அனுஷ்கா மீது புகார் கொடுக்கலாமா? இயக்குனர் சுராஜ் யோசனை

Anushka Upsets Suraj   
உயர்ந்த நடிகை அனுஷ்கா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கலாமா என்று அலெக்ஸ் பாண்டியன் இயக்குனர் சுராஜ் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

நடிகை அனுஷ்கா கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் துவங்கியபோது இயக்குனர் சுராஜ் அனுஷ்கா புகழ் பாடி வந்தார். பார்ப்பவர்கள் எல்லாம் இவர் என்ன எப்ப பார்த்தாலும் அனுஷ்கா புராணம் பாடுகிறாரே என்று கூறினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நடிகர் சங்கத்தில் அனுஷ்கா மீது புகார் கொடுக்கலாமா என்று சுராஜ் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அவரின் இந்த மனமாற்றத்திற்கு முழுக்க, முழுக்க காரணம் அனுஷ்காவாம். அனுஷ்கா படத்திற்கு 3 ஷெட்யூலாகப் பிரித்து கால்ஷீட் கொடுத்தாராம். முதல் கட்டப் படப்பிடிப்பில் சமத்தாக வந்து நடித்தவர் அடுத்தடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுக்கிறாராம். விக்ரமுடன் தாண்டவம், செல்வராகவனின் இரணடாம் உலகம் மற்றும் 2 பெத்த தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறாராம்.

இது தான் சுராஜ் கடுப்பானதற்கு காரணம். அவர் புகார் கொடுப்பாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Close
 
 

ஒரு வழியாக பேத்தியின் பெயரை அறிவித்த அமிதாப் பச்சன்

Big B Confirms Granddaughters Name Aaradhya
ஐஸ்வர்யா-அபிஷேக்கின் மகள் பெயர் ஆராத்யா தான் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு எந்த தேதியில் பிறக்கும், ஆணா, பெண்ணா என்று ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. ஏராளமானோர் பெட் கூட வைத்தனர். இன்று குழந்தை பிறக்கப் போகிறது, நாளை பிறக்கப் போகிறது என்று ஒரு வழியாக குழந்தையை பெற்றெடுத்தார் ஐஸ்வர்யா.

குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகியும் அதை உலகத்தார் பார்வையில் காட்டாமல் பத்திரமாக வைத்துள்ளனர். சரி அது அவர்கள் இஷ்டம். அபிஷேக் பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மக்களிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார். நம்மாள்களும் ஏதோ இவர்கள் சொல்லும் பெயரைத் தான் அவர்கள் வைக்கப்போவது போன்று போட்டி போட்டுக் கொண்டு பெயர்களை பரிந்துரைத்தனர்.

ஆனால் அவர்கள் பெயரையும் கமுக்கமாக வைத்துவிட்டனர். ஊடகங்கள் எப்படியோ குழந்தையின் பெயர் ஆராத்யா என்று கண்டிபிடித்தன. ஆமாம் ஆராத்யா தான் குழந்தை பெயர் என்றும் பச்சன் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு அமர்க்களத்திற்கு பிறகு ரசிகை ஹசீனா வாசீர் என்பவர் கேட்டுக் கொண்டபிறகு அமிதாப் தனது பேத்தியின் பெயர் ஆராத்யா தான் என்று டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
Close
 
 

தமன்னாவுடன் நடிச்சா சீக்கிரம் கல்யாணமாகிடுமாம்!

Tamannah S Unique Rashi   
தமன்னாவுடன் ஜோடி சேரும் ஹீரோக்களுக்கு விரைவில் கல்யாணம் ஆகிவிடுமாம்.

நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இதனால் ஆந்திரக் கரையோரம் சென்ற அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்குள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் அவர் சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமாம். அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகே பிற இளம் ஹீரோக்களுடன் நடிக்கிறார் என்று டோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னுமொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத ஹீரோக்களுக்கு விரைவில் திருமணமாகிவிடுகிறதாம். இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் ஹீரோக்களுக்கு திருமணமாகிவிடும் என்று கூறுகிறாராம்.

கார்த்தி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் ஆகியோர் தன்னுடன் நடித்தவுடன் அவர்களுக்கு திருமணமாகிவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அண்மையில் நடித்து வெளிவந்த ரச்சா பட நாயகன் ராம் சரண் தேஜாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

உதட்டில் "இச்" கொடுக்க வந்த நிருபர்: பளார் விட்ட ஹாலிவுட் நடிகர்

Will Smith Slaps Male Reporter Who Tries Kissing Him
மென் இன் பிளாக் 3 என்ற ஹாலிவுட் படம் ரஷ்யாவில் பிரபலங்களுக்காக திரையிடப்பட்டபோது நாயகன் வில் ஸ்மித்தை உதட்டில் முத்தமிட வந்த நிருபரின் கன்னத்தில் அவர் அறைந்தார்.

மென் இன் பிளாக் 3 என்னும் ஹாலிவுட் படம் பிரபலங்களுக்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த படத்தின் நாயகன் வில் ஸ்மித் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது உக்ரைனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபர் விட்டாலி செட்யுக் என்பவர் வில் ஸ்மித்தின் உதட்டில் முத்தமிட முயன்றார்.

இதை சற்றும் எதிர்பாராத ஸ்மித் நிருபரை தள்ளிவிட்டு அவர் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அந்த நிருபர் பிரபலங்களை முத்தமிடும் வழக்கம் உள்ளவராம்.

செட்யுக் தனது உதடுகளை ஸ்மி்த்தின் உதடுகளைத் தொடும் அளவிற்கு நெருங்கி வந்ததால் தான் அவர் அறைந்துவிட்டார் என்று இந்த கூத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

நிருபரை அறைந்தாலும் ஸ்மித் எதுவும் காட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார், நிருபர்களுக்கு பேட்டியும் கொடுத்தார்.
Close
 
 

ஜூன் 1ல் எம்.பி.ஏ. பட்டதாரியை மணக்கும் சிம்புதேவன்

Simbudevan Kiss Goodbye Bachelorhood On June1
இயக்குனர் சிம்புதேவன் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி எம்.பி.ஏ. பட்டதாரியான கலைவாணி என்பவரை மணக்கிறார்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிம்புதேவன். வடிவேலு இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்து ஹிட்டான படம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்த படத்தை தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தனுஷை வைத்து மாரீசன் படத்தையும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சிம்புதவேனுக்கும், கமுதியைச் சேர்ந்த எஸ்.பி. கலைவாணி என்ற எம்.பி.ஏ. பட்டதாரிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில் நடக்கிறது.

சிம்புதேவன் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் மதுரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

மழையால் பாதித்த விக்ரமின் தாண்டவம்

Rain Dampens Thaandavam   
விக்ரமின் தாண்டவம் படத்தின் ஷூட்டிங் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விஜய் சீயான் விக்ரமை வைத்து எடுத்து வரும் படம் தாண்டவம். இதில் அனுஷ்கா மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஜகபதி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பெருமாபாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் விசா பிரச்சனையால் இங்கிலாந்தில் படமாக்குகிறார்கள்.

ஆனால் படக்குழுவினர் திட்டமிட்டது போல் ஷூட்டிங்கை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நல்ல மழை பெய்து வருவதால் ஷூட்டிங் பாதித்துள்ளது. இருப்பினும் எப்படியாவது திட்டமிட்ட நேரத்திற்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.

வழக்கமாக இந்நேரத்தில் இங்கிலாந்தில் மழை பெய்யாது. அந்த தைரியத்தில் தான் தாண்டவம் குழு இங்கிலாந்து சென்றது. ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாரா விதமாக மழை பெய்து வருகிறது.

இந்த படத்திற்கு ஜி.வி. பிராஷ் இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார்.
Close
 
 

விருந்தோம்பலும், கமல் ஹாசனும்

Kamal Surprises Vip Visitors
உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம்.

உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம்.

அடடா எவ்வளவு பெரிய மனிதன் நமக்கு என்ன பிடிக்கும் என்பதை கண்டுபிடித்து உபசரிக்கிறாரே என்று வி.ஐ.பி.க்கள் நெகிழந்துவிடுகிறார்களாம். என்ன தான் வி.ஐ.பிக்கள் வந்தாலும் அருகில் என்ன உணவு வகைகள் கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் விருந்தினர்களுக்கு பிடித்த உணவு வகைகளை வழங்கி அசத்தும் கமல் வித்தியாசமானவர் தான்.

அவர் நடிப்பு, இயக்கம், நடனம் மட்டும் வித்தியாசமாக இல்லை. அவர் விருந்தோம்பும் முறையும் வித்தியாசமாகத் தான் உள்ளது.
Close
 
 

எல்லோரையும் டாப் நடிகை என்பதா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எல்லோரையும் டாப் நடிகை எனக் கூறுகிறார்கள். ஒருவர்தான் டாப் நடிகையாக இருக்க முடியும் என்றார் சமந்தா. 'பாணா காத்தாடிÕ, 'மாஸ்கோவின் காவிரிÕ ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. அவர் கூறியதாவது: இந்த வருடம் நான் நடித்து 8 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. ஆனாலும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. சந்தோஷமாக இல்லாததற்கு காரணம் என்ன என்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் பெரும்பாலான நடிகைகளை நம்பர் ஒன் நடிகைகள் என்று சொல்கிறார்கள். என்னையும் அந்த பட்டியலில் குறிப்பிடுகிறார்கள். நான் கேட்கிறேன், நம்பர் ஒன்னாக ஒருவர்தானே இருக்க முடியும். ஆனால் அத்தனைபேரையும் நம்பர் ஒன் என்று எப்படி சொல்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நடிகையின் தலையெழுத்தும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதுதான் நிஜம்.
 
மணிரத்னம், கவுதம் மேனன் என பெரிய இயக்குனர்களுடனும், மகேஷ் பாபு, நாக சைதன்யா உள்ளிட்ட டாப் நடிகர்களுடனும் நடித்து வருகிறேன். இதுதவிர ஒப்புக்கொள்ளாத படங்கள் நிறைய உள்ளன. பெரிய இயக்குனர்கள், பெரிய படங்கள் என்பதை நானாக தேர்வு செய்யவில்லை. அது தன்னால் அமைந்தது. இண்டஸ்ட்ரிக்கு வந்து 2 வருடங்களில் இவ்வளவு பெரியவர்களுடன் பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்ற கருதுகிறேன். ஒரே படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். பள்ளி மாணவி தோற்றத்துக்காக உடல் இளைக்க வேண்டி உள்ளது. கல்லூரி மாணவிக்காக சற்று குண்டாக வேண்டி உள்ளது. இதெல்லாம் புதிய அனுபவம். மணிரத்னம் படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருப்பதைவிட பயமாகவே உணர்கிறேன். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் அவருடைய எதிர்ப்பார்ப்பு என்னை நடுங்க வைக்கிறது. இவ்வாறு சமந்தா கூறினார்.


 

கிசு கிசு - நடிகரின் எடுபிடியை வெளியேற்றிய அதிகாரி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...    
நல்ல காலம் பொறக்குது...

பிசின் நடிகையை போலவே வித்யமான ஹீரோயினும் கேரள தேசம்தான¢. ஆனா பேமன்ட் விஷயத்துல ரெண்டு பேருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஹிட் படம் கொடுத்தும் பெரிய ஹீரோவோ, விளம்பர கம்பெனியோ வ¤த்ய நடிகைய அணுகுறதில்லையாம். ரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் ஒரு ஆட் கம்பெனி நடிகையை புக் பண்ணியிருக்காம்... பண்ணியிருக்காம்... இதுக்கு 30 லகரம் பேமன்ட்டாம். ஹிட் படம் கொடுத்தும் கைநெறய சம்பளம் கெடக்கலையேனு நடிகை ஃபீல் பண்றாராம்... பண்றாராம்... பிசின் நடிகை மாதிரி கல¢லா நிரப்புறதுல வித்ய நடிகைக்கு டெக்னிக் தெரியலேன்னு கூட இருக்கிறவங்க பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

ஹாசன் ஹீரோயினுக்கு மியூஸிக் ஆல்பம் தயாரிச்சி ரிலீஸ் பண்ணனும்கிற ஆசை மனசு நெறய இருக்காம்... இருக்காம்... இதுக்காக படங்களைகூட தியாகம் பண்ணியிருக்காராம். தானே இசை அமைச்சி உருவாக்குற ஆல்பம் தயாரிக்க¤ற வேலைல தீவிரமா இறங்கிட்டாராம்... இறங்கிட்டாராம்... காத்து இருக்கும்போதே தூத்திக்கணும் இல்லாட்டா இண்டஸ்ரிகாரங்க கண்டும் காணாமபோயிருவாங்கன்னு பிரண்ட்ஸுங்க அட்வைஸ் சொல்றாங்களாம். அதை காதுல வாங்காம கேர்லஸா இருக்காராம்... இருக்காராம்...

பஞ்ச் நடிகரு சுருட்டு புடிக்கிற போஸ்டரை கிழிக்கணும்னு போலீஸ் அதிகாரிகிட்ட ஒருத்தர் புகார் கொடுத்தாராம்... கொடுத்தாராம்... இதையடுத்து பட இயக்கம், நடிகர், தயாரிப்புன்னு மூணு பேரையும் போலீஸ் அதிகாரி கூப்பிட்டாராம். யாருமே போகாம தங்களோட தரப்புல ஆள அனுப்பினாங்களாம்... அனுப்பினாங்களாம்... போலீஸ் விசாரணை நடந்தப்போ பஞ்ச் நடிகரு ஆளுக்கும் புகார் கொடுத்தவருக்கும் முட்டிகிச்சாம்... முட்டிக்கிச்சாம்... 'சமரசமா பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை சண்டைபோட்டு இழுத்திட்டீங்க. யார் மேல ஆக்ஷன் எடுக்கணும்னு தெரியும். ரெண்டுபேரும் போகலாம்Õனு அதிகாரி அவங்கள வெளியேத்திட்டாராம்... வெளியேத்திட்டாராம்...


 

ஹீரோவே இல்லாத த்ரில் படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோயின் முக்கிய வேடத்தில் நடிக்க, ஹீரோவே இல்லாத படமாக உருவாகிறது 'வதம்'. இது பற்றி இயக்குனர் மதிவாணன் கூறியதாவது: மூடுபனி, உச்சகட்டம் போன்ற த்ரில்லான படங்கள் தமிழில் வந்து நீண்ட காலம் ஆகிறது. அந்த பாணியிலான திரில் படமாக உருவாகிறது 'வதம்'. இதில் ஹீரோ கிடையாது. பூனம் கவுர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'நெஞ்சிருக்கும் வரை', 'வெடி' படங்களில் நடித்தவர். நாவலாசிரியராக வேடம் ஏற்கும் பூனம் நடித்த த்ரில் காட்சிகள் கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்துள்ளது. 'அங்காடி தெருÕவில் மாறுபட்ட வேடத்தில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ், போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மணிகண்டன், ரஞ்சன், சர்வஜித், பேபி வர்ஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.


 

வெளிநாட்டு அழகிகள் வரவால் நம்மூர் ஹீரோயின்கள் திணறல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா (ப¤ல்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி (மார்கண்டேயன்), மல்லுவுட்டில் ஃபரிஸா (அன்னும் இன்னும் என்னும்), சீன நடிகை சாங் ஷு மின் (அராபி கதா), ஆஸ்திரேலியா நடிகை டனிலியா (ஸ்பேனிஸ் மசாலா), டோலிவுட்டில் ஈரானை சேர்ந்த மரியம் ஸக்கரியா (100 பர்சன்ட் லவ்), நதாலியா கவுர் (ராம் கோபால் வர்மா தயாரிக்கும் படம்) என வெளிநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் வட, தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகரித்திருக்கிறது.

திரையுலகில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் நம்மூர் ஹீரோயின்களை திணற வைத்திருக்கிறது. குறிப்பாக கிளாமர் காட்சிகளில் அவர்களுக்கு ஈடுகொடுப்பது சவாலாக இருக்கிறது. முன்னணி நடிகர், இயக்குனர் படங்களில் இவர்களின்  கை ஓங்கி வருவதால் அந்த வாய்ப்புகளை நம்மூர் முன்னணி நடிகைகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
இந்த புதிய டிரெண்ட் குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும¢போது, ''பாலிவுட்டில் முதல் படம் இயக்குகிறேன்.

சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர வெளிநாட்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகை பொருத்தவரை சமீபகாலம் வரை மும்பை நடிகைகளை ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். அதுதான் இப்போது வெளிநாட்டு நடிகைகளின் அறிமுகத்துக்கு வழிவகுத்திருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம். அதன் மற்றொரு பரிணாம வளர்ச்சிதான் வெளிநாட்டு நடிகைகளை அறிமுகப்படுத்துவதும். இதனால் நம்மூர் நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் இப்போது ஹாலிவுட் உள்பட வெளிநாட¢டு படங்களில் நடிக்கிறார்கள்" என்றார்.


 

வெளிநாட்டு அழகிகள் வரவால் நம்மூர் ஹீரோயின்கள் திணறல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு ஹீரோயின்கள் வரவால் தென்னிந்திய பட ஹீரோயின்கள் திணறி வருகின்றனர். கோலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன் (மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா (ப¤ல்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி (மார்கண்டேயன்), மல்லுவுட்டில் ஃபரிஸா (அன்னும் இன்னும் என்னும்), சீன நடிகை சாங் ஷு மின் (அராபி கதா), ஆஸ்திரேலியா நடிகை டனிலியா (ஸ்பேனிஸ் மசாலா), டோலிவுட்டில் ஈரானை சேர்ந்த மரியம் ஸக்கரியா (100 பர்சன்ட் லவ்), நதாலியா கவுர் (ராம் கோபால் வர்மா தயாரிக்கும் படம்) என வெளிநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் வட, தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகரித்திருக்கிறது.

திரையுலகில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம் நம்மூர் ஹீரோயின்களை திணற வைத்திருக்கிறது. குறிப்பாக கிளாமர் காட்சிகளில் அவர்களுக்கு ஈடுகொடுப்பது சவாலாக இருக்கிறது. முன்னணி நடிகர், இயக்குனர் படங்களில் இவர்களின்  கை ஓங்கி வருவதால் அந்த வாய்ப்புகளை நம்மூர் முன்னணி நடிகைகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.
இந்த புதிய டிரெண்ட் குறித்து இயக்குனர் லிங்குசாமி கூறும¢போது, Ô'பாலிவுட்டில் முதல் படம் இயக்குகிறேன்.

சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர வெளிநாட்டு நடிகைகளை ஒப்பந்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகை பொருத்தவரை சமீபகாலம் வரை மும்பை நடிகைகளை ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். அதுதான் இப்போது வெளிநாட்டு நடிகைகளின் அறிமுகத்துக்கு வழிவகுத்திருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம். அதன் மற்றொரு பரிணாம வளர்ச்சிதான் வெளிநாட்டு நடிகைகளை அறிமுகப்படுத்துவதும். இதனால் நம்மூர் நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களும் இப்போது ஹாலிவுட் உள்பட வெளிநாட¢டு படங்களில் நடிக்கிறார்கள்ÕÕ என்றார்.


 

22 ஆண்டுகள் கழித்து இணையும் பாரதிராஜா, கங்கை அமரன்

Bharathiraja Gangai Amaran Pair Up After 22 Years
பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்திற்கு இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.

பாரதிராஜா தற்போது எடுக்கும் படம் அன்னக்கொடியும், கொடிவீரனும். இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ராதாவை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய பாரதி ராஜா தற்போது தனது படத்தில் ராதாவின் மகன் கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னொரு கதாநாயகியாக இனியா நடிக்கிறார்.

இந்த படத்திற்கு இளையராஜா அல்லது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பாரதிராஜா புதுக் கூட்டணியாக ஜி.வி. பிராகஷிடம் இசையமைக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். இந்த படம் முதலில் முல்லைப் பெரியாறு பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் நாயகிகள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டனர். பின்னர் பெப்சி பிரச்சனையால் ஷூட்டிங் பாதித்தது.

இப்பொழுது தான் அந்த பிரச்சனைகள் அடங்கியுள்ளன. இந்நிலையில் பாரதிராஜா படத்தின் பணிகளில் பிசியாகிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியரான கங்கை அமரன் பாடல்கள் எழதுகிறார். அவர் ஏற்கனவே பாடல் எழுதும் பணியைத் துவங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

கடந்த 1990ம் ஆண்டு பாரதிராஜாவின் என்னுயிர் தோழன் படத்திற்கு கங்கை அமரன் பாடல் எழுதினார். அதன் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது: ஸ்ரேயா

None Can Beat Me Beauty Shreya Saran   
அழகில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்நிலையி்ல அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து ஸ்ரேயா கூறுகையில்,

நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம். ஒரு காலத்தில் அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததால் நிறைய படங்களில் நடித்தேன். பெரிய, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தேன். ஆனால் தற்போது எனக்கு நேரம் சாதகமாக இல்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் மீண்டும் வரும் என்று நம்புகிறேன். அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது.

அண்மையில் சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்து அடடா நான் இவ்வளவு அழகா என்று வியந்தேன். அந்த புகைப்படங்களைப் பார்த்த நிறைய பேர் இத்தனை அழகை எங்கே ஒளித்து வைத்திருந்தாய் என்று வியந்து கேட்டனர்.

கடந்த 2001ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது எப்படி இருந்தேனோ தற்போதும் அப்படியே தான் உள்ளேன். அண்மையில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டேன். மேடையில் நான் நடந்து வந்தபோது கிடைத்த கைதட்டல்களை என்னால் மறக்க முடியாது என்றார்.
Close