நெஞ்சம் பேசுதே என்ற புதிய மெகா தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கணவனை இழந்த மீனா தனது 2 குழந்தைகளுடன் வாழ்க்கை போராட்டதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த தொடர். அவளது வாழ்க்கையில் வீசும் வசந்தமாக பத்திரிக்கையாளர் மோகன் வந்து சேர்கிறார். மீனாவின் குடும்பத்துடன் மோகன் பகிர்ந்துகொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்களை கண் முன் நிறுத்துகிறது நெஞ்சம் பேசுதே...
மோகனுக்கும் மீனாவுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான உறவை சித்தரிக்கும் ஆழமான தொடர் நெஞ்சம் பேசுதே.. செப்டம்பர் 19 முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 9.00 முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் "உள்ளம் கொள்ளை போகுதே", "மதுபாலா", "மூன்று முடிச்சு" போன்ற வெற்றி தொடர் வரிசையில் தற்போது "நெஞ்சம் பேசுதே". இத்தொடர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.