஈஸ்ட்வுட், "எத்தகைய ஸ்டண்ட் காட்சியையையும் ஒரு படி மேல் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர் டாம் க்ரூஸ். ‘முரட்டு தேசம்' படத்தில் வரும் டாம் க்ரூசின் ரேஸ் கார் மற்றும் பைக் சேசிங் காட்சிகளை வேறெந்த சாகச வீரரையும் வைத்து டூப் போடாமல் பல நாள் பயிற்சிக்கு பின் தானே மேற்கொண்டுள்ளார். BMW நிறுவனத்தின் M3 காரின் உறுதியும், திறமும் டாம் க்ரூஸின் ஆபத்து நிறைந்த கார் சேசிங் காட்சிகளுக்கு பேருதவியாய் இருந்தது," என்கிறார்.

M3 the signature car for Mission Impossible : Rouge Nation

"சுட்டெரிக்கும் வெயில் முதல் தேள்கடி என கடினமான சூழ் நிலைகளில் மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம் படத்தை படமாக்கியுள்ளோம். பற்பல தெருக்களின் குறுகிய வளைவுகளிலும் இருக்கும் சேசிங்கும் அதை தொடர்ந்து வானுயர் கட்டிடங்களின் இடையே சீரி செல்லும் ஹெலிகாப்டர் சீனும் ரசிகர்களை பரபரக்க வைக்கும்," எனக் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

 

கர்நாடகத்தில் மட்டும் ரூ 50 கோடியை குவித்த பாகுபலி.. இதுவும் புதிய சாதனைதான்!

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படம் கர்நாடகத்தில் மட்டும் ரூ 50 கோடிக்கு மேல் குவித்து புதிய சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்தப் படமும் கர்நாடகத்தில் இவ்வளவு வசூலை எட்டியதே இல்லை.

பாகுபலி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடிப் படமாகவும், மலையாளம், இந்தியில் டப் செய்யப்பட்டும் வெளியானது.

Bahubali mints Rs 50 cr plus in Karnataka

இந்த நான்கு மொழிகளிலும் கர்நாடகத்தில் பாகுபலி வெளியானது. மொத்தம் 184 சென்டர்களில் வெளியான இந்தப் படத்தைப் பார்க்க தலைநகர் பெங்களூரு மட்டுமல்லாமல், கர்நாடகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். வடக்கு கர்நாடகத்தில் கூட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

இந்தப் படம் வெளியாகி 19 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது கர்நாடகத்தில் மட்டும்.

வேறு எந்த மொழிப் படமும் அங்கு இவ்வளவு வசூலைக் குவித்ததில்லை. கன்னட மொழியில் வெளியாகாத ஒரு படத்துக்கு இவ்வளவு வசூலா என பிரமிக்கின்றனர் கன்னட திரையுலகினர்.

பாகுபலி ஜுரம் இன்னும் கூட அங்கு தணியவில்லை. இதனாலேயே பல கன்னடப் பட வெளியீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரணதந்திரம் (கன்னடம்) பட இயக்குநர் ஆதிராம் தெரிவித்தார்.

 

சரித்திரம் படைக்க ஆசைப்படும் திரிஷா!

சென்னை: பாகுபலி படம் மற்றும் அதன் வெற்றி உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சத்தமில்லாமல் ஒரு மாற்றம் இந்தியத் திரையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஆமாம் சரித்திரப் படங்களின் மீது நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்களின் கவனம் திரும்பி இருக்கின்றது. தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான எஸ்.பி.ஜனநாதன் தஞ்சை பெரிய கோயிலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

I Would Love to be a Part of a Period - Warrior Film - Trisha

இதுநாள்வரை கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை த்ரிஷா தற்போது சரித்திரப் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். த்ரிஷாவின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று விசாரித்தால் எல்லாம் பாகுபலியின் தாக்கம் தான் என்கிறார்கள்.

சரித்திரப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை, பாகுபலி பார்ப்பதற்கு முன்பிருந்தே எனக்கு இந்த ஆசை உள்ளது. சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும்" என்று த்ரிஷா தனது நீண்டநாள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ராஜமௌலி காரு பாகுபலி 2 படத்துல த்ரிஷாவுக்கும் ஒரு ரோல் கொடுங்க...

 

எந்திரன் 2... ஷங்கரின் கதை, ஷூட்டிங் திட்டங்களுக்கு ஓகே சொன்னார் தயாரிப்பாளர்!

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தை விட, அதற்குப் பிறகு ரஜினி நடிக்கும் எந்திரன் 2 பற்றித்தான் ஏராளமான செய்திகள் தினசரி வந்து கொண்டே இருக்கின்றன.

இந்தப் படத்தின் பட்ஜெட், ஷூட்டிங் திட்டம், படமாக்கப்படவிருக்கும் நாடுகள் போன்ற விஷயங்களை இயக்குநர் ஷங்கரிடம் கேட்டு, சம்மதமும் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.

Rajini's Enthiran 2... Latest updates

இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அய்ங்கரன் நிறுவனம் தயாரிக்கிறது. அய்ங்கரன் கருணாவிடம் இந்தப் படம் குறித்து விரிவாக விவரித்துவிட்டார் ஷங்கர். எல்லாமே அவருக்கு திருப்தியாக அமைந்ததாம்.

அடுத்து லைக்கா சுபாஷ்கரனிடம் பேச லண்டன் செல்கிறார் ஷங்கர்.

படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் ஆரம்பமாகிவிட்டன. ஷங்கர் கேட்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கத் தயாராகி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

 

தனுஷ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"காக்கா முட்டை' என்ற திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் வழக்குரைஞர்கள் குறித்து அவதூறான வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று கூறி சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், அகில இந்திய வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன் வழக்கு தொடுத்தார்.

HC orders to stop defamation case against Dhanush

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "காக்கா முட்டை' படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் தனுஷ், வெற்றிமாறன், அந்த படத்தின் இயக்குநர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அதில், "காக்கா முட்டை' படத்துக்கு 2 தேசிய விருதுகளும், பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக சித்திரிக்கவில்லை. எனவே, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அந்த வழக்கை ரத்து செய்வதோடு, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் உள்பட 4 பேருக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்ததோடு, இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி எதிர் மனுதாரர் மணிவண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்குத் திரும்பிய முன்னணி "தலைகள்" .. அட, கமலும்!

சென்னை: நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு மாயை நம் எல்லோரிடமும் இருக்கிறது, அதனை உடைத்து முன்வர எவரும் விரும்புவதில்லை. தோற்றம், நடை, உடை, பாவனை என்று எல்லாவற்றிலும் இளமை ததும்பும் பாடி என்றும் இளமையுடன் இருப்பவர்கள் தான், நடிகர்கள் என்ற ஒரு பிம்பம் இங்கே அனைத்து ரசிகர்களின் மனதிலும் பசுமரத்தாணி போல ஆழப் பதிந்து விட்டது.

ஆனால் சமீபகால தமிழ் சினிமாவில் பல அதிசய மாற்றங்கள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன, திருமணத்திற்குப் பின்பு சினிமாவில் நடிக்காத முன்னணி நடிகைகள் பலரும் தற்போது மீண்டும் படங்களில் தங்கள் வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர்.

 Salt & Pepper Look: Leading Actors Returning

அதே போன்று நடிகர்களிடமும் ஒரு சில மாற்றங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன, ஆமாம் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம்வரத் தொடங்கி இருக்கின்றனர்.

முதன்முதலில் இந்த விஷயத்தில் நடிகன் என்ற வளையத்தை விட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகர் அஜீத், நடிக்கத் தொடங்கியது மட்டுமின்றி பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் அவ்வாறே வலம்வரத் தொடங்கினார்.

அஜீத் ஆரம்பித்து வைத்த இந்த இமேஜ் தற்போது முன்னணி நடிகர்கள் வரை எதிரொலிக்கத் தொடங்கி இருக்கின்றது, ஆமாம் உலகநாயகன் கமல் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினி ஆகிய இருவரும் தற்போது பொது நிகழ்ச்சிகளுக்குசால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வரத் தொடங்கி உள்ளனர்.

ரஜினி ரஞ்சித்தின் படத்திற்காக இந்த லுக்கில் தோற்றமளிப்பதாக சொல்கிறார்கள், ஆனால் கமலின் இந்த மாற்றம்தான் பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஏனெனில் எப்போதுமே தனது தோற்றத்தில் அதிகக் கவனம் செலுத்துபவர் கமல், ஆனால் தற்போது லேசான தாடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் வலம்வரத் தொடங்கி இருக்கிறார்.

என்ன இந்த மாற்றமோ?

 

கலாம் மறைவு: நாடே துக்கத்தில் மூழ்கியிருக்க "பர்த் டே பார்ட்டி" கொண்டாடிய தனுஷ்!

சென்னை: இந்தியாவிற்கே துக்க இரவாக மாறிப்போனது 27ம் தேதி இரவு. நமது பாரதநாட்டின் பொக்கிஷமான அப்துல் கலாமை நாம் இழந்தது அன்றுதான். ஆனால் அந்த இரவில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் பார்ட்டி கொண்டாடியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவின ஜனாதிபதியாக ( தமிழ்நாட்டிலிருந்து 3 வது) உயர்ந்த அந்த மாபெரும் மனிதரின் மரணம் பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

Abdulkalam Died:  Dhanush Celebrating Birthday Party

ஆனால் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பிறந்தநாள் விழாவை, மனைவி மற்றும் நண்பர்கள் புடைசூழ இனிதே கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார் நடிகர் தனுஷ்.

சிறந்த நடிகர் என்று குடியரசுத் தலைவரின் கையால் தேசிய விருதை வாங்கிய நடிகர் தனுஷ் இவ்வாறு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய நாட்டிற்கு பெருமை தேடி தந்தவர் அப்துல் கலாம்!- இளையராஜா புகழாரம்

மக்கள் குடியரசுத் தலைவராக வாழ்ந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாம், இந்திய நாட்டுக்கே பெருமை தேடித் தந்தவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

அப்துல் கலாம் மறைவுக்கு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக இருந்த நமது ஆபஜெ அப்துல் கலாம் அவர்களின் மறைவு நம் நாட்டிற்கு நேர்ந்த பேரிழப்பு. மாளிகையில் உயர் பதவியில் இருந்தாலும் அவரது சிந்தனையெல்லாம் எளிய மக்களை பற்றியும், எதிர்கால இந்தியாவை வலிமையாக்க மாணவர்களை சந்திப்பதிலும்தான் இருந்தது. இந்த அரிய குணத்தினால் உலகத் தலைவர்களெல்லாம் இந்தியாவை பெருமையோடு பார்க்கும் நிலை வந்தது.

Ilaiyaraaja's condolence message for Dr Kalam's death

அவரது எளிமையான வாழ்க்கை எல்லோரையும் வியக்க வைத்தது. பதவியில் இருக்கும்போதும்,இல்லாதபோதும் இடைவிடாத கல்விப் பணியில் தன்னை தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.

உலக நாட்டுத் தலைவர்களிடையே பேசும்போது 'கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வரிகளை தமிழிலே சொல்லி தமிழ்ர்களுக்கு பெருமை தேடித் தந்தார்.

கடைசி நிமிடம் வரை மாணவர்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார் டாக்டர் கலாம் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

டாகட்ர் ஆபஜெ அப்துல்கலாம் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பு.

 

அப்துல்கலாம் மறைவிற்கு இரங்கல்: நாளை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரையை வந்து அடைந்து அங்கிருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபடும் கலாமின் உடல் நாளை தகனம் செய்யபடுகிறது, இதனையொட்டி நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Abdul kalam Crematoriums: Film Screening  Cancelled

இந்தியா முழுவதுமே ஆங்காங்கே துக்கம் கடைபிடிக்கப் பட்டாலும், தமிழ்நாட்டில் இதன் தீவிரம் சற்று அதிகமாகவே உள்ளது. நாளை கடையடைப்பு மவுன அஞ்சலி என்று மக்கள் "மக்களின் ஜனாதிபதிக்கு" இறுதி மரியாதையை செலுத்துகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 2 நேரம் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் அறிவித்து இருக்கிறார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் "முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பாக அமைந்து இருக்கிறது. நாளை அவரின் உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

 

பாகுபலியை தூக்கிச் சாப்பிட்ட பஜ்ரங்கி பைஜான்.. 12. நாளில் ரூ. 400 கோடியை அள்ளியது!

மும்பை: சல்மான் நடிப்பில் கடந்த ரம்ஜான் அன்று வெளியான பஜ்ரங்கி பைஜான் திரைப்படம், சத்தமில்லாமல் வசூல் சாதனை படைத்துள்ளது. 12 நாட்களிலேயே அது ரூ. 400 கோடி வசூலை ஈட்டி பாகுபலி வசூலை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டமாக வந்த பாகுபலியின் வசூலை வீழ்த்தி வசூலில் வரலாறு படைத்து வருகிறது பஜ்ரங்கி பைஜான் திரைப்படம். பாகுபலி முதல் 17 நாட்களில் சுமார் 385 கோடியை உலகம் முழுவதும் வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் 12 நாட்களிலேயே சுமார் 400 கோடியை வசூலித்து வரலாறு படைத்து இருக்கிறது பஜ்ரங்கி பைஜான்.

Box Office: Baahubali Clash With Bajrangi Bhaijaan

திரையிட்ட முதல் 2 நாட்களில் பெரிதாக வசூல் செய்யாத பஜ்ரங்கி பைஜான் அடுத்து வந்த நாட்களில் சுதாரித்துக் கொண்டது.

படத்தைப் பார்த்தவர்களின் கருத்துக்கள் படத்திற்கு ஆதரவாக மாறி சமூக வலைதளங்களில் பகிரப்பட, தற்போது வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருக்கிறது சல்மானின் படம்.

தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை கடுமையான போட்டி இந்த 2 படங்களுக்குத்தான் என்று கூறுகிறார்கள். 2 படங்களில் எந்தப் படம் வசூலில் முந்தப் போகிறது என்பது தெரியவில்லை.

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால் பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் 2 படங்களுக்குமே திரைக்கதை எழுதியவர் ஒருவரே. அவர் வேறு யாருமல்ல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் தான்.

எனவே பஜ்ரங்கி பைஜான் வசூலில் முந்தினாலும் அதைப் பற்றி ராஜமௌலி கவலைப் படமாட்டார். அவிங்களுக்கே கவலை இல்லை. நாம ஏன் கவலைப்படனும்!

 

இந்தக் கட்டுரைக்கு தலைப்பு இல்ல ராசா...

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

ஒருவர் மீதுகொண்ட பற்றும், அன்பும் எக்காலமும் சற்றும் குறையாமல் இருப்பது என்பது என்னைப்பொருத்தவரை இசைஞானி இளையராஜா மீதுதான். ஒரு நாளும், அவரது எந்த ஒரு செய்கையாலும் அந்த எண்ணம் மாறியதே இல்லை.

திங்களன்று அவர் தனது மானசீக `அண்ணா` எம் எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்திய `என்னுள்ளில் எம்.எஸ்.வி` நிகழ்ச்சிக்கு அரங்கத்துக்கு சென்ற முதல் ஆள் நான் தான். இசைமழை துவங்குவதற்கு முன்னதாக அங்கே பேய்மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

டிக்கெட் வைத்திருந்தவர்கள் போக, அரங்கத்தில் டிக்கட் வாங்கிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் வந்து தவித்த நூற்றுக்கணக்கான ரசிகர்களைப் பார்த்தபோது, நேரு விளையாட்டரங்கில் வைத்திருக்கவேண்டிய நிகழ்ச்சியை, ராஜா இவ்வளவு சிறிய காமராஜ் அரங்கில் வைத்துவிட்டாரே என்று கவலையாக இருந்தது.

டிக்கட் கிடைக்காத சிலர் முகம் வாடிப்போனதைப்பார்த்தபோது, விட்டால் காதுகளை அறுத்து நம்மிடம் கொடுத்துவிடுவார்களோ எனும் அளவுக்கு பயமாகவும் இருந்தது. நடக்கவிருப்பது வரலாறு குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டிய நெகிழ்ச்சி அல்லவா?

சரியாக 7 மணிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குட்டியாக ஒரு முன்னுரை வழங்க, அடுத்த நிமிடமே ராஜ தரிசனம். பாடல்கள் இருக்கட்டும், இன்று ராஜா நிறைய பேசவேண்டும் என்று மனதார விரும்பினேன். என் விருப்பம் அவர் மனதை எட்டாவிட்டால் எப்படி? தனது இளமைக்காலங்களில் எம் எஸ் வி. தன்னை எங்ஙனம் ஆட்கொண்டார் என்பது குறித்து அவ்வளவு அற்புதமாக விவரித்தார்.

14 வது வயதில் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி'யைக் கேட்டு மயங்கியதையும் அக்காலம் தொட்டே அவரை மானசீக குருவாக ஏற்று இசைப் பித்தனாக மாறியதையும் அவரது மாட்டு வண்டி எம் எஸ்.வி.யால் எப்படி பாட்டு வண்டியாக மாறியது என்பதையும் உணர்ச்சி மேலிடக் கூறினார்.

Muthuramalingan's Cinemakkaran Saalai

எளிமையான ஆர்கெஸ்ட்ரா. பிரபலமான பாடகர்களை அழைக்கவில்லை. சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு இல்லை என்னும் ராஜதர்பார் அமலில் இருந்தது. எம்.எஸ்.வி. அறிமுகமான 'உலகே மாயம் வாழ்வே மாயம்' பாடலில் தொடங்கி 'படகோட்டி` பாட்டுக்கு பாட்டெடுத்து' வரை சுமார் 25 பாடல்கள் இசைக்கப்பட்டன. 'மயக்கமா கலக்கமா' உள்ளிட்ட சில பாடல்களை ராஜாவே தனது மந்திரக் குரலில் பாடினார்.

சுமார் மூன்றேகால் மணிநேரம் நடந்த நிகழ்ச்சியின் போது, கச்சேரி 10 மணியைத்தாண்டியபோதும் யாரும் தங்கள் கடிகாரத்தை, குறிப்பாக 9.50க்குக்கூட பார்க்கவில்லை!

எம்ஜிஆரின் `பாட்டுக்கு பாட்டெடுத்து` பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறோம். அன்று இசைக்கப்பட்ட போது ரசிகர்கள் ஏதோ புதுசாய்க் கேட்பது கைதட்டி ரசித்துக் கேட்டார்கள்.

'இன்னைக்கும் யாரும் போடமுடியாத அபூர்வமான மெட்டு இது. சரணத்துல தொகையறா.. அதுக்கு எதிர் சரணம்னு அந்தக்காலத்துலயே எப்பிடி டியூன் போட்டிருக்கார் பாருங்க எங்க அண்ணா' என்று ராஜா முன்னுரைத்த பிறகுதான் பலருக்கு அப்பாடலின் அருமையே தெரிந்தது.

அக்கூட்டத்தில் என்னை வியக்கவைத்த ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். அவர் பெயர் சிவாஜிராவாம். மற்றவர்களைப் போலவே அவருக்கும் அழைப்பு இல்லை. ஆனாலும் வந்திருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்பே வந்திருந்து, ஒவ்வொரு பாடல் இசைக்கப்பட்டபோதும் ராஜாவை அவ்வளவு பரவசமாய்ப் பருகிக்கொண்டே இருந்தார்.

அவருக்கு சில இருக்கைகள் தள்ளியே நான் அமர்ந்திருந்தேன். ரஜினியை அன்று நான் அவ்வளவு நேசித்தேன். அவ்வப்போது ராஜா மேடையிலிருந்தபடியே 'சொல்லுங்க சாமி.. சொல்லுங்க' என்றபடி அவருடன் உரையாடிக்கொண்டே இருந்தார்.

பின்னர் எம்.எஸ்.வி குடும்பத்தினருக்கு நிதி அளிக்க மேடைக்கு அழைக்கப்பட்டபோது அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டவராய் ராஜாவை இறுகத் தழுவி கண் கலங்கியபோது அவர் சூப்பர்ஸ்டாராய் அல்ல ஒரு குழந்தையைப்போல் காணப்பட்டார்.

இணையங்களில் சில சில்லரைப் பயல்கள் ராஜா காசுக்கு ஆசைப்பட்டு அந்த நிகழ்ச்சியை நடத்துவதாய் எழுதியிருந்ததை நீங்களும் படித்திருப்பீர்கள்.

எங்கள் ராஜாவைப்போல் சக கலைஞனை உச்சிமுகர்ந்து பாராட்டும் மனம் வாய்க்கப் பெற்றவர்கள் அரிதினும் அரிது. அதிலும் சினிமாக்காரர்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த வகையில் ராஜா நடத்திய அந்த நிகழ்ச்சி வரலாறு குறிப்பெடுத்துக்கொண்ட அரிய நெகிழ்ச்சி. அந்த இறுமாப்போடு சொல்கிறேன்... தமிழனுக்கு ஒரே ராஜா எங்கள் இளையராஜாதான்!

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

 

சண்டக்கோழி 2- ல் நடிப்பது உண்மைதான்... ஆனால் வில்லனாக அல்ல!- சத்யராஜ்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் நான் நடிப்பது உண்மைதான்.. ஆனால் வில்லனாக நடிக்கவில்லை என்று சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

விஷால் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் ‘பாயும் புலி'. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து ‘சண்டக்கோழி' இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்கிறார்.

I'm not the villain for Vishal, says Sathyaraj

முதல் பாகத்தை எடுத்த லிங்குசாமியே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடி யார் என்பது முடிவாகவில்லை.

முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் விஷாலுக்கு அப்பாவாகவே நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு சத்யராஜ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை சத்யராஜ் மறுத்துள்ளார்.

"விஷாலின் ‘சண்டக்கோழி 2' படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்கிறேன்," என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.

 

விசால மனசு விஷால்... பரவை முனியம்மா சிகிச்சை- மருந்து செலவை ஏற்றார்!

பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மாவின் மருந்து செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடலை பாடி நடித்தவர் பரவை முனியம்மா. மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பரவை கிராமத்தைச் சேர்ந்தவர்.

கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்துள்ள பரவை முனியம்மா, கடைசியாக மான் கராத்தே படத்தில் நடித்தார்.

Vishal to take care of Paravai Muniyamma medical expenses

இப்போது உடல்நலக் குறைவால் அவதிப்படும் பரவை முனியம்மா, சிகிச்சைப் பெறவும் மருந்து மாத்திரை வாங்கவும் கையில் பணமின்றி அவதிப்படுவதாகவும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இதைத் தொடர்ந்து பரவை முனியம்மாவை போனில் தொடர்பு கொண்ட விஷால், அவரது சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரை செலவுகளை ஏற்பதாகக் கூறியுள்ளார். மேலும் இதனை ட்விட்டரிலும் உறுதி செய்து அறிவித்துள்ளார்.