அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதி!

மான் கராத்தே படத்துக்காக அனிருத் இசைShruti Haasan's late night fun with Anirudhயில் ஒரு பாடல் பாடியுள்ள ஸ்ருதி, இந்தப் பாடல் பாடிய அன்று அனிருத்துடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தில் ஹீரோயினாக நடித்தபோதே, அனிருத்துக்கு நெருக்கமான தோழியாகிவிட்டவர் ஸ்ருதி.

அனிருத்துடன் நள்ளிரவில் ஆட்டம் போட்ட ஸ்ருதி!

இப்போது தெலுங்கு, இந்திப் படங்கள் மிகவும் பிஸியாக உள்ளார் ஸ்ருதி. ஆனாலும் அனிருத் இசையமைக்கும் மான்கராத்தே படத்தில், அவருக்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.

ஸ்ருதிக்கு நேரமின்மையால் நள்ளிரவில் வந்து அந்தப் பாடலைப் பாடிக் கொடுத்தாராம். அதுமட்டுமல்ல, பாடல் பதிவு முடிந்தபிறகு நீண்ட நேரம் தன் நண்பருடன் மதுவிருந்திலும் பங்கேற்று உற்சாக ஆட்டம் போட்டுவிட்டுப் போனாராம் ஸ்ருதி.

இதுகுறித்து தனது ட்விட்டரில், 'அனிருத் இசையில் நள்ளிரவில் பாடல் பதிவு முடிந்தது. அன்று இரவு முழுவதும் ஒரே ஃபன் ஃபன் ஃபன்தான்... " என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ரஹ்மான் ஒரு ஜீனியஸ்... - மத்திய அமைச்சர் கபில் சிபல்

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மாந் ஒரு ஜீனியஸ் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல். இவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் தற்போது கவிஞராகவும் மாறியுள்ளார். தன் கைப்பட இவர் எழுதிய கவிதைகள் இப்போது பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன.

ரஹ்மான் ஒரு ஜீனியஸ்... - மத்திய அமைச்சர் கபில் சிபல்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள ரானாக் என்ற ஆல்பத்தில் கபில் சிபலின் கவிதை வரிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களில் கபில் சிபலின் சொந்த அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.

இசை ஆல்பம்

இதுபற்றி கபில் சிபல் கூறுகையில், "ஒருவர் கவிதை எழுத தொடங்கினால் தன்னை சுற்றி இருப்பவை கூட அந்த பணியில் முக்கியமானவர்களாக வந்து சேர்ந்து விடும். எனது கவிதைகள் வழியே இதனை நான் கண்டுணர்ந்தேன். அதன் வெளிப்பாடு மிக அழகாக இருந்தது," என்று தெரிவித்துள்ளார்.

ஆல்பத்தின் கரு

ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை பயணம் தொடங்குவது மற்றும் ஒரு பெண்ணின் போராட்டங்கள் பற்றிய கதை பின் இறுதியில் அடையும் வெற்றி என்று தொடங்கி அன்பு, காதல் என பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

"எனது கவிதைகளை இசையாக மாற்றுவதற்கு ரஹ்மானை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவரது தனிப்பட்ட பணி நேர்த்தி மற்றும் வேறுபட்ட மெல்லிசைகளை படைப்பதில் உள்ள அவரது விருப்பம் ஆகியவையே ஆகும். ரஹ்மான் ஒரு ஜீனியஸ். அவரது இசையில் எனது வார்த்தைகள் அதனுடைய ஆத்மாவை கண்டுள்ளன," என சிபல் குறிப்பிட்டுள்ளார்.

கவிதையில் விருப்பம்

மேலும் அவர் கூறுகையில், "ரஹ்மானின் படைப்புகள் புதிதாகவும் பாலிவுட் பாணியிலிருந்து மாறுபட்ட உணர்வையும் கொண்டவை. அவரது குரல் மற்றும் அதன் தன்மை ஆகியவை ஒழுங்கான வடிவத்தை கொண்டுள்ளது.

அவர் இசையை உருவாக்குகிறார். நான் பாடல்களுக்கு வரிகளை எழுதும்போது, அது சரியான வெளிப்படுத்துதலை கொண்டவரிடம் சென்று சேர வேண்டும் என விரும்பினேன். அது ரகுமான் இசையில் இருப்பதாக நான் நினைத்தேன்," என்றார்.

நேரம் ஏது?

இந்திய அரசியலில் அதுவும் மந்திரியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் கபில் சிபல், கவிதை எழுதுவதற்கு நேரம் ஏது?

"நீங்கள் ஏதேனும் ஒன்றை உண்மையிலேயே விரும்பினால், அதனை பின் தொடர்வதற்கு நிச்சயம் நேரத்தை கண்டுணர்வீர். நான் மனப்பூர்வமாக அன்பு வயப்பட்டேன். அதனை வெளியிடும் விதமாகவே, கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த பாடல்களை எழுதியுள்ளேன்," என்றார்.

 

அஜீத் 55.. திரைக்கதை வேலை முழுமை பெற்றது... மார்ச் இரண்டாவது வாரம் ஷூட்டிங்!

சென்னை: அஜீத்தை வைத்து கவுதம் மேனன் முதல் முறையாக இயக்கும் புதிய படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்து, லொகேஷனும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

மார்ச் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவித்துள்ளார்.

கவுதம் மேனனுக்கு இது கனவுப் படம் மாதிரிதான். ஏற்கெனவே அஜீத்துடன் அவர் இணையவிருந்த படம், அறிவிப்பு வெளியான நிலையில் ரத்தானது. அதன் பிறகு சூர்யாவுடன் சேர்ந்து படம் பண்ணுவதாக அறிவிக்கப்பட்டு அதுவும் கடைசியில் ரத்தானது.

அஜீத் 55.. திரைக்கதை வேலை முழுமை பெற்றது... மார்ச் இரண்டாவது வாரம் ஷூட்டிங்!

இந்த நிலையில் அஜீத்தே தேடி வந்து மீண்டும் ஒரு வாய்ப்பளித்தார் கவுதம் மேனனுக்கு. அதுதான் இந்தப் படம்.

சிம்பு படத்தை முடித்துவிட்டு, அஜீத் படத்தின் திரைக்கதைப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார் கவுதம் மேனன். அஜீத்துக்கு திருப்தியளிக்கும் வகையில் கச்சிதமாக திரைக்கதையை முடித்துவிட்ட கவுதம் மேனன், படப்பிடிப்புக்கான லொகேஷன்களையும் பார்த்து வைத்துவிட்டார்.

வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் தெரிவித்துள்ளார். செப்டம்பரில் வெளியிடுவதாகத் திட்டமிட்டுள்ளனர்.

அஜீத்துக்கு இது 55வது படமாகும். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த நடிகை அறிமுகமாகிறார்.

 

வேல்முருகன் பாடிய குடி குடி... பாடலுக்கு தடை

வேல் முருகன் பாடிய குடி குடி... என்ற பாடலுக்கு தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

குரு சூர்யா மூவீஸ் தயாரிப்பில்ஆர் கே அன்பு செல்வன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் என் நெஞ்சை தொட்டாயே.

வேல்முருகன் பாடிய குடி குடி... பாடலுக்கு தடை

இத் திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குடி குடி.... என துவங்கும் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார் .

வேல்முருகன் பாடிய குடி குடி... பாடலுக்கு தடை

தணிக்கை குழு அந்த பாடலில் வரும் சில வார்த்தைகளுக்கு தடை விதித்து, அதற்கு மாற்று வரியைச் சேர்க்குமாறு கூறியது.

அதன்படி மாற்று வரிகளைச் சேர்த்து தணிக்கை குழுவிடம் யு சான்று பெற்றனர். ஆனாலும் அந்தப் பாடலை திரையரங்குகளில் வேண்டுமானாலும் திரையிடலாம். ஆனால் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.

 

ஹாஹாஹா.. நான் அதிமுகவில் சேரப்போறேனா? - இயக்குநர் சேரன்

ஹாஹாஹா.. நான் அதிமுகவில் சேரப்போறேனா? - இயக்குநர் சேரன்

சென்னை: நான் அதிமுகவில் சேரப்போவதாக வந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளதாவது:

ஹாஹாஹா..... நான் அதிமுக வில் சேரப்போவதாக ஒரு வதந்தி இன்று பரவ ஆரம்பித்து என் காதுக்கே வந்தது ஒரு பத்திரிக்கை நிருபர் மூலமாக.

மூன்று நாட்களாக தொடர்ந்து முதல்வரைப் பாராட்டி என் பேஸ்புக்கில் எழுதுவதாலும் பத்திரிக்கை செய்தியாக அது மாறுவதாலும் நான் அந்த கட்சியோடு சேரப்போகிறேன் என நினைத்துவிட்டார்கள் போல.

அரசாங்கம் மக்களுக்காக... மக்களுக்கான நன்மை கிடைக்கும் திட்டமோ செயலோ அரசாங்கம் செய்யும்போது நடுநிலையாளர்கள் பாராட்டவேண்டும் அப்போதுதான் தான் செய்யும் செயலுக்கான வரவேற்பு பார்த்து தொடர்ந்து மக்களுக்கு அரசு நிறைய செய்ய முன்வரும்.

ஒரு வருடத்திற்கு முன் தூக்குதண்டனை என்ற மனித வாழ்வியலுக்கு விரோதமான சட்டத்தையே முழுமையாக அகற்றக்கோரி ஒரு ஆவணப்படம் தயாரித்தேன்.

அதன் வழியில் இன்று அரசாங்கம் 7 பேரை விடுதலை செய்ததோடு அல்லாமல் தமிழ்நாட்டின் தமிழ்மொழியின் மானம் காக்க ஒரு இனத்தின் மீது சுமத்தப்பட்ட பழி அகற்றப்பட முன்னோடியாக செயல்படும் முதல்வரை பாராட்டுவதற்கும், என் தொழில் சில தாதாக்களின் கைகளில் மாறி சிக்கிக்கொண்டு சிலர் மட்டுமே பணம் கொள்ளையாக சம்பாரிக்க நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை இன்று திரைஉலகில்... கட்டண உயர்வு காரணமாக மக்கள் படம் பார்க்க வரும் வாய்ப்பு குறைந்து வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில் திருட்டு விசிடி யில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்... இந்த நிலையை அரசின் அம்மா திரையரங்கம் திட்டம் மாற்றிவிடவும் மறுபடியும் சினிமாத்தொழில் தழைத்தோங்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதுவே நான் இந்த இரண்டு நாட்களும் முதல்வர் பற்றி எழுத காரணம்... அதுக்காக எனக்கு அதிமுக உறுப்பினர் அட்டை வாங்கி மாட்டிருவிங்கபோல. ஓட்டுப்போடவே நூறு முறை யோசிக்கிற ஆளு நானு...," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆமா, இப்படியொரு வதந்தி எப்போ பரவியது?!!

 

வழிதவறிப் போகாதவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்!- இளையராஜா

சென்னை: தமிழ் சினிமாவில் வழி தவறிப் போகாத இயக்குநர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும் என்று பாராட்டினார் இளையராஜா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகேந்திரன் - இளையராஜா இணையும் புதிய படத்தின் அறிமுக விழா பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது.

வழிதவறிப் போகாதவர்கள் பாலுமகேந்திராவும் மகேந்திரனும்!- இளையராஜா

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இயக்குனர் பாலு மகேந்திராவின் மறைவினால் தான் இந்த சந்திப்பு தாமதமானது. சிறந்த படைப்பாளிகளாக திகழ்ந்த இயக்குனர்களில் பலர், தங்கள் படைப்புகளில் சமரசங்கள் செய்துகொண்டு வழித்தவறி போய்விட்டனர். நான் சொல்வது தனிப்பட்ட முறையில் அல்ல.

சினிமா படைப்புகளை பொருத்தவரை அவர்கள் புகழ், மார்கெட் என பலவும் ஏறியிருக்கலாம். ஆனால், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் வழித்தவறாமல் சிறந்த படைப்புகளை கொடுத்தவர் பாலுமகேந்திரா. அவர் மறைவுக்குப் பிறகுதான் அவருக்கான இடம் என்னவென்பது பலருக்குப் புரிந்திருக்கிறது.

அந்த வகையில் இயக்குனர் மகேந்திரனும் இதுவரை எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துள்ளவர். மகேந்திரன் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் அவருடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

 

காஷ்மீர் போன இடத்தில் நடிகை தபுவுக்கு திடீர் மூச்சுத் திணறல்... சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

காஷ்மீர் போன இடத்தில் நடிகை தபுவுக்கு திடீர் மூச்சுத் திணறல்... சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

காஷ்மீர்: பாலிவுட் நடிகை தபு திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

தனது புதிய படமான "கைதர்" என்ற படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தார் தபு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது,அவருக்கு திடீரென்று சுவாசக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

கடுமையான ஜலதோஷத்தால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவர் அனுமதிக்கப் பட்ட காஷ்மீர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

படப்பிடிப்பு தளத்திலிருந்து 13கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் அன்று மாலையே வீட்டிற்கு திரும்பினார்.

இவர் கடைசியாக "ஜெய் கோ" படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.