தமிழ் திரைப்படங்களை இலங்கையில் வெளியிட தடை விதிக்க பிக்குகள் கோரிக்கை!

Buddhist Extremists Sri Lanka Demand To Ban

கொழும்பு: இலங்கையில் தமிழ் திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று புத்த பிக்குகள் அமைப்பான ராவண சக்தி என்ற இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை திரைப்பட நிறுவன அதிகாரிகளிடம் ராவண சக்தி இயக்கத்தின் செயலாளர் இத்தெபனெ சத்தாசியா தலைமையில் இன்று பிக்குகள் குழு நேரில் சென்று நேரில் வலியுறுத்தியது. இலங்கையின் இறையாண்மை மீது தமிழகம் செல்வாக்கு செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தடையை விதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

இந்த அமைப்புதான் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள இந்தியா சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 3-ந் தேதி இலங்கை கிரிக்கெட் கவுன்சில் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தியது.

 

அஞ்சலியை காணவில்லை: ஆந்திரா ஹோட்டலில் இருந்து மாயம்: ஷூட்டிங் நிறுத்தம்

Anjali Goes Missing From Hyderabad Hotel

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி மாயமாகியுள்ளார்.

சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பிறகு நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஹோட்டலில் தங்கி அவர் ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது செல்போனுக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது.

அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பட ஷூட்டிங்கிற்காக தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் பணத்துக்காக தன்னை கொடுமைப்படுத்துவதாக அஞ்சலி புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிகை அஞ்சலி மீது கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் களஞ்சியம் புகார்!

Kalangiyam Files Complaint On Anjali

சென்னை: தன் மேல் புகார் சொன்ன நடிகை அஞ்சலி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் இயக்குநர் களஞ்சியம்.

இயக்குநர் களஞ்சியம் தன் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் என்றும் அவரால் தன் உயிருக்கு ஆபத்து என்றும் நடிகை அஞ்சலி புகார் தெரிவித்திருந்தார்.

இதனை கடுமையாக மறுத்த இயக்குநர் களஞ்சியம், இன்று அஞ்சலி மீது பதிலுக்கு புதிய புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

அதில், "நான் தமிழர் நலம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறேன். ‘பூமணி', ‘பூந்தோட்டம்', ‘கிழக்கும் மேற்கும்', ‘நிலவே முகம் காட்டு', ‘கருங்காலி' போன்ற படங்களை இயக்கியுள்ளேன். தமிழர் நலம் அமைப்பு மூலம் தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

சமுதாயத்தில் எனக்கு நல்ல மதிப்பு உள்ளது. நடிகை அஞ்சலியை 'சத்தமில்லாமல் முத்தமிடு' என்ற படத்தில் நான்தான் அறிமுகப்படுத்தினேன். பொருளாதார நெருக்கடியால் அப்படம் வெளிவரவில்லை. முதல் படத்தின் இயக்குனர் என்ற முறையில் அஞ்சலி குடும்பத்தினர் மீது எனக்கு பழக்கம் இருந்தது. குடும்ப நண்பராக சில ஆலோசனைகள் வழங்கியுள்ளேன். அஞ்சலியின் குடும்ப விவகாரங்களிலும் சொந்த பிரச்சினையிலும் நான் தலையிட்டது இல்லை.

அஞ்சலி நேற்று அளித்த பேட்டி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சம்பாதித்த பணத்தை நான் கையாடல் செய்து விட்டதாகவும் என்னால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து என்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

என்னை ஒரு அடியாள் போலவும் சித்தரித்து உள்ளார். இதனால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன். அஞ்சலி குற்றச்சாட்டுகள் தவறானவை. எனவே அஞ்சலி மீதும் அவரை பின்னால் இருந்து தூண்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தர்மபுரி கலவரமா 'கௌரவம்'? - ராதா மோகன் விளக்கம்

Radha Mohan Clarifies Gouravam   

தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரத்தை மையப்படுத்தி கௌரவம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ராதா மோகன்.

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சிரிஷ், யாமி குப்தா நடிக்கும் படம் கௌரவம். ராதா மோகன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் கதை, தர்மபுரியில் சமீபத்தில் நடந்த கலப்பு திருமண மோதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படத்துக்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை என்ற சாதிக் கட்சியின் தலைவரான பொங்கலூர் ரா.மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கலப்பு திருமணத்துக்கு எதிராக கௌரவ கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றும் சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் வன்முறைகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "கௌரவம் படத்தை தர்மபுரி கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் படத்தை ரிலீசுக்கு முன்பே காட்டத் தயார்," என்றார்.

 

அஞ்சலியை ரகசிய திருமணம் செய்தாரா இயக்குநர் களஞ்சியம்?

Director Kalangiyam Weds Anjali Secretly

அஞ்சலியை இயக்குநர் களஞ்சியம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தான் நடித்து சம்பாதித்த சொத்துக்களை முழுவதுமாக தனது சித்தியும் இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், இருவராலும் தன் உயிருக்கே ஆபத்து என்றும் அஞ்சலி குற்றம்சாட்டியுள்ளார்.

இப்போதைக்கு ஹைதராபாதில் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அஞ்சலி பற்றி பல உண்மைகளைச் சொல்வோம் என்று கிளம்பியுள்ளனர் அஞ்சலியின் சித்தியும் இயக்குநர் களஞ்சியமும்.

அஞ்சலியை ஒரு ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்தவன் நானே என்று களஞ்சியம் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம் அஞ்சலிக்கும் களஞ்சியத்துக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும், இதை வெளியில் சொல்லப் போவதாக மிரட்டித்தான் அஞ்சலியை தன் கட்டுப்பாட்டுக்குள் களஞ்சியம் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் தங்கள் ரகசிய திருமணத்தை அவர் ஊரறிய சொல்வார் என்றும், அதே போல சித்தி பாரதிதேவியும் அஞ்சலியின் பழைய கதைகளை வெளியிடத் தயாராவதாகவும் கூறப்படுகிறது.

 

தலைகீழாக படமாக்கி தனுஷை சிரமப்படுத்திய பரத் பாலா....

Dhanush S Mariyaan   

சென்னை: படத்தை தலைகீழாக படமாக்கியதால், உணர்ச்சிகளை வெளிக்காட்ட தனுஷ் மிகவும் சிரமப்பட்டார் என மரியான் பட இயக்குநர் பரத்பாலா தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மரியான் படம் பற்றி கூறும்பொழுது, "மரியான் என்பவன் ஒரு மீனவன். அவன் சாதாரண மீனவன் போல படகில் போய் மீன் பிடித்து வருபவன் அல்ல. ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவன்.

அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதற்கு அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் தனுஷ் கற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்தார்.

ஆடுகளம் பார்த்து வியந்தேன்...

2 வருடத்திற்கு முன்பு தேசிய விருது தேர்வாளாராக பணியாற்றி வந்தேன். அப்போது தனுஷ் நடித்த ‘ஆடுகளம்' படத்தை பார்த்தேன். அதில் தனுஷ் அந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உண்மையான நடிப்பை பார்த்து வியந்தேன்.

தனுஷ்க்கு பிடித்த மரியான்....

முன்பே ‘மரியான்' படத்தின் கதையை எழுதிவிட்டேன். தனுஷ்-க்கு இந்த கதை ரொம்பவும் பிடித்துவிட்டது. எனவே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவே படத்தை எடுக்கத் துவங்கி விட்டோம். 50 அடி ஆழ்கடலில், ஆக்ஸிஜன்கூட இல்லாமல், உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.

சூப்பர் லொகேஷன்ஸ்...

இந்த படத்துல லொகேஷன்ஸ் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். பாதி படம் கன்னியாகுமரி பக்கத்தில் நீரோடி என்ற கிராமத்திலும் மீதிப்படத்தை ஆப்பிரிக்காவில் சூடானிலும் படமாக்கியுள்ளோம். ஆப்பிரிக்கா பாலைவனம், அந்தமான் ஆழ்கடல் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும்போது அங்குள்ள சூழ்நிலை சரியில்லாததால் நமீபியாவில் படப்பிடிப்பை நடத்தினோம்.

நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் நண்பர்கள்...

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஏற்கெனவே நண்பர்கள். இந்த படத்தில் காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி என 5 விதமான எமோஷன்ஸ் இருக்கும். அந்த 5 உணர்வுகளையும் உள்வாங்கித்தான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் திரைக்கதையோடு ஒட்டியே ஒவ்வொரு பாடலும் பயணிக்கும். வாலி 2 பாடல்களும், கபிலன், தனுஷ், குட்டி ரேவதி ஆகியோர் தலா 1 பாடலும் எழுதியுள்ளனர்.

பிரான்ஸ் ஒளிப்பதிவாளர்...

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மார்க் கோனிக்ஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவு செய்த ‘ஜான் மேட் டாக்' என்ற பிரெஞ்ச் படத்தை பார்த்தபோது, அந்த படத்தில் இருந்த காட்சியமைப்புகள் இந்த படத்திற்கும் தேவைப்பட்டது. எனவே, அவரை தொடர்புகொண்டு சென்னைக்கு வரவழைத்தேன். அவருக்கு முழுக் கதையையும் விளக்கினேன். அவரும் ஒப்புக்கொண்டார். அவருடைய ஒளிப்பதிவில் இப்படத்தின் காட்சியமைப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

தலைகீழா படமாக்கினோம்...

படத்தை அப்படியே தலைகீழாக படமாக்கியுள்ளோம். அதாவது, கிளைமாக்ஸ் காட்சியை முதன்முதலாகவும், முதல் காட்சியை கடைசியிலும் படமெடுத்துள்ளோம். எனவே, கிளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கவேண்டிய உணர்ச்சிகளை முதலிலேயே கொடுக்கவேண்டும். இதற்காக தனுஷ் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

மே ரிலீஸ்..

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் பணிகளை முடித்து இந்த மாதம் இசையை வெளியிடவிருக்கிறோம். மே மாத முதல் வாரத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்."என்று அவர் கூறினார்.

ஆஸ்காரின் பாடல்...

இப்படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலைப் பாடியுள்ளார் என்பது இசை ரசிகர்களுக்கு ஓர் இன்பஅதிர்ச்சி செய்தி.

 

அஞ்சலிக்கு எதிராக புகார் தர தயாராகும் நடிகர் வெங்கடேஷ்! ஏன்... ஏன்?

Venkatesh File Complaint Against Anjali

ஹைதராபாத்: நடிகை அஞ்சலிக்கு எதிராக புகார் தரத் தயாராகிறார் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ். இது பலவிதமான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

நடிகை அஞ்சலி விவகாரம் ஒவ்வொரு நாளும் புதிய பரபரப்பைக் கிளப்பி வருகிறது. நேற்று முன்தினம் தனது சித்தி மீதும், இயக்குநர் களஞ்சியம் மீதும் பல அதிரடி புகார்களை மீடியாவிடம் கூறிய அஞ்சலி, ஹைதராபாதில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தெலுங்கில் அவர் இரு படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நடிக்க வசதியாக, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவரும் அவரது அங்கிள் பாபாய் என்பவரும் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று அஞ்சலி மீது சென்னையில் புகார் கொடுத்திருந்தார் மு.களஞ்சியம் . அடுத்த சில மணி நேரங்களில் அஞ்சலியைக் காணவில்லை என்று ஹைதராபாதிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இதனை அஞ்சலியின் சகோதரர் ரவிசங்கரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஏற்கெனவே பலவித பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் அஞ்சலி மீது, படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கூறி புகார் தரப்போவதாக நடிகர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இவருடன் போல்பச்சன் பட ரீமேக்கில் நடிக்கத்தான் அஞ்சலி ஹைதராபாதில் முகாமிட்டார்.

பொதுவாக இந்த மாதிரி சிக்கலில் நடிகைகள் சிக்கித் தவிக்கும்போது, உடன் நடிப்பவர்கள் உதவுவதுதான் வழக்கம். ஆனால் அஞ்சலிக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக வெங்கடேஷ் அறிவிப்பு அமைந்துள்ளது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக வெங்கடேஷ் படத்தை ஒப்புக் கொண்டதிலிருந்துதான் அஞ்சலிக்கு டார்ச்சர் ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்காக அஞ்சலியை பலவிதத்தில் டார்ச்சர் செய்தாராம் சித்தி பாரதிதேவி. அதன் பிறகே பொறுமையிழந்து மீடியாவிடம் ஓடிவந்தார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்குப் போவதா? பாடகர் மாணிக்க விநாயகம் வீடு முற்றுகை!

Manikka Vinayagam Trouble

சென்னை: இலங்கைக்குப் போகும் இசைக்குழுவில் இடம்பெற்றுள்ள பாடகர் மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.

இலங்கையில் நடக்கும் விழாக்களுக்கு தமிழகத்திலிருந்து யாரும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக திரையுலகினர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி என அனைத்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே இலங்கை சென்று வந்த அசின், பாடகர் கிரீஷ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி போன்றோருக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

இப்போது இலங்கை வவுனியாவில் கட்டப்பட்டுள்ள கோயில் ஒன்றில் நடக்கும் இசை நிகழ்ச்சியில், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் பங்கேற்றுப் பாடுவதாக தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகத்தினர் அவரது இன்று சென்னையில் உள்ள அவர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது வீட்டிலிருந்த மாணிக்க விநாயகம், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினார். இலங்கை செல்லும் இசைக் குழு எனது தலைமையில் செல்லவில்லை. அந்த குழுவில் நானும் ஒருவன். குழு செல்லாவிட்டால் நானும் செல்லமாட்டேன். ஆனால் அதை அந்தக் குழுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பின்னர் போலீசார் கைது செய்தனர்.

 

அமெரிக்க கண்காட்சியில் கமல் பங்கேற்பு - இந்தியா சினிமா சார்பில் சிறப்பு விருது!

Kamal Joins Nab Show At Las Vegas

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் நேஷனல் அசோஷியேஷன் ஆப் பிராட்காஸ்டர்ஸ் (NAB) கண்காட்சியில் தோன்றி, சர்வதேச அளவில் பாலிவுட் சினிமாவின் தாக்கம் குறித்து இன்று பேசுகிறார் நடிகர் கமல்ஹாஸன். அவருக்கு சிறப்பு விருதும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.

எல்லைகளுக்கப்பால் பாலிவுட் (Bollywood Beyond Borders) என்ற தலைப்பில் இன்று மாலை 4.15 முதல் 5.15 வரை சிறப்பு நிகழ்வு இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகிறது. இதில் நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா பற்றியும், விஸ்வரூபம் திரைப்பட உருவாக்கம் குறித்த காட்சிகளும் இடம் பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் கமலுடன் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொஸைட்டியின் இயக்குநர் ஜெஃப் க்ளைஸர், நடிகை பூஜா குமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைஸர்கள் டிம் மெக்கோவன், மதுசூதனன், இன்டெல் நிறுவனத்தின் ரவி வேல்ஹல் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய சினிமாவை கவுரவிக்கும் வகையில் கமல் ஹாஸனுக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

NAB கண்காட்சி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. 11-ம் தேதி முடிவடைகிறது. உலகின் 151 நாடுகளிலிருந்து 1600-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிதான் உலகின் மிகப் பெரிய எலக்ட்ரானிக் ஷோ என்பது குறிப்பிடத்தக்கது. வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகம் சார்ந்த எலெக்ட்ரானிக் கருவிகளின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை இங்கே தெரிந்து கொள்ளமுடியும்.

 

நடிகை ரேவதிக்கு 22ம் தேதி விவாகரத்து

Chennai Family Court Pronounce Verd

சென்னை: நடிகை ரேவதி, அவரது கணவர் சுரேஷ் மேனன் ஆகியோரது விவாரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் 22ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது. அனறு இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷா கேளுண்ணி என்ற இயற் பெயர் கொண்டவர் கேரளாவைச் சேர்ந்த ரேவதி. இவரது கணவர் பெயர் சுரேஷ் மேனன். இவர் தயாரிப்பாளராக, இயக்குநராக, கேமராமேனாக இருந்தவர். இருவரும் 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை.

இருவரும் ஆரம்பத்தில் மனமொத்த தம்பதிகளாகவே இருந்தனர். பின்னர் சந்தேகப் புயல் வீசவே இருவரும் ஒரே வீட்டில் தனித் தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரையும் சமசரப்படுத்த பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பலன் தரவில்லை.

இந்த நிலையில், பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு இரண்டு பேரும் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் சென்னை குடும்பநல கோர்ட்டில் இரண்டு பேரும் சேர்ந்து 1.10.12 அன்று பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை முதலாவது கூடுதல் குடும்பநல கோர்ட் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விசாரித்தார்.

இரண்டு பேரும் மார்ச் 31-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அன்று ஆஜரானார்கள். பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இரண்டு பேரும் நீதிபதி முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்று அதை பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 22-ந்தேதி தீர்ப்பளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று தெரிகிறது.

 

அஞ்சலியை நான் அம்பலப்படுத்துவேன்.. இயங்குநர் களஞ்சியம் பரபரப்புப் பேட்டி

I Will Expose Anjali Says Director Kalanjiyam

சென்னை: என்னைப் பற்றி கூறியுள்ள புகார்களுக்கு நடிகை அஞ்சலி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரைப் பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் இயக்குநர் மு.களஞ்சியம்.

தனது சித்தி பாரதி தேவி மற்றும் களஞ்சியம் ஆகியோர் மீ்து சரமாரியான புகார்களைக் கூறியுள்ளார் அஞ்சலி. ஹைதராபாத்துக்கும் அவர் இடம் பெயர்ந்து போய் விட்டார்.

இந்த நிலையில் அஞ்சலியின் புகார்கள் குறித்து களஞ்சியம் கூறுகையில், அஞ்சலியை நான்தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்தேன். சத்தமில்லாமல் முத்தமிடு என்ற படத்தில், நடிகை தேவயானியின் தம்பி ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைத்தேன். அந்த படம் வெளிவரவில்லை. முதல் பட டைரக்டர் என்ற முறையில், அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு பழக்கம் இருந்தது.

குடும்ப நண்பர் என்ற முறையில், நான் அவர்களுக்கு சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். பாரதிதேவி அஞ்சலியின் தாயார் இல்லை என்பது, எனக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. அவர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுவது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.

ஒரு காலத்தில், அஞ்சலியின் தாயாருக்கு நான் சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையில் அஞ்சலி என்னை இழுத்து விட்டு இருக்கிறார். இப்போது அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.

அஞ்சலி சம்பாதித்த பணத்தை எல்லாம் நான் சுருட்டி விட்டதாக கூறியிருக்கிறார். இதை அவர் நிரூபிக்க முடியுமா? நிரூபிக்காவிட்டால் நான் அவரை சட்ட ரீதியாக சந்திப்பேன்.

என்னை பற்றி தவறாக கருத்து தெரிவித்து விட்டதாக நாளையே அஞ்சலி மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அஞ்சலி பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிட வேண்டியிருக்கும் என்றார் களஞ்சியம்.

பாரதிதேவி, அஞ்சலி புகார் குறித்து விரிவாக பேச மறுக்கிறார். அஞ்சலி சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது என்று மட்டுமே அவர் சொல்கிறார்.

 

மதுரை கோர்ட்டில் பவர் ஸ்டார் சரண்... வேடிக்கை பார்க்க செம கூட்டம்!

Powerstar Appears Before Madurai Court

மதுரை: செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நேற்று மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராகி சரணடைந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.

மதுரை பைபாஸ் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர், கடந்த 2011ம் ஆண்டு தன்னிடம் பவர் ஸ்டார் சீனிவாசன், சொந்த தேவைக்காக 9 லட்ச ரூபாய் கடனாக பெற்றார். அதனை இரண்டு மாதங்களுக்குள் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி தரவில்லை.

கடந்த 03.01.2012 அன்று சீனிவாசன் தனது வங்கி காசோலையை கொடுத்தார். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லை என்று திரும்பியது. இதையடுத்து சீனிவாசனை பலமுறை நேரில் கேட்டுபார்த்தேன். அவர் பணம் கொடுக்காததால், சீனிவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மதுரை 2வது மாஜிஸ்ரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு விசாரணையில் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 25ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தார் மாஜிஸ்திரேட். இதையடுத்து நேற்று சீனிவாசன் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அவர், என்னிடம் வேலை பார்த்த கணேஷ் குமார், என்னுடைய ஏடிஎம் கார்டையும், என்னுடைய வங்கி காசோலையையும் திருடிக்கொண்டு சென்றுவிட்டார் என்று மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்.

இதனை வழக்கறிஞர் மூலம் மனுவாக கொடுக்குமாறு சொன்ன மாஜிஸ்ரேட், வழக்கு விசாரணையை தள்ளி வைத்ததோடு, 25ம் தேதி நடைபெறும் மறுவிசாரணையில் ஆஜராகுமாறும் பவருக்கு உத்தரவிட்டார்.

பவர் ஸ்டார் கோர்ட்டுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக் கண்டு களிக்க பெரும் கூட்டம் கூடி விட்டது. இதனால் கோர்ட் வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

 

'நயன்தாராவை பார்க்கத்தான் முடிஞ்சது.. ஆடியதெல்லாம் தனுஷ்தான்!' - சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan S Wish Shake Leg With Nayan

எதிர்நீச்சல் படத்தில் நயன்தாராவுடன் ஆட ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

3 படத்துக்குப் பிறகு தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் எதிர்நீச்சல். இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் ஹீரோயின்.

இந்தப் படத்தில் நயன்தாராவும் தனுஷும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம், 'உங்கள் படத்தில் நயன்தாரா ஆடியிருக்காங்க... ஆனா நீங்க அவங்க கூட ஆடலியே?' என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

இந்தப் பாட்டுக்கு தனுஷும் நயன்தாராவும் ஆடியுள்ளனர். அப்படியொரு ஆட்டம். எனக்கும் நயன்தாரா கூட ஆட ஆசையாத்தான் இருந்தது. ஆனால் அவரை அருகிலிருந்து பார்க்கத்தான் முடிந்தது. ஆட்டத்தையெல்லாம் தயாரிப்பாளர் தனுஷே பார்த்துக் கொண்டார்," என்றார்!

ஆனால் அடுத்து வரும் படங்களில் தன் ஆசை தீர்ந்துவிடும் என நம்புகிறாராம்!

 

அடுத்த மணிரத்னம் படத்திலும் ரஹ்மான் தான் இசை - சுஹாசினி

Mani Ratnam Team Up With Rahman Again

அடுத்த படத்திலும் ஏ ஆர் ரஹ்மான்தான் இசை அமைக்கிறார் என மணிரத்னம் மனைவி சுஹாசினி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மும்பையில் இளையராஜாவும் மணிரத்னமும் சந்தித்துப் பேசியதாகவும், இந்த சந்திப்பின்போது பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் கை கோர்க்க முடிவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

எனவே மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மணிரத்னம் மனைவி சுஹாசினி, இருவரின் சந்திப்பையும் மறுக்கவில்லை. ஆனால் மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு இசை அமைக்கப் போவது ரஹ்மான்தான் என்று கூறியுள்ளார்.

இந்தப் படம் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் அடிப்படையில் உருவாகும் சரித்திரப் படம். சில ஆண்டுகளுக்கு முன் ஆமீர்கானை வைத்து மணிரத்னம் தொடங்கி பின் நிறுத்திவிட்ட லஜ்ஜோவைத்தான் மீண்டும் புதுப்பிக்கிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

 

அடுத்த இந்திப் படத்துல ஜெயிச்சிடுவேன் - தமன்னா

Tamanna Hopes On Her Next Bol Lywoo

சென்னை: ஹிம்மத்வாலா படத்தில் தோற்றாலும், அடுத்த இந்திப் படத்தில் நான் ஜெயித்துக் காட்டுவேன் என்கிறார் தமன்னா.

எண்பதுகளில் ஜிதேந்திரா - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ஹிம்மத்வாலா. அந்தப் படத்தை தமன்னா - அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்தார் சஜித் கான்.

ஆனால் படம் படு தோல்வியைத் தழுவியது. இதனால் தமன்னாவின் பாலிவுட் கனவு அம்பேல் என்ற நிலை உருவாகியுள்ளது.

இருந்தாலும் தமன்னா கைவசம் இன்னும் ஒரு பெரிய இந்திப் படம் உள்ளது. முதல் படத்தில் விட்டதை, இரண்டாவது படத்தில் பிடித்துவிடுவோம் என்ற தைரியத்தில் உள்ளார் தமன்னா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹிம்மத்வாலா தோற்றுப் போனது உண்மைதான். ஒருவேளை ரசிகர்கள் ஸ்ரீதேவியோடு என்னை ஒப்பிட்டு விட்டார்களோ என்னமோ...

இந்தப் படம் தோற்றுப் போனதில் வருத்தமாக இருந்தாலும், உண்மையை ஏற்றுக் கொண்டு, அடுத்த வேலைகளில் இறங்க வேண்டும் என நினைப்பவள் நான்.

எனது அடுத்த இந்திப் படம் என்னை நிரூபிக்கும் என நம்புகிறேன்.

தமிழில் இனிமேல்தான் எனது பெரிய இன்னிங்ஸ் தொடங்கப் போகிறது," என்றார்.

 

'தலைவா'வால் இழுத்துக் கொண்டுபோகும் வாலு

Thalaivaa Delays Vaalu Climax   

சென்னை: தலைவா பட ஷூட்டிங்கிற்காக சந்தானம் ஆஸ்திரேலியா சென்றுள்ளதால் வாலு படத்தின் கிளைமாக்ஸ் எடுக்க முடியாமல் உள்ளது.

விஜய், அமலா பால் நடித்து வரும் தலைவா படத்தின் ஷூட்டிங் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சந்தானமும் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் அங்கு நடித்துக் கொண்டிருக்க அவர் எப்பொழுது வருவார் என்று வாலு படக்குழு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வாலு பட கிளைமாக்ஸில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் ஆகியோரை வைத்து ஒரு சிறப்பு காமெடி சீனை படம்பிடிக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். ஆனால் சந்தானம் இல்லாததால் கிளைமாக்ஸ் சீனை எடுக்க முடியாமல் உள்ளது. சந்தானம் எப்பொழுது வருவார் என்று வாலு படக்குழு ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்த கிளைமாக்ஸ் காட்சி ஒரு கோவிலில் வைத்து படமாக்கப்படவிருக்கிறது.

 

'என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் என் சித்தியும் டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு!'

Actress Anjali S Allegations On Her Aunt

ஹைதராபாத்: என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் அவருக்கு நெருக்கமாக உள்ள டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று நடிகை அஞ்சலி தெரிவித்தார்.

நடிகை அஞ்சலிக்கும், இத்தனை நாளாய் அவரது அம்மா என்று திரையுலகம் நினைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற பெண்மணிக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது. பாரதி உண்மையில் தனது தாய் இல்லை என்றும், சித்தி முறை உறவினர் என்றும் அஞ்சலி கூறியுள்ளார்.

மேலும் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் சித்தி பாரதியும் அவருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், தன் உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரக் கூடும் என்றும் அஞ்சலி அச்சம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவே ஹைதராபாதில் குடியேறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "என் குடும்பத்தினருக்கு செய்யாத பல விஷயங்களை என் சித்தி குடும்பத்தினருக்கு செய்தேன். என் உடன்பிறந்தவர்களைக் கூட நான் பார்ப்பதில்லை. எல்லாமே சித்திக்குத்தான் கொடுத்தேன்.

ஆனால் அவர் நன்றியில்லாமல் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். நான் இத்தனை காலமும் நடித்து சம்பாதித்த பணம் முழுவதையும் அவர் சுருட்டிக் கொண்டார். இதற்கு இயக்குநர் களஞ்சியமும் உடந்தை.

இனி என் மீது அபாண்டமாக எப்படி வேண்டுமானாலும் பழி போடுவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்து வரும் வாய்ப்புள்ளது. எனவேதான் சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து விட்டேன்.

என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் கூட அதற்கு முழு பொறுப்பு என் சித்தியும் இயக்குநர் மு களஞ்சியமும்தான். இன்னும் சில தினங்களில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு உண்மைகளையும் சொல்லப் போகிறேன்," என்றார்.

 

சினிமாவில் நடிக்க தில் இருக்கா?

Actors Hunt New Movie Karma Aid0136

"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெயரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கிறது.. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!

இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

இப்படக்குழுவினர் இன்று சென்னை எம்எம் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இப்படத்தின் கதையை தற்போதுள்ள பிரபல நடிகர்களிடம் சொல்லி நடிக்க கேட்டேன். அவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கதை பிடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்தின் எதிர்மறை தன்மையைப் பார்த்து தயங்குகிறார்கள். அதனால்தான் இப்படத்தில் நடிப்பதற்கு தைரியமான புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். நடிகர்கள் மட்டுமல்ல, இப்படத்தில் கேமராமேன், இசையமைப்பாளர் உள்பட அனைத்து டெக்னீஷியன்களும் புதிய முகங்களாக இருந்தாலும் அனைவரும் திறமைசாலிகள்.

புதுமுக நடிகர் தேர்வை வித்தியாசமாக செய்ய இருக்கிறோம். இப்படத்தில் நடிக்க விருப்பமுள்ள நடிகர், நடிகைகள் தங்களின் 3 விதமான போட்டோக்களையும், வீடியோ சாம்பிள்களையும் karmamoviecasting@gmail.com என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் எங்களது பேஸ்புக் தளத்தில் இடம்பெறுவார்கள். அவர்களில் யார் ரசிகர்களிடம் அதிக வாக்குகள் (likes and comments) பெறுகிறாரோ அதனடிப்படையில் இப்படத்தின் கதாநாயகன், கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம்.

தில் இருக்கிறவங்க சோதனைக்கு தயாராகலாம்!

 

ஒரு கோடி சம்பளம் கேட்டேனா? - சிவகார்த்திகேயன் விளக்கம்

Sivakarthikeyan Denied Reports On Rs 1 Cr

சென்னை: ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை, என்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி, மெரீனா படத்தில் ஹீரோவானவர் சிவகார்த்திகேயன். பின்னர் மனம் கொத்திப் பறவை, 3 படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவரும் விமலும் நடித்து வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அவர் இன்று சென்னை ரெசிடென்சி டவரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நான் ஏற்கெனவே சில படங்களில் நடித்துள்ளேன். ஆனால் பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது கேடி பில்லா கில்லாடி ரங்காதான்.

நான் ஒரு படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக சிலர் எழுதியுள்ளனர். நான் ஒருபோதும் அப்படி கேட்கவில்லை. அப்படி கேட்கும் நிலையில் நான் இல்லை என்பதையும் அறிவேன். இனி வரும் படங்களுக்குத்தான் சம்பளத்தை உயர்த்த வேண்டும்", என்றவரிடம், 'உங்கள் அடுத்தடுத்த படங்களில் யாரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போடுகிறீர்களாமே?" என்று கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "அதிலெல்லாம் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. இன்னொன்று நான் சொன்னவுடனே இவரை ஹீரோயினாகப் போடலாம் எனும் அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை," என்றார்.

அவரிடம் கேட்கப்பட்ட இன்னும் சில கேள்விகள்...

ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கும் ஐடியா இருக்கா?

நம்மள காமெடியனாவே பார்த்துப் பழகிட்டாங்க. அதனால இப்போதைக்கு இதே ரூட்டுலதான் போயாகணும். மெல்ல மெல்ல ஆக்ஷன் ரூட்டுக்கு மாறிடலாம்.

ஒரு படத்தை இயக்கும் யோசனை உண்டா?

உண்மையில் நான் இயக்குநராகத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நடிகனாகிவிட்டேன். உள்ளுக்குள் ஒரு படத்தை இயக்கும் ஆசை இருக்கு. ஆனால் இயக்குநர் படும் பாட்டைப் பார்த்தபிறகு அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துவிட்டேன்.

சந்தானமும் நீங்களும் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பேசிவைத்துக் கொண்டிருக்கிறீர்களாமே?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. வாய்ப்புக் கிடைத்தால் நடிப்பேன்.

உங்களுக்குப் பிடித்த காமெடியன் யார்?

கவுண்டமணி.