சத்யானந்தா படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு

Case Revoke Ban On Sathyananda Movie

நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா விவகாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வந்த சத்யானந்தா என்ற கன்னடப் படத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறிய சூழல், ஆசிரமம் மற்றும் அதற்கு பிராஞ்சுகள் ஆரம்பித்தது, கதவைத் திற காற்று வரட்டும் என உபதேசங்களைத் தொடங்கி, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டது, கடைசியில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து கம்பி எண்ணியது போன்றவற்றை நிகழ்வுகளை இந்தப் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்டதுமே தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை நீதி்மன்றம் விசாரித்து சத்யானந்தா படத்துக்கு தடை விதித்தது.

தடையை நீக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடிப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்துக்குமே ஆதாரங்கள் உள்ளன. மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் அவை. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர் சத்யானந்தா குழுவினர்.

 

கேரள தொழிலதிபருடன் காதலா? - ஓவியா விளக்கம்!

Oviya Denies Love Affair   

கேரள தொழிலதிபரை காதலிப்பதாக தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, கலகலப்பு மூலம் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஓவியா கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் இப்போது பிஸி நடிகையாக மாறி வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது.

அனன்யா பாணியில் தன்னைவிட ரொம்ப வயதான ஒருவரை அவர் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது.

இப்போது இந்த செய்திக்கு அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஓவியா.

அவர் கூறுகையில், "சினிமாவில் இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் காதல் என்று எழுதுவது தேவையற்றது.

இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கெல்லாம் ஏது நேரம்... அவ்வளவு பிஸி. இப்போதைக்கு முழுக்கவனமும் சினிமாவில்தான். இன்னும் திருமணம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை", என்றார்.

 

கோச்சடையானில் 42 ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு!

42 College Students Get Break Kochadaiyaan   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தில் பணியாற்ற கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே அரசின் ஓவியம் மற்றும் நுண் கலைக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள்.

பாரிமுனையில் உள்ள காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 42 பேரை நேரடியாக தேர்வு செய்த இயக்குநர் சௌந்தர்யா, அவர்களை கலை இயக்குநர் வேலுவின் கீழ் பணியமர்த்தியுள்ளார்.

கோச்சடையானின் வரைகலை மற்றும் டிசைன்கள் வடிவமைப்பில் இவர்களின் பங்களிப்பும் இடம்பெறுகிறது.

இவர்களைத் தவிர, கும்பகோணத்தில் உள்ள காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸைச் சேர்ந்த 8 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த 50 கலைஞர்களும் கோச்சடையானுக்காக பணியாற்றுகின்றனர்.

இந்த 92 பேர் தவிர, கான்செப்ட் ஆர்டிஸ்ட் என்ற வகையில் மேலும் 60 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் வரும் படம் என்ற பெருமை கொண்ட கோச்சடையானை ஒவ்வொரு அங்குலமும் மிகுந்த கவனமெடுத்து இந்தப் படத்தை செதுக்கி வருகிறார்கள்.

 

கிராமத்தில் பிறந்ததற்காக மாணவர்கள் வெட்கப்படக் கூடாது!- சிவகுமார்

Village Students Must Be Proud Says Sivakumar

கிராமத்தில் பிறந்துவிட்டோமே என்று மாணவர்கள் வருத்தப்பட வேண்டாம். அது பெருமைதான். எங்கு பிறந்தாலும் இளமையிலிருந்து ஒழுக்கத்துடன் இருந்தால் நிச்சயம் உயர்ந்த இடம் கிடைக்கும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

கோவையை அடுத்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை சார்பில், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.

இந்த அறக்கட்டளைக்கு தலைவரும் சிவகுமார்தான். இங்குதான் அவர் படித்தார். விழாவில் அவர் பேசுகையில், "கிராமப் பகுதிகளில் ஏழையாகப் பிறந்துவிட்டோமே என வருத்தப்பட வேண்டாம்.

அதில் எந்த வித பாவமோ சாபமோ இல்லை. சொல்லப் போனால் இதற்காக சந்தோஷப்படுங்கள். மேதை ஆகவேண்டுமென்றால், உழைப்பின் மகத்துவம் தெரிய வேண்டும் என்றால் கிராமத்தில் பிறந்திருக்க வேண்டும் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அனைவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்தால் அந்த திறமையை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.

அனைத்து துறையிலும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். ஒழுக்கம் ஒன்றுதான் அனைவரையும் காப்பாற்றும்.

பெற்றோர்களையும், உங்களுக்கு நல்வழிகாட்டும் ஆசிரியர்களையும் வாழ்நாளில் மறக்கவே கூடாது," என்றார்.

 

'இரண்டு கதைகள் தயார்... விரைவில் அடுத்த பட அறிவிப்பு' - ஐஸ்வர்யா

Aishwarya Launch Her Next Movie

கொலவெறி புகழ் 3 படத்துக்குப் பிறகு, அடுத்த படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

முதல் படம் 3-ன் பாடல்கள் பெருமளவு ஹிட்டடித்தாலும், அந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பில்லை. ஆனால் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது கிடைத்தது. அமெரிக்காவில் பாராட்டு விழாவும் நடந்தது.

அந்த உற்சாகத்துடன் மீண்டும் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா.

இந்த முறை அவர் குழந்தைகளுக்கான படத்தை எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். இன்னொரு படத்துக்கான கதையையும் தயார் செய்துள்ளாராம்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்கபோகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.

இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

 

இயக்குநராகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் - ஜீவாவை இயக்குகிறார்!

Ravi K Chandiran Turns Director

தமிழ், இந்தி திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராகத் திகழும் ரவி கே சந்திரன் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

தனது முதல் படத்தில் ஜீவாவை ஹீரோவாக வைத்து இயக்குகிறார்.

மணிரத்னம், பிரியதர்ஷன் ஆகியோர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரவி.கே சந்திரன்.

தனது முதல் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இயக்குகிறார். 'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

கதாநாயகி மற்றும் பிறநடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேக்கிங் ஆஃப் விஸ்வரூபம் மற்றும் புத்தம் புதிய ட்ரைலர்!

கமல் ஹாஸனின் பிரமாண்ட படமான விஸ்வரூபத்தின் புத்தம் புதிய ட்ரைலரும், படம் உருவான விதம் குறித்த 4 நிமிட வீடியோவையும் கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் விஸ்வரூபம் படமாக்கப்பட்ட விதத்தை இதில் விரிவாகக் காட்டியுள்ளனர்.

kamal s vishwaroopam making video new trailer   
Close
 

அத்துடன் புதிய 1 நிமிட ட்ரைலரையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்களைக் கவரும் விதத்தில் இதில் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாஸனுக்கு ஜோடியாக பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நடித்துள்ளனர்.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கமல்ஹாஸன். படத்தின் பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது!

Posted by: Shankar
 

இஷா தியோல் - பாரத் தக்தானி திருமணம்: பாலிவுட்டே திரண்டு வந்து வாழ்த்து!

Bollywood Blesses Esha Deol Bharat Takhtani

மும்பை: தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியரின் மூத்த மகளான நடிகை இஷா தியோல் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்தது. மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானியை அவர் தென்னிந்திய முறைப்படி மணந்தார்.

இந்தி திரைப்பட உலகில் நட்சத்திர ஜோடியாகத் திகழ்பவர்கள் தர்மேந்திரா- ஹேமமாலினி தம்பதி. இவர்களின் மூத்த மகள் இஷா தியோல். இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான இஷாவுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானிக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடந்தது.

இந்த நிலையில் அவர்களது திருமணத்தையொட்டிய சடங்குகள் கடந்த 3 நாட்களாக கோலாகலமாக நடந்து வந்தது.

இஷா தியோல்-பாரத் தக்தானி திருமணம் நேற்று காலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடந்தது. இதற்காக மணமகன் பாரத் தக்தானி வெள்ளை குதிரையில் அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளையை தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினர் வரவேற்றனர்.

தென்னிந்திய பாரம்பரியப்படி...

இஷா தியோல் சிவப்பு மற்றும் தங்க சரிகை கொண்ட காஞ்சீபுரம் பட்டுச்சேலை அணிந்து இருந்தார். இந்த சேலை சென்னையில் வாங்கப்பட்டு, அதில் கூடுதலாக சில அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் பாரத் தக்தானி மராட்டிய பாரம்பரியத்தின் தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த ஜோடியின் திருமணம் தென்னிந்திய பாரம்பரியத்துடன் இந்துமுறைப்படி நடந்தது.

திருமண ஜோடியை ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்து வந்து வாழ்த்தினர். குறிப்பாக அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சனுடன் வந்து வாழ்த்தினார். மனோஜ் குமார், வினோத் கன்னா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பூனம் சின்ஹா, அனுமாலிக் உள்பட பலர் வந்திருந்தனர்.

இஷா தியோல்-பாரத் தக்தானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்க உள்ளது.