ட்விட்டரில் பவர்ஸ்டார் பண்ணிய குசும்பை பார்த்தீர்களா?

சென்னை: பவர்ஸ்டார் சீனிவாசன் ட்விட்டரில் இரண்டு புகைப்படங்களை போட்டு தனது குசும்புத்தனத்தை காட்டியுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவர்ஸ்டார் சீனிவாசனை கலாய்த்திருப்பார். ஒரு காட்சியில் சந்தானம் பவரிடம் நானாவது காமெடியன் என்று தெரிந்து இருக்கிறேன் ஆனால் உனக்கு அது தெரியாமல் உள்ளது என்பார்.

பவரிடம் உள்ள ப்ளிஸ் பாயிண்ட் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் கலாய்த்துக் கொள்ளுங்கள், நக்கலடியுங்கள் நான் கண்டுகொள்ளவே மாட்டேன். அதன் மூலம் எனக்கு பப்ளிசிட்டி கிடைத்தால் போதும் என்று இருக்கிறார் மனிதர்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல், கமலினி முகர்ஜி ஜோடி போட்டோவையும், தானும், ரேகாவும் ஜோடியாக நிற்கும் போட்டோவையும் போட்டு இதில் யார் அழகான ஜோடி என்று கேட்டிருக்கிறார். போட்டோவில் கமல் ஜோடியை ஆப்ஷன் ஏ என்றும், தனது ஜோடியை ஆப்ஷன் பி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அழகான ஜோடியை தேர்வு செய்யுமாறு கூறி இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார். விந்தை என்னவென்றால் இரண்டு ஆப்ஷனுமே பி தான். அப்படி என்றால் பவர், ரேகா ஜோடி தான் அழகு என்கிறார்.

 

திருமணம் எனும் நிக்காஹ் யாரையும் காயப்படுத்தும் படமல்ல- ஆஸ்கார் ரவிசந்திரன்

திருமணம் எனும் நிக்காஹ் எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எடுக்கப்பட்ட படமல்ல, என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை வெளியிட இஸ்லாமி சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் 'திருமணம் எனும் நிக்காஹ்'.

யாராக இருந்தாலும் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும். கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும், நண்பர்கள் இடையே ஆகட்டும், நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும், நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும் எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த 'புரிதல்' அவசியம்.

'திருமணம் எனும் நிக்காஹ்' மதங்கள் இடையே கூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும். இந்த படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டன. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அதற்கு பிறகோ 'திருமணம் எனும் நிக்காஹ்' வெளியாகும்."

-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

லிங்காவில் ஒரு ரஜினி கலெக்டர்.. இன்னொருவர் முரட்டு வில்லன்!

லிங்கா படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ரஜினி, ஒன்றில் கலெக்டராகவும் மற்றொன்றில் முரட்டு வில்லனாகவும் நடிக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.

லிங்கா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

லிங்காவில் ஒரு ரஜினி கலெக்டர்.. இன்னொருவர் முரட்டு வில்லன்!

இதில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். ஒன்றில் கலெக்டராக நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் முரட்டு வில்லனாக வருகிறார் ரஜினி.

ஒரு பகுதி முழுவதையும் பிரிட்டிஷ் கால ஆட்சியில் நிகழ்வதைப் போலவும், மறுபகுதியை நவீன காலத்தில் நிகழ்வது போலவும் படமாக்கி வருகிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

ஹைதராபாதில் இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று, ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்து ரஜினி வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை எடுத்துள்ளனர்.

 

பாகுபலியில் தமன்னா... முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இயக்குநர் ராஜமவுலி பிரமாண்டமாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. இவர் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஈகா (நான் ஈ) படத்துக்குப் பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிவரும் படம் பாகுபலி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கின்றனர்.

தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்த ராஜமவுலி, கோடைக்காலம் என்பதால் சில தினங்கள் படக்குழுவுக்கு விடுமுறை அளித்திருந்தார்.

பாகுபலியில் தமன்னா... முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடம் ஒன்றிற்காக தமன்னாவை ஒப்பந்தம் செய்தார் ராஜமவுலி. தமன்னா வருகையுடன் பாகுபலி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்துக்காக ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவிலும், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தளங்களிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகளை நடத்தவிருக்கிறார் ராஜமவுலி.

அடுத்த ஆண்டு கோடையில் பாகுபலியை தெலுங்கு, தமிழில் பார்க்கலாம்!

 

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு இணையதளம்: சல்மான்கான் தொடங்கினார்

டெல்லி: நடிகர் சல்மான் கான் தனது ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாக புதிய இணையதளம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

பீயிங் ஹூமன்(Being human) என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றை நடத்திவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், வேலையில்லாமல் இருக்கும் தனது ரசிகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதன் தொடக்கமாக அவர் பீயிங் ஹூமன் அமைப்புடன் இணைந்து ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு இணையதளம்: சல்மான்கான் தொடங்கினார்

இதனை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருக்கும் தனது தொழில் ரீதியிலான நண்பர்களின் உதவியோடு செயல்படுத்தி உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள சல்மான் கான், "ஃபேஸ்புக் என்பது வெறும் பொழுதுப்போக்குக்கானது அல்ல, அதனை பயனுள்ளதாக உபயோகித்தால் வாழ்வில் உயர்வு பெற முடியும். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேலையில்லாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இது தொடர்பாக நான் எனது நண்பர்களுடன் பேசியுள்ளேன். அவர்களை எனது ரசிகர்களின் திறமைக்கு ஏற்ப வேலை தரும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று கூறி உள்ளார்.

நல்ல முயற்சிதான்... எல்லா நடிகர்களும் பின்பற்றலாமே?

 

ஆன்லைனில் நாளை கோச்சடையான் பிரிமியர்... ஈராஸ் அறிவிப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தை நாளை ஆன்லைனில் உலகம் முழுவதும் பிரிமியர் காட்சியாக திரையிடப் போவதாக அறிவித்துள்ளது ஈராஸ் நிறுவனம்.

படத்தின் இயக்குநர் சவுந்தர்யாவே இதனை வீடியோவில் அறிவித்துள்ளார்.

கடந்த மே 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது கோச்சடையான். தமிழில் இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தெலுங்கில் பரவாயில்லை எனும் அளவுக்கு வசூல் அமைந்தது. ஆனால் இந்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

ஆன்லைனில் நாளை கோச்சடையான் பிரிமியர்... ஈராஸ் அறிவிப்பு

தமிழகத்தில் 50 வது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். சென்னையில் 40 அரங்குகளில் இன்னும் படக் காட்சிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் படத்தை ஆன்லைனில் நாளை ஜூன் 28-ம் தேதி வெளியிட தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் படத்தை நாளை காணலாம்.

ஏற்கெனவே கோச்சடையான் படத்தின் திருட்டு வீடியோ இணையங்களில் வெளியாகிவிட்டது. அதை அவ்வப்போது தடுத்து வந்தார்கள். இதைவிட நாமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் வருமானமாவது வருமே என்ற நினைப்பில் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

 

'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

மும்பை: நெஸ் வாடியா தன்னை பலாத்காரம் செய்ததாக ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டிய தினத்தில், ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்ததையும், அதனால் காயமடைந்து வீங்கியிருந்ததையும் நான் பார்த்தேன் என ஒரு சாட்சி வாக்குமூலம் தந்துள்ளார்.

தனது முன்னாள் காதலனும், கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பாலியல் தொந்தரவு புகார் மீதான விசாரணையை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரீத்தி ஜிந்தா நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

பலர் முன்னிலையில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், 3 முறை அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறினார். 14 சாட்சிகளின் பெயர்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மே 30-ந்தேதி மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றிய கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மைதானத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் 172 முறை சுழன்று காட்சிகளையும் பதிவு செய்துள்ளன. 5 கண்காணிப்பு கேமராக்கள் பிரீத்தி ஜிந்தா அமர்ந்து இருந்த பகுதியில் இருந்தன. அனைத்து கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் பிரீத்தி ஜிந்தாவின் குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டுள்ள சாட்சிகளுள் ஒருவரான ஜெய் கனோஜியா அளித்துள்ள வாக்கு மூலத்தில், 'குறிப்பிட்ட நாளில் ப்ரித்தி ஜிந்தாவின் கையைப் பிடித்கு நெஸ் வாடியா இழுத்ததைப் பார்த்தேன். இதனால் அவர் கை மற்றும் தோளில் காயமும் வீக்கமும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால் அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை கேட்க முடியவில்லை,' என்றும் கூறியுள்ளார்.

மற்ற சாட்சிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார்.