கடன் பிரச்சினை: ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை?

தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருகிறது.

ஜிஜே பிலிம்ஸ் பெயரில் ஏப்ரல் மாதத்தில், தவசி உள்பட பல படங்களைத் தயாரித்தவர்கள் ஜெயப்பிரகாஷ், ஞானவேல்.

பின்னர் தயாரிப்பு நிறுவனத்தைக் கலைத்துவிட்டு இருவரும் பிரிந்தார்கள்.

கடன் பிரச்சினை: ஜெயப்பிரகாஷ் நடிக்கத் தடை?

மாயக்கண்ணாடி படத்தில் நடிகராக அறிமுகமான ஜெயப்பிரகாஷ், தொடர்ந்து பசங்க படத்தில் பிரபலமானார். நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இன்று குணச்சித்திர நடிகர்களில் முதல் இடம் ஜெயப்பிரகாஷுக்குத்தான்.

இந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் மீது பட அதிபர் ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில் நானும் ஜெயப்பிரகாஷும் இணைந்து பல படங்கள் தயாரித்தோம். இதில் பலருக்கு கடன் கொடுக்க வேண்டி இருந்தது. கடன் முழுவதையும் என் மேல் சுமத்திவிட்டார் என்று குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரித்தது.

ஞானவேலுக்கு ரூ.1.25 கோடியை ஜெயப்பிரகாஷ் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.41 லட்சம் ‘செக்' கொடுத்ததாகவும் அது பணமின்றி திரும்பி வந்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜெயப்பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கத்திடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

 

பிறந்த நாளில் ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜிவி பிரகாஷ்.. கமல், சூர்யா வழியில் பயணிக்க உறுதி!

சென்னை: தனது பிறந்த நாளான இன்று ரசிகர் நற்பணி மன்றத்தைத் தொடங்கினார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

ரசிகர் மன்றம் சார்பில் முதல் நிகழ்ச்சியாக அவரது பிறந்த நாள் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் இந்த நிகழ்ச்சி நடந்தது.

இந்த விழாவில் ஜிவி பிரகாஷ் கலந்துகொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

பிறந்த நாளில் ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜிவி பிரகாஷ்.. கமல், சூர்யா வழியில் பயணிக்க உறுதி!

விழாவில் 10 கிலோ கேக் வெட்டப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு ஆளுயர மாலை, தலைக்கிரீடம் , வெள்ளி வாள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் சிறுவர்கள் காப்பகத்திற்கும், சென்னை ஓட்டேரியில் உள்ள ஆஷா நிவாஸ் பாய்ஸ் ஷெல்டர் ஹோமிற்கும் இரவு உணவு சென்னை மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரசிகர் நற்பணி மன்றத்தை பற்றி ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என பரவி கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றவே இந்த நற்பணி மன்றம் துவக்கினேன்.

இந்தியாவின் மிகப்பெரிய சக்தி இளைஞர் சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த சின்ன வயதில், எனக்கான பேர், புகழ் எல்லாவற்றையும் கொடுத்தது இந்த தமிழ் சமூகம். அதுக்கு நான் என்னால முடிந்ததை திருப்பி கொடுக்கணும்னு நினைக்கிறேன்.

பிறந்த நாளில் ரசிகர் மன்றம் தொடங்கினார் ஜிவி பிரகாஷ்.. கமல், சூர்யா வழியில் பயணிக்க உறுதி!

ரசிகர் மன்றம்னு சொன்னாலே இங்க தப்பா பார்க்கப்படுது. நிச்சயமா நம்மை நேசிக்கின்ற இளைஞர்களை வைத்து இங்கு ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய்ய முடியும். அதற்கு உதரணமா கமல் சார் மற்றும் சூர்யா சார் நற்பணி மன்றங்கள் இருக்கின்றன. அவர்களின் பாதையில் தான் நானும் பயணிக்க விரும்புகிறேன்.

புதிய மன்றம் தொடங்க 9003687202 என்ற எண்ணிலோ gvpfansclub@gmail.com என்ற மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்

தன் முன்னாள் காதலன் பிரபு தேவா பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருக்கும் நயன்தாரா, அதனை அழிக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளப் போகிறாராம்.

பிரபு தேவாவைக் காதலித்த போது, அவர் மீதான அன்பைக் காட்ட, அவர் பெயரை இடது கையில் ‘பிரபு' என்று பச்சை குத்திக் கொண்டார்.

எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்.

நயன்தாரா கையில் பச்சைக் குத்திய பிரபு தேவா பெயரை அழிக்க ஆபரேஷன்

அவர் நடித்த சில படங்களிலும், பொது இடங்களிலும் அந்த 'பச்சை'யை பச்சையாகப் பார்க்க முடிந்தது.

தடாலென ஒரு நாள் இருவருக்கும் காதல் முறிந்தது. இப்போது மீண்டும் படங்களில் படு பிசியாக இருக்கும் நயன்தாராவுக்கு, பிரபு என்ற அந்தப் பச்சை பெரும் இம்சையாக இருக்கிறதாம்.

இயக்குநர்கள் தயங்கித் தயங்கி, மேடம் அந்த பச்சையைக் கொஞ்சம் மறைச்சா நல்லது என்று சொல்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்தப் பச்சையை பக்கா மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்துவிட்டார்.

லேசர் சிகிச்சை மூலம் அந்தப் பச்சையை அகற்ற மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். சூர்யா படம் தொடங்கும்போது, நயன்தாரா கையிலிருந்து பிரபு பச்சை காணாமல் போயிருக்குமாம்!

 

மஞ்சப்பை திருட்டு வீடியோ... 'வழக்கம்போல' போலீசில் தயாரிப்பாளர் புகார்!

மஞ்சப்பை படத்தின் திருட்டு வீடியோ டிவிடியாகவும் இணையத் தளத்திலும் வெளியானதைத் தொடர்ந்து, அதைத் தடுக்க போலீசில் புகார் கொடுத்துள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.

கடந்த வாரம் வெளியானது மஞ்சப்பை திரைப்படம். ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடித்துள்ள இந்தப் படம் வெளியான மூன்றாவது நாளில் படத்தின் திருட்டு வீடியோ நல்ல தரத்துடன் இணையதளங்களிலும், டிவிடியாகவும் வெளியானது.

மஞ்சப்பை திருட்டு வீடியோ... 'வழக்கம்போல' போலீசில் தயாரிப்பாளர் புகார்!

இதை நாம் சில தினங்களுக்கு முன்பே செய்தியாக வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ‘மஞ்சப்பை' சினிமா இயக்குநர் ராகவன் உள்பட 10 பேர் இன்று சென்னை போலீஸ் கமினரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

"அதில், ‘மஞ்சப்பை' திருட்டு டிவிடி சாத்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில்தான் பதிவு செய்யப்பட்டு டிவிடியாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்தத் தியேட்டருக்கு இனி புதிய படங்கள் கொடுப்பதில்லை என்றும் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம்.

 

'வாங்க மக்கா வாங்க...' - ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காவியத் தலைவன் பட டீஸர்!

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள காவியத் தலைவன் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்பட பலரும் நடித்துள்ள படம் காவியத் தலைவன்.

'வாங்க மக்கா வாங்க...' - ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட காவியத் தலைவன் பட டீஸர்!

வசந்த பாலனின் இயக்கியுள்ளார். வருண் மணியன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏராளமான பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் இதன் ஆடியோ சிடி வெளியானது. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டீசரை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஏஆர் ரஹ்மான். நாடகக் கலையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள காவியத் தலைவனின் முதல் டீசரில், 'வாங்க மக்கா வாங்க.. எங்க நாடகம் பாக்க வாங்க..' என்ற பாடலுடன் காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் படத்தின் தலைப்பு 'தனி ஒருவன்'!

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் புதிய படத்துக்கு தனி ஒருவன் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது, என்றாலும் தலைப்பு என்ன என்பதை மட்டும் அறிவிக்காமல் இருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் படத்தின் தலைப்பு 'தனி ஒருவன்'!

இப்போது 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனி ஒருவன் என்ற தலைப்பை இப்போது அறிவித்துள்ளனர்.

ஜெயம் தொடங்கி, தில்லாலங்கிடி வரை 5 படங்களில் ஜெயம் ரவியை இயக்கியுள்ளார் ராஜா.

இவை ஐந்துமே கமர்ஷியலாக நன்றாக போன படங்கள்தான். இப்போது 6வதாக தனி ஒருவன் படத்தை இயக்குகிறார் ஜெயம் ராஜா. இந்தப் படத்தில் நயன்தாரா போலீஸாக நடிக்கிறாராம். ஒரு புதிய வில்லனை இதில் அறிமுககப்படுத்துகிறாராம் ராஜா!

 

குடிபோதையில் ஸ்ருதி ஹாஸனின் ஹோட்டல் அறை கதவை நள்ளிரவில் தட்டிய ரசிகர்

டேராடூன்: டேராடூனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறைக் கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது.

குடிபோதையில் ஸ்ருதி ஹாஸனின் ஹோட்டல் அறை கதவை நள்ளிரவில் தட்டிய ரசிகர்

இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத்தின் கேரக்டர் பெயர் சத்யதேவ்... படத்துக்குப் பெயர் சத்யா!

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு சத்யா என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், இயக்குநர் கவுதம் மேனன் ஒரு பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜீத், சத்யதேவ் என்ற நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்துக்கு தலைப்பாக சத்யா என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.

அஜீத்தின் கேரக்டர் பெயர் சத்யதேவ்... படத்துக்குப் பெயர் சத்யா!

அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது மலேசியாவில் நடந்து வருகிறது.

ஹாலிவுட் படங்களைப் போல, இந்தப் படத்துக்கு அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கும் திட்டம் இருப்பதாக கவுதம் மேனன் தன் பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது ஜாஸன் போர்னே மாதிரி, ஒரே கேரக்டர்... ஆனால் வெவ்வேறு கதைகள் என்ற பாணியில் சத்யா படத்தின் தொடர்ச்சிகள் இருக்குமாம்.

ஆனால் அடுத்தடுத்த தொடர்ச்சிகளுக்கும் அஜீத் கால்ஷீட் தருவாரா என்ற பிரச்சினை இருக்கிறதே!

 

வேர்ல்டு ஹீரோ ஏரியாவில் வீடு தேடும் நடிகை

சென்னை: பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான வேர்ல்டு ஹீரோ படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் வந்த நடிகை சென்னையில் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம்.

வேர்ல்டு ஹீரோ நடிப்பில் உருவான படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வந்தது. இந்த படத்தில் அமெரிக்காவில் செட்டிலான நடிகை ரீஎன்ட்ரி கொடுத்தார். இதையடுத்து அவர் வேர்ல்டு ஹீரோவின் நல்ல கெட்டவன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு ஜாகையை மாற்ற விரும்புகிறார். இதற்காக அவர் வேர்ல்டு ஹீரோவின் பகுதியான ஆழ்வார்பேட்டையில் வீடு தேடிக் கொண்டிருக்கிறார்.

வேர்ல்டு ஹீரோ ஆதரவில் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம் என்று நடிகை நினைக்கிறாராம்.