லிங்கா நஷ்டமில்லை... ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்

சென்னை: ஒரு தயாரிப்பாளராக லிங்கா படத்தால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் இந்தப் படத்தை வெளியான நான்காம் நாளிலிருந்து ஓடவிடாமல் கொன்று விட்டார்கள் சிங்கார வேலன் போன்ற நபர்கள், என்று கூறினார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் கடந்த ஜனவரி 12-ம் தேதி அவர் பிறந்த நாளன்று வெளியானது.

படத்துக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. முதல் மூன்று நாட்களில் ரூ 104 கோடி ரூபாயை வசூலித்தது இந்தப் படம்.

லிங்கா நஷ்டமில்லை... ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்

ஆனால் அடுத்த நாளே, இந்தப் படம் சரியில்லை.. படத்துக்கு கூட்டமில்லை.. படத்தால் எங்களுக்கு நஷ்டம்.... பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து எதிர்மறைப் பிரச்சாரத்தில் இறங்கினார் சிங்கார வேலன் என்ற மீடியேட்டர்.

இது படத்தை வெகுவாகப் பாதித்தது. உலகெங்கும் மூன்றாயிரம் அரங்குகளில் படம் ஓடிக் கொண்டிருந்த போதே இப்படி பிரச்சாரம் செய்தது தமிழ் சினிமா இது வரை பார்த்திராதது. தாங்கள் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ள லிங்கா படம் ஓட வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு இல்லை. வேறு உள்நோக்கத்துடன் படத்தை ஓட விடாமல் செய்ய மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்று ரசிகர்களும் மீடியாக்களும் சொல்லும் அளவுக்கு மிக மோசமாகப் போனது இந்த பிரச்சாரம்.

குறிப்பாக இந்த சிங்கார வேலன் ரஜினியை மிகத் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் என்பதே உண்மை. அதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்களை பெரும்பாலான செய்தியாளர்கள் வைத்துள்ளனர்.

லிங்கா நஷ்டமில்லை... ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்

ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினைையை அரசியல் ஆக்கி, அதில் சீமான், வேல் முருகன் போன்றவர்களை கொண்டு வந்தனர். நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிரான அரசியலையும் அரங்கேற்றினர் சிங்கார வேலன் அன்ட் கோ.

இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக இருந்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் விநியோகஸ்தர் வேந்தர் மூவீஸ் டி சிவா இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "நான் 30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன். 12 வருடங்களுக்கு முன் ரஜினி எனக்கு நண்பரானார். அவர் கடவுளின் அம்சம். அவரை நான் கடவுளாகத்தான் அவரைப் பார்க்கிறேன். அத்தனை சிறந்த மனிதர் அவர். அவர்தான் எனக்கு இந்தப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.

லிங்கா நஷ்டமில்லை... ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்

கடவுள்தான் அவர் மூலம் இந்த பாக்கியத்தை கொடுத்தாக கருதினேன். படம் பூஜை போடும்போதே ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம்தேதி வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து கஷ்டப்பட்டு உழைத்தோம். பணத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக யாரிடமும் ஒரு பைசா கடன் வாங்காமல் என் முழு பணத்தையும் முதலீடு செய்தேன்.

நான் தயாரித்த படத்தை ஈராஸ் நிறுவனத்திடம் விற்றோம். அவர்கள் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டனர். அம்மா கிரியேஷன்ஸ்தான் இந்த விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றார்கள்.

லிங்கா நஷ்டமில்லை... ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்

ஆனால் படம் வெளியான உடனேயே படம் சரியில்லை, எந்த ஷோவும் ஃபுல்லாகவில்லை என்று விநியோகஸ்தர்கள் மீடியாவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உலகிலேயே இதுபோன்ற ஒரு செயலை நான் எங்கும் பார்த்ததில்லை.

இது படத்துக்கு வரவேண்டிய கூட்டத்தை பாதித்தது. இதனை ரஜினி சார் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர், 'நானும் பார்த்தேன் வெங்கடேஷ்.. அதிக பணம் கொடுத்த அழுத்தத்தில் ஏதோ பேசியிருக்கிறார்... மனசில் வச்சிக்காதீங்க. நான்கைந்து வாரம் போகட்டும்.. கணக்கு வழக்கு பார்த்து, அவர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு ஒரு முடிவு எடுக்கலாம்,' என்றார். தன்னால் யாரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை தெளிவாக இருக்கும் மனிதர் அவர்.

டி சிவாவிடம் சொன்னபோது, சிங்கார வேலனிடம் சொல்லிவிட்டேன். இனிமேல் பேச மாட்டார் என்றார்.

ஆனால் இந்த சிங்கார வேலன் தன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாடகம் போட்டார். ஆங்காங்க நின்று இஷ்டத்துக்கும் பேசினார்.

லிங்கா நஷ்டமில்லை... ஆனால் படத்தை திட்டமிட்டு கொலை செய்தனர்! - ராக்லைன் வெங்கடேஷ்

படம் ஓடக் கூடாது என்பதுதான் அவர் நோக்கமாக இருந்தது. படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது.. புரமோஷன் செய்யுங்கள் என்று என்னிடம் கூறியிருந்தால் நான் ரஜினியிடம் பேசி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்போம். ஒரு நியாயமான விநியோகஸ்தர் அதைத்தான் செய்திருப்பார். மற்ற படங்களுக்கும் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் நோக்கம் அதுவல்ல.

சிறிது நாட்களிலேயே படம் ஓடவில்லை என்று கூறி உண்ணாவிரதம் அளவிற்கு கொண்டு வந்துவிட்டார். அவர் பப்ளிசிட்டி, பாலிடிக்ஸுக்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். உங்க பாலிடிக்ஸுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. இந்த சினிமா வேணாங்க..

45 கோடியில் படத்தை தயாரித்து ரூ. 200 கோடிக்குமேல் லிங்கா படத்தை வியாபாரம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் செய்த செலவுகளையும் படத்தை விற்றதற்கான ஆதாரத்தையும் நான் காண்பிக்கிறேன். ஆனால் ரூ. 200 கோடிக்கு மேல் விற்கப்பட்டதற்கான ஆதாரத்தை காண்பித்து நிரூபித்தால், அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதை அங்கேயே நான் செய்கிறேன். அப்படி இல்லையெனில் இந்த சிங்கார வேலன் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்...," என்றார்.

சரி, ஒரு தயாரிப்பாளராக சொல்லுங்கள்.. லிங்கா படம் லாபமா நஷ்டமா?

"ஒரு தயாரிப்பாளராக லிங்கா லாபம்தான். எனக்கு நஷ்டமில்லை. ஆனால் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்க வேண்டிய படத்தை இந்த சிங்கார வேலன் தன் விஷமப் பிரச்சாரத்தால் கொலை செய்தார் என்பதுதான் உண்மை. இது ஒரு பெரிய சதி. திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். இதனை அவர் எந்த உள்நோக்கத்தோடு செய்தார் என்பது சீக்கிரமே வெட்ட வெளிச்சமாகிவிடும்," என்றார்.

 

சிங்கார வேலன் கொடுத்ததே வெறும் 75 லட்சம்தான்! - லிங்கா தயாரிப்பாளர்

லிங்கா படத்துக்கு எதிராக பெரிய பிரச்சாரத்தை நடத்தி வரும் சிங்கார வேலன் கொடுத்ததே வெறும் 75 லட்ச ரூபாய்தான். அவரது பங்குத் தொகையில் இன்னும் 55 லட்சம் பாக்கி வைத்திருக்கிறார், என்று அம்பலமாக்கியுள்ளார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

இதுகுறித்து ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "நாங்க படத்தை வித்தது எம்.ஜி.முறைப்படி. உண்மையா சட்டப்படி அவருக்கு நஷ்டஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. சட்டப்படி ஒப்பந்தம் இருக்கு.

சிங்கார வேலன் கொடுத்ததே வெறும் 75 லட்சம்தான்! - லிங்கா தயாரிப்பாளர்

ஆனா இப்போ அவங்க திருப்பிக் கேக்குறாங்க.. அதுலேயும் சிங்காரவேலன் ‘எட்டு கோடி ரூபாய்க்கு திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவை வாங்கியிருக்கேன்'னு சொல்லியிருக்காரு. அதுல அவரோட பங்கு வெறும் ஒன்றே கால் கோடிதான். மீதியெல்லாம் தியேட்டர் அதிபர்கள் மற்றும் அவரோட நண்பர்கள் கொடுத்தது. அதைத்தான் வேந்தர் மூவிஸ்ல கொடுத்திருக்காரு.

இன்னும் ஒரு விஷயம்.. சிங்காரவேலன் தனிப்பட்ட முறையில் கொடுக்க வேண்டிய ஒன்றே கால் கோடி ரூபாய்ல 55 லட்சம் ரூபாயை கடைசி வரைக்கும் அவர் தரவேயில்லை. இன்னும் பாக்கி வச்சிருக்கார். வெறும் 75 லட்சம் ரூபாய்தான் அவரோட முதலீடு. இதன்படி பார்த்தால்கூட நாங்க அவருக்கு நஷ்ட ஈடு கொடுக்கணும்னு அவசியமே இல்லை. அவர் இதுக்கு மேலேயே சம்பாதிச்சிட்டாரு..", என்றார்.

 

லிங்கா நஷ்டம்... காரணம் விநியோகஸ்தர்களின் தவறான பிரச்சாரம்தான்! - டி சிவா

லிங்கா பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் நடந்து கொண்ட முறை மிகவும் தவறானது. அவர்களால்தான் அந்தப் படம் நஷ்டமடைந்தது. அதற்காக ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் ரஜினி சாரிடம் மன்னிப்புக் கோருகிறோம், என்றார் வேந்தர் மூவீஸ் சிஇஓ டி சிவா.

லிங்கா விவகாரம் குறித்து விளக்க நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி சிவா கூறியதாவது:

'லிங்கா படம் ரிலீசாகி நான்காவது நாளே திருச்சி பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன் படம் நஷ்டம்னு பேட்டி கொடுக்க ஆரம்பிச்சுட்டார், அதை பார்த்துட்டு தயாரிப்பாளர் வெங்கடேஷ் சார், என்னங்க இப்படியெல்லாம் பேசுறாங்க, நீங்க அதை கொஞ்சம் கவனிக்கக்கூடான்னு கேட்டார்.

லிங்கா நஷ்டம்... காரணம் விநியோகஸ்தர்களின் தவறான பிரச்சாரம்தான்!  - டி சிவா

நான் உடனே சிங்காரவேலனுக்கு போன் செஞ்சு, என்ன சிங்காரம்.. இப்படியெல்லாம் பேசுறீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.. படம் ரிலீஸாகி 4 நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி பிரச்னையை கிளப்பினா எப்படின்னு கேட்டேன்.

இல்ல ஸார்.. ஏதோ ஒரு எமோசனல்ல அப்படி பேசிட்டேன். சாரி சார்னு சொன்னார்.
நான் உடனே அதை வெங்கடேஷ் சார்கிட்டே சொல்லி, இனி பேச மாட்டார்னு சொன்னேன்.

ஆனா அப்படி பேச ஆரம்பிச்சு அவர் தினமும் இதே பிரச்னையை கிளப்ப ஆரம்பிச்சாரு. மறுபடியும் சிங்காரவேலன்கிட்ட கேட்டுக்கிட்டேன்.. மதன் சார்.. ஊர்ல இல்லை. பத்தாம்தேதிதான் வர்றாரு. அவர் வந்தவுடனே நாம உட்கார்ந்து பேசி நம்ம பிரச்னையை தீர்த்துக்கலாம், கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னேன்.

ஆனா அவர் என்னோட பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து அவரோட பேட்டி பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வர ஆரம்பிச்ச உடனே அதுல சந்தோஷப்பட்டு தொடர்ந்து லிங்காவைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தாப்புல. நேத்து ராத்திரி கூட அவங்ககிட்ட பேசினேன். இன்னிக்கு உண்ணாவிரம் நடக்காது சார்ன்ற மாதிரியேதான் பேசினாங்க.

ஆனா உண்ணாவிரதம் நடந்துச்சு... சிங்கார வேலன் பின்னாடி சில விநியோகஸ்தர்கள் போறதக்கு காரணம், அவர் பின்னாடி போனா உடனே ஏதாவது பணம் கிடைச்சுடும்னு நினைச்சிட்டாங்க.. இதுதான் காரணம். ரஜினி சாரை பத்தி மோசமா என்கிட்ட பேசினார். அவருக்கெல்லாம் இந்தளவுக்கு பேசறதுக்கு எப்படி தைரியம் வந்ததுன்னே தெரியலை. ரஜினி சார் எப்பேர்ப்பட்ட மனிதர், தமிழ்நாட்டின் பொக்கிஷம் அவர். அவர் மாதிரி பெருந்தன்மையானவரை, நேர்மையானரை, மனிதாபிமானம் மிக்கவரை இந்த திரையுலகம் கண்டதில்லை.

4 வாரத்துக்கு அப்புறம் நஷ்டம்னு சொன்னா கூட பரவால்ல, 4வது நாளிலேயே படத்தை பத்தி தப்பா பேசறது மிகப் பெரிய தவறு. அதுதான் படத்துக்கு எதிராக அமைந்தது. இந்த விவகாரத்துல சிங்காரவேலன் இல்லீகலா அப்ரோச் பண்றாருன்னு மற்ற விநியோகஸ்தர்களும் புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காம தள்ளி இருக்காங்க.. எந்த சங்கமும் அவர் பக்கம் இல்லை. இனி அவரால இந்த சினிமாவில பிஸினஸ் பண்ணவும் முடியாது. யாரும் அவருக்கு படமும் தரமாட்டார்கள்.

லிங்கா' படத்தால் எங்களுக்கு நஷ்டம்தான். அதுல எந்த சந்தேகமும் இல்லை. படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்களின் நிலைமை எங்களுக்கும் புரியுது. அவங்களுக்கு நிச்சயமா நாங்க ஏதாவது செய்வோம். அப்படியொரு மனநிலைலதான் நாங்களும் இருந்தோம்.

தயாரிப்பாளர்கிட்ட பேசி அது பத்தி ஒரு முடிவுக்கு வந்து அவர்கிட்ட கான்பன்சேஷனா ஒரு தொகையைக் வாங்கி விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து அவங்க நஷ்டத்தை சரிகட்டத்தான் நாங்களும் நினைச்சிருக்கோம்.

இந்த நேரத்துல எங்களோட நல்லெண்ணத்தையே புரிஞ்சுக்காம இப்படி அவதூறா, ஆபாசமா, ரஜினி ஸாரை ரொம்ப கேவலமா சிங்காரவேலன் பேசிக்கிட்டேயிருக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. அவரை யாரோ தப்பா வழிநடத்துறாங்கன்னு நிச்சயமா தெரியுது.

நடந்த சம்பவங்களுக்காக சிங்காரவேலன் உட்பட மற்ற விநியோகஸ்தர்கள் லிங்கா தயாரிப்பாளர் பற்றியும் ரஜினி சாரை பற்றியும் பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன், வெங்கடேஷ் சார் மன்னிச்சிடுங்க.. நீங்க தொடர்ந்து தமிழ்ல படம் பண்ணுங்க..,' என்றார்.

வேந்தர் மூவிசும் அவர்களிடம் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் இடைப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்னையை ஊதிப்பெரிதாக்கி, லிங்காவின் பிரம்மாண்ட வெற்றியை டேமேஜ் செய்த இவர்களை என்ன செய்யலாம்?

 

உள்நோக்கத்தோடு லிங்கா மற்றும் ரஜினி பற்றி படுமோசமாகப் பேசுகிறார் சிங்கார வேலன் - டி சிவா

சிங்காரவேலனின் பேச்சு மிகவும் மோசமானதாக இருந்தது. அவர் ரஜினி ஸாரை பத்தி பேசினதை நான் வெளிலேயே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கேவலமா பேசினார்.

பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததுபோல் லிங்கா படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டார். ரஜினியை பற்றி அவதூறாகப் பேசி அவர் மனதையும் நோகடித்துவிட்டார்.

ரஜினி ஸார் நடித்த 150 படங்களில் 145 படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரே நடிகர் இந்தியாவிலேயே ரஜினி ஸார்தான்.

உள்நோக்கத்தோடு லிங்கா மற்றும் ரஜினி பற்றி படுமோசமாகப் பேசுகிறார் சிங்கார வேலன் - டி சிவா

அதேபோல் தமிழ் சினிமால, ஏன் இந்திய சினிமாலேயே நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தைத் திருப்பிக் கொடுத்த ஒரே நடிகர் அவர்தான். ‘பாபா', ‘குசேலன்' படத்துல நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களை திருப்பிக் கூப்பிட்டு அவங்க சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு தொகையைக் கொடுத்து அனுப்பி வைச்சவர் ரஜினி. அவரையே இப்படி பேசினால் எப்படி..?

இந்தப் பிரச்சினையை எப்படி பேசணுமோ அப்படி பேசித் தீர்க்கணும். இதை வெளில சொல்லி இப்படித்தான் பேசணுமா..? நான் திரும்பத் திரும்ப அவங்ககிட்ட சொன்னது, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. மதன் ஸார் வந்தவுடனே பேசித் தீர்த்துக்கலாம்னு'தான்.. ஆனா சிங்காரவேலன் ஏதோ உள்நோக்கத்தோட தனக்கு புகழும், பெயரும் கிடைக்கணும்னோ என்னவோ இதை யூஸ் பண்ணியிருக்காருன்னு நான் நினைக்கிறேன்.

இவரோட உள் நடவடிக்கையை பார்த்துதான் அவர் உறுப்பினராக இருக்கும் விநியோகஸ்தர்கள் சங்கமே இதில் தலையிட மறுத்துவிட்டது.

 

ரிங்டோன் போட்டுக் கொடுத்ததற்கான சம்பளத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றினாரா ஏ.ஆர். ரஹ்மான்?

சென்னை: 2010-2011ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த செல்போன் நிறுவனமான லெபாராவுக்கு ரிங்டோன் போட்டுக் கொடுத்ததற்காக வாங்கிய சம்பளத்திற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆஸ்கர் மன்னன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2010-2011ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த செல்போன் நிறுவனமான லெபாராவுக்கு ரிங்டோன் போட்டுக் கொடுத்துள்ளார். அதற்காக லெபாரா ரஹ்மானுக்கு ரூ.3.47 கோடி சம்பளமாக அளித்துள்ளது. இந்த பணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பவுன்டேஷன் என்ற டிரஸ்ட்டின் வங்கி கணக்கில் செலுத்தும்படி ரஹ்மான் அந்நிறுவனத்தை கேட்டதாக கூறப்படுகிறது.

ரிங்டோன் போட்டுக் கொடுத்ததற்கான சம்பளத்திற்கு வரி கட்டாமல் ஏமாற்றினாரா ஏ.ஆர். ரஹ்மான்?

அந்த டிரஸ்ட்டுக்கு வெளிநாட்டு பணத்தை பெற அனுமதி இல்லை. மேலும் டிரஸ்ட்டின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது நன்கொடையும் அல்ல என்பதால் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ரஹ்மான் மீறியுள்ளதாகவும், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஹ்மானின் ஆடிட்டர் வி. சடகோபன் கூறுகையில்,

நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த விவகாரத்தை தற்போது ஏன் பிரச்சனையாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக ரஹ்மான் விரைவில் அறிக்கை வெளியிடுவார். ஏற்கனவே நாங்கள் அதில் 50 சதவீத வரியை செலுத்திவிட்டோம். அவர்கள் செலுத்திய மொத்த பணமும் பிக்சட் டெபாசிட்டில் உள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே ரஹ்மான் அலுவலகத்திற்கு வந்து ஆவணங்களை சரிபார்த்தனர் என்றார்.

 

லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! - தயாரிப்பாளர்

லிங்கா படத்துக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கும் எதிரான சதிதான் இந்த சிங்கார வேலன் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் செய்திருப்பது என்றார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

நேற்று லிங்கா செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு அவருடன் சில நிமிடங்கள் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு முன் மேடையிலேயே, சிங்கார வேலன் மற்றும் அவருடனிருப்பவர்கள் நோக்கம் லிங்காவுக்கு நஷ்டஈடு கேட்பது போலத் தெரியவில்லை. படத்தைக் கெடுக்க வேண்டும், ரஜினி சாருடைய நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பது போலத்தான் இருந்தது.

லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! - தயாரிப்பாளர்

தன்னை அவர் ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டே, ரஜினி பெயரை இவ்வளவு மோசமாகக் கெடுக்கிறார் என்றால் இவர் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும்.

நிச்சயம் இந்த உண்மைகள் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

பின்னர் அவரிடம், இது யாருடைய தூண்டுதல் என நினைக்கிறீர்கள்? படம் வாங்குவது போல நாடகமாடி, இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றியுள்ளார்களா? என்றோம்.

லிங்கா படத்துக்கும் ரஜினி சாருக்கும் எதிரான சதி இது! - தயாரிப்பாளர்

'நிச்சயம் அப்படித்தான் தோன்றுகிறது. படத்தை வாங்கி வெளியிட்டவர் செய்ய வேண்டிய வேலை என்ன? அதை அடுத்த கட்டத்துக்கு புரமோட் பண்ண கூப்பிடலாம். அல்லது வசூல் குறைந்தால், அதை கூட்ட என்ன செய்யலாம் என்று எங்களைக் கேட்டிருக்கலாம்... குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை படத்தின் ஓட்டத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் கணக்கு வழக்கைக் காட்டியிருக்கலாம்.

இந்தத் தொழிலில் ஒப்பந்தம் போன்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். மனிதாபிமான அடிப்படையில் பார்த்துக் கொள்ளலாம். இந்த சிங்கார வேலனோ, படத்தைக் கெடுப்பதில்தான் குறியாக இருந்தார்.

எவ்வளவு ஆயிரம் பேர் கஷ்டப்பட்டு, எத்தனை கோடி செலவழித்து உருவாக்கப்பட்ட பிரமாண்ட படம் அது.. அதுவும் ரஜினி என்ற மகா மனிதர், தெய்வம் நடித்த படம். மக்கள் ரசித்துப் பார்த்தார்கள். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கத் தொடங்கியபோது, இப்படி அபாண்டமாக பேசிவிட்டதால், சிடியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு பண்ணிவிட்டார்கள். திருச்சி பகுதியில் உள்ள என் நண்பர் ஒருவரே கூட இதைச் சொன்னார்.

இது முறையான வியாபாரமில்லை. இப்படி இருந்தால் இன்டஸ்ட்ரி நிலைக்காது. சிங்கார வேலன் மாதிரி ஆட்கள் அரசியலுக்குப் போகட்டும். சினிமாவை விட்டுவிடுங்கள்.

யாருடைய தூண்டுதலில், திட்டமிட்ட சதியில் சிக்கி அவர் இதைப் பண்ணியிருந்தாலும், அந்த உண்மைகள் நிச்சயம் வெளியில் வரும்," என்றார்.