‘கெஸ்ட் ரோல் தான், ஹீரோயின் இல்லை’... மல்லிகா இயக்கும் படம் குறித்து பாவனா விளக்கம்

சென்னை: ஆட்டோகிராப் படத்தில் நடித்த மல்லிகா இயக்கும் மலையாளப் படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை என நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

ஆட்டோகிராப், திருப்பாச்சி, சென்னையில் ஒரு நாள் உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை மல்லிகா. இவர் முதல்முறையாக ‘பழனியிலே கனகம்' என்ற பெயரில் முதன்முறையாக மலையாளப் படம் ஒன்றை இயக்குகிறார்.

‘கெஸ்ட் ரோல் தான், ஹீரோயின் இல்லை’...  மல்லிகா இயக்கும் படம் குறித்து பாவனா விளக்கம்

சினிமாவில் துணை நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகளை யதார்த்தமாக அலசும் கதைக்களம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் விளம்பரம் ஒன்று வெளியானது. அதில், இப்படத்தில் ஹீரோயினாக பாவனா நடிப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாவனா, இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நட்பு அடிப்படையில் மல்லிகா கேட்டதால், அவர் இயக்கும் முதல் படத்தில் நடிக்க சம்மதித்தேன். ஆனால், நான் ஹீரோயினாக நடிப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. எனக்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங். நான் ஏற்பது கவுரவ வேடம். ஹீரோயின் அல்ல. இப்போது மலையாளத்தில் நடிக்கிறேன். தமிழில் விஜய்யுடன் ‘புலி' படத்தில் கேட்டுள்ளனர். நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவைப் பற்றித் தெரியாத நபர்களுக்கு கூட ரஜினியைத் தெரிந்திருக்கிறது! - த்ரிஷா

சென்னை: இந்தியாவைப் பற்றித் தெரியாதவர்கள் கூட சூப்பஸ் ஸ்டார் ரஜினிகாந்தைத் தெரிந்திருக்கிறது என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

ரஜினியின் தீவிர ரசிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. சில ஆண்டுகளுக்கு முன் த்ரிஷா நடித்த ஒரு படத்தின் இசை வெளியீட்டை ரஜினிதான் தலைமையேற்று நடத்தித் தந்தார். அந்த நிகழ்ச்சியிலும் தான் எந்த அளவு ரஜினி ரசிகை என்பதைக் காட்டிக் கொண்டார்.

இந்தியாவைப் பற்றித் தெரியாத நபர்களுக்கு கூட ரஜினியைத் தெரிந்திருக்கிறது! - த்ரிஷா

தனக்கு திருமணம் ஆவதற்குள் ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.

ரஜினியின் தீவிர ரசிகை என்ற முறையில் அவரிடம் ரஜினி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ரஜினி படத்தை முதல் முறையாகப் பார்த்ததிலிருந்தே அவரது தீவிர ரசிகை நான். இதே துறையில் இருப்பதால், அவர் படங்கள் ரிலீசுக்கு சில மணி நேரம் முன் பார்த்துவிடும் வெகு சில பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.

அவரை எங்கே பார்த்தாலும், அதை தோழுகளுடன் பகிர்ந்து கொண்டாலும் அவரது தீவிர ரசிகர்களுக்கு மத்தியில் இருப்பதைப் போலத்தான் தோன்றும். காரணம் பல வகையிலும் சென்னை என்றாலே ரஜினிகாந்த்தான் என்று ஆகிவிட்டது.

சென்னை என்றாலே நினைவிற்கு வரும் முதல் பெயர் ரஜினிகாந்த் தான். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் என பல்வேறு உலக நாடுகளுக்கு இன்று சென்னை பற்றி தெரிந்துள்ளது என்றால், அது ரஜினி இங்கு இருப்பதால்தான்.

இந்தியாவைப் பற்றி தெரியாத நபர்களை கூட நான் சந்தித்திருக்கின்றேன், ஆனால் அவர்களுக்குக் கூட நம் சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தெரிந்திருக்கிறது," என்றார்.

 

முதல் முறையாக அப்பா கமல் படத்துடன் மோதும் ஸ்ருதி ஹாஸன்!

முதல் முறையாக அப்பா கமல் ஹாஸன் படத்துடன் மோதுகிறார் மகள் ஸ்ருதிஹாஸன்.

ஆம், இருவரின் படங்களும் ஒரே நாளில் பெரிய அளவில் வெளியாகின்றன.

கமல் ஹாஸன் நடித்து, லிங்குசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன் வரும் மே மாதம் 1-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

முதல் முறையாக அப்பா கமல் படத்துடன் மோதும் ஸ்ருதி ஹாஸன்!

இதே நாளில் ஸ்ருதி ஹாஸன் இந்தியில் நடித்துள்ள பிரமாண்ட படமான கப்பர் இஸ் பேக் படமும் வெளியாகிறது. இது தமிழில் வெளியான ரமணா படத்தின் இந்தி ரீமேக் ஆகும். அக்ஷய் குமார் ஹீரோ.

ஸ்ருதி ஹாஸன் நடிக்க ஆரம்பித்த பிறகு, முதல் முறையாக இப்போதுதான் அப்பா படம் வெளியாகும் தினத்தில் அவரது படமும் வெளியாகிறது.

இதே நாளில் ரஜினி மகள் இயக்கிய வை ராஜா வை படமும் வெளியாகிறது.

 

ஏழு வயது முதல் எழுபது வயதுவரை... - ராகவா லாரன்ஸைப் பாராட்டிய ரஜினி!

காஞ்சனா 2-ல் ராகவா லாரன்ஸின் வித்தியாசமான கெட்டப்புகளைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

லாகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தமாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது.

ஏழு வயது முதல் எழுபது வயதுவரை... - ராகவா லாரன்ஸைப் பாராட்டிய ரஜினி!

சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இந்தப் படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாக நடித்துள்ள புகைப்படங்கள் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

தவிர இந்த படத்திலேயே 7 வயது சிறுவனாகவும் லாரன்ஸ் நடித்திருக்கிறார்.

ஏழு வயது முதல் எழுபது வயதுவரை... - ராகவா லாரன்ஸைப் பாராட்டிய ரஜினி!

அந்த வித்தியாசமான தோற்றத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நீ நடித்திருக்கிறாய்... உனக்கு அந்த ராகவேந்திர சுவாமிகளின் ஆசி எப்போதும் உண்டு. இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும்," என்று பாராட்டினார்.

படம் தமிழ், தெலுங்கு, இரு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது காஞ்சனா 2.

 

நாளை த்ரிஷா இல்லனா நயன்தாரா டீசர்!

''த்ரிஷா இல்லனா நயன்தாரா" படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது.

தலைப்பு வைத்த நாளிலிருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க கயல் ஆனந்தி ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

'உற்சாகமும் புதுமையும்' பொங்கும் இளைஞர்களைப் பற்றிய படம் இது. பூஜை முதல் இன்றுவரை இந்த இளமைக் கூட்டணியின் உற்சாகமும், உழைப்பும் எங்களை வழிநடத்தி வருகிறது' என்கிறார் படத்தின் தயாரிப்பாலற் சிஜே ஜெயக்குமார்.

நாளை த்ரிஷா இல்லனா நயன்தாரா டீசர்!

சோனி மியுசிக் நிறுவனம் படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளதாம்.

டீசரை நாளை ஏப்ரல் 16-ம் தேதி வெளியிடப் போகிறார்களாம். சிஜெ ஜெயக்குமார் கூறுகையில், "இந்த டீசர் அனைத்து இளைஞர்களும் பிடிக்கும், அவர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியை நினைவுக் கூறும் வகையில் அமைந்துள்ளது," என்றார்.

 

சூர்ய பிரகாஷ் இயக்கத்தில் 'அதிபர்' ஆகும் ஜீவன்!

‘யுனிவர்சிட்டி', ‘திருட்டுப்பயலே', ‘நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜீவன்.

இவர் நடிப்பில் கடைசியாக ‘நான் அவன் இல்லை-2' படம் வெளிவந்தது. இந்த படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து, தனது சொந்த தொழிலை கவனித்துக் கொள்வதற்காக வெளிநாடு போய்விட்ட, ஜீவன் தற்போது மீண்டும் திரும்பி வந்து தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

சூர்ய பிரகாஷ் இயக்கத்தில் 'அதிபர்' ஆகும் ஜீவன்!

‘மாயி', ‘திவான்', ‘மாணிக்கம்' ஆகிய படங்களை இயக்கிய சூரிய பிரகாஷ் இயக்கும் புதிய படத்தில் ஜீவன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு அதிபர் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இவருடன் சமத்திரக்கனி, ரஞ்சித், ரிச்சர்ட், தம்பி ராமையா, சிங்கமுத்து, ராஜ்கபூர், கோவை சரளா, மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

‘செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் ‘சிவா' என்ற கதாபாத்திரத்தில் ஜீவன் நடிக்கிறார். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்' கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைக்கிறார். பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

 

புரோடக்ஷன் நெ.14... கைகோர்த்த விஜய் சேதுபதி - சீவீ குமார் - ஞானவேல்ராஜா

சீவீ குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனும் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கின்றனர்.

புரோடக்ஷன் நெ.14... கைகோர்த்த விஜய் சேதுபதி - சீவீ குமார் - ஞானவேல்ராஜா

இந்தப் படத்துக்கு புரொடக்ஷன் நெ 14 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.

புரோடக்ஷன் நெ.14... கைகோர்த்த விஜய் சேதுபதி - சீவீ குமார் - ஞானவேல்ராஜா

சூது கவ்வும் வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார்.

புரோடக்ஷன் நெ.14... கைகோர்த்த விஜய் சேதுபதி - சீவீ குமார் - ஞானவேல்ராஜா

விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

புரோடக்ஷன் நெ.14... கைகோர்த்த விஜய் சேதுபதி - சீவீ குமார் - ஞானவேல்ராஜா

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

புரோடக்ஷன் நெ.14... கைகோர்த்த விஜய் சேதுபதி - சீவீ குமார் - ஞானவேல்ராஜா

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.