55 வயதில் அடியெடுத்து வைத்த நவரச நாயகன் கார்த்திக்...!

சென்னை: நவரச நாயகன் கார்த்திக் இன்று தனது 55 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் 1981 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்திக், தனது நடிப்பால் விரைவிலேயே "நவரச நாயகன்" என்ற பட்டத்தைப் பெற்றார்.

20 வயதில் நாயகனாக அறிமுகமான கார்த்திக் சுமார் 35 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கொரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு 2 மொழிகளிலும் 130 படங்களில் கார்த்திக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Navarasa Nayagan Karthik Turns 55

தற்போது இளம் நாயகர்களுடன் இணைந்து கார்த்திக் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து கார்த்திக் நடித்த அனேகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து அமரன் 2 திரைப்படத்தில் நாயகனாகவும், இளம்நடிகர் வைபவுடன் இணைந்து ஜிந்தா திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார்.

Navarasa Nayagan Karthik Turns 55

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்...

 

வெனிஸ் பட விழா... விருது வென்று சாதனை படைத்த வெற்றி மாறனின் "விசாரணை"

சென்னை: வெனிஸ் திரைப்பட விழாவில் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் விருதை வென்று சாதனை படைத்திருக்கிறது. 72 வருட கால வெனிஸ் திரைப்பட வரலாற்றில் ஒரு தமிழ்த் திரைப்படம் விருதை வெல்வது இதுவே முதல்முறை.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, சரவண சுப்பையா, கிஷோர், மற்றும் முருகதாஸ் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விசாரணை.

Vetri Maaran's Visaranai to Win an Award at Venice Film Festival

இப்படம் சமீபத்தில் நடைபெற்ற 72-வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா' என்ற பிரிவில் ‘விசாரணை' படம் விருது வென்றுள்ளது.

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை' என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தை தனுஷ் கிராஸ் ரூட் பிலிமுடன் இணைந்து தனது வுண்டர்பார் பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரித்து இருக்கிறார்.

Vetri Maaran's Visaranai to Win an Award at Venice Film Festival

சமீபத்தில் தனுஷிடம் இருந்து இப்படத்தை கைப்பற்றிய லைக்கா நிறுவனம் "விசாரணை"யை உலகமெங்கும் வருகிற செப்டம்பர் 24-ம் தேதி வெளியிடவிருக்கிறது.

விசாரணை விருதைக் குவித்தால் மகிழ்ச்சியில் இருக்கின்றனர் "விசாரணை" படக்குழுவினர். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் சார்.

 

1500 பேருக்கு அன்னதானம்.. "தனி ஒருவன்" குழுவின் வெற்றிக் கொண்டாட்டம்

சென்னை: ஜெயம் ரவி - அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அதை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது படக் குழு.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இந்த வெற்றியை வித்தியாசமாக கொண்டாடியிருக்கின்றனர் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர். வெற்றியால் மகிழ்ந்து போன அந் நிறுவனம் படக்குழுவினருடன் இணைந்து சுமார் 1500 ஏழை மக்களுக்கு அன்னதானம் அளித்து படத்தின் வெற்றியைக் கொண்டாடியிருக்கின்றனர்.

Thani Oruvan Success: AGS Entertainment Organised Annadhanam for Poor People

திருட்டுப் பயலே படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது.

அண்மைக்காலமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன, எனினும் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்த நிலையை அண்மையில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் மாற்றியிருக்கிறது.

தனிஒருவன் படம் வரவேற்பில் மட்டுமின்றி வசூலிலும் பெரிதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, தனிஒருவன் வெற்றியை படக்குழுவினருடன் இணைந்து 1500 பேருக்கு அன்னதானம் செய்து கொண்டாடியிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

நேற்று தியாகராய நகரில் இந்த அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது கல்பாத்தி சகோதரர்கள், இயக்குநர் மோகன்ராஜா, எடிட்டர் மோகன், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீசரண் மற்றும் ஒளிபதிவாளர் ராம்ஜி ஆகியோர் இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் தாங்களே மக்களுக்கு உணவு பரிமாறி அன்னதான விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.