மும்பைக்கு ஜாகை மாறிய டாப்சி

நடிகை மும்பைக்கு ஜாகை மாறிய டாப்சி  

ஆனால் அவர் நம்பிக்கை மோசம் போனது. பெரிய வாய்ப்புகள் இல்லை. எந்த பெரிய ஹீரோவுடனும் அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. அப்படி வந்த ஒரு வாய்ப்பிலும் இரண்டாவது நாயகி வேடம். லூசுத்தனமான அந்த பாத்திரமும் எடுபடாமல் போய்விட்டது.

இப்போதைக்கு முனி 3, வை ராஜா வை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹைதராபாதில் தங்கி தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் டாப்சி. இந்த நிலையில் இனி தமிழில் அதிக படங்கள் இல்லை என்பதால் இந்திக்குப் போனார். சாஸ்மி பதூர் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றியால் தொடர்ந்து இந்திப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

இப்போது ரன்னிங் ஷாதி.காம் படத்தில் நடித்து வருகிறார். இனி இந்திப் படங்களில் நடிக்க வசதியாக, மும்பையிலேயே ஒரு வீடு எடுத்துத் தங்க முடிவு செய்துள்ளார். தீவிரமாக வீடு தேடிய அவர், இப்போது ஒரு ப்ளாட்டில் தங்கி புதிய வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்.

 

குடிக்காதீங்க, புகை பிடிக்காதீங்க! - சிவகார்த்திகேயன்

குடிக்காதீங்க, புகை பிடிக்காதீங்க! - சிவகார்த்திகேயன்

மாணவர்கள் குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நடந்த கல்லூரி விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், "நான் பி.இ. எம்.பி.ஏ படித்திருந்தாலும் நடிப்புத் துறைக்கு விரும்பி வந்துள்ளேன்.

கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உங்களுக்கு பரிசுகள் வழங்கும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மாணவர்கள் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களுக்கு அதிகம் அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. இவற்றை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவ, மாணவிகள் பெற்றோர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்.

இன்னும் 10 ஆண்டுகளில் சினிமாத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். அதுபோல நீங்கள் படிப்பில் ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள். படிப்புதான் உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்," என்றார்.

 

சதா, மனிஷா யாதவுக்கு அம்மா யங் இந்தியா 2014 விருதுகள்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளையொட்டி, அம்மா யங் இந்தியா விருது 2014 சென்னையில் வழங்கப்பட்டது.

நடிகைகள் சதா, மனிஷா யாதவ் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சதா, மனிஷா யாதவுக்கு அம்மா யங் இந்தியா 2014 விருதுகள்!

சென்னை தி நகரில் உள்ள ஆந்திரா க்ளப்பில், தமிழ் நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.

சதா -மனிஷா

சதா, மனிஷா யாதவுக்கு அம்மா யங் இந்தியா 2014 விருதுகள்!

நடிகைகள் சதா, மனிஷா யாதவ், விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆகியோருக்கு அம்மா யங் இந்தியா விருது வழங்கப்பட்டது.

இந்த விருது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதுவதாகவும், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அமைந்த விருதினைப் பெருவது தங்கள் பாக்கியம் என்றும் விருது பெற்றோர் தெரிவித்தனர்.

 

கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது! -இயக்குநர் வ.கௌதமன்

கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது! -இயக்குநர் வ.கௌதமன்

சென்னை: விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்பில் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் வ கவுதமன்.

2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்கவில்லை. அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை. ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும், இறுதி நாளில் 40,000க்கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உ லகம் முழுதும் அறிந்த உண்மை.

2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை. அது மட்டுமிலாமல் வரும் மார்ச் மாதம் ஐநாவில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளானோம்.

அதே நேரத்தில் (வரும் மார்ச்10) ஜெனிவாவில் நீதி கேட்டு மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பதுதான் வேதனையானது.

மார்ச்1, 2 தேதிகளில் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், சிலோன் ஆர்ட்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்துகிறது.

பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.

இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்துக்குக் காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாகத்தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது.

தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு, சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.

இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும், அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம். இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அபூர்வ நாயகன் - கமல் ஹாஸனைப் பற்றிய புத்தகம் வெளியீடு

நடிகர் கமல் ஹாஸனைப் பற்றி அபூர்வ நாயன் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில், இப்புத்தகத்தை உருவாக்கிய ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜன் இப்புத்தகத்தை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

அபூர்வ நாயகன் - கமல் ஹாஸனைப் பற்றிய புத்தகம் வெளியீடு

இந்தப் புத்தகத்தில் கமல்ஹாசனின் பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு கமலின் சாதனைகளை விளக்கும் வகையில் சில கவிஞர்களின் கவிதைகளும், கமலின் திரையுலக சாதனைகள் குறித்த புள்ளிவிபரங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இப்புத்தகம் வெளியிட்டது குறித்து குறிப்பிட்ட கே.ஆர்.நாகராஜன், "1960-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சிறு பையனாக நுழைந்து இன்றுவரையிலும் தனது கடின உழைப்பால், வித்தியாசமான முயற்சிகளால் தமிழ்ச் சினிமாவின் புகழை உயர்த்தியிருக்கும் கமல்ஹாசனுக்கு ராமராஜ் காட்டன் நிறுவனம் செய்திருக்கும் ஒரு சிறிய சமர்ப்பணம் இது..," என்றார்.

 

தம்பிக்கு ஹீரோ சான்ஸ் கேட்கும் இளம் ஹீரோயின்

சென்னை: பெயரில் இனிமையை வைத்திருக்கும் நடிகை ஒருவர் தனது தம்பிக்கு ஹீரோ சான்ஸ் கேட்டு வருகிறாராம்.

பெயரில் இனிமையை வைத்திருக்கும் அந்த மூன்றெழுத்து யா நடிகைக்கு தம்பி மீது சற்றே பாசம் அதிகமாம். கேரளாவில் இருந்து வந்துள்ள அவர் தமிழில் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இன்னும் அவர் எதிர்பார்க்கும் ஒரு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது தம்பியை ஹீரோவாக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தனக்கு வாய்ப்பு கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் தனது தம்பியின் போட்டோவை கொடுத்து ஒரு ஹீரோ சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன் என்று கேட்டு வருகிறாராம்.

நடிகை உயர்ந்த நடிகரின் ஐ ஆம் ரெட் மேன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் மங்களகரமான மேனனும் உள்ளார்.