இன்னும், இன்னும்னா... சோப்பு விளம்பரப்பட ஷூட்டிங்கில் கடுப்பான கத்ரீனா கைப்

Why Katrina Kaif Lost Her Temper While

மும்பை: பிரபல சோப்பு விளம்பர படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில் எப்பவும் கூலாக இருக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் டென்ஷனாகிவிட்டாராம்.

பாலிவுட் பிரபலங்களில் பலர் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதிலும் கத்ரீனா கைப் விளம்பரப் படங்களில் அதிகம் நடிக்கிறார். அதுவும் அதிக சம்பளம் பெற்று நடிக்கிறார். ஒரு பிரபல சோப்பு கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அந்த நிறுவன சோப்பு விளம்பரப் படப்பிடிப்பு அண்மையில் நடந்துள்ளது.

அப்போது கத்ரீனா குளிக்கும் தொட்டியில் படுத்து வாலிப நெஞ்சங்களை சுண்டி இழுக்கும் ஒரு முகப்பாவனை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். அவரும் ஓ.கே. சொல்லிவிட்டு தொட்டியில் படுத்து முகப்பாவனை செய்துள்ளார். அதற்கு இயக்குனர் இன்னும் கொஞ்சம் மயக்கும்படி போஸ் கொடுங்களேன் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட கத்ரீனா கடுப்பாகி இயக்குனரை எச்சரி்த்துள்ளார். அதன் பிறகு சத்தமில்லாமல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பேகக்ப் செய்துள்ளனர். அது என்னவோ கத்ரீனா வரும் பெரும்பாலான விளம்பரங்களில் வாலிபர்களை மயக்கும் முகபாவனையையே காட்ட வைக்கிறார்கள்.

 

எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா 'குண்டு'

Kareena Kapoor Already Married Saif   

மும்பை: தனக்கும் பாலிவுட் நடிகர் சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக இந்தி நடிகை கரீனா கபூர் குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கும், நடிகர் சைப் அலி கானுக்கும் வரும் 16ம் தேதி திருமணம் என்று சைபின் தாயார் ஷர்மிளா தாகூர் அறிவித்தார். ஆனால் இது குறித்து மணமக்கள் வாய் திறக்கவேயில்லை.

இந்நிலையில் கரீனா புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது தனக்கும், சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிய வேண்டிய வேலை மட்டுமே பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்ப புரிகிறது ஏன் இரண்டு பேரும் இத்தனை நாட்கள் அமுக்குனியாக இருந்தார்கள் என்று.

அவர்கள் திருமணத்திற்காக பாலிவுட்டே தயாராகிக் கொண்டிருந்தது. தற்போது திருமணம் முடிந்துவிட்டது என்று கரீனா தெரிவித்துள்ளதால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கவலைப்படாதீங்க கண்டிப்பாக பார்ட்டி கொடுப்பார்...

கரீனா நடிப்பில் அண்மையில் வெளியான ஹீரோயின் படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கிம்மின் காதலரின் ஜல்சா வீடியோ்க்கள் 'லீக்'

Randy Rapper Kanye West Made Tape Sequel

நியூயார்க்: கிம் கர்தஷியாவின் காதலர் கென்யே வெஸ்ட் தனது முன்னாள் காதலியர் இருவருடன் மும்முரமாக இருக்கும் வீடியோ படம் இரண்டு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கிம்மும் அவரது முன்னாள் காதலர் ரே ஜே ஆகியோர் ஜல்சாவாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியானதால்தான் கிம் உலகப் புகழ் பெற்றார். அந்த வீடியோ 2007ம் ஆண்டு வெளியானது. இந்த வீடியோவை இதுநாள் வரை வெஸ்ட் பார்க்காமலேயே இருந்து வந்தார். சமீபத்தில்தான் அந்த வீடியோவை அவர் பார்த்ததாகவும், அதை தனது பாடல் ஒன்றில் கூட வரியாக சேர்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் வெஸ்ட்டும், அவரது முன்னாள் காதலி ஒருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மொத்தம் இரண்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தால் அப்படியே அச்சு அசல் கிம்மைப் போலவே உள்ளது. ஆனால் அவர் வேறு பெண் என்கிறார்கள் உற்றுப் பார்த்தவர்கள்.

20 நிமிடம் ஓடுகிறது முதல் குஜால் வீடியோ. உல்லாசமாக இருந்தவர்களே அதை படம் பிடித்துள்ளனர். அதாவது வெஸ்ட்தான் இதன் ஒலி ஒளி அமைப்பாளராக இருந்துள்ளார்.

ஹோட்டல் அறை அது. அதில் வெஸ்ட்டும், அந்தப் பெண்ணும் தனிமையில் இருக்கிறார்கள். வெஸ்ட் கேமராவை அட்ஜஸ்ட் செய்ததும் அப்பெண் பேசுகிறார். தனக்கு 18 வயதாகிறது என்றும், திருமணமானவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பின்னர் இருவரும் மெதுவாக முன் விளையாட்டு, பின் விளையாட்டு, கிளைமேக்ஸ் என போகிறார்கள்.

2வது வீடியோ 40 நிமிடங்கள் வரை ஓடுகிறது. இதில் வேறு ஒரு பெண் இருக்கிறார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த வீடியோவில் வெஸ்ட், இடைவெளி இல்லாமல் அந்தப் பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் வெளியானதால் வெஸ்ட் டென்ஷனாகியுள்ளாராம். எப்படி இது ரிலீஸ் ஆச்சு என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் முதல் வீடியோவை, அவரது கம்ப்யூட்டரிலிருந்துதான் யாரோ திருடி வெளியே விட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 2வது வீடியோ எப்படி வெளியானது என்று தெரியவில்லை.

ரொம்ப வருஷத்திற்கு முன்பே இது எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது கிம்மை காதலிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே இதை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

இந்த வீடியோவால் வெஸ்ட், கிம் இடையிலான உறவில் கண்டிப்பாக இடி விழும் என்று சண்டைப் பிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

நடிகை அஸ்வினியின் உடலை எடுத்து்ச செல்லக் காசு கூட இல்லாத அவலம்- பார்த்திபன் உதவினார்!

Parthiban Helps Take Ashwini Body To Her Native Place

சென்னை: செத்தால்தான் தெரியும் அருமை என்பார்கள்... நடிகை அஸ்வினி விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. எத்தனையோ நடிகர்களுடன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சினிமா நடிகை என்ற பெருமை இருந்தாலும், கடைசியில் அவரது உடலை எடுத்துச் செல்லக் கூட காசு இல்லாமல் தவித்துள்ளனர் குடும்பத்தார்.

கடைசிக்காலத்தை பெரும் கஷ்டத்துடன்தான் கழித்துள்ளார் நடிகை அஸ்வினி. அவருக்கு வந்த புற்றுநோயை விட அவர் பட்டபாடுதான் பெரும் சோகமாக இருக்கிறது.

36 வயதில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் அஸ்வினி. அவரது உடலை புற்று நோய் சீர்குலைத்துப் போட்டு விட்டது. இறுதியில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சந்தித்தார் அஸ்வினி.

கவிஞர் புவியரசுவின் பேரன்தான் அஸ்வினியின் கணவர். வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே வாடி வந்துள்ளார். இந்த செய்தி இப்போதுதான் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. இவருக்கு கார்த்திக் என்ற ஒரே மகன். இவர், நடிகர் பார்த்திபனின் மகன் ராக்கி என்கிற ராதாகிருஷ்ணன் படிக்கும் அதே கல்லூரியில்தான் படித்து வருகிறார்.

பார்த்திபன்தான், அஸ்வினியை தனது பொண்டாட்டி தேவை படத்தின் மூலம் தமிழுக்குக் கூட்டி வந்தவர் என்பது நினைவிருக்கலாம். கார்த்திக் தனது தாய் படும் கஷ்டத்தையும் சிகிச்சைக்கு செலவு செய்யக்கூட வசதியில்லாத நிலையையும் ராக்கியிடம் அழுது புலம்ப, ராக்கி தனது தந்தையிடம் சொல்ல உடனே ரூ. 10,000 கொடுத்து உதவினாராம் பார்த்திபன்.

இந்த நிலையில் தற்போது அஸ்வினி இறந்த நிலையில் அவரது உடலை ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல பணம் இல்லாமல் தடுமாறியுள்ளது அஸ்வினியின் குடும்பம். இதையடுத்து பார்த்திபனே ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து உடலை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்து உதவியுள்ளாராம்.

தற்போது அனாதரவாக விடப்பட்டுள்ள கார்த்திக்கின் முழுப் படிப்புச் செலவையும் பார்த்திபனே ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரபலங்கள் வேண்டாம்... கைக்கு அடக்கமான நடிகர்கள் போதும்!

பிரபலங்களை நம்பி படமெடுப்பதில் நம்ம பேர்தான் கெடுது. நம்ம கைக்கு அடக்கமான நடிகரா இருந்தா, நினைச்ச மாதிரி எடுக்க முடியுது, என்கிறார் சமீபத்தில் சூப்பர் ஹீரோ படமெடுத்த இயக்குநர்.

இந்தப் படத்தை இயக்குநர் தொடங்கியபோது அவர் மீது ஏக எதிர்ப்பார்ப்பு எழுந்தது. பல நடிகர்கள் அவரது அடுத்த படத்துக்கு அப்போதே துண்டு போட்டு வைத்திருந்தனர்.

ஜி, நீங்க எப்ப சொன்னாலும் நடிக்க ஓடியாந்துடறேன் என்று கூறிவந்தனர்.

ஆனால் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்துசொல்லி வைத்த மாதிரி எல்லோரும் எஸ்ஸானார்கள். இயக்குநர் இதை எதிர்ப்பார்த்தே இருந்தார்.

அதனால் கொஞ்சமும் சளைக்காமல், ஓரிரு படங்களில் நடித்த சின்ன ஹீரோக்களை கூப்பிட்டு டெஸ்ட் எடுத்து சட்டென்று ஒப்பந்தம் செய்து, சைலன்டாக அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம்.

பெரிய ஹீரோ வேணாம்பா.. நம்ம கைக்கு அடக்கமா நடிகர் இருந்தா, திரையில் பிரமாண்டமாய் திரைக்கதையை எடுக்கலாம், என சொல்லி வருகிறாராம்.

 

அன்பு போதும்... ஆயுதம் வேண்டாம்! -ஐ.நாவில் ஐஸ்வர்யா ராய்

Aishwarya Rai Bachchan S Speech At Un

நியூயார்க்: உலகம் சமாதானத்துடன் இருந்தால் போதும். இன்றைய சூழலில் ஆயுதம் ஏந்துவதன் விளைவை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இளைய தலைமுறைக்கு அன்பு போதும், என்று ஐநா சபை விழாவில் பேசினார் ஐஸ்வர்யா ராய்.

அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் நடந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார் ஐஸ்வர்யா ராய்.

நிலையான எதிர்காலத்துக்கான நிலையான அமைதி என்ற தலைப்பில், அமெரிக்க மாணவர்கள் மத்தியில் அவர் பேசியது:

உங்களுடன் இருக்கும் போது நானும் ஒரு மாணவர் போன்று உணர்கிறேன். ஐ.நா. சபை மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை உள்ளது. ஏனெனில் இந்த அமைப்பினால்தான் சிறந்த ஒற்றுமையான உலகத்தை படைக்க முடியும். காக்கவும் முடியும். ஒற்றுமைதான் தைரியத்தையும், சிறந்த தலைமையையும் வழங்குகிறது. சகிப்பு தன்மை சிறந்தது. அதை நான் எனது தந்தையிடம் கற்று கொண்டேன்.

`நீங்கள்', `உங்களது', `நான்' என்ற அகந்தையை கைவிட்டு நாம், நாங்கள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகளை கைவிட்டு ஒருவர் மீது ஒருவர் அன்புகொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே அமைதியை பெற முடியும்.

ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது. எனவே, இளைய தலை முறையினர் ஆயுதத்தை கையில் எடுப்பதை கற்பனை செய்தும் பார்க்கக்கூடாது. ஏனெனில் இது உலகத்தையும், தலைமுறையையும் அழித்து விடும். ஆகவே அன்புடன் வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி, பாதுகாப்புடன் வாழ வேண்டும். அமைதி, சமாதானம் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல. அது உணர்வுகளின் வெளிப்பாடு," என்றாீர்.

முன்னதாக அவர் ஐநாவின் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா. சமாதான தூதரும், நடிகருமான மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மனித வாழ்வியல் நிபுணர் ஜானிகுடால், அமெரிக்க யூத எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான எலிவெசல், அமெரிக்க நடிகை மோனிக்காலமன் ஆகியோரை சந்தித்தார்.

இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் உலக மக்களுக்கு சமாதான செய்தி வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஓம் ஷாந்தி என்ற ஸ்லோகத்துடன் அவர் தனது பேச்சைத் தொடங்கினார். அதே ஸ்லோகத்துடன் முடித்தார்.

 

சமூகம் எங்களை ஒதுக்குகிறதே? நீயா நானா வில் ஆதங்கப்பட்ட துப்புறவு தொழிலாளிகள்!

Neeya Naana Vijay Tv Talk Show

மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலத்தை தடை செய்ய அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலித்து வரும் நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய துப்புறவு தொழிலாளர்கள், இன்றைக்கும் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறோம் என்று ஆதங்கத்தோடு பேசினார்கள்.

நலிவடைந்த தொழில்கள், நவீனமடைந்த தொழில்களைப் பற்றி ஞாயிறன்று நீயா நானாவில் விவாதம் நடைபெற்றது.

முன்பெல்லாம் பன்னீர் சோடாவும், கலர்களும் ஆக்கிரமித்திருந்த பெட்டிக்கடைகளை இன்றைக்கு கூல்டிரிங்ஸ்கள் நிரப்பியிருக்கின்றன. குச்சி ஐஸ்களும், பால் ஐஸ்களும் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்கு மாறியதால் ஐஸ் கம்பெனிகள் நலிவடைந்து விட்டன.

இதற்குக் கரணம் மாற்றம்தான். இன்றைக்கு இந்தியாவில் விவசாயம் தொடங்கி, மண்பாண்டத்தொழில், புகைப்படத்தொழில், ஒவியம், உள்ளிட்ட பல பாரம்பரிய தொழில் செய்யும் கலைஞர்கள் நலிவுற்ற நிலையில் இருக்கின்றனர்.

கணினி வந்த உடன் டைப்ரைட்டருக்கு வரவேற்பு குறைந்து போனது. டிஜிடல் ப்ளெக்ஸ் வந்த உடன் ஓவியக்கலைஞர்களுக்கு வாய்ப்பின்றி போனது என்று தங்களின் நிலையை பதிவு செய்தனர் நலிவடைந்த தொழில்களைப் பற்றி பேசியவர்கள்.

நவீனத் தொழிலைத் தொடங்கியவர்கள் எவ்வாறு தங்களில் தொழிலில் நவீனத்தை புகுத்தி வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான முத்துகிருஷ்ணன், மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றார்.

தொழில் நலிவடைந்து போனவர்களுக்கு அவர்களின் மரபு சிதைகிற வலி இருக்கிறது. எனவே மரபார்ந்த தொழில்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று கூறினார். இத்தகைய தொழிலை செய்பவர்களுக்கு மானியம் கொடுத்து அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இன்னமும் சாதியின் அடிப்படையில் நம்மீது சுமத்தப்பட்டுள்ள இழிவான தொழில்களை விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சவரத்தொழிலாளியின் பரம்பரை சவரத்தொழில்தான் செய்யவேண்டும், சலவைத்தொழிலாளியின் குடும்பம் பரம்பரையாக சலவைத்தொழில்தான் செய்யவேண்டும், துப்புறவு தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்ந்து அதே தொழிலை செய்யவேண்டும் என்ற நிலையை மாற்றவேண்டும் என்றும் தனது கருத்தை பதிவு செய்தார்.

இதனையடுத்து சாதீய ரீதியாக தொழிலைச் செய்து வரும் சில தொழிலாளர்கள் தங்களில் வலிகளை பதிவு செய்தனர். துப்புறவு தொழில் செய்யும் தங்களை இந்த சமூகம் ஒதுக்கித்தான் வைக்கிறது என்றும். மனிதக் கழிவுகளை அள்ளுவதால் நோய் தாக்கி நாங்கள் விரைவில் மரணமடைகிறோம் என்றும் அவர்கள் கூறியபோது அனைவரின் மனதும் ரணமானது.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பெண் ஒருவர், "நாங்கள் கீழானவர்கள் என்பதால் எங்களை இந்த சமூகத்தில் ஒதுக்கிவைக்கின்றனர், நீங்க கூட எங்களை நிக்க வச்சுத்தானே கேட்கறீங்க" என்றார்.

உடனே பதறிப்போன கோபிநாத், நீங்க எனக்கு அக்கா மாதிரி என்று கூறி கட்டி அணைத்தார். கேமராவுக்கு நல்லா தெரியணும்கிறதுக்காக நாங்க நிற்க வைத்திருக்கிறோம் என்று கூறினார்.

செய்யும் தொழில் நம்மை உயர்த்தவேண்டும். ஆனால் ஒருவர் செய்யும் தொழில் வாழ்நாளை பாதியாக குறைக்கிறது என்பதுதான் வேதனையான விசயம். மனிதக்கழிவுகளை மனிதர்கள் அள்ளும் அவலத்திற்கு முடிவு ஏற்படவேண்டும் என்றும் அவர்கள் பதிவு செய்தனர்.

கல்விதான் அனைத்தையும் மாற்றும் என்பதற்காக எங்கள் சந்ததிகளை நன்றாக படிக்கவைத்திருக்கிறோம் என்றனர் அந்த தொழிலாளர்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கோபிநாத், மரபார்ந்த அறிவும், நவீனமும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறி ஐஸ்கம்பெனி அதிபருக்கும், நவீன டி சர்ட் வடிவமைப்பாளருக்கும் பரிசுகளை வழங்கினார்.

 

வனயுத்தம் படம் பார்த்தார் முத்துலட்சுமி.. ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரிக்கை!

Muthulakshmi Watches Vanayudham Objects

சென்னை: வீரப்பன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வனயுத்தம் படத்தைப் பார்த்த அவர் மனைவி முத்துலட்சுமி, ஆட்சேபனைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றார்.

போலீசுக்கு சந்தனக் கடத்தல் மன்னனாகவும், அரசியல் கட்சிககளுக்கு தமிழின உணர்வாளராகவும் காட்சி தந்த வீரப்பன், தமிழக அதிரப்படையால் சில ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வீரப்பன் நடத்திய கடத்தல் சம்பவங்களை வைத்து ‘வனயுத்தம்' என்ற சினிமா தயாரிக்கப்பட்டது. கன்னடத்தில் ‘அட்டகாசா' என்ற பெயரில் இப்படம் ‘டப்' செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதையை காவல் துறையினரிடம் காட்டி அனுமதி பெற்று படமாக்கியதால், தன் கணவரை தவறாக சித்தரித்திருப்பார்கள் என்று கூறி, இந்த படத்தை திரையிட தடை விதிக்க கோரியிருந்தார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி.

படத் தயாரிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முத்துலட்சுமி கூறுவதுபோல் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் எதுவும் இந்த படத்தில் இடம்பெறவில்லை. ‘வனயுத்தம்' படத்தை முத்துலட்சுமிக்கு திரையிட்டுக்காட்ட நாங்கள் தயாராக உள்ளோம் என கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த படத்தை முத்துலட்சுமி பார்த்து ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். தயாரிப்பாளர் தரப்பில் சிறப்பு காட்சிக்காக ஏற்பாடும் செய்யப்பட்டது. ஆனால் முத்துலட்சுமி படத்தை பார்ப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரில் ‘வனயுத்தம்' சிறப்பு காட்சியை முத்துலட்சுமி பார்த்தார். தொடர்ந்து அப்படத்தின் கன்னட ரீமேக்கையும் அவர் பார்த்தார். அவருடைய வக்கீல், கோர்ட்டால் நியமிக்கப்பட்ட அட்வகேட் ஆகியோரும் அவருடன் அமர்ந்து படத்தை பார்த்தனர்.

இதையடுத்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை முத்துலட்சுமி நீக்க வலியுறுத்தி உள்ளார். அவரது ஆட்சேபனை கோர்ட்டில் தெரிவிக்கப்படும். அதன் பிறகு காட்சிகள் நீக்கப்பட்டு ‘வனயுத்தம்' விரைவில் திரைக்கு வரும் என தெரிகிறது.

 

‘பொண்டாட்டி தேவை’ நடிகை அஸ்வினி மரணம்

Pondatti Thevai Heroine Aswini Passes Away

சென்னை : ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நடிகை அஸ்வினி. இவர் நடிகை பார்த்திபனுடன் பொண்டாட்டி தேவை என்ற திரைப்படத்தில் நடித்தார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயாகியாக நடித்திருக்கிறார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஸ்வினி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிறு அதிகாலை 3.15 மணிக்கு மரணம் அடைந்தார். உடனே அவரது உடல் ஆந்திர மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்பட்டது.

 

மகத், மஞ்சு மனோஜ்... அடுத்து ஆர்யா? -மறுக்கிறார் டாப்ஸி

Tapsee Denies Affair With Arya   

டாப்ஸியின் காதல்கள் என்று தனியாகவே ஒரு படம் எடுக்கலாம் போலிருக்கிறது. அத்தனை அக்கப்போர் அவரைச் சுற்றி.

ஆரம்பத்தில் மகத்தை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் மோகன்பாபு குடும்பத்துடன் நெருக்கம் ஏற்பட்டதும், மகத்தை கழட்டிவிட்டுவிட்டாராம்.

மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணுவுடன் முதலில் நடித்தார். ரொம்ப நெருக்கம் காட்டியிருந்தார். ஆனால் வெளியில் அவர் எனக்கு அண்ணன் மாதிரி என்றார்.

அடுத்து இளையமகன் மஞ்சு மனோஜுடன் நடித்தார். இருவருக்கும் பற்றிக் கொண்டது. இந்த காதல் மகத்தை மகா ஆத்திரம் கொள்ள வைக்க, சமீபத்தில் சென்னையில் நடந்த மதுவிருந்தில் மகத்தும் மனோஜும் மோதியதும், மகத் மூக்குடைந்து மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றதும், மனோஜை போலீஸ் முதலில் துரத்தி பின் மேலிட தலையீட்டால் மூச்சுக்காட்டாமல் அடங்கியதும் தெரிந்திருக்கும்.

இப்போது டாப்ஸிக்கு ஆர்யா மீது பெரும் ஈர்ப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அஜீத் - ஆர்யா நடிக்கும் புதுப் படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து டாப்ஸிக்கு இந்த ஈர்ப்பாம்.

ஆனால் இது காதலில்லை என்கிறார் டாப்ஸி.

அவர் கூறுகையில், "விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் ஆர்யாவுடன் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுபோன்ற செய்திகள் வருகின்றன. அவர் என்னுடன் நடிக்கும் சக நடிகர்தானே தவிர அவரை நான் காதலிக்கவில்லை. யாரையாவது என்னுடன் இணைத்து எழுதுவதில் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறார்களோ தெரியவில்லை," என்றார்.

 

அர்ஜுன் - நந்தனா நடிக்கும் ‘பேரலை’

Arjun Nandhana Peralai

புதிய தயாரிப்பு நிறுவனமான இசை பிக்சர்ஸ் முதல் முறையாக பிரம்மாண்டமான பொருட்செலவில் அர்ஜீன் நடிக்கும் ‘பேரலை' என்ற படத்தை தயாரிக்க களம் இறங்கி உள்ளது.

‘பேரலை' படத்தை கே. எஸ் அதியமானின் இணை இயக்குனரான ஜி.கே என்ற புதியவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

மணிரத்னத்தின் ‘கடல்' மற்றும் வனயுத்தம் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் அர்ஜுன், ஜி.கே விடம் கதை கேட்டதுமே, ‘இது எனக்கான களம். நான் நடிக்கிறேன்' எனச் சொல்லி ஒரே ஷெட்யூலுக்கான கால்ஷஷீட்டை அள்ளிக்கொடுத்துள்ளார்.

‘கிருஷ;ணவேனி பஞ்சாலை' படத்தில் நடித்த ‘குட்டி சினேகா' நந்தனா இப்படத்தில் கதாநாயகியாக வெகு அழுத்தமான பாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக 'அன்பு' பாலாவும், உடன் நிறைய புதிய முகங்களும் அறிமுகமாக உள்ளனர். இவர்களுடன் சஞ்சனாசிங், இயக்குனர் ராஜ்கபூர் ஆகியோர் நடிக்க படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் ஷூட் செய்யப்படுகிறது.

டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவை ‘போர்க்களம்' மகேந்திரன் கையாள, க. முத்துக்குமார் எடிட்டிங் செய்கிறார்.

இசை பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கிறார் இசை. கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஜி. கே. வசனம் எழுதுகிறார் ‘போக்கிரி' புகழ் ஏ. பிரபாகர்.

படம் குறித்து ஜிகே கூறுகையில், "இருபத்தோராம் நூற்றாண்டின் சமூகநிலையை சொல்கிறது ‘பேரலை'. இன்றைய கணினி யுகத்தில் இளைஞர்கள் எவ்வாறு தவறான பாதையை நோக்கி இழுக்கப்படுகிறார்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சமூகத்தையும், சுற்றத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் பரபரப்பான திரைக்கதையில் சொல்கிறோம். ஒரே கதையில், மூன்று கோணங்களில் சம்பவங்கள் அலசப்படும் வித்தியாசமான பாணி இதில் கையாளப்படுவது இதன் சிறப்பம்சம். ‘ஆக்ஷன் கிங்' அர்ஜீனின் ரசிகர்களுக்குமான தீனியும் நிச்சயம் படத்தில் இருக்கும்," என்றார்.

 

துப்பாக்கியா... சரவெடியா.. மும்பை தமிழனா?

Will Thuppakki Have Name Change   

விஜய் நடிக்கும் துப்பாக்கியின் தலைப்பு பிரச்சினை ஒன்பதாவது முறையாக ஒத்திவைப்புக்குப் போயிருக்கிறது சென்னை நீதிமன்றத்தில்.

இந்த போராட்டத்தில் துப்பாக்கி தரப்பு சோர்ந்து போயிருக்கிறது. மீண்டும் வரும் அக்டோபர் 3-ம் தேதிக்கு வழக்கு தள்ளிப் போயிருப்பதால், நவம்பர் 13-ம் தேதி ரிலீசாகவிருக்கும் இந்தப் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்று கருதும் தயாரிப்புத் தரப்பு, இரு மாற்றுத் தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளதாம்.

அதில் ஒன்று சரவெடி. தீபாவளிக்கு வரும துப்பாக்கிக்கு சரியான மாற்றுத் தலைப்பு இதுதான் என்பது ஒரு தரப்பின் அபிப்பிராயம்.

இன்னொன்று மும்பைத் தமிழன். படம் முழுக்க மும்பையில் நடப்பதால், இந்தத் தலைப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கும். எனவே இதையே வைக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறதாம்.

அக்டோபர் 3-ம் தேதிக்கு மேலும் தடை நீடித்தால், அநேகமாக இந்த மாற்றுத் தலைப்புகளில் ஒன்றை சூட்டி, தீபாவளி களத்தில் இறக்கப் போகிறார்களாம்.

 

ஆஸ்கருக்குப் போகும் பர்ஃபி- ஏழாம் அறிவு, வழக்கு எண்ணுக்கு இடமில்லை!

Ranbir Kapoor S Barfi Emerges As Brand Ambassador    | பர்ஃபி  

ரன்பீர் கபூர், பிரியங்காசோப்ரா, இலியான நடித்துள்ள பர்ஃபி திரைப்படம் ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. உள்ளது.

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் காதலுடன் இருப்பவர்களை உருக வைத்துக்கொண்டிருக்கும் படம் பர்ஃபி. கேட்புத்திறனும், பேசும் திறனும் அற்ற கதாநாயகன், ஆட்டிஸம் பாதித்த கதாநாயகி இவர்களுக்கு இடையில் நுழையும் மற்றொரு பெண் என கதை மூவரைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் பெரும்பகுதி டார்ஜிலிங்கில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

அனுராக் பாஸு இயக்கியுள்ள இந்த திரைப்படம், கடந்தவாரம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருக்கிறது. இந்த திரைப்படம்தான் இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

இம்முறை தமிழிலிருந்து 7ம் அறிவு, வழக்கு எண், உட்பட மொத்தம் 19 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு செல்வதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இறுதியில் பர்ஃபி திரைப்படம் தேர்வானது. ஆஸ்கார் 2013 இன் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பட்டியலுக்கு பர்ஃபி தேர்வானதால், பிறநாட்டுப் படங்களுடன் போட்டியிடும். இதுவரை பல முறை இந்திய படங்கள் இப்பட்டியலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய படங்கள் மட்டுமே போட்டி பரிந்துரையில் இடம்பெற்றன. ஆனால் இதுவரை ஆஸ்கார் விருதை இந்திய திரைப்படம் ஒன்று கூட வென்றதில்லை.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள திரைப்படத்தின் இயக்குநர் அனுராக் பாஸூ, பர்ஃபி திரைப்படம் நிச்சயம் ஆஸ்கார் விருது வெல்லும் என்று கூறியுள்ளார். இதனிடையே பர்ஃபி திரைப்படம் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பிராண்ட் அம்பாஸிடராக தேர்வாகியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் மிகப்பெரிய மால்களிலும், முக்கிய நகரங்களிலும் இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று டார்ஜிலிங் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

 

மலையாள திரைப்பட நடிகர் திலகன் காலமானார்

Malayalam Actor Thilakan Dead

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகரான திலகன் இன்று அதிகாலை காலமானார்.

77 வயதாகும் திலகன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவர். கடந்த மாதம் 23-ந் தேதி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை 3.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

1979-ம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தவர் திலகன். மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய மற்றும் மாஇந்ல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

2009-ம் ஆண்டு பம்தஸ்ரீ விருது திலகனுக்கு வழங்கப்பட்டது. திலகனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

மீண்டும் சினிமாவில் ஹீரோயின் ஆன தேவயானி

Devayani Pair Up With Husband

இனியா, பிரியங்கா என இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மாவான பின்னும் சீரியல்களில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் தேவையானி. சன் டிவியின் முத்தாரம் தொடரில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் இல்லத்தரசிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் கணவர் ராஜகுமாரன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் "திருமதி தமிழ்' படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தன்னுடைய இந்த திடீர் மாற்றம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் தேவயானி.

சினிமாவில் தேவயானிக்கு என தனி முத்திரை இருந்தது. ஆனால் அதை பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்தது சீரியல்தான். என்னுடைய முதல் சீரியல் "கோலங்கள்' பெரிய ஹிட். நான்கு ஆண்டுகளுக்கு மேல் அந்த சீரியல் ஓடாதே வீடே இல்லை. அதைப் பார்க்காதவர்களே இல்லை. அந்தளவுக்கு அது ரீச் கொடுத்தது.

இப்போது "முத்தாரம்' சீரியலில் பரபரக்கும் போலீஸ் வேடம். என்னால் இப்படி நடிக்க முடியுமா என்று எனக்கே ஆச்சரியம். "காக்க காக்க' சூர்யா, "சாமி' விக்ரம் போல் "முத்தாரம்' ரஞ்சனி தேவி கேரக்டரும் டி.வி. ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்த இடம், அது தந்த உயரம் எல்லாமே ஆச்சரியம்தான். சீரியல் எனக்கு கிடைத்த வரம். அதை தந்த கடவுளுக்கு நன்றி.

சினிமாவை விட சீரியல்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. முழுமையான ஒரு நடிகையாக என்னை நானே உணர்ந்தது இங்கேதான். எனக்கு சீரியல்களை தவிர்த்து எதையும் யோசிக்க கூட நேரம் இல்லை. அந்த சமயத்தில்தான் என் கணவர் ராஜகுமரான் ஒரு கதை சொன்னார். நல்ல கதை நாமே தயாரிக்கலாம் நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று சொன்னேன். புதுமுகம் தேடும் போது சிக்கல் எழுந்ததால் நானே நடிக்க வந்துவிட்டேன். சினிமாவில் எதார்த்த கதைகளும், எதார்த்த முகங்களும்தான் இப்போது ஜெயிக்கின்றன. அதனால் எங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ் சினிமாவில் முன்பு எனக்கு ஜோதிகாவை பிடித்திருந்தது. சமீபத்தில் தமன்னா பிடிக்கும். அவ்வளவுதான். வேறு சொல்லிக் கொள்கிற மாதிரி யாரும் இல்லை. இப்போது எனக்கு சினிமா பார்க்க நேரம் கிடைப்பதில்லை. இப்பொழுது சீரியலுக்கே நேரம் சரியாக இருக்கிறது. மீதம் இருக்கும் நேரங்களை குழந்தைகளோடு செலவிடுகிறேன் என்று கூறிவிட்டு குழந்தைகளோடு குழந்தையாய் விளையாடப்போனார் தேவயானி.

 

சாட்டை மாதிரி படத்தை நாங்க மட்டும்தான் எடுக்க முடியும் – பிரபு சாலமன்

Only Directors Can Produce Movies Like Saattai

சின்ன படம்தான்.. வெளிநாட்டு லொகேஷன்களோ, ஆடம்பர செட்களோ எதுவும் இல்லை. முக்கியமாக வனிக ரீதியில் ஒரு காட்சி கூட இல்லை. ஆனாலும் இடைவேளை விடும்போது, ‘எதுக்குங்க.. அப்படியே கன்டினியூ பண்ணுங்க' என்று பார்வையாளர்கள் பலர் ஆர்வத்துடன் கேட்டது, புது இயக்குநர் அன்பழகனின் ஸ்க்ரிடுக்குக் கிடைத்த வெற்றி.

படமும் பரவலாக பேசப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் இந்தப் படத்துக்கு கவுரவமான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்திருப்பதும், மவுத் டாக் நன்றாக இருப்பதும் தயாரிப்பாளராக இயக்குநர் பிரபு சாலமனை சந்தோஷப்பட வைத்துள்ளது.

எப்படி இந்த ஸ்கிரிப்டை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது, "அன்பழகன் என் உதவி இயக்குநர்தான். மைனா சமயத்திலேயே இந்த ஸ்கிரிப்டை சொன்னார். நிச்சயம் பண்ணலாம் என்று சொன்னேன். இந்தக் கதையை எழுதும்போதே, தயாளன் என்ற பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை மனதில் வைத்துதான் எழுதியதாகச் சொன்னார்.

சமுத்திரக்கனியிடம் விஷயத்தைச் சொன்னதும்.. ‘இது நாம சேர்ந்து பண்ண வேண்டிய படம். இந்த மாதிரி ஒரு படத்தை நம்ம மாதிரி இயக்குநர்கள்தான் சேர்ந்து பண்ண முடியும்' என்றார்.

அவர் சொன்னது உண்மைதான். எங்களை மாதிரி இயக்குநர்கள் மனது வைத்தால் சாட்டை மாதிரி நிறை படங்கள் நிறைய வரும்," என்றார்.
வரணும் வரணும்... தமிழ் சினிமாவுக்கு அது நல்ல அந்தஸ்தைப் பெற்றுத் தரணும்!