காங்கிரஸில் நமீதா...? உற்சாகத்தில் கதர்ச் சட்டைகள்!!

Nameetha Wants Congress

ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது. இந்த அரசியல் ஆசை 'மச்சான்' நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை. அரசியலில் சேருவதைப் பற்றி யாராவது கேட்டால் அதைப்பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்கிறாராம்.

எந்த கட்சி என்று கேட்டால் கதராடை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று சூசகமாக சொல்கிறார் நமீதா. சத்தியமூர்த்திபவன் வாசிகள் இப்போதே சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டனராம்.

மானட மயிலாடவில் இருந்து நமீதாவை கழற்றிவிட்டதுதான் அவரின் இந்த கதர் பாசத்திற்கு காரணம் என்றும் கோலிவுட் பக்கம் தகவல்கள் கசிகின்றன.

 

'டாப் கியரில்' சன்னி லியோன் .. பை நிறைய 3 படம்.. 'டப்பு' ரூ. 5 கோடி!

Sunny Leone Bags Three Film Deal Rs 5 Crore   

முதல் படமான ஜிஸ்ம் 2 ஊத்திக் கொண்டாலும் கூட சன்னி லியோன் மீதான கிரேஸ் போகவில்லை நம்மூர் தயாரிப்பாளர்கள் மத்தியில். தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டுள்ளது.

கனடாவில் போர்ன் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சன்னி லியோன். ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட் திரை உலகில் காலடி வைத்தார்.முதல் படம் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் சன்னிக்கு சுக்கிர திசைதான் போலிருக்கிறது. அலும்ப்ரா எண்ட்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தங்களின் அடுத்த மூன்று படங்களில் நடிக்க சன்னி லியோனை புக் செய்துள்ளனர். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் தருவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இது குறித்து கருத்து கூறியுள்ள நிறுவனத்தின் தலைவர் பராக் சங்கவி, ஜிஸ்ம் 2 விற்கு பிறகு எங்களின் அடுத்தடுத்த படங்களில் சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். 2013ம் ஆண்டு தொடக்கத்தில் முதல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கான நடிகர், நடிகையர்கள் தேர்வு நடைபெற உள்ளது என்றார்.

அலும்ப்ரா எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் ராகினி எம்.எம்.எஸ், பூட் ரிட்டன்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளது. தற்போது வார்னிங், 26/11 போன்ற படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தினர் தயாரிக்க உள்ள படங்களில் சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளதன் மூலம் பாலிவுட் படவுலகில் முக்கியமான இடத்தை தக்கவைத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.

 

ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்?

Maatraan Spl Prg Sun Tv

தலைப்பை பார்த்த உடன் என்னவென்று நினைக்கிறீர்களா? எல்லாம் மாற்றான் படத்தை பற்றிதான். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சூர்யா என்று எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு ஏமாற்றத்தை தந்த படம் என்றாலும் படத்திற்கு விளம்பரம் மட்டும் சேனல்களில் குறைவின்றி செய்யப்படுகிறது.

பக்கம் பக்கமா பலே பேச்சு

அது போகட்டும் காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க என்று விட்டுவிடலாம். ஆனால் சேனல்களில் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசும்போதுதான் சிரிப்பு வருகிறது.

சீன் பை சீன் விளக்கம்

ஞாயிறு காலை 9.30 மணிக்கு சன் டிவியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மாற்றான் இயக்குநர் கே.வி. ஆனந்த் தொடங்கி எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சீன் பை சீன் படத்தை பற்றி விளக்கினார்கள்.

லிங்குசாமியின் காமெடி

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் பேசினார் இயக்குநர் லிங்குசாமி. ஏதாவது ஒரு படத்தைப் பற்றி பேசினாலே முதல்நாள் முதல்ஷோ பார்க்கவேண்டும் என்று நினைப்போம். அதே மாதிரிதான் மாற்றான் படமும் என்று போட்டாரே ஒரு போடு. மிகப்பெரிய காமெடி கேட்டதுபோல சிரிக்கத்தான் முடிந்தது.

மாற்றான் பார்ட் 2!

இதைவிட பெரிய நகைச்சுவை என்னவென்றால், மாற்றான் புரமோஷனுக்கு சன் டிவிக்கு போயிருந்தவரிடம், 'இப்படத்தின் செகன்ட் பார்ட் வருமா?' என்று கேட்டதுதான் தாமதம் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்ட் பார்ட்டாக சிரித்து சமாளித்திருக்கிறார் சூர்யா.

 

நாயகனுக்கு 25 வயது.. நாயகர்களுக்கு கமல் நன்றி!

Nayakan Turns 25

வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது... கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:

நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், தோட்டாதரணி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், சரிகா ஆகியோரை நினைவு கூர்ந்துள்ளார்.

இதேபோல் முக்தா சீனிவாசன், திரு. ராமசாமி ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைக்காமல் இருக்கமுடியவில்லை என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல்.

நாயகன் படத்தை உலகறியச் செய்தவர்கள் ரசிகர்களே அவர்களுக்கு என்றென்றும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ள கமல், மணிரத்னதும் தானும் ரசிகர்களுக்காகவே தொடர்ந்து நல்ல சினிமா கொடுக்க முயற்சி செய்வதாக கூறியுள்ளார்.

கடல், விஸ்வரூபம் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் கமல்.

 

பிசியாக இருந்தாலும் ஹஜ் புனிதப் பயணம் சென்ற அமீர்கான்

Aamir Khan Keeps Promise Leaves Hajj Pilgrimage

‘தலாஷ்', ‘தூம் 3', என பிசி ஷெட்யூல் இருந்தாலும் தனது தாயாருடன் ஹஜ் யாத்திரை சென்றுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான்.

இந்த வருடம் கண்டிப்பாக மெக்காவிற்கு புனிதப் பயணம் அழைத்துச் செல்வதாக தனது தயாருக்கு அமீர்கான் உறுதி அளித்திருந்தாராம். அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த வெள்ளியன்று மும்பையில் இருந்து தனது உறவினர்களுடன் மெக்காவிற்கு பயணம் கிளம்பிவிட்டார் அமீர்கான்.

இதற்காகவே சிகாகோ நகரில் சூட்டிங்கில் இருந்த அமீர்கான் அவசரமாக மும்பை திரும்பினார். ஹஜ் பயணம் முடிந்து நவம்பர் 3ம் தேதி திரும்பும் அமீர்கான் தன்னுடைய ‘தலாஷ்' படத்திற்கான புரமோசன் வேலைகளில் பிஸியாகிவிடுவார் அமீர்கான். "தலாஷ்' வரும் நவம்பர் 30ம் தேதிக்குத் திரைக்கு வருகின்றது. இந்த படத்தில் அமீர்கான் போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படம் என்பதால் இது மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

தலாஷில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ராணி முகர்ஜியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மும்பையில் நடைபெறும் கொலையை துப்பறிந்து கண்டறியும் போலீஸாக அமீர்கான் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

சினிமாவில் பின்னணி பாட வாய்ப்பு தரும் 'ச ரி க ம சேலஞ்ச்'

Zee Tamil Sa Ri Ga Ma Pa Challenge

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ச ரி க ம ப சேலஞ்ச் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக பாடும் பாடகர்களுக்கு தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாட வாய்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு விருந்தினங்கள் அறிவித்துள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய பாடகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் புதிய இசை நிகழ்ச்சி, `சரிகமப சாலஞ்ச் 2012.' ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முதல் நிலையில் பின்னணி பாடகர்கள் ஹரிஷ் ராகவேந்திரா, பிரஷாந்தினி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் மோகன் வைத்யா நடுவர்களாக இருந்து சிறந்த 14 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அடுத்த சுற்றுக்கு உன்னிமேனன் மற்றும் ஏ.ஆர். ரஹைனா நடுவர்களான இருந்து இந்த 14 போட்டியாளர்களில் இருந்து சிறந்த பாடகர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இசையமைப்பாளர் பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். போட்டியில் பங்கேற்று சிறப்பாக பாடும் பாடகர்களுக்கு இசையமைப்பாளர்கள் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளனர்.

ச ரி க ம ப இசை நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

மக்கள் டிவியில் ஹிட்ச்காக் திரைப்படங்கள்

Makkal Tv Telecasting Hitchcock Classics

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களில் சேட்டிலைட் சேனல்களில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப முன்னோட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.

மக்கள் தொலைக்காட்சியில் 23-ம் தேதி ஆயுதபூஜையன்று காலை 11.02 மணியளவில் `சைக்கோ' ஒளிபரப்பாகிறது. 1960-ல் இவர் இயக்கிய திரைப்படமே "தி சைக்கோ.'' தற்போது வரும் திரில்லர் படங்களுக்கு முன் மாதிரி திரைப்படமாக இன்று வரை இருந்து வருகிறது இந்தப்படம்.

கொள்ளைக்காரியான படத்தின் நாயகி, ஒரு சமயம் கொள்ளையடித்த பணத்தோடு விடுதியில் தங்குகிறாள், அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கொலை செய்யப்படுகிறாள். கொலையின் பின்னணியை நோக்கி பயணிக்கும் திரைக் கதை வித்தியாசமானது. த்ரில்லர் படங்களுக்கு முன்னோடியாக திகழும் இந்த திரைப்படத்தை முறியடிக்கும் வகையில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை என்கின்றனர் திரைப்பட ரசிகர்கள்.

மதியம் 2 மணிக்கு ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் ஒன்றான `டையல் எம் பார் மர்டர்' ஒளிபரப்பாகிறது. த்ரில் படங்களை விரும்பும் ரசிகர்கள் இதனை கண்டு ரசிக்கலாம்.

 

விளம்பரங்களில் நடிக்கும் முன் யோசியுங்கள் நடிகர், நடிகைகளே!

சென்னை: வாங்கும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் அந்த பொருளுக்கான விளம்பரப் படத்தில் நடிகர், நடிகையர்கள் மீது வழக்குப் போடலாம் என்று நுகர்வோர் தீர்பாயத்தலைவர் ரகுபதி கூறியுள்ளார்.

ஊசி முதல் வீடு வரை எந்தப் பொருளாக இருந்தாலும் நடிகையோ, நடிகரோ, கிரிக்கெட் வீரரோ வந்து சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாங்கியப் பின்னர்தான் தெரியும் அந்தப் பொருளின் தரம். ஈமு கோழியில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த விவசாயிகள் கூட ஏமாந்த பின்னர் நடிகர்கள் சொன்னதால்தான் ஈமு கோழியில் பணத்தை முதலீடு செய்ததாக கூறினர்.

அந்த அளவிற்கு நடிகர், நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள் சொல்வதை நம்பி பொருட்களை வாங்குகின்றனர். அவ்வாறு நம்பி வாங்கப்படும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று நீதிபதி ஆர். ரகுபதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில் சனிக்கிழமையன்று `நுகர்வோர் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி ஆர்.ரகுபதி பேசியதாவது:-

சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் இடம் பெறுகின்றனர். அந்த விளம்பரங்களில், அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானது, அந்த நிறுவனத்தின் சேவை தரமானது என்று உத்தரவாதம் அளித்து பேசுகின்றனர்.

இப்படி விளம்பரம் செய்து, பொருட்களை விற்பனை செய்யும் அந்த நிறுவனங்கள், தரமற்ற பொருட்கள், குறைபாடுள்ள சேவைகள் வழங்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் வழக்கு தொடரும்போது, விளம்பரத்தில் வந்த நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து வழக்கு தொடரலாம் இவ்வாறு நீதிபதி ரகுபதி கூறினார்.

நடிகர், நடிகையர்கள் விளம்பரத்திற்காக பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.

 

ஜெயா டிவியில் புதிய கேம் ஷோ ஹவுஸ்புல்!

House Full Game Show On Jaya Tv

எஸ்.எம்.எஸ் மூலம் விளையாடும் "ஹவுஸ்புல்'' என்ற புதிய கேம்ஷோ ஜெயாடிவியில் ஒளிபரப்பாகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலக மக்கள் யாவரும் பயன் பெறும் வகையில் நேரடியாக ஒளிபரப்பாகும் இந்த கேம்ஷோவில் வீட்டிலிருந்தபடியே முற்றிலும் எஸ்.எம்.எஸ். முறையை பயன்படுத்தி விளையாடலாம்.

நேயர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெயா டிவியின் நிகழ்ச்சிகளுக்கிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில்களை எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்ப வேண்டும். அதைத்தொடர்ந்து "ஹவுஸ்புல்'' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 15 எண்களை கொண்ட ஒரு குறுந்தகவல் பட்டியல் அவர்களது செல்போனுக்கு அனுப்பப்படும். இந்த எண்களை வைத்து இந்நிகழ்ச்சியில் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலமாக பங்கேற்கலாம்.

இதில் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுகள் வெல்ல வாய்ப்பு உள்ளது. முதல் இடத்தைப் பிடிக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசாக காத்திருக்கிறது. இந்த சுவாரஸ்யமான புத்தம் புது நிகழ்ச்சி திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.