நான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்... பிரபுதேவா

Direction Happened Chance Prabhudeva

மும்பை: வாண்டட் படம் 100 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கும் வேளையில், தான் இயக்குநர் ஆனது சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் எனக் கூறியுள்ளார் பிரபுதேவா

சமீபத்தில் தனது 40வது பிறந்த்நாளை கொண்டாடிய பிரபுதேவா, நடனம், நடிப்பு மற்றும் டைரக்‌ஷன் என தன் பன்முகத்திறமையால் மின்னிக் கொண்டிருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் சில நொந்த பக்கங்கள் இருந்தாலும், தொழில் ரீதியாக பிரபலமாக உலா வருகிறார். இவருடைய படத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி ஹீரோக்கள் தவம் இருக்கிறார்கள்.

சல்மான் கானை வைத்து இயக்கும் திரைப்படம் உட்பட நான்கு திரைப்படங்கள் தற்போது இவர் கைவசம் உள்ளன.

இந்நிலையில் பிரபுதேவா, ‘ நான் செய்யும் தொழிலை மிகவும் நேசிப்பவன். பாலிவுட்டில் என்னை அங்கீகரித்து விட்டார்கள். அங்கு வரிசையாக படங்கள் செய்து வருகிறேன். ஆனால், நான் இயக்குனர் ஆனது எதிர்பாராமல் நடந்த ஒன்று, தற்செயலானது' எனக் கூறியுள்ளார்.

 

மதுரையில் சத்தம் போடாமல் கமுக்கமாக நடந்த வடிவேலு மகள் திருமணம்

Vadivelu S Daughter Marriage Held Madurai

மதுரை நடிகர் வடிவேலு தனது மகள் திருமணத்தை இன்று மதுரையில் மிகவும் ரகசியமான முறையில்நடத்தினார்.

வடிவேலு கடந்த சட்டசபைத்தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்த்தை கடுமையாக எதிர்த்தும் பிரசாரம் செய்தார். இதனால் தேமுதிகவினரின் கடும் கோபத்திற்கு ஆளானார்.

தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்ததாலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானதாலும் வடிவேலு நிலைமை மோசமானது. அவருக்குப் படம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. வெளியிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார் வடிவேலு. திருமணம் மதுரையில் இன்று நடந்தது. திருமணத்திற்கான அழைப்பிதழை வடிவேலு பலருக்கும் கொடுத்திருந்தாலும் கூட மிகவும் சிலர்தான் வந்திருந்தனர். காரணம்,வடிவேலுவே அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு வர வேண்டாம் என கூறியிருந்ததால் என்று சொல்கிறார்கள்.

தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணம் மிகவும் ரகசியமான முறையில் நடந்ததால் பலருக்கும் அது வடிவேலு வீட்டு திருமணம் என்பதே தெரியவில்லை.

 

மக்கள் தொலைக்காட்சியில் ஈழம்: ஒரு இனத்தின் வரலாறு தொடர்

Ealam On Makkal Tv Week Days

மக்கள் தொலைக்காட்சியில் ஈழம் பற்றிய தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஈழம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இன்றைக்கு நிலவுகிறது. ஆனால் ஈழத்தில் உள்ள தமிழர்களின் நிலை பற்றி மக்கள் தொலைக்காட்சி ஈழம்... ஒரு இனத்தின் வரலாறு தொடர் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்தத் தொடரை திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8:30க்கு காணலாம்.

கடந்த 2008ம் ஆண்டு ஈழம் நேற்றும் இன்றும் என்ற தொடர் ஒளிபரப்பானது. இப்போது இனத்தின் வரலாற்றினை கூறும் ஈழம் தொடர் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.