ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்

கலியுகவரதனான ஐயன் ஐயப்பனை வழிபடும் மண்டல காலத்தில் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் "ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பல அபூர்வமான தகவல்களையும், புராணக்கதைகளையும், அற்புதமான திருக்கோவில்களின் வரலாற்றையும் அந்தந்த இடங்களுக்கே அழைத்துச் சென்று சாஸ்தாவின் மஹிமைகளை அழகாக எடுத்துரைகிறார், சாஸ்தா அரவிந்த் என்றே அழைக்கப்படும் கோவை ஸ்ரீ அரவிந்த் ஸுப்ரமண்யம் அவர்கள்.

ஸ்ரீ சங்கரா டிவியில் ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்

இதுவரை கண்டிராத பல திருக்கோவில்களையும், கேட்டிராத பல அபூர்வமான தகவல்களையும் உள்ளடக்கிய ஆன்மீக நிகழ்ச்சியாக ஸ்ரீ சாஸ்தா மஹாத்ம்யம்" . இந்நிகழ்ச்சி தினமும் காலை 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

 

சீனியர் நடிகர்களுக்காக குண்டாகும் தமன்னா!

சீனியர் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க வசதியாக உடல் எடையைக் கூட்டப் போகிறாராம் தமன்னா.

ஒல்லிக் குச்சி உடம்புக்காரியாக தென்னிந்திய சினிமாவில் உலா வருகிறார் பஞ்சாப் அழகி தமன்னா.

தமிழில் இதற்கு முன் ரிலீசான படங்களில் மெலிந்தே காணப்பட்டார். தெலுங்கு - இந்திப் படங்களிலும் ஒல்லியாகத்தான் நடித்து வந்தார்.

சீனியர் நடிகர்களுக்காக குண்டாகும் தமன்னா!

ஆனால் திடீரென தற்போது எடையை கூட்ட துவங்கியுள்ளாராம். ஏன்?

சமீப காலமாக அஜீத் போன்ற நடுத்தர வயதி ஹீரோக்களுடன் நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. வீரம் படத்திலேயே சற்று பூசினாற்போலத்தான் வருகிறாராம்.

மீண்டும் விஜய், சூர்யா போன்றவர்களுடன் சேர வாய்ப்பிருப்பதாலும், தெலுங்கில் வயதான ஹீரோக்களுடன் நடிக்க வேண்டியிருப்பதாலும் உடல் எடையைக் கூட்ட ஆரம்பித்துள்ளாராம்.

பாத்தும்மா... ஆன்ட்டியாக்கிடப் போறாங்க!

 

ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து அஞ்சலி நீக்கம்- நித்யா மேனனுக்கு சான்ஸ்!

ராகவா லாரன்ஸின் முனி 3 படத்திலிருந்து அஞ்சலி நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சனா' படத்தை எடுத்து வெற்றி பெற்ற ராகவா லாரன்ஸ் அடுத்து, ‘முனி பாகம்-3' படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக டாப்சி நடிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் படத்திலிருந்து அஞ்சலி நீக்கம்- நித்யா மேனனுக்கு சான்ஸ்!

(நித்யா மேனன் படங்கள்)

படத்தின் ‘பிளாஷ்பேக்'கில் வரும் நாயகியாக முதலில் அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் அஞ்சலியுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. அவர் இருப்பது ஹைதராபாதிலா அமெரிக்காவிலா என்றே தெரியவில்லை.

அஞ்சலி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வேறு பரபரப்பு கிளம்பியுள்ளது.

இதனால், ‘முனி பாகம்-3' படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்கும் திட்டத்தை ராகவா லாரன்ஸ் கைவிட்டு விட்டார். அவருக்கு பதில், நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உருப்படியாக ஒரு வெற்றிப் படத்திலும் நடிக்காவிட்டாலும், நித்யாமேனனுக்கு தமிழ் சினிமாவில் புதிதாக மவுசு கிடைத்துள்ளது. பெரிய சம்பளம் வேறு!

 

பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா..., இது படமல்ல - பெரும் தலைவலி..., இதுக்கு மார்க்கே கிடையாது... வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம், இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா இயக்கத்தில் நேற்று வெளியான ஆர் ராஜ்குமார்.

ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்க, பிரபு தேவா இயக்கியுள்ள படம் ஆர் ராஜ்குமார்.

பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

நேற்று உலகமெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு, கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது என கூறியுள்ள ஒன்இந்தியா, ஒன்றரை ஸ்டார்கள் தந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரசோ, 2013-ம் ஆண்டின் படுமோசமான திரைப்படம் என்றால் அது ஆர் ராஜ்குமார்தான் என்று காய்ச்சியுள்ளதோடு, ஜீரோ மதிப்பெண்களை வழங்கியுள்ளது.

பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மட்டுமே இந்த மாதிரி படங்களைப் பார்க்க முடியும். வேஸ்ட் படம், என திட்டியுள்ளது ஜீ நியூஸ்.

பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளன்டர் ஆர் ராஜ்குமார் என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ்.

பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!

என்டிடிவி இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனத்தைத் தந்துள்ளதோடு, ஒரு ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளது.

சமீப நாட்களில் ஒட்டு மொத்த மீடியாவும் கூட்டாக கண்ட மேனிக்குத் திட்டியுள்ள படம் என்றால் அது அநேகமாக ஆர் ராஜ்குமாராகத்தான் இருக்கும்.

அவ்வளவு மோசமாவா இருக்கு?!

 

போனில் செக்ஸ் தொல்லை- தவிர்க்க நடிகை சஞ்சனா செய்த பலே டெக்னிக்!

பெங்களூர்: கன்னடப் படவுலகில் பிரபலமான நடிகை சஞ்சனாவுக்கு போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த நபரை, அவர் நூதனமான முறையில் பழி வாங்கினார்.

சஞ்சனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கன்னடத்தில். சஞ்சனாவுக்கு மர்ம ஆசாமி ஒருவன் தினமும் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தான்.

போனில் செக்ஸ் தொல்லை- தவிர்க்க நடிகை சஞ்சனா செய்த பலே டெக்னிக்!

(சஞ்சனா படங்கள்)

நள்ளிரவில் மொபைல் போனில் சஞ்சனாவிடம் ஆபாசமாக பேசி இம்சை செய்து வந்தான். இதில் நிம்மதி இழந்த சஞ்சனா, ஒரு கட்டத்தில் அவன் நம்பர் வரும்போது பேசாமல் தவிர்த்துப் பார்த்தார். ஆனாலும் அந்த நபர் வீட்டின் மற்ற போன் நம்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்தான்.

போலீசிடம் புகார் அளிக்காமல், அந்த நபரை நூதனமாக பழி வாங்க சஞ்சனா திட்டமிட்டார்.

அதன்படி செக்ஸ் தொல்லை கொடுத்தவனின் மொபைல் போன் நம்பரை ட்விட்டரில் வெளியிட்டார். 'இந்த போன் நம்பருக்குரிய நபர் தினமும் நள்ளிரவில் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுக்கிறார். எனது உண்மையான ரசிகர்கள் அந்த நபருக்கு தக்க பாடம் புகட்டுங்கள்' என்று அன்புக்கட்டளை வேறு போட்டிருந்தார்.

உடனடியாக ரசிகர்கள் அந்த போனில் தொடர்பு கொண்டனர். மர்ம நபரை கேவலமான வார்த்தைகளால் திட்டி தீர்த்திருக்கிறார்கள். கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். இதனால் ஆபாசமாக பேசி வந்த நபர் பயந்துபோய் சஞ்சனாவுக்கு போன் செய்து ‘என்னை மன்னித்து விடுங்கள்' இனிமேல் ஆபாசமாக பேசமாட்டேன் என் மொபைல் நம்பரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடுங்கள்," என்று கெஞ்சி வருகிறாராம். ஆனால் அந்த நம்பரை நீக்குவதா வேண்டாமா என்று சஞ்சனா யோசித்து வருகிறாராம்.

 

சட்டென்று மாறுது வானிலை... சிம்பு- கவுதம் மேனனின் புதிய படம்!

சட்டென்று மாறுது வானிலை... சிம்பு- கவுதம் மேனனின் புதிய படம்!

சென்னை: சிம்பு - கவுதம் மேனன் இணையும் புதிய படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.

நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மும்பை மாடல் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக வேகமாக நடந்து வருகிறது. பெயரில்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இப் படத்துக்கு 'சட்டென்று மாறுது வானிலை' என பெயர் வைத்துள்ளனர்.

இது அவரது முந்தைய படமான 'வாரணம் ஆயிரம்' படத்தில் பிரபலமான 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்ற பாடலில் வரும் வரியாகும். தொடர்ந்து நல்ல தமிழில் தன் படங்களுக்கு தலைப்பு வைத்து வருகிறார் கவுதம் மேனன். (ஆனால், படத்தில்தான் தமிழ் வசனங்களைக் காலி செய்துவிட்டு, ஆங்கிலத்தில் உள்ள கெட்ட வார்த்தைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்!)

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இந்தப் படத்திற்கான முதல் டியூனே தாளம் போடவைப்பதாக இருந்தது. பாடல்களைக் கேட்க மகா ஆர்வமாக உள்ளேன் என ரஹ்மான் இசை குறித்து சிம்பு தெரிவித்துள்ளார்.

 

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் வெளியாகிறது!

சென்னை: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து நடித்த எவர்கிரீன் ப்ளாக் பஸ்டரான ஆயிரத்தில் ஒருவன் படம், 49 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியாகிறது.

ஏற்கனவே கர்ணன், பாசமலர், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் இப்படங்களை ஆர்வமாக பார்த்தார்கள். கர்ணன் படம் நல்ல வசூலைக் குவித்தது.

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் வெளியாகிறது!

முதல் முறையாக

இதுவரை எம்ஜிஆரின் படங்கள் புதிய பிரிண்ட் போட்டு மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஒரு வாரம் இரு வாரங்கள் ஓடினாலும் போட்ட காசை விட பலமடங்கு அதிகமாக வசூலிக்கும் 'கோல்ட்' எம்ஜிஆரின் படங்கள்.

இப்போதுதான் முதல் முறையாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார்கள்.

49 ஆண்டுகள் கழித்து

ஆயிரத்தில் ஒருவன் படம் 1965-ல் ரிலீசானது. எம்.ஜி.ஆருடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரும் நடித்து இருந்தனர். பி.ஆர். பந்துலு இயக்கினார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 49 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் டிஜிட்டலில் வெளியாகிறது.

அதோ அந்தப் பறவை போல...

கொடுங்கோல் மன்னனை எதிர்த்து போராடும் ஒரு வீரமிக்க மருத்துவரின் கதை. கடலிலும் தீவுகளிலும் பிரமாண்டமாக படமாக்கி இருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற ஆடாமல் ஆடுகிறேன், அதோ அந்த பறவை போல, நாணமோ இன்னும் நாணமோ, ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஏன் என்ற கேள்வி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து இன்றைக்கும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம்

ஆயிரத்தில் ஒருவன் படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரீரிக்கார்டிங், ஒலி ஒளியும் மெருகேற்றப்படுகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) இப்படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

 

பெண்கள் முன்பு நான் கெட்ட வார்த்தை பேசவே மாட்டேன்: ஷாருக்கான்

பெண்கள் முன்பு நான் கெட்ட வார்த்தை பேசவே மாட்டேன்: ஷாருக்கான்

டெல்லி: பெண்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள் என்று நடிகர் ஷாருக்கான் அறிவுரை வழங்கியுள்ளார்.

காதலை கொண்டாடும் பல படங்களில் நடித்தவர், நடித்துக் கொண்டிருப்பவர் ஷாருக்கான். இந்நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் ஆண்களுக்கு சில அறிவுரை வழங்கியுள்ளார்.

பெண்களை வார்த்தையாலோ, செயலாலோ ஒருபோதும் அவமதிக்காதீர்கள்.

பெண்களுக்கு கதவை திறந்துவிடுவது அவர்கள் அமர்ந்த பிறகு அமர்வது போன்ற சிறு சிறு விஷயங்களில் ஆண்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

நான் பெண்களுக்கு முன்பு கெட்ட வார்த்தை பேசுவதில்லை. மேலும் பெண்களுக்கு முன்பு கோபப்படுவதையும் தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

தன்னுள் இருக்கும் பெண்மையை தொடுபவனே உண்மையான ஆண் மகன்.

இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

 

கல்யாண சமையல் சாதம்- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

கோடம்பாக்கத்தில் உள்ள அய்யமாருங்கெல்லாம் ஒண்ணா சேர்ந்து படமெடுத்தா எப்படியிருக்கும்... கல்யாண சமையல் சாதம் மாதிரிதான் இருக்கும்!

லைட்பாய் கூட அய்யராகத்தான் இருந்திருப்பார் போலிருக்கிறது... எங்கும் எதிலும் அவாள் வாடை. தங்கள் சுய சாதி அடையாளங்களை மீட்டெடுக்க பாப்புலர் மீடியமான சினிமாவையே பயன்படுத்துகிறார்கள் போலிருக்கிறது.

வசனம் என்ற பெயரில் படம் முழுக்க ஆங்கிலத்திலேயே அசிங்கத்தை அள்ளித் தெளிக்கிறார்கள். இதற்காகவே இந்தப் படத்துக்கு டபுள் ஏ சான்று தந்திருக்க வேண்டும், சென்சார்!

கல்யாண சமையல் சாதம்- விமர்சனம்

கதை..

லேகா வாஷிங்டனை பெண் பார்க்கப் போகிறார் பிரசன்னா. பார்த்ததும் பிடித்துப் போகிறது. எட்டுமாதம் கழித்து திருமணம் என்பதால், இடைப்பட்ட ஒரு நாள் இருவரும் தனித்திருக்கும்போது, சரக்கடித்துவிட்டு தப்பு பண்ண முயல்கிறார்கள். ஆனால் பிரசன்னாவால் அது முடியாமல் போகிறது.

உடனே தனக்கு ஆண்மையின்மை பிரச்சினை வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் ஜோசியன், கலர் கலரா கற்கள் விற்பவன், சிட்டுக்குருவி லேகியர்கள், கடைசியில் ஒரு காம நோய் டாக்டர்.. எல்லாரையும் பார்க்கிறார். மன அழுத்தம்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்து, அழுத்தம் குறைய ஸ்மைலி பந்தை அமுக்க ஆரம்பிக்கிறார், க்ளைமாக்ஸ் வரை.

கல்யாண சமையல் சாதம்- விமர்சனம்

கல்யாணம் நெருங்கும்போது பிரசன்னா - லேகா இடையில் சண்டை. அதில் 'போடா உஸ்' என திட்டுகிறார் லேகா. கோபித்துக் கொள்ளும் பிரசன்னா, அடுத்த மூன்றாவது சீனில் லேகாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சாரி என்கிறார். அப்படியே கல்யாணமும் முடிகிறது... பிரசன்னாவுக்கு க்ளைமாக்ஸிலாவது ஆண்மை திரும்பியதா இல்லையா என்பதை விருப்பமிருந்தா போய் பார்த்துக்கங்க!

எப்பேர்ப்பட்ட புதுமையான கதை..!

பிரசன்னாவுக்கு நடிப்பதில் எந்தக் கஷ்டமும் இல்லை. சிநேகாவுக்கு தாலி கட்டிய சூட்டோடு நடிக்க ஆரம்பித்த படம்... அந்த மாப்பிள்ளை கெட்டப்பை அப்படியே மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார். நடிக்க ரொம்ப மெனக்கெடத் தேவையில்லாத பாத்திரம்.

லேகா வாஷிங்டன்... இவரை ஒரு ஹீரோயினாக ரசிக்க முடியவில்லை. எரிச்சல்தான் வருகிறது. அதிலும் திரும்பத் திரும்ப 'என்னை நாலு மணிக்கு எழுப்பி ஓமத்துல உட்கார வச்சுட்டா' என இவர் ஆரம்பிப்பது மகா கடுப்பு.

கல்யாண சமையல் சாதம்- விமர்சனம்

மனைவியாகப் போகிறவளை மனதுக்கு நெருக்கமாக்கிக் கொள்ள, திருமணத்துக்கு சில மணி நேரங்களுக்கு முன் பிரசன்னாவும் அவர் நண்பர்களும் பண்ணுகிற ஐடியா பேத்தலாக உள்ளது.

அப்பா, அம்மா, மாமனார், மணப்பெண், மணமகன், நண்பர்கள் என்ற பெயரில் வரும் லூசுகள்... இவர்களெல்லாம் வாயைத் திறந்தாலே, ஏதாவது அசிங்கமாகப் பேசப் போகிறார்களோ என அஞ்ச வேண்டியிருக்கிறது, ஒவ்வொரு காட்சியிலும்.

அடுத்தடுத்து அசட்டுத்தனமான காட்சியமைப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள், எப்படா வெளியில் போவோம் என நெளிய வைக்கின்றன.

படம் நெடுக இத்தனை பிடிக்காத விஷயங்கள் இருப்பதால், இசையையோ, ஒளிப்பதிவையோ ரசிக்க முடியவில்லை.

சிலர் அபத்தமாக எதையாவது சொல்லி, அது ஜோக் என நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இந்தப் படமும்!