என் ஃபுல் சப்போர்ட் உங்களுக்கே: இஸ்லாமை பின்பற்றும் யுவனுக்கு சிம்பு ஆதரவு

சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு யுவனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு மாறியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இதை அவரே ட்விட்டரில் நேற்று உறுதி செய்தார்.

என் ஃபுல் சப்போர்ட் உங்களுக்கே: இஸ்லாமை பின்பற்றும் யுவனுக்கு சிம்பு ஆதரவு

ஆமாம் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். யுவனின் இந்த ட்வீட்டைப் பார்த்த நடிகர் சிம்பு அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிம்பு யுவனிடம் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

என்னவாக இருந்தாலும் சரி உங்களுக்கு எனது அன்பும், ஆதரவும் எப்பொழும் உண்டு என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு யுவன் நன்றி பிரதர் என்று தெரிவித்துள்ளார்.

 

காட்டுத் தீயாகப் பரவும் மதமாற்ற செய்திகள்.. தெளிவுபடுத்துவாரா யுவன்?

சென்னை: இஸ்லாத்தை பின்பற்றுவதாக அறிவித்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 5 வேளை தொழுகை நடத்துவதாகவும், குர் ஆன் ஓதுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

காட்டுத் தீயாகப் பரவும் மதமாற்ற செய்திகள்.. தெளிவுபடுத்துவாரா யுவன்?

கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை பின்பற்றுகிறாராமே என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் இஸ்லாத்தை பின்பற்றுவதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் யுவன் ட்விட்டரில் பகிரங்கமாக தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் இஸ்லாத்தை பின்பற்றும் அவர் தாடி வளர்க்கிறாராம். தினமும் 5 வேளை தொழுகிறாராம். மேலும் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை ஓதுகிறாராம்.

இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக அறிவித்துள்ள யுவனை வரவேற்று முஸ்லிம் சமுதாயத்தினர் ட்வீட் செய்து வருகின்றனர். அவர்களின் ட்வீட்டுக்கு யுவனும் நன்றி தெரிவித்து வருகிறார்.

 

தனுஷுடன் கமலின் இளைய மகள் நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் துவக்கம்

மும்பை: தனுஷ் அக்ஷரா ஹாஸன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட் சென்றார். முதல் படமே சூப்பர் ஹிட், ரூ. 100 கோடி வசூல் என்று கலக்கினார். அவரது நடிப்புக்கு பிலிம்பேர் சிறந்த புதுமுக நடிகர் விருதை வழங்கி கௌரவித்தது.

தனுஷுடன் கமலின் இளைய மகள் நடிக்கும் இந்தி படத்தின் ஷூட்டிங் துவக்கம்

இந்நிலையில் தனுஷ் ஆர். பால்கியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸனுடன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதாக தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் பால்கி மற்றும் பி.சி. ஸ்ரீராமுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக உள்ளதாக தனுஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் மூலம் கமலின் இளைய மகள் நடிகையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மிஷ்கின் படத்தை தயாரிக்கும் பாலா!

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தை தன் சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் இயக்குநர் பாலா.

சமீபத்தில் மிகப் பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டுகளைக் குவித்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இளையராஜா இசையில், ஸ்ரீ, மிஷ்கின் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா, தான் கண்ணீர் விட்டு அழுததாகவும், தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் மிஷ்கின் என்றும் தெரிவித்திருந்தார்.

மிஷ்கின் படத்தை தயாரிக்கும் பாலா!

இந்த நிலையில், மிஷ்கின் - பாலா சந்திப்பு நடந்தது. அப்போது மிஷ்கின் சொன்ன ஒரு ஒன்லைன் பாலாவுக்கு மிகவும் பிடித்துவிட, அந்தக் கதையை தன் சொந்தப் பட நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாலா கூறுகையில், "மிஷ்கின் கூறிய ஒன் லைன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதைத்தொடர்ந்து படத்தின் ஸ்க்ரிப்டை எழுதச் சொல்லிவிட்டேன். நானே இப்படத்தை தயாரிக்கிறேன்," என்றார்.

மார்ச் மாதத்திற்குள் இந்த வேலை முடித்துவிட்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை துவங்க முடிவுசெய்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இந்தப் படத்துக்கும் இளையராஜாவே இசையமைப்பார் என்று தெரிகிறது.

 

'நீ எங்கே என் அன்பே' - நயன்தாரா நடிக்கும் அனாமிகாவுக்கு தமிழ் தலைப்பு இது!

நயன்தாரா நடிக்கும் கஹானி ரீமேக்கின் தமிழ்ப் பதிப்புக்கு நீ எங்கே என் அன்பே என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கஹானி'. இப்படம் காணாமல் போன கணவனைத் தேடிச் செல்லும் ஒரு அபலை பெண்ணின் கதை. தற்போது இப்படம் தமிழில் வயா காம் 18 மோஷன் பிக்சர்சின் முதல் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் உருவாகிறது.

இந்நிறுவனத்தின் முதல் படம் என்பதால் நீண்ட நாட்களாக நல்ல தலைப்புக்கு தேடி வந்தனர். அவள், பெண் போன்ற தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு கைவிடப்பட்டன.

'நீ எங்கே என் அன்பே' - நயன்தாரா நடிக்கும் அனாமிகாவுக்கு தமிழ் தலைப்பு இது!

தற்போது ‘நீ எங்கே என் அன்பே' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளனர். இப்படத்திற்கு நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

‘பெண்களை கவரும் வண்ணம் உள்ள இக்கதையில் நயன்தாரா அருமையாக நடித்துள்ளார். மேலும் இந்தியில் வித்யாபாலன் நடித்து புகழ் பெற்ற பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகூட்டி வருகிறார். நீ எங்கே என் அன்பே' என்ற தலைப்பு கதைக்கு மிகவும் பொருந்த கூடிய தலைப்பு,' என்கிறார் படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா. தெலுங்கில் பல வெற்றிப் படங்கள் தந்த இவரது முதல் தமிழ்ப் படம் இது.

இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இப்படம் ‘அனாமிகா' என்னும் தலைப்பில் உருவாகி வருகிறது.

 

'என்னங்க.. நடிகைங்க முன்னாடி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு!' - பாரதிராஜா மீது கமலின் செல்லக் கோபம்

பொதுவாக ஒரு இசை வெளியீட்டு விழா என்றால் நாற்பது ஐம்பது பேரை மேடை ஏற்றுவார்கள். படத்தின் நாயகன் நாயகி இயக்குநர் இசையமைப்பாளர் என அத்தனைப் பேரைப் பற்றியும் ஆஹா ஓஹோ எனப் பேசுவார்கள்.

நான்கைந்து மணி நேரங்களுக்குப் பிறகு விட்டால் போதுமென தலைதெறிக்க ஓட வேண்டியிருக்கும்.

ஆனால் நேற்று நடந்த ராமின் தரமணி விளம்பர வீடியோ பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தது.

'என்னங்க.. நடிகைங்க முன்னாடி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு!' -  பாரதிராஜா மீது கமலின் செல்லக் கோபம்

மேடையில் இரண்டு நாற்காலிகள்தான். ஒன்றில் இயக்குநர் பாரதிராஜா. மற்றொன்றில் கமல் ஹாஸன்.

அந்த இருவரும் பேசத் தொடங்கும் முன் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமாரும், இயக்குநர் ராமும் வரவேற்புரை, அறிமுகவுரை நிகழ்த்தினர். அடுத்து ஆன்ட்ரியாவே இசையமைத்து எழுதி பாடிய ஆங்கிலப் பாடல் வெளியிடப்பட்டது.

'என்னங்க.. நடிகைங்க முன்னாடி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு!' -  பாரதிராஜா மீது கமலின் செல்லக் கோபம்

முதலில் மைக் பிடித்தவர் பாரதிராஜா. கமலை அவர் எந்த அளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றி அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பித்தார்.

"காலங்களை.. ஆண்டுகளைக் கடந்தது எங்கள் நட்பு. ஒரு 35... அல்ல 40 ஆண்டுகளுக்கும் மேல் (உடனே கமல், 'இதையெல்லாம் அவங்க கேட்டாங்களா..') தமிழ் சமூகத்தின் உலக அடையாளம் நம்ம கமல். அற்புதமான கலைஞன் மட்டுமல்ல, மிகச் சிறந்த மனிதன். கமலை நான் காதலிக்கிறேன். புதியவர்களை ஊக்கப்படுத்துவதில் கமலுக்கு நிகரில்லை...' என்றெல்லாம் பேசினார்.

'என்னங்க.. நடிகைங்க முன்னாடி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு!' -  பாரதிராஜா மீது கமலின் செல்லக் கோபம்

அடுத்து கமல் பேச வந்தார்.

எடுத்ததுமே, 'பாரதிராஜாவுக்கு பரவால்ல... அவரு டைரக்டர்.. ஆனா நமக்கு அப்படியா... இன்னும் ஆன்ட்ரியா கூட டூயட் பாட வேண்டியிருக்கு. இங்க போயி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு... அதுவும் நடிகைங்க முன்னாடி.. அப்படியே கண்டுக்காம போயிடணும்," என்று கலகலக்க வைத்தார்.

'என்னங்க.. நடிகைங்க முன்னாடி வயசையெல்லாம் சொல்லிக்கிட்டு!' -  பாரதிராஜா மீது கமலின் செல்லக் கோபம்

பின்னர் தனக்கும் பாரதிராஜாவுக்குமான நட்பு பற்றி அவர் கூறுகையில், "நான் இன்று இந்த அளவுக்கு உருவாகக் காரணமானவர்களில் ஒருவர் அவர். இவன்லாம் நடிப்பானா என பலரும் யோசித்தபோது, என்னை நம்பி ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்து ஜெயிக்க வைத்தவர். அளவுக்கதிகமான நடிப்பு, அலைச்சல் காரணமாக நான் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். அப்போது மருத்துவர்களிடம், 'இந்தாளை சீக்கிரம் குணமாக்கி அனுப்புங்கய்யா.. என் படத்துக்கு ஹீரோ இவன்தான்' என மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு, என்னிடம் கதை சொன்னார். அந்தக் கதைதான் பின்னர் பதினாறு வயதினிலே ஆக வந்தது.

அந்தப் படத்தைப் பார்த்துட்டு குருநாதர் பாலச்சந்தர், இவன் இப்படியெல்லாம் கூட நடிப்பான்னு எனக்குத் தெரியல... என்று மேடையில் பாராட்டினார். அந்த கவுரவத்துக் காரணம் இந்த பாரதிராஜாதான்.. அவர் என்னைக் காதலிப்பதாகச் சொன்னார். கற்றோரை கற்றாரே காமுறுவர் என்ற வகைக் காதல் இது,' என்றார்.