சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கார்த்தி

Saguni Is Not Flop Karthi   

சகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி விமர்சனம் வந்தது உண்மைதான். ஆனால் அந்தப் படம் ப்ளாப் என்று சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டேன். வசூல்ரீதியாக படம் நன்றாகப் போனது," என்றார் நடிகர் கார்த்தி.

சென்னையில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய கார்த்தியிடம், சகுனி தோல்விப் படம்தானே என்று கேட்டனர்.

உடனே இதை மறுத்த கார்த்தி, "இன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து லைட்டாக ஒரு படம் எடுத்தோம். அது நன்றாகவே மக்களிடம் ரீச் ஆனது. ஆனால் சிலரது எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை போலிருக்கிறது. அதனால் படம் குறித்து எதிர்மறையாகப் பேசினார்கள். ஆனால் நாங்கள் நினைத்தது நடந்தது. வியாபார ரீதியிலும் வெற்றி, மக்களைச் சேர்ந்த விதத்திலும் வெற்றிதான்," என்றார்.

அடுத்து நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பிரியாணி படங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.

 

ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை கவுசல்யா!

Now Kousalya Joins The Club Nithyananda

சென்னை: கவுசல்யாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தொன்னூறுகளின் மிக முக்கிய நடிகை இவர். விஜய், முரளி, கார்த்திக் என முக்கிய நடிகர்களுடன் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களுக்குத் தாவி, இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஒரு பிரச்சினை... அது முதுகுவலி. பல டாக்டர்களிடம் போய் பார்த்தும் கேட்கவில்லையாம். இந்த வலிக்கு நித்தியானந்தா நல்ல ஹீலிங் தெரபி தருகிறார் என்று கேள்விப்பட்டு, தோழிகள் துணையுடன் பிடதிக்குப் போய் வந்தாராம். ஒரு முறை போய் வந்த பிறகு ஆசிரமத்தையே க்ளோஸ் பண்ணிவிட, இப்போது நித்தியானந்தா கேம்ப் போடும் ஆசிரமங்களுக்குப் போய் தன் வலிக்கு வைத்தியம் பார்த்துக் கொள்கிறாராம்.

வலி குணமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை. அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் இந்த ட்ரீட்மென்டில் முக்கியத் திருப்பமாக அமைந்தது, சிகிச்சைக்கு வந்த கவுசல்யா சிஷ்யையாக மாறிப் போனதுதான்!

வலிக்கு சிகிச்சை வேணும் சாமி என வந்து, நிரந்தர பக்தையானவர்தான் ரஞ்சிதாவும். இவரைத் தவிர, மாளவிகா, ராகசுதா, யுவராணி, அண்ணி சீரியல் மாளவிகா என நடிகைகள் பலரும் இந்த குரூப்பில் உள்ளனர்.

எப்போ யார் மூலம் அடுத்த டேப்போ.. எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம்.. தென்னாடுடைய சிவனே போற்றி!

 

வெள்ளிக்கிழமை... பெரிய படம் எதுவும் இல்லை!

Four Small Films Hit This Week

இன்று வெள்ளிக்கிழமை... பெரும் படங்கள் எனும் புயல் டல்லடித்து ஓய்ந்துவிட, சின்னப் படங்கள் வழக்கம்போல சளைக்காமல் வெளியாகி வருகின்றன.

இந்த வாரமும் நான்கு சிறிய படங்கள் வெளியாகின்றன. மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற காதல் படம், பொல்லாங்கு என்றொரு த்ரில்லர் மற்றும் சுழல் என்ற படம். ஷகிலா பீரடிக்கும் ஆசாமி என்ற படமும் வெளியாவதாகக் கூறியுள்ளனர்.

திரையரங்குகளில் பெரும்பாலானவற்றை இத்தனை நாளும் சகுனி, பில்லா படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது ஓரளவு அரங்குகள் 'ஃப்ரீ' ஆகிவிட்டதால், அவற்றில் இந்த சின்னப் படங்களை திரையிட்டுள்ளனர்.

இந்த வாரம் குழந்தைகளுக்குப் பிடித்த ஐஸ் ஏஜ் படத்தின் நான்காவது பாகமும் வெளியாகிறது. தமிழ்ப் படங்களுக்கு இணையான அளவு எண்ணிக்கையில் இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15-ம் தேதி வரை சிறிய படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கும். அந்த வகையில் இன்னும் அரை டஜனுக்கும் மேல் சின்னப் படங்கள் காத்திருக்கின்றன.

 

மீண்டும் சக்சேனா... சாக்ஸ் பிக்சர்ஸ் ஆரம்பம்... புதுப்படத்தை ரிலீஸ் செய்கிறார்!

 

நிஜ வாழ்விலும் இணைந்த சந்தோஷி– ஸ்ரீகர்

 

மான் வேட்டை வழக்கில் சிறைக்குப் போகும் சல்மான்!

 

தனுஷ் ஜோடியாக அமலா பால்? டெக்னிக் ஒர்க் ஆவுட் ஆகிடுச்சி போலிருக்கே!

Amala Play Against Dhanush

கொஞ்ச நாட்களாக அமலா பால் பற்றி ஆஹா ஓஹோவென்று அவருக்கு வேண்டிய சிலர் பப்ளிசிட்டி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

தனுஷை வைத்து சற்குணம் இயக்கும் சொட்ட வாளக்குட்டியில், அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அமலாவுக்கு தமிழில் உள்ள ஒரே படம் நிமிர்ந்து நில். வேறு படங்கள் இல்லாத நிலையில், தான் அமெரிக்கா போய் அழகைக் கூட்டிக் கொண்டு வந்த பெருமையை மீடியாவில் பரபரவென பரவவிட்டார்.

விளைவு, ஏற்கெனவே ஜோடி சேரவிருந்து கடைசியில் கைகூடாமல் போன தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். 3 படத்தில் தனுஷ் ஜோடியாக முதலில் ஒப்பந்தமாகி பிரஸ் மீட்டில் கூட கலந்து கொண்டவர் அமலா பால் என்பது நினைவிருக்கலாம்.

சொட்ட வாளக்குட்டி படத்தை கதிரேசன் தயாரிக்கிறார். இவர் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்தவர். களவாணி, வாகை சூட வா புகழ் சற்குணம் இயக்குகிறார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையிலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது.

அப்போது பார்த்து, மீடியாவில் இந்த திடீர் அழகி அமலாவின் பேட்டியும் படங்களுமாக நிறைக்க, சரி வரவச்சுத்தான் பார்ப்போமே என அழைத்தாராம் சற்குணம். பேச்சு இப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அளவுக்குப் போய்விட்டதாம்!

 

இரண்டாவது கணவருடன் பந்து பரஸ்பர விவாகரத்து மனு செய்த வனிதா!

 

விஜய் படத்துக்கு தடை நீட்டிப்பு... கவலையில் கலைப்புலி!

Producers Worry On Third Extension

சென்னை: விஜய் படம் துப்பாக்கியின் தலைப்புக்கு தடை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது, அதன் தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி' என்ற படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு கடந்த 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் எதிர்மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜுலை 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்தப் படத்தை வரும் அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் ஆகஸ்ட் வரை தடை தொடர்கிறது. இதனால் படம் குறித்து விளம்பரம் செய்யக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த நல்ல துப்பாக்கியை கள்ளத்துப்பாக்கி என்ன பண்ணிவிட முடியும் என கூறிவந்தனர். போகிற போக்கைப் பார்த்தால்....

 

வாழ்க பாரதம் மூலம் புகழ் கிடைத்தது: நடிகர் ராஜேந்திரநாத்

Tendral Serial Villain Rajendranath

போலீஸ் அதிகாரி வேடமா கூப்பிடுங்கள் அவரை என்று கூறும் அளவிற்கு பிரபலமானவர் ராஜேந்திரநாத். 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தென்றல் சீரியலில் வாழ்க பாரதம் என்று பேசி வில்லத்தனம் செய்ததால் எளிதில் பிரபலமாகிவிட்டார்.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜேந்திரநாத், தியேட்டர் உரிமையாளர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளின் பட விநியோகஸ்தர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்படக் கல்லூரியின் இயக்குநர் பிரிவில் பயின்ற மாணவர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல முகங்களைக் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம். ஆஜானுபாகுவான உடலமைப்போடு, உருட்டும் விழிகளுடன் பார்ப்பவரை வெளியிலிருந்தும் காணும் நம்மை சற்று பயம் தொற்றிக்கொள்ளவே செய்யும். பல திரைப்படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ், ஒரேயொரு சீரியலில் கிடைத்திருப்பது இவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தனது சீரியல் பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்

புத்திசாலித்தனம், ரவுடியிசம் இரண்டும் கலந்த ஒரு கேரக்டர் இருக்கிறது. நடிக்கிறீர்களா? என்று `தென்றல்' சீரியலின் இயக்குனர் குமரன் கேட்டபோது, முதலில் தயங்கினேன். சினிமாவில் நடித்துவிட்டு சீரியல் நடிப்பதா? என்று யோசனையாக இருந்தது. இயக்குனர்மீது நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்டேன்.

பொதுவாக சினிமாவில் வசனங்கள் அதிகம் இருக்காது. அப்படி இருந்தாலும் பிரித்துப் பிரித்து பேசவைத்து படம் பிடித்து விடுவார்கள். சீரியலில் அது நடக்காது. வசனம் பக்கம் பக்கமாக கொடுத்து நடிக்கச் சொல்வார்கள். ஆரம்பத்தில் சற்றே சிரமமாகத் தெரிந்தது. போகப்போக பழகி விட்டது. இதன் விளைவு, இப்போது சினிமாவில் பெரிய வசனம் என்றாலும் ஒரே டேக்கில் சுலபமாக பேசி விடுகிறேன்.

இதுவரைக்கும் 95 படங்கள் நடித்து முடித்து விட்டேன். வெளியில் பார்த்தால் யாராவது ஒன்றிரெண்டு பேர் என்னை உற்றுப்பார்ப்பார்கள். தயங்கித்தயங்கி நீங்கள் இந்தப்படத்தில் நடித்தீர்கள் தானே என்று கேட்பார்கள். அத்தோடு சரி. ஆனால் `தென்றல்' தொடரில் எப்போது நடிக்க ஆரம்பித்தேனோ அப்போது முதலே எந்த ஊரில் எந்த இடத்தில் பார்த்தாலும் `வாழ்க பாரதம்' என்ற குரல் கொடுக்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் கூட உற்சாகமாய் என் கேரக்டர் பற்றியும், கதை பற்றியும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். சீரியல் நடிப்பில் இது எனக்கு கிடைத்த பரிசாகவே இதை உணருகிறேன். தொடர்ந்து பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பை தொடர்வேன் என்று மகிழ்ச்சியாய் சொன்னார் ராஜேந்திரநாத்.

 

ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்

Rajini Is Honest Man Says Kamal

சென்னை: பிரபு மகனை வாழ்த்த, ரஜினி வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

கும்கி இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது:

"விக்ரம் பிரபு யானையின் இரண்டு தந்தங்களை பிடித்தபடி, அதன் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்து, அந்த யானையை அவர் தாத்தா (சிவாஜி)யுடன் ஒப்பிட்டார்கள். அதே யானையை பிடித்துக்கொண்டுதான் நானும், ரஜினியும் உயரே வந்தோம். எங்களை தூக்கி விட்டது அந்த யானைதான்.

நான் ஒரு தந்தத்தையும், ரஜினி ஒரு தந்தத்தையும் பிடித்துக்கொண்டோம். சிவாஜி குடும்பத்தில் என்னையும் ஒரு மகனாக ஏற்றுக்கொண்டது, அவருடைய பெருமிதம். ராம்குமார், பிரபு இருவரும் என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது, எனக்கு பெருமை. அவர் (சிவாஜி) இல்லாதபோதும் எங்கள் உறவு தொடர்கிறது.

விக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து ராம்குமார், பிரபு மட்டுமல்ல, அவருடைய பெரியப்பா நானும் பெருமைப்படுகிறேன். விக்ரம் பிரபு முதல் படியில் அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார் என்றார்கள். அவர் அருவி மீது அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார். அந்த அருவியில் இருந்து கொட்டுவது, எங்கள் அன்பு.

இந்த படத்துக்கு மினிமம் கேரண்டி' கொடுக்கலாம். 'கர்ணன்' சாம்பிள் பார்த்தீங்கள்ல...

நியாயமான மனுஷன்...

இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்தது பாக்கியம்.

நான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம், என் குருநாதர் (சிவாஜி) இருந்தபோதே `தேவர் மகன்' படத்தின் மூலம் அவருக்கு சலாம் போட்டதுதான். அது நான் செய்த இன்னொரு பாக்கியம்,'' என்றார்.