இறுக்கிப் பிடித்த நடிகர்: காயம்பட்ட நடிகை சோனாக்ஷி சின்ஹா

மும்பை: தேவர் இந்தி படப்பிடிப்பில் சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரவுடியாக நடித்த நடிகரால் கையில் ரத்தம் கட்டிவிட்டது.

ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை இறுக்கிப் பிடித்த நடிகர்: காயம்பட்ட நடிகை சோனாக்ஷி சின்ஹா  

தேவர் படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,

காட்சி ஒன்றில் ரவுடியாக நடிக்கும் நடிகர் ஒருவர் என் கையை மிகவும் இறுக்கமாக பிடித்தார். அவர் கை மிகவும் பெரியதாக வேறு இருந்தது. விளைவு என் கையில் ரத்தக்கட்டு என்றார்.

படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு காயம் ஏற்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் ரஜினி ரசிகன்தான்.. ஆனா கமல் படத்திலும் நடிக்கணும்! - சந்தானம்

சென்னை: அடிப்படையில் நான் ரஜினி ரசிகன்தான். ஆனாலும் கமல் ஹாஸனுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் நடிகர் சந்தானம்.

காமெடியன் சந்தானம், ஹீரோவாக புரமோட் ஆகியுளள படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இந்தப் படம் சுமாராகப் போனாலும், இரண்டு முறை சக்ஸஸ் பார்ட்டி வைத்து வெற்றிப் படம் என உறுதி செய்து கொண்டார்கள்.

நான் ரஜினி ரசிகன்தான்.. ஆனா கமல் படத்திலும் நடிக்கணும்! - சந்தானம்

படம் வெளியான பத்து நாட்கள் கழித்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சந்தானம்.

படம் மிகப் பிரமாதமான வெற்றி கிடைத்ததாகக் கூறிய அவரிடம், ரஜினியின் லிங்கா படத்தில் நடிப்பது குறித்து கேட்டோம்.

லிங்காவில் நடிக்கிறேன்

அவர் அளித்த பதிலில், "நான் ரஜினி சாரின் தீவிர ரசிகர். அவருடன், ‘எந்திரன்' படத்தில் நடித்தது என் அதிர்ஷ்டம். அவருடன் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். இப்போது, ‘லிங்கா' படத்திலும் நடிக்கிறேன். மீண்டும் அவருடன் நடிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்," என்றார்.

கமலுடன்

கமல் ஹாசனுடன் நடிக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டபோது, "நான் ரஜினி ரசிகராக இருந்தாலும், கமல் ஹாசனுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்றார்.

சம்பளம் பேசுவதில்லை

'சந்தானம் என்னிடம் சம்பளம் பற்றி பேசுவதே இல்லை' என்று இயக்குநர் சுந்தர் சி. கூறியது குறித்து கேட்டபோது, "அது உண்மைதான். அவரிடம் மட்டுமல்ல. இன்னும் சிலரிடம் கூட, இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று நான் கேட்பதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொள்கிறேன். சிலரிடம் வாங்காமலும் இருந்திருக்கிறேன்," என்றார்.

 

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாடகர் அங்கித் திவாருக்கு மும்பை கோர்ட் ஜாமீன்

மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாலிவுட் பின்னணி பாடகர் அங்கித் திவாரிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான பாடகர் அங்கித் திவாருக்கு மும்பை கோர்ட் ஜாமீன்

பாலிவுட் பாடகாரன அங்கித் திவாரி(24) நண்பர்கள் மூலம் தனக்கு பழக்கமான 28 வயது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கித் திவாரியை கடந்த 8ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் தன் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறி அங்கித் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு வியாழக்கிழமை ஜாமீன் வழங்கியது.

அங்கித் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக அங்கித் தெரிவித்துள்ளார்.

 

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து

பிஆர்ஓ: ரியாஸ் அகமது

தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன்

கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார்

இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்


இந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்...

இத்தனை அழுத்தமான சரித்திரக் கதையை, எடுத்த எடுப்பில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முழு நீள திரைப்படமாகவே தர முடியும் என்று நம்பி களமிறங்கிய சவுந்தர்யா ரஜினியை பாராட்டிவிடுவோம். ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் நல்ல முயற்சி.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்  

இந்த தொழில்நுட்பத்தில் தான் நடித்தால் என்ன மாதிரி விமர்சனங்கள் எல்லாம் எழும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தும், ஒரு முன்னோடியாக நின்று நடித்த ரஜினி நிச்சயம் திரையுலகின் பெருமைதான்!

சரி, கோச்சடையான் கதைக்கு வருவோம்.

ராணா ஒரு பெரும் வீரன். கலிங்காபுரி நாட்டின் படைத் தலைவன். அவன் படையுடன் போன இடமெல்லாம் வெற்றிதான்.

கலிங்காபுரியின் பரம விரோதி நாடு கோட்டைப்பட்டினம். இந்த நாட்டை ஜெயித்தால்தான் வெற்றி பூரணமாகும் என மன்னன் ராஜ மகேந்திரனிடம் (ஜாக்கி ஷெராப்) கூறுகிறான் ராணா.

அதை ஒப்புக் கொண்டு பெரும் படையோடு கோட்டைப்பட்டினம் நோக்கி கிளம்புகிறான் ராணா. செய்தி அறிந்து கோட்டைப்பட்டின படைகளும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) மோதலுக்குத் தயாராகின்றன.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

இரு நாட்டுப் படைகளும் பெரும் சமவெளியில் மோதத் தயாராகின்றன. அதற்கு முன் ராணாவும் செங்கோடகனும் சந்திக்கிறார்கள். திடீரென நண்பா என கட்டித் தழுவுகிறார்கள்... ராணாவுடன் வந்த சேனையில் முக்கால்வாசி கோட்டைப்பட்டினப் படையுடன் சேர்ந்து கொள்ள, மீதிப் படை கலிங்காபுரிக்கு திரும்பி ஓடுகிறது.

-இதுதான் கதையின் ஆரம்பம்... ஏன் இப்படி நடந்தது... தான் விசுவாசமாக இருந்த, தன்னை நம்பிய மன்னனை மாவீரன் ராணா ஏன் இப்படி ஏமாற்றினான் என்பதெல்லாம் மீதி ஒருமணி நேரக் கதை. அதைத் திரையில் பாருங்கள்!

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

படத்தின் கதை ரொம்ப எளிமையானது. ஒரு ஊர்ல ஒரு ராஜா..அவனுக்கும் அடுத்த நாட்டுக்கும் சண்டை வகைதான். ஆனால் அதில் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் காரணம் வைத்த விதம் நம்மை எளிதில் கவர்கிறது. 'நம்மை விட திறமையானவனை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்ற ஒரு மன்னனின் ஈகோ, அவன் ராஜ்யத்தை எந்த எல்லைக்குக் கொண்டுபோகிறது என்பதை அடுத்த பாதியில் கோச்சடையான் மூலம் சொல்லியிருக்கிற விதம் அருமை.

ரஜினியின் தோற்றம், அவரது உடல் மொழி, சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட சட்டென்று முகத்தில் காட்டியுள்ள விதம் எல்லாமே பிரமிக்க வைக்கிறது. அந்த அட்டகாசமான அறிமுகக் காட்சியில் தொடங்கி, கடைசி காட்சி வரை ரஜினிதான் படத்தில் பிரதானமாய் நிற்கிறார்.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

பல காட்சிகளில் மோஷன் கேப்சரிங் காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், ராணா ரஜினியின் முகம், நடனம், சண்டை என அனைத்திலும் நிஜ ரஜினியைப் பார்க்க முடிகிறது. செங்கோடன் அரசவையில் ரஜினி முதல் முதலாக நுழையும் போது அவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் இது நிஜ ரஜினியா அவது நடிப்பு பதிவாக்கமா என யோசிக்க வைக்கிறது.

ரஜினி உருவத்தை வடிவமைத்ததில் தெரியும் சின்னச்சின்ன குறைகளைக் கூட சரிகட்டிவிடுகிறது அவரது காந்தக் குரல்.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, ஆதி ஆகியோரில், ஆதிக்கு மட்டும் மோஷன் கேப்சரிங் பக்காவாக செட் ஆகிறது.

அடுத்தவர் நாசர். படம் முழுக்கவே வருகிறார், இவருக்கும் உடை, உருவ வடிவைப்பு பிரமாதமாகப் பொருந்துகிறது.

ராணாவின் நண்பராக வரும் சரத்குமாருக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையே இல்லை. அதிலும் அவருக்கும் ருக்மணிக்கும் ஒரு பாட்டு வேறு.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

படத்தின் இன்னொரு ஆச்சர்யம் நாகேஷ். அவரது உருவம், குரல், நகைச்சுவை அனைத்துமே அச்சு அசலாக உள்ளன. அருமை.

இந்தப் படத்தின் இரு பெரிய தூண்கள் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் - பின்னணி இசை மற்றும் கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை - வசனம்.

கதையின் அடிப்படையே அரசியல் என்பதால், அரசியல் சாணக்கியத்தனம், அரசியல் முத்திரை வசனங்கள் எல்லாம் ஆங்காங்க சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன. பார்வையாளர்கள் முறுக்கேறி கைத்தட்டுகிறார்கள். கோச்சடையான் காட்சிகளில் வரும் முடிச்சுகள் சுவாரஸ்யமானவை.

சேனாவின் பாத்திரம் வரும்போது படம் முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாகம் பண்ணுவார்கள் போலிருக்கிறது.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

படத்தின் ஆகப் பெரிய குறை, படத்துக்கான மோஷன் கேப்சரிங் வேலைதான். அதை மறுப்பதற்கில்லை. ரஜினியின் கண்களில் இருக்க வேண்டிய உயிர்ப்பு இல்லை.

பாத்திரங்களின் நடையில் இயல்பான வேகம் குறைந்து காணப்படுவது இன்னொரு குறை. ரஜினிக்கு அழகே அந்த வேக நடைதானே... அனைத்துப் பாத்திரங்களின் கால்களும் சற்று வளைந்த மாதிரியே இருப்பதை மோஷன் கேப்சரிங் குழு கவனிக்க மறந்தது ஏனோ? ரசிகர்களை விட தன் அப்பாவை அதிகம் பார்த்து ரசித்த சவுந்தர்யா எப்படி இதைக் கவனிக்காமல் விட்டார்?

இந்தப் படத்தை அவதார் மாதிரி நிஜ ரஜினி பாதி, மோஷன் கேப்சரிங் பாதி என்று எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

ஆனாலும், ஒரு முழுப் படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் எடுத்திருப்பது அசாதரணமானதுதான். அந்த வகையில் இந்திய சினிமா தனது பாரம்பரிய எல்லையைவிட்டு, புதிய தொழில்நுட்ப எல்லைக்குள் முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளது கோச்சடையான் மூலம்!

 

கோச்சடையானுக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது!- உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: இன்று வெளியாகும் கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "திரைப்பட தணிக்கை துறையிடம் 'யு' சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படம் ஆகியவைகளுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

கோச்சடையானுக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது!- உயர்நீதி மன்றம் உத்தரவு

இந்த அரசாணையின்படி பல திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசிடம் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைப் பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் வரியை வசூலிப்பதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் 2011-ம் ஆண்டு அரசாணைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில், 'தெனாலிராமன்' மற்றும் 'என்னமோ ஏதோ' ஆகிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கேட்டு அந்த திரைப்படங்களில் தயாரிப்பாளர் அரசிடம் விண்ணப்பம் செய்தனர். வரி விலக்கு தொடர்பான அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அவர்களது விண்ணப்பத்தைப் பரிசீலிக்க முடியாது என்று தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளர், ஆணையாளர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் தமிழக அரசு 'கோச்சடையான்' படத்துக்கு வரி விலக்கு அளித்து கடந்த 12-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இந்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளபோது, இதுபோன்ற வரி விலக்கு அளிக்க முடியாது. ஆனால், கோச்சடையான் படத்துக்கு எப்படி வரி விலக்கு வழங்கப்பட்டது? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் அல்லது தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ் ஏதாவது ஒரு உத்தரவு பிறப்பிக்கும்போது, தமிழக அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பதையும் இந்த அதிகாரிகள் கவனிக்கத் தவறியுள்ளனர்.

திரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டுச்சேர்ந்து, தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு மிகப்பெரிய இழப்பை இந்த அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

கேளிக்கை வரி விலக்கு என்பது பொது மக்களுக்குத்தானே தவிர, அது தனி நபருக்கு இல்லை என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே, கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

இந்த வழக்கு பைசலாகும் வரை அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, திரையரங்கு உரிமையாளர்கள், கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது.

கேளிக்கை வரி சேர்க்காமல், அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும். இந்த வழக்கில், திரையரங்கு உரிமையாளர்களை எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும். வழக்கை, ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே வரி விலக்கு அளிக்கப்பட்ட அத்தனைப் படங்களுக்கும் திரையரங்குகள் முழுமையான கட்டணத்தையே பார்வையாளர்களிடமிருந்து வசூலித்துள்ளனர். எனவே அந்தப் படங்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகை, அவற்றிலிருந்து பொதுமக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை போன்றவற்றையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என இன்னொரு வழக்குத் தொடரவிருக்கின்றனர்.

 

நண்பேண்டா நடிகர்களால் மனம் நொந்த சாண்டல்... இனி, பஞ்ச் பேசக் கூடாது என முடிவு

சென்னை: சாண்டல் நடிகரின் காமெடியாலேயே கூட சில முக்கிய நடிகளின் படங்கள் சில கல்லாக் கட்டியது. அந்தளவிற்கு நாயகனின் ‘நண்பண்டே' கேரக்டரில் வந்து அதகளப் படுத்தியிருந்தார் நடிகர்.

இதனால், சமீபத்திய படங்களில் ஹீரோக்களை விட அதிக முக்கியத்துவம் காமெடி நடிகரின் போர்ஷனுக்குக் கொடுக்கப் பட்டது. இந்நிலையில் வழக்கம் போல், ‘எத்தனை நாளைக்குத் தான் இப்படியே இருப்பது என தானும் நாயகனாக உருவெடுத்தார் காமெடி. அதன்படி, வேறு மொழியில் வந்த படத்தை ‘புல்' ஆயுதமாக மாற்றி வசூலித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தில் பல இடங்களில் லாஜிக் அடி வாங்கினாலும், படம் நன்றாகத் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்படத்தால் தனது ‘மச்சி' நடிகர்கள் பலரது மீது கோபத்தில் இருக்கிறாராம் காமெடி.

காரணம் படத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று டண்டணக்கா தமிழில் ஆங்காங்கே வசனம் பேசும். அதற்கு டப்பிங் பேச முதலில் மச்சி நடிகர்களைத் தான் அணுகினாராம் சாண்டல். ஆனால், அவர்கள் கையை விரித்து விட கடைசியில் தான் இந்த வாய்ஸ் உறுதியானதாம்.

இதனால், படத்தில் பல்பு வாங்குவது போலவே நிஜத்திலும் சோகமாகிவிட்டாராம் சாண்டல். இனி தன் படங்களில் எவனுக்காகவும் பன்ச் பேச மாட்டேன்' என அதிரடியாக முடிவெடுத்திருக்கிறாராம்.