நீச்சல் உடையா?அசின் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நீச்சல் உடையா? அசின் மறுப்பு

4/15/2011 4:01:44 PM

அசின் கூறியது: பாலிவுட் போட்டி நிறைந்த உலகம். என்னைப் பொறுத்தவரை நம்பர் ஒன் போட்டியில் ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற ஹீரோயின்கள் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதில் கூட அக்கறை கிடையாது. எனக்கு ஸ்கிரிப்ட், தயாரிப்பு நிறுவனம்தான் முக்கியம். பின்னர் ஹீரோ. இந்த பாலிசியுடன்தான் எனது படங்களை தேர்வு செய்கிறேன். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. சில காரணங்களால் ஏற்கவில்லை. அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. சில ஐ.பி.எல் டீமில் என்னை தூதராக இருக்கக் கேட்டார்கள். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். ஆனால் தூதராக இருக்க விரும்பவில்லை. அதற்கும் காரணங்கள் இருக்கிறது. ஒரு படம் ஒப்புக்கொள்ளும்போது அதில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று முக்கியமாக பார்க்கிறேன். ஹீரோவின் கைப்பாவையாக மட்டுமே வந்துபோக விரும்பவில்லை. மணிரத்னம், பிரியதர்ஷன், ராஜ்குமார் ஹிரானி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசை. சமீபகாலமாக நான் நீச்சல் உடை அணிந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. நிச்சயமாக அப்படி நடிக்க மாட்டேன்.





Source: Dinakaran
 

கிளாமருக்கு டாப்ஸி ரெடி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கிளாமருக்கு டாப்ஸி ரெடி

4/15/2011 4:04:05 PM

டாப்ஸி கூறியது: 'ஆடுகளம்' நல்ல பெயரை வாங்கித் தந்தது. 'யாத்தே... யாத்தே' பாடல் எனக்காகவே எழுதப்பட்ட பாடலாக அமைந்தது. 'வெள்ளாவி வச்சிதான் வெளுத்தாங்களா, வெயிலுக்குத் தெரியாம வளத்தாங்களா?' வரிகள் ஹைலைட்டா அமைந்தது. அடுத்து 'வந்தான் வென்றான்' படத்தில் நடிக்கிறேன். அதேபோல் கிருஷ்ணவம்சி இயக்கும் தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். இதற்கிடையில் இந்தியில் டேவிட் தவான் படத்தில் நடித்து முடித்தேன். 1981ம் ஆண்டு வெளியான 'சாஸ்மி புத்தூர்' ரொமான்டிக் படத்தின் ரீமேக்தான் இது. மலையாளத்தில் 'டபுள்ஸ்' படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறேன். இதுவரை எனக்கு கிடைத்த வேடங்கள் எதுவும் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவில்லை. நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரங்களாகவே அமைந்துள்ளன. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் மனதை கவரும் வேடங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் அது கமர்சியல் ஹிட்டாக அமைவதில் கவனமாக இருப்பேன்.





Source: Dinakaran
 

கிசு கிசு -நைட் பார்ட்டியை மிஸ் பண்ணாத நடிகர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நைட் பார்ட்டியை மிஸ் பண்ணாத நடிகர்

4/15/2011 12:21:58 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

உலக ஹீரோ நடிப்புல செல்வராகவரு இயக்குற படத்துக்கு யுவ மியூசிக்கைத்தான் பேச¤னாங்களாம்... பேச¤னாங்களாம்... திடீர்னு சங்கர மகாதான் படத்துக்கு இசை அமைக்கிறாருன்னு அறிவிப்பு வந்துருச்சாம்... வந்துருச்சாம்... இந்த மாற்றத்துக்கு காரணம் உலக ஹீரோவாம்... ஹீரோவாம்...

பிரசன்ன ஹீரோவுக்கு பிரேக் கிடைக்காததால வில்லன் வேஷம் கூட போட்டுப் பார்த்தாரு. பயனில்லாம போச்சு. வருத்தத்துல தனிமை விரும்பியா நடிகரு மாறிப்போனாரு. இப்படியே முடங்கி கிடந்தா இண்டஸ்ட்ரி கூட டச் விட்டுப் போயிடும்னு பிரண்ட்ஸுங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனால  யூத் ஹீரோங்க நடத்துற நைட் பார்ட்டில தவறாம கலந்துக்கிறாராம்... கலந்துக்கிறாராம்...

நாடோடி நடிகை கடைசியா நடிச்ச படம் கைகொடுக்கல. பரிகாரம் செஞ்சா அதிர்ஷ்டம் கதவை தட்டும்ன்னு சாமியார் ஒருத்தர் சொன்னதை கேட்டு குருவாயூர் கோயிலுக்கு போனாராம். மறுபடியும் கோலிவுட்ல ஹிட்டான தன்னோட எடைக்கு எடை பழம் கொடுக்க¤றதா வேண்டிக்கிட்டாராம்... நடிகை வேண்டிக்கிட்டாராம்...





Source: Dinakaran
 

நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகளின் சடலத்துடன் திரும்பினார் பாடகி சித்ரா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகளின் சடலத்துடன் திரும்பினார் பாடகி சித்ரா

4/15/2011 1:02:25 PM

சென்னை: இசை நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்ற பிரபல பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழி படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பவர் சித்ரா.  'சின்னக்குயில்' என்று இவருக்கு ரசிகர்கள் அடைமொழி கொடுத்துள்ளனர். இவரது கணவர் விஜய கிருஷ்ணன். திருமணம் ஆகி நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது சிறுமிக்கு 8 வயதாகிறது. பள்ளியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு துபாயில் உள்ள சார்ஜா மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று பாடுவதற்காக மகளுடன் துபாய் சென்றார் சித்ரா. அங்கு மீடியா சிட்டி அருகே எமிரேட் ஹில்ஸ் குடியிருப்பில் உள்ள தனது குடும்ப நண்பர் வீட்டில் தங்கினார். அந்த வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. நேற்று காலை நீச்சல் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தவறி குளத்தில் விழுந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார் சித்ரா. நேற்று இரவே மகளின் உடலுடன் துபாயிலிருந்து விமானம் மூலம்  புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தார். சாலிகிராமம் தேவராஜ் நகரில் உள்ள அவரது வீட்டில் குழந்தையின் உடலுக்கு ஏராளமான திரையுலகினர், பின்னணி பாடகர், பாடகிகள் இறுதி அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.இன்று மாலை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது.





Source: Dinakaran