இலங்கை பிரச்சனை: நாளை சினிமா இயக்குநர்கள் உண்ணாவிரதம்

சென்னை: தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு மற்றும் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தண்டனை கோரி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நாளை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது.

இதில் பங்கேற்க அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் அமீர் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

cinema directors observe fasting against sri lanka

தீர்மானங்கள்:

இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு உடனே நடை முறைப்படுத்த வேண்டும்.

போர்க்குற்றவாளி ராஜபக்‌ஷேவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இலங்கையில் தமிழர் பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற இலங்கையை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.

இனப்படுகொலை செய்த இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் 19.3.2013 செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் 6 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறது.

இந்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கில்டு, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கம் மற்றும் சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் 19.3.2013 அன்று ஒருநாள் படப்பிடிப்பு மற்றும் தங்களது பணிகளை தவிர்த்துவிட்டு, போராட்டத்தில் பங்கெடுத்து முழுமையான ஒத்துழைப்பை அளிக்குமாறு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

வழக்கு எண் 18/9, விஸ்வரூபம், பரதேசிக்கு தேசிய விருதுகள் - சிறந்த படம் 'பான் சிங் தோமர்'

Vazhakku Enn Viswaroopam Get National Awards

டெல்லி: 2012-ம் ஆண்டு சிறந்த படங்கள், சிறந்த திரைக் கலைஞர்களுக்கான 60 வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வழக்கு எண் 18/9 மற்றும் விஸ்வரூபம் ஆகிய படங்களுக்கு தலா இரு விருதுகள் கிடைத்துள்ளன.

பாசு சட்டர்ஜி தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ள இந்த விருதுகளில் அகில இந்திய அளவில் சிறந்த படமாக பான் சிங் தோமரும், சிறந்த பொழுதுபோக்குப் படமாக விக்கி டோனர் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்

பான் சிங் தோமரில் நடித்ததற்காக இர்பான் கான் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராத்தி படம் தாக்-ல் நடித்த உஷா ஜாதவ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த துணை நடிகர் விருது விக்கி டோனரில் நடித்த அனுகபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இஷாக்காதே படத்தில் நடித்த பரிநிதி சோப்ராவுக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

வித்யாபாலன் நடித்த கஹானிக்கு சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதும், அக்ஷய் குமார் நடித்த ஓ மை காட் படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் தரப்படுகிறது.

விஸ்வரூபம்

பிராந்திய மொழிப் படங்களில் கமல்ஹாஸன் இயக்கி தயாரித்து நடித்த விஸ்வரூபம் படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த நடனத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பாலாஜி சக்திவேல் இயக்கி வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்துக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது கிடைத்துள்ளன.

சங்கர் மகாதேவன்

சிறந்த பாடகருக்கான விருது சிட்டகாங் படத்தில் இடம்பெற்ற போலோ நா பாடலைப் பாடிய சங்கர் மகாதேவனுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடகிக்கான விருது, மராத்தியில் வெளியான ஆர்த்தி அங்க்லேகர்ட்கேகர் படத்தில் இடம்பெற்ற நா மூன் டான் பாடலைப் பாடிய சம்ஹிதாவுக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த இசை

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது மராத்தி இசையமைப்பாளர் ஷைலேந்திர பார்வேவுக்கு கிடைத்துள்ளது. படம்: சம்ஹிதா.

சிறந்த பின்னணி இசைக்கான விருது மலையாளப் படம் கலியாச்சனுக்கு இசையமைத்த பிஜி பாலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடலுக்கான விருது சிட்டகாங்கில் இடம்பெற்ற போலோ நா பாடலுக்குக் கிடைத்துள்ளது.

மலையாளம்

மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஓட்டல் படத்தின் வசனத்தை எழுதிய அஞ்சலி மேனனுக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்துள்ளது.

தெலுங்கில் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய ஈகா தேர்வு செய்யப்பட்டுள்ளது

சிறந்த இயக்குநர்

மராத்தியில் வெளியான தாக் (Dhag) படத்தை இயக்கிய ஸ்ரீ சிவாஜி லோட்டன் பட்டேலுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது.

இந்திரா காந்தி விருது

புதுமுக இயக்குநரின் சிறந்த படத்துக்கான இந்திராகாந்தி தேசிய விருது சிட்டகாங் (இந்தி) மற்றும் 101 சூடியங்கள் (மலையாளம்) படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ரிதுபர்னோ கோஷ்

பிரபல வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் (சித்ராங்கதா) மற்றும் இயக்குநர் நவாசுதீன் சித்திக் ஆகியோருக்கு நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

 

ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்! - ஷங்கர்

The Budget I Is Less Than Rs 100 Cr Shankar   

ஐ படத்தின் பட்ஜெட் விக்ரம் சொன்னது போல ரூ 150 கோடியெல்லாம் இல்லை... ரூ 100 கோடிக்கும் குறைவுதான், என்று இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஐ பட நாயகன் விக்ரம் அளித்த பேட்டியொன்றில், ஐ படத்தின் பட்ஜெட் ரூ 150 கோடி என்றும், இந்தியாவிலேயே பிரமாண்ட படம் இது என்றும் கூறியிருந்தார்.

இந்தப் படத்துக்கு ரூ 150 கோடி பட்ஜெட் என்றால், அதற்கான வியாபாரம் இருக்குமா... விக்ரம் சொல்வது உண்மைதானா... அவருக்கு இந்த அளவு ஓபனிங் உள்ளதா என்றெல்லாம் விமர்சனங்கள் கிளம்பின.

இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தனது ப்ளாக்கில் ஐ படம் குறித்து எழுதியுள்ள ஷங்கர், "ஐ படம் ரூ 100 கோடியை விட குறைவான பட்ஜெட்டில்தான் உருவாகிறது.

இந்தப் படத்தை சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல், பொள்ளாச்சி மற்றும் சென்னையில் எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 3-ல் இரு பகுதி எடுத்துவிட்டோம். நான்கு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

அவதார், லார்ட் ஆப் தி ரிங்ஸ் படங்களில் பணியாற்றிய வீடா ஓர்க்ஷாப் நிறஙுவனத்தின் ரிச்சர்ட் டெய்லர், பீட்டர் ஜாக்சன் ஐ படத்தில் பணியாற்றுகின்றனர்.

கொடைக்கானலில் சீனா மாதிரி செட் போட்டு படமெடுப்பதாக வந்த செய்திகள் உண்மையல்ல. ஒரிஜினலாக சீனாவிலேயே படமாக்கியுள்ளோம். நாங்கள் விரும்பிய அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த சீனா அனுமதித்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கோபமும் வெறியும்தான் என்னை தமிழ் பேச வைத்தது!... பிரகாஷ்ராஜ்

Prakash Raj Host On Vijay Tv Nvok Season 2

செல்லம்.... இந்த வார்த்தையை கேட்டாலே சட்டென்று நினைவுக்கு வருவது பிரகாஷ்ராஜ்தான்.

என்னதான் வில்லனாக இருந்தாலும் பேசும் வார்த்தைகள்.... நடிப்பு என பிரகாஷ்ராஜ் தனி ரசிகர் வட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் பிரபலமான பிரகாஷ்ராஜ் தற்போது சின்னத்திரையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 தொகுத்து வழங்குகிறார்.

சின்னத்திரை ஒன்றும் அவருக்கு புதிதல்ல... ஏற்கனவே பாலச்சந்தரின் ‘கையளவு மனசு' தொடர் மூலம் ஏற்கனவே இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது பிரபலமான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியை எப்படி வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் வில்லனாக இருந்து அந்த பணியை மூட்டை கட்டிவிட்டு கோட் சூட் போட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஓபனிங் கொடுக்க முடியும் என்று இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.

முதல்நாள் முதல் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரகாஷ்ராஜ் இருவர் படத்தின் கவிதையோடு தொடங்கினார். உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்... கவிதையை முடித்த உடனே இதை நான் இங்கே சொன்னேன் என்பதற்கான காரணத்தையும் சொன்னார். தான் பேசும் தமிழ் மீது இயக்குநர் மணி ரத்னத்திற்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதனால் இருவர் படத்தில் தன்னை டப்பிங் பேச அனுமதிக்க வில்லை. அந்த கோபத்தில் நன்றாக தமிழ் பேசக் கற்றுக்கொண்டு டப்பிங் பேசினேன். அதுதான் தன்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று கூறினார்.

இதுவரை 4 எபிசோடுகள் முடிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள். அதிலும் வால்பாறை தலைமை ஆசிரியர் ஒருவர் பங்கேற்று விளையாடிய எபிசோட் சுவாரஸ்யமாக இருந்தது.

இது கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் பற்றி தனியாக ஒளிப்பரப்பும் கிளிப்பிங்ஸ் சுவாரஸ்யமானது.

நிகழ்ச்சியின் இடையே அவர்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார். ஓஷோவின் தத்துவம்... வைரமுத்துவின் கவிதைகள் என ஒவ்வொன்றும் அனைவருக்கும் தேவையான தகவல்களாகவே இருக்கிறது.

இரண்டாவது எபிசோடில் பங்கேற்று மூன்றாவது எபிசோட் வரை அழகாக விளையாடி 12லட்சத்து ஐம்பதினாயிரம் பெற்றுச் சென்றார். அவருக்குப் பின்னர் வந்த பிசியோதெரபிஸ்ட், ஒரு டாக்டராக மட்டுமல்லாது விளையாட்டு வீரராகவும், இருந்தார். அவரைப் பற்றி பெற்றோர்களுக்கே தெரியாத தகவல்களை வெளியே கொண்டு வந்தார்.

நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியாக மட்டுமல்லாது குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த இடைவெளிகளை குறைத்தார்.

விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் ஓரளவிற்கு எளிமையானவைதான். ஆனால் இந்த நிகழ்ச்சியின் பகிரப்படும் தகவல்கள் நேயர்களுக்கு பயனுள்ளவை.

நீங்களும் வெல்லாம் ஒரு கோடியின் முதல் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கினார். சூர்யாவை விட பிரகாஷ் ராஜ் ஸ்டைல் சூப்பர் என்கின்றனர் நேயர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாருமே பிரகாஷ்ராஜ் நடிப்பை பற்றி ஓவராக புகழவில்லை என்பதுதான் சிறப்பம்சம்.

 

ஜூனியர் என்.டி.ஆர். பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் பலி!

Youth Killed Stampede At Audio Release Of Badshah

ஹைதராபாத்: பிரபுல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பட விழா நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் பலியானார்.

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோவில், ஜூனியர் என்.டி.ஆர். நடித்த பாட்ஷா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது.

இதுபோன்ற விழாக்களுக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்களை வரவழைப்பது ஜூனியர் என்டிஆர் ஸ்டைல்.

இந்த முறையும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலில் சிக்கி வாராங்கல் மாவட்டம், உர்சுகுட்டாவைச் சேர்நத ராஜூ என்ற ரசிகர் இறந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்த ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய ஜூனியர் என்டிஆர், "என் சகோதரர்களில் ஒருவரை இழந்தது வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்துக்கு அவரது இடத்தில் நான் இருந்து அனைத்தையும் செய்வேன். என் வார்த்தையைக் காப்பேன். இனி ஒருபோதும் இந்த மாதிரி நடக்கக் கூடாது என்பதில் சகோதரர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்," என்றார்.

இறந்த ரசிகர் குடும்பத்துக்கு பாட்ஷா படத் தயாரிப்பாளர் ரூ 5 லட்சம் நிதி வழங்கினார்.

 

சீனா போகிறது கோச்சடையான் குழு.. மே முதல் வாரம் இசை வெளியீடு!

Kochadaiyaan Crew Fly China

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்காக சீனாவுக்குப் புறப்படுகிறது படக் குழு.

ரஜினி - தீபிகா, சரத்குமார், ஷோபனா, ஜாக்கி ஷெராப், நாசர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள, மோஷன் கேப்சரிங் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிவரும் பிரமாண்ட படம் கோச்சடையான்.

படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை சமீபத்தில் பார்த்த ரஜினி பெரிதும் பாராட்டியிருந்தார். கேஎஸ் ரவிக்குமாரும் நினைத்ததை விட 10 மடங்கு பிரமாண்டமாக வந்துள்ளது இந்தப் படம் என்றார்.

இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியை சீனாவில் வைத்து செய்யப் போகிறார்களாம்.

இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள இயக்குநர் சௌந்தர்யா ரஜினி, "திங்கள் கிழமை கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷனுக்காக சீனா போகிறோம். 24-ம் தேதி படத்தின் டப்பிங் தொடங்குகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரம் ஆடியோ வெளியீடு இருக்கும் என்றும், ஜூலையில் படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.

 

தமிழுக்கு முக்கிய விருதுகள் ஏதும் இல்லை!

List Artists Films Received National Awards 2012

தமிழ்ப் படங்களுக்கு இந்த ஆண்டு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் அவற்றில் எதுவும் முக்கிய விருதுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

60 வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. கடந்த இரு ஆண்டுகளில் அதிக தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா, இந்த முறை முக்கியமற்ற பிரிவுகளில் மட்டுமே 5 விருதுகளைப் பெற்றுள்ளது.

கிடைத்துள்ள விருதுகள் விவரம்:

சிறந்த படம் - வழக்கு எண் 18/9 (இயக்குநர் பாலாஜி சக்திவேல்)

சிறந்த ஒப்பனை - ராஜா (வழக்கு எண் 18/9)

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் - பூர்ணிமா ராமசாமி (பரதேசி)

சிறந்த நடனம் - பண்டிட் பிர்ஜி மஹராஜ் (விஸ்வரூபம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - இளையராஜா (விஸ்வரூபம்)

 

காளஹஸ்தி கோயிலில் ஜோடியாக வழிபாடு: சமந்தாவுடன் ரகசிய திருமணமா... சித்தார்த் மவுனம்!

Sidhardh Secretly Weds Samantha

சமந்தாவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் சித்தார்த் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை இருவருமே மறுக்கவில்லை.

சமந்தாவும் சித்தார்த்தும்தான் இப்போது தெலுங்கில் பரபரப்பாக பேசப்படும் ஜோடி. கடந்த சனிக்கிழமையன்று இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோயிலுக்குப் போய் சாமிகும்பிட்டனர்.

புதுமண ஜோடி போல பெற்றோருடன் அவர்கள் சென்ற விதம், புதிதாக திருமணமாணவர்கள் நடத்தும் ராகு - கேது பூஜையை அவர்களும் நடத்தி சாமி கும்பிட்டது போன்றவற்றை வைத்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் கிளம்பின.

ஆனால் இவற்றை சித்தார்த் மறுக்கவில்லை. ஆனால் அவருக்கு வேறு ஒரு செய்தி கோபத்தைக் கிளப்பிவிட்டதாம்.

சித்தார்த்தின் தந்தை திடீரென மயங்கிவிழுந்தார் என்பதுதான் அந்த செய்தி. இதனை மறுத்துள்ள சித்தார்த், தந்தை நலமாக இருப்பதாகவும், யாரோ வேலையற்றவர்கள் கொளுத்திப் போட்டுவிட்டதாகவும் கொதித்துள்ளார். ஆனால் சமந்தாவுடனான ரகசிய திருமணம் குறித்த செய்திக்கு மட்டும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 

இயக்குநர் சங்க உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக நாளை ஃபெப்சி ஒரு நாள் வேலை நிறுத்தம்!

சென்னை: தமிழ் ஈழம் அமைக்கக் கோரி சினிமா இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ள ஒரு நாள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்பு ஃபெப்சி ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்று கோரி மாணவர் போராட்டங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் வலுத்து வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தமிழீழக் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கவும் தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறது. இதில் சினிமா உலகின் அனைத்து அமைப்புகளும் பங்கேற்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய அமைப்பான பெப்சி.

இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் ஜி சிவா விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைத் தமிழர் நலனுக்காக தமிழக அரசு எடுத்த தீர்மானத்தை ஆதரித்தும், தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் நாளை ஒரு நாள் ஃபெப்சி அமைப்பு அடையாள வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறது.

அன்றைய தினம் இயக்குநர்கள் சங்க உண்ணாவிரதத்திலும் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

ராகவேந்திரர் பிறந்த நாள்... 100 குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் அமைத்த லாரன்ஸ்!

Raghava Lawrence Setup School Poor Children

சென்னை: ஸ்ரீராகவேந்திர சுவாமியின் பிறந்த நாளையொட்டி, 100 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் அமைத்துள்ளார் நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ்.

ரஜினியின் ரசிகரான நடிகர் லாரன்ஸ், ரஜினியைப் போலவே தீவிரமான ராகவேந்திரர் பக்தர். ரஜினியிடம் ஆலோசனைப் பெற்று அம்பத்தூரில் ராகவேந்தருக்கு கோவில் கட்டி உள்ளார். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

நாளை (19-ந்தேதி) இக்கோவில் கட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்றைய தினம் ராகவேந்தரின் பிறந்த தினமும் வருகிறது. இதையொட்டி ராகவேந்தர் கோவிலில் விசேஷ வழிபாட்டுக்கு லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

அத்துடன் புதிதாக கட்டியுள்ள இலவச பள்ளிக்கூடத்தையும் திறந்து வைக்கிறார். இந்த பள்ளியில் 100 மாணவர்கள் கல்வி கற்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து லாரன்ஸ் கூறும்போது, "கல்விக்கூடம் கட்டுவது புண்ணியம் தரக்கூடியது. ராகவேந்தர் பிறந்த நாளில் புதிதாக கட்டப்பட்ட பாடசாலை திறக்கப்படுகிறது," என்றார்.

 

நல்ல வாய்ப்பு கொடுங்கள்.. எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறேன்! - வர்ஷா

Varsha Ready Do Glam Roles   

நல்ல வாய்ப்பு கிடைத்தால் எந்த அளவு கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்கிறார் நடிகை வர்ஷா.

ஜெயம் ரவி நடிப்பில், எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான பேராண்மையில் 5 நாயகிகளுள் ஒருவராக நடித்தவர் வர்ஷா. முழுப்பெயர் வர்ஷா அஸ்வதி.

அடுத்து சீனு ராமசாமி இயக்கிய நீர்ப்பறவையில் இன்ஸ்பெக்டராக வந்தார்.

இப்போது எம்ஏ அகமது இயக்கத்தில் என்றென்றும் புன்னகை படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அந்தப் படத்தில் இவருக்கு ஜோடி வினய்.

பனிவிழும் மலர்வனம் படத்தில் ஆக்ஷன் நாயகியாக நடிக்கிறார். இதில் அவர் புலியுடன் சண்டை போடுகிறாராம்.

பிபிஎம் பட்டதாரியான வர்ஷா, பிறந்தது கொல்கத்தாவாக இருந்தாலும் வளர்ந்தது படித்ததெல்லாம் தூத்துக்குடி. தமிழ், இந்தி, வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் பிளந்து கட்டும் வர்ஷாவுக்கு, மலையாளமும் ஓரளவு வருமாம்.

தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடிப்பது பெரிய விஷயம்... அதை விட பெரிய விஷயம் சினிமாவில் நிலைப்பது. நான் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளேன். பெயர் சொன்னால் தெரியுமளவுக்கு வேடங்கள். இப்போது என்றென்றும் புன்னகை, பனி விழும் மலர்வனம் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். நன்றாக நடனம் தெரியும், ரஜினி சார், கமல் சார் படங்களைத்தான் நினைவு தெரிந்த நாள் முதல் விரும்பிப் பார்த்து வருகிறேன். இவர்களின் படங்களில் ஏதாவது ஒரு ரோலில் நடிக்க ஆசை.

Varsha Ashwathi

கவர்ச்சியாக நடிக்க தயக்கமில்லை. காட்சிக்கு அவசியம், கதைக்கு முக்கியம் என்றால் கவர்ச்சியின் எல்லைகளை உடைக்கத் தயார். அதற்காக ஆபாசமாக நடிப்பேன் என்று அர்த்தமல்ல," என்றார்.

 

ஹாங்காங் சர்வதேச பட விழாவுக்கு மௌனகுரு படம் தேர்வு!

Mouna Guru Selected Honk Kong Festival

ஹாங்காங்கில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அருள்நிதி நடித்த மௌனகுரு படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி, இனியா ஆகியோர் நடித்த படம் மௌன குரு. 2011-ம் ஆண்டில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கிறது.

ஹாங்காங்கில் 37வது சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 17 முதல் ஏப்ரல் 2 வரை நடக்கிறது. இதில் உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த 10-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஜேக்கப் வாங்கிற்கு ‘மௌனகுரு' உள்ளிட்ட சில படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன.

இந்தப் படம் அவருக்குப் பிடித்துவிட்டதால், ஹாங்காங்கில் நடக்கும் விழாவில் மார்ச் 24 மற்றும் 30ம் தேதிகளில் திரையிட மௌன குருவை தேர்வு செய்துள்ளனர்.

 

உதவி செய்பவர்களுக்கு இனிப்பு அதிர்ச்சி கொடுக்கும் விஜய்

Vijay S Cakeful Grateful Act

சென்னை: இளைய தளபதி விஜய் நன்றி மறக்காதவர். அவர் தனக்கு உதவியவர்களுக்கு இனிப்பு அதிர்ச்சி கொடுக்கிறாராம்.

இளைய தளபதி விஜய் தனக்கு உதவி செய்பவர்களை ஒரு நாளும் மறப்பதில்லை. தனக்கு உதவி செய்பவர்களுக்கு அவர் இன்ப இனிப்பு அதிர்ச்சி கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

யாராவது உதவி செய்தால் நன்றி என்று சொல்வோம். விஜய் நன்றியோடு நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக கிலோ கணக்கில் கேக் அனுப்பி உதவிக்கு வித்தியாசமாக நன்றி சொல்கிறார். விஜய் நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் கிராமத்து கெட்டப்பில் வரவிருக்கிறார்.

இந்த படம் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜயுடன் மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கிறார். அவர்கள் சேர்ந்து வரும் காட்சிகள் பயங்கர டச்சிங்காக இருக்குமாம்.