அதீத கவர்ச்சியால் தணிக்கை குழுவினரை கலங்கடித்த இனிப்பு நடிகை!

எந்த சூழ்நிலையிலும் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று கொள்கை வைத்திருந்த ஸ்வீட் ஸ்டால் நடிகை இப்போது தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டுள்ளாராம்.

காரணம் தன்னுடைய சக போட்டி நடிகைகளின் தாராள கவர்ச்சிதான் அவரை கொஞ்சம் தாராளமாகவே இறங்கிவர வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு பேட்டி கொடுத்த இனிப்பு நடிகை, தென்னிந்திய படங்களில் மட்டுமல்ல இந்தி படங்களில் நடிக்கும்போதுகூட எனக்கென சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். கிளாமர் வேடங்களில் நடிக்க தயார். இறுக்கமான ஜீன்ஸ், பொருத்தமான குர்தாவில் பெண்களால் கவர்ச்சியாக இருக்க முடியும். ஆனால் கவர்ச்சி என்பதற்காக ஆடைகளை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல் என்னை நடிக்க சொல்லி இயக்குனர் கேட்டாலும் அந்த காட்சியை மாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொள்வேன், என்று கூறியிருந்தார்.

இப்போது அவரே கவர்ச்சிக்கு ரெடி என்ற அளவில் இறங்கிவந்திருக்கிறார். காரணம் தமிழ், தெலுங்கில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரவேண்டுமானால் ஆடைகளை கொஞ்சம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும் என்று நலம் விரும்பிகள் செய்த அட்வைஸ்தான் அவரை கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு மாற்றியுள்ளதாம்.

தெலுங்கு படமொன்றில் பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். இதைப் பார்த்த தணிக்கை குழுவினரே அதிர்ந்து போய்விட்டனராம்.

 

பிரமாண்ட பாடல் காட்சியுடன் விஜய்யின் கத்தி பட ஷூட்டிங் முடிந்தது!

விஜய்- சமந்தா நடித்த கத்தி படத்தின் ஷூட்டிங் பிரமாண்ட பாடல் காட்சியுடன் நிறைவடைந்தது.

லைகா நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் வசனக் காட்சிகள் முன்பே படமாக்கப்பட்டு விட்டன.

பிரமாண்ட பாடல் காட்சியுடன் விஜய்யின் கத்தி பட ஷூட்டிங் முடிந்தது!

செல்பி புள்ள என்ற பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருந்தது. அந்தப் பாடலை மும்பையில் வைத்து மும்பை பிலிம் சிட்டியில் பிரமாண்டமாகப் படமாக்கினர்.

இந்தக் காட்சியுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. பின் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடக்கின்றன. இன்னும் இருபது நாட்களுக்குள் தீபாவளிக்கு படம் வெளியாகவிருக்கிறது.

அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்புகிறார்கள்.

 

இது சுத்தத்திற்கான நேரம்... மோடி அழைப்பை ஏற்றுக் கொண்டார் பிரியங்கா சோப்ரா

மும்பை: தூய்மையான இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா.

டெல்லியில் இன்று தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். துவக்க விழாவின் போது பேசிய மோடி, இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவின் ஒன்பது பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இது சுத்தத்திற்கான நேரம்... மோடி அழைப்பை ஏற்றுக் கொண்டார் பிரியங்கா சோப்ரா

அதில், மிருதுளா சின்கா ஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான், அனில் அம்பானி ஆகியோர் அடங்குவர். மேலும், இணையத்தில் பரபரப்பை உண்டாக்கிய ஐஸ் பக்கெட் சவாலைப் போன்று, தான் அழைப்பு விடுத்தவர்கள் தங்களது பணியை நிறைவு செய்தவுடன் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.

மேலும், மக்கள் தாங்கள் நகரைத் தூய்மைப் படுத்தும் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் மோடி அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த சவாலை பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டுள்ளார்.

சவாலை ஏற்கிறேன்...

பிரதமரின் இந்த திட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கும் அழைப்பு...

மேலும் பிரியங்கா சோப்ரா தனது ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது, ‘சுத்தமான இந்தியா திட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் ஒன்றும் நடக்காது. ஆனால் நாம் ஒன்றாக இணைந்து பணிசெய்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

மாற்றத்தை விரும்புகிறேன்...

நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானதாக இருக்க வேண்டும். நான் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறேன்.

சுத்தம் செய்யும் நேரம்...

நான் இந்தியாவை சுத்தப்படுத்த விரும்புகிறேன். இது சுத்தம் செய்யும் நேரம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

அஞ்சான் விஜயதசமிக்கில்லை.. தீபாவளிக்கு! - சன் டிவி திடீர் நிறுத்தம்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தை ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருந்த சன் டிவி, இப்போது திடீரென நிறுத்திவிட்டது.

லிங்குசாமி - சூர்யா இணைப்பில் உருவான 'அஞ்சான்' படம் இரு மாதங்களுக்கு முன் சுதந்திர தினத்தன்று வெளியானது.

அஞ்சான் விஜயதசமிக்கில்லை.. தீபாவளிக்கு! - சன் டிவி திடீர் நிறுத்தம்

சமூக வலைத் தளங்களில் மிக மோசமான விமர்சனங்கள் மற்றும் கிண்டல் கேலிகளைச் சந்தித்தது இந்தப் படம்.

இந்நிலையில், விஜயதசமி அன்று சிறப்புத் திரைப்படமாக சன் டி.வியில் 'அஞ்சான்' திரையிடப்படும் என்று விளம்பரம் வெளியானது. ஆனால், திடீரென அந்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு, பிதாமகன் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பிரமாண்டமான அஞ்சான் படத்தை ஒளிபரப்பப் போகிறதாம் சன் டிவி.

 

காலையில் சந்திப்பு, மாலையில் திருமணம்... - எந்த சினிமாவிலும் பார்க்காதது நடிகை துளசியின் கதை!

ஒரு காலத்தில் கதாநாயகியாக வலம் வந்தவர்கள் பின்னர் அம்மா அண்ணி வேடங்களில் தோன்றுவது சினிமாவில் சகஜம்.

இப்போது பல படங்களில் அழகிய அம்மாவாக வலம் வருபவர் நடிகை துளசி.

'சகலகலா வல்லவனி'ல் கமலின் தங்கையாகவும், 'நல்லவனுக்கு நல்லவனி'ல் ரஜினியின் மகளாகவும் நடித்த அதே துளசிதான். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று சுமார் 300 படங்களில் நடித்திருக்கும் துளசி, மூன்று மாதக் குழந்தையா க இருந்த போதே திரையில் முகம் காட்டியவர்.

35 ஆண்டுகளுக்குப்பின் வெளிவரவுள்ள 'சங்கராபரணம்' தமிழ்ப்பட அறிமுக விழாவுக்கு சென்னை வந்தவரை சந்தித்த போது...

காலையில் சந்திப்பு, மாலையில் திருமணம்... - எந்த சினிமாவிலும் பார்க்காதது நடிகை துளசியின் கதை!

உங்கள் முதல் திரைப் பிரவேசம்..?

நான் முதலில் நடித்த படம் 'பாகரி' அப்போது எனக்கு ஒரு வயது கூட ஆகவில்லை. மூன்றுமாத குழந்தை நான். சாவித்ரியம்மா என் அம்மாவுக்குத் தெரியும். தான் நடிக்கும் படத்தில் ஒரு குழந்தை தேவைப்பட்டதை சொல்லி குழந்தையைக் கேட்டுள்ளார். கதையில் அது ஆண் குழந்தை. என் மகள் பெண் குழந்தையாயிற்றே என்றிருக்கிறார் என்அம்மா. அதனால் என்ன பரவாயில்லை. ஜட்டி போட்டு ஆண் குழந்தையாக்கி விடுவோம் என்று வாங்கிக் கொண்டாராம். அப்படி நான் நடித்த படம் தான் 'பாகரி'. இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒன்றரை வயதில் அடுத்தபடம். பாடல் காட்சியில் தோன்றினேனாம். பிறகு மூன்று

வயதில் ஒரு படம். இப்படிப்பட்ட சூழலில் சற்று வளர்ந்த பிறகு தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பிஸியான குழந்தை நட்சத்திரம் ஆகிவிட்டேன்.

எத்தனை படங்களில் நடித்தீர்கள்?

நான் நடித்தவை 316 படங்கள் என்றால், அவற்றில் சுமார் 100 படங்களில் குழந்தை நட்சத்திரம்தான். பிஸியாக இருந்தேன். எந்த அளவுக்கு என்றால் ஸ்கூல்கூட போக முடியாத அளவுக்கு. பிஸியாக இருந்தேன். நிஜம்தான், நான் பள்ளிக்கூடமே போகவில்லை.

பின்னர் எப்படி படிக்கக் கற்றுக் கொண்டீர்கள்?

என் சகோதரிகளும் அண்ணாவும் கற்றுக் கொடுத்ததுதான் எல்லாம். அவர்கள் எல்லாரும் ஸ்கூல் போய் வருவார்கள். நான் படப்பிடிப்பு போய் வருவேன்.அன்று காலை முதல் ஸ்கூலில் படித்ததை மாலையில் எனக்கு சொல்லித் தருவார்கள். இப்படியே தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ் எல்லாம் எழுதக் கற்றுக கொண்டேன்.

குழந்தையாக கதாநாயகியாக.. எத்தனை மொழிகளில்?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் குழந்தையாக நடித்திருக்கிறேன். தமிழில் மட்டும் குழந்தையாக சுமார் 40 படங்களில் நடித்திருப்பேன். கன்னடத்தில் மட்டும்தான் குழந்தையாக நடிக்கவில்லை. எல்லா மொழிகளிலும் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறேன்.

காலையில் சந்திப்பு, மாலையில் திருமணம்... - எந்த சினிமாவிலும் பார்க்காதது நடிகை துளசியின் கதை!

எப்போது அம்மாவாக நடிக்க ஆரம்பித்தீர்கள்?

எனக்குத் திருமணமாகி ஆண் குழந்தை பிறந்து அவன் சற்று வளரும் வரை நடிப்பதை நிறுத்தியிருந்தேன். அதன் பிறகு அம்மா வேடங்களில் நடிக்கத் தொடங்கினேன். நல்ல பெயரும் கிடைத்தது. தமிழில் நான் முதலில் அம்மாவாக நடித்த படம் 'பிள்ளையார் தெரு கடைசி வீடு.' அதன்பிறகு 'ஈசன்', 'மங்காத்தா', 'ஆதலால் காதல் செய்வீர்,' 'சுந்தரபாண்டியன்,' 'பாண்டியநாடு' போன்ற படங்களில் நடித்தேன்.

குறிப்பாக 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் நான் நடித்தது மறக்க முடியாதது. அதில் நான் ஏற்ற செல்லம்மா கேரக்டர் பலராலும் பாராட்டப் பட்டது. எங்களுக்கு பாட்டெல்லாம் உண்டு. இப்போதெல்லாம் அப்பா அம்மாகேரக்டரை யாரும் பெரிதாகக் காட்டுவது இல்லை. அதில் நான் படம்முழுக்கவருவேன். பார்ப்பவர் நெகிழும்படி அன்பையே பொழியும் கேரக்டர்அது.

இப்போது நடித்துவரும் படங்கள்?

தியாகராஜன் இயக்கும் 'சாகசம்' படத்தில் எனக்கு நல்ல வேடம். 'ஜீரோ' வும் நல்ல வாய்ப்புதான். ஒரு ஃப்ளாட்டில் நடக்கும் கதை. சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலின் அம்மாவாக 'ஆம்பள' படத்தில் நடிக்கிறேன். மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் அம்மாவாக நடிக்கிறேன். ஸ்ருதிஹாசன் திறமையான நடிகை என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

கமல், ரஜினியுடன் நடித்த அனுபவங்கள்?

'சகலகலா வல்லவன்' படத்தில் நடித்த போது நான் சிறு பெண். கமல் சாரின் தங்கையாக வருவேன். படத்தில் முக்கிய கேரக்டர். அதற்கு முன் குழந்தையாக பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருடன் நடிக்கும் போது தயக்கம் பயம் இருந்தது. அவர் என் நடை உடை பாவனை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பெரிதும் ஊக்கம் தந்தார். உதவியாக இருந்தது.

அதேபோல 'நல்லவனுக்கு நல்லவனில்' ரஜினிசாருடன் நடிக்கும் போது பயந்தேன். முதல் நாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த அந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாது. அவர் குட்டி என அழைத்து சகஜமாக்கிக் கொண்டு பழகினார். சௌகரியமாக்கி என் தயக்கத்தைப் போக்கினார். அது மறக்க முடியாதது

குடும்பம் பற்றி..?

நான் ஷீரடி சாய்பாபா பக்தை. என் கணவர் பெயர் ஷிவமணி. கன்னடத்தில் பிரபல இயக்குநர். இதுவரை 26 படங்கள் இயக்கியுள்ளார்.

எங்கள் திருமணம் மறக்க முடியாதது. அவர் அப்போது சாதாரண நிலையில் இருந்தவர்தான். தேவராஜை வைத்து 'மதர் இந்தியா' இயக்கினார். நிரோஷாதான் நாயகி. கதாநாயகனுக்கு சிறு வயது அம்மாவாக நான் நடித்தேன்.

காலை 8 மணிக்கு படப்பிடிப்புக்குப் போனேன். 11 மணிக்கு ஷிவமணி 'நாம திருமணம் செய்துக்கலாமா?' என்றார். எங்களுக்குள் காதல் என்றெல்லாம் இல்லை. திருமணம் செய்துக்கலாம் பிறகு காதலிக்கலாம் என்றார். அவர் அவசரப் படுகிறவரோ உணர்ச்சிவசப் படுகிறவரோ இல்லை. அவரைப்பற்றி எல்லா உண்மையும் பகிர்பவர். தன் அம்மா வீட்டு வேலை செய்பவர் என்பதைக் கூட மறைக்காமல் சொல்பவர். அவர் தன் விருப்பத்தைச் சொன்ன போது திரையுலகில் வளர வேண்டிய அளவுக்கு ஆரம்பநிலையில்தான் இருந்தார். வசதிகள் இல்லை. இருந்தாலும் அவர் சொன்னதை மறுக்க முடியவில்லை. மாலை கோயிலுக்கு கூப்பிட்டார்.

அது மல்லேஸ்வரம் பாபாகோவில். அங்கேயே தாலி கட்டினார். இப்படி 1994 அக்டோபர் 28ல் எங்கள் திருமணம் நடந்தது. இது ஒரு மாதம் கழித்துதான் வீட்டுக்கே தெரியும். அவர் எல்லாரும் நல்லா இருக்கணும் என நினைப்பவர். அவரும் பாபா பக்தர். அதனால் என்னால் மறுக்க முடியவில்லை. என் வீட்டுக்குத் தெரிந்த போது எல்லாரும் சந்தோஷப் பட்டனர். எல்லாம் பாபா செயல்.

இந்தக் கதையை இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். திருமணம் குடும்பம் என்பதெல்லாம் ஒரு நாளில் முடிவு செய்கிற விஷயமா என்பார்கள். ஆனால் என் மனம் அன்று எடுத்த முடிவு இன்றும் சரியாகவே படுகிறது. என மகன் சாய்தருண் பிபிஏ முதலாம் ஆண்டு படிக்கிறான். எனக்கு எந்த குறையும் இல்லை. திருமணத்துக்குப் பிறகு 20 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எந்த சினிமாவிலும் வராதது எங்கள் கதை.

இப்போதைய படங்கள் பற்றி.?

இப்போது நிறைய படங்கள் வருகின்றன. மனதைக் கவர்பவை ஒரு சில படம்தான். ரசிகர்கள் அறிவாளிகள். தரமில்லாததை தவிர்த்து நிராகரித்து விடுவார்கள்.

35 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்ப் படமாக வெளி வரவுள்ள 'சங்கராபரணம்' பற்றி?

'சங்கராபரணம்' படத்தில் நடித்தபோது எனக்கு 10 வயது இருக்கும். அதில் நான் ஒரு பையனாக வருவேன். க்ளைமாக்ஸ் வரும் வரை வருகிற முக்கிய கேரக்டர் அது. மீண்டும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிவருவது பற்றி மகிழ்ச்சி. உங்களைப் போல படத்தைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

 

ஜெயலலிதாவை விடுங்க.. ஜெயா டிவியில் சமந்தா படம் பாருங்க!

ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி சிறப்புத் திரைப்படங்களாக சன்டிவி, ஜெயாடிவிகளில் காலை 11 மணிக்கு நடிகை சமந்தா நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.

காலை நேரத்தில் சமந்தா ரசிகர்களுக்காக சன் டிவியில் நானி, சமந்தா நடித்த நான் ஈ திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜெயலலிதாவை விடுங்க.. ஜெயா டிவியில் சமந்தா படம் பாருங்க!

தெலுங்கில் ஈகா என வந்து வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தமிழில் நான் ஈ யாக வந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது. நடிகை சமந்தாவிற்கு தமிழில் தனி ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்தது.

இதற்குப் பின்னர், கவுதம் மேனர் படமான நீதானே என் பொன் வசந்தம், லிங்குசாமியின் அஞ்சான், ஏ.ஆர் முருகதாசின் கத்தி படங்களில் புக் ஆனார்.

அதேபோல ஜெயா டிவியில் ஆயுதபூஜை சிறப்புத் திரைப்படமாக இன்று காலை 11 மணிமுதல் ஜீவா, சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது. அப்புறம் என்ன ரிமோட்டை கையில் எடுத்துக்கொண்டு மாத்தி மாத்தி சமந்தா நடித்த படங்களை பாருங்கள் ரசிகர்களே.