விரைவில் தமிழில் புதுப்படம் நடிப்பேன் - ஸ்ருதி

தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி. இரண்டுமே ரசிகர்களை ஏமாற்றிவிட்டன.

அதன் பிறகு ஸ்ருதிஹாஸன் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் நடித்ததெல்லாம் தெலுங்கு மற்றும் இந்தியில்தான். பலுபு, ஏவடு, ராமய்யா வஸ்தாவையா, ரேஸ்குராம் நான்கு பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

i m not avoiding tamil projects says shruti

தமிழில் அவர் யாரிடமும் கதை கேட்கக் கூட மறுப்பதாக கூறப்பட்டது. எனவே அவர் இனி தமிழில் நடிக்கமாட்டார் என செய்தி பரவியது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் ஏன் தமிழை புறக்கணிக்கப் போகிறேன். அப்படிச் சொல்வதே முட்டாள்தனம். நடிகர்கள்தான் குறிப்பிட்ட மொழியோடு நின்று போவார்கள். ஆனால் நடிகைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை.

இப்போதைக்கு தெலுங்கு, இந்தியில் பிசியாக உள்ளேன். தமிழில் நான் விரும்புகிற மாதிரி கதை அமைந்தால நடிப்பேன்," என்றார்.

 

அதெப்டி என்னைக் கேட்காம இப்படி பத்திரிகை அடிக்கலாம்? - முருகதாஸ் மீது நயன் கோபம்

Nayanthara Turn Furious Over Raja

சென்னை: தன்னைக் கேட்காமலேயே தனக்கும் ஆர்வுக்கும் திருமணம் என்று போலியாக பத்திரிகை அச்சிட்ட ஏஆர் முருகதாஸ் மீது கடும் கோபம் கொண்டு சண்டை போட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக பத்திரிகை அலுவலகங்களுக்கு சில தினங்களுக்கு முன் ஒரு திருமண அழைப்பிதழை அனுப்பியிருந்தார் ராஜாராணி பட பிஆர்ஓ.

‘ஆர்யா வெட்ஸ் நயன்தாரா' என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில் ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன.

இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரித்த போது ‘ராஜாராணி' படத்துக்காக வெளியிடப்பட்ட விளம்பரம் அது என்று கூறினர்.

இந்தப் படத்தை ஃபாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பவர் ஏஆர் முருகதாஸ். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக இப்படி ஒரு போலி திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு விளம்பரம் தேடினார்.

முதலில் நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறினர். ஆனால் உண்மையில் அவர் அனுமதி எதுவும் அளிக்கவில்லையாம்.

தன்னைக் கேட்காமல் இப்படிச் செய்த இயக்குநர் முருகதாஸ் மீது கடும் கோபம் கொண்ட நயன், அவரை போனில் சத்தம் போட்டதோடு, படத்தின் விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சியையும் புறக்கணித்துவிட்டாராம்!

 

தெனாலிராமனுக்காக இமான் இசையில் சொந்தக் குரலில் பாடிய வடிவேலு!

Vadivelu Renders Number His Tenalir

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் படத்தில் வடிவேலு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.

அரசியலில் சிக்கி கரையொதுங்கிய வடிவேலு சினிமாவை விட்டு விலக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டார்.

இப்போது அவரது வனவாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த வடிவேலு, இப்போது யுவராஜ் இயக்கும் கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இமான் இசையில் பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார். இந்த தகவலை இசையமைப்பாளர் இமானே தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துடன் மேலும் 3 படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறார். இவற்றில் ஒன்று கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படமாகும்.

இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து ஒரு படம் நடிக்கும் திட்டத்திலும் உள்ளாராம் வடிவேலு.

 

விஜய் - ஏஆர் முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்... ஜனவரியில் பூஜை!

Vijay Team Up With Ar Murugadass Ag

சென்னை: துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள்.

இந்தப் படம் வரும் ஜனவரி 2014-ல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படமாக துப்பாக்கி பேசப்பட்டது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். விஜய் - காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.

அதன் பிறகு இருவரும் அளித்த பேட்டிகளில், மீண்டும் ஒரு படத்தை இணைந்து தரவிருப்பதாகக் கூறினார்கள்.

ஆனால் திடீரென அஜீத்தை வைத்து முருகதாஸ் படம் பண்ணப் போவதாக ஒரு செய்தி வெளியானது.

இந்த நிலையில், துப்பாக்கி இந்தகிப் படத்தை முடித்ததும் ஏ ஆர் முருகதாஸ் - விஜய் இணைவதாகக் கூறப்படுகிறது.

விஜய் இப்போது ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் அக்டோபரில் முடிந்துவிடும். அதன் பிறகு முருகதாஸ் படம் தொடங்குமாம்.

இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்கிறார்கள். அஜீத்துக்காக உருவாக்கிய இரட்டை வேடக் கதையைத்தான் விஜய்யை வைத்து எடுக்கப் போகிறாராம் முருகதாஸ்.

 

சிவகார்த்திகேயனும் 160 மில்லியன் டாலரும்...

Siva Karthikeyan S 160 Million Gon

வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திக்கேயனை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும்தான் இன்றைக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு எஞ்ஜீனியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

படிக்கும் போது அவர் செய்த புராஜெக்ட் ஒன்று இப்போது 160 மில்லியன் டாலர்கள் சம்பாதித்து கொடுத்துள்ளது. ஆனால் அது சிவகார்த்திக்கேயனுக்கு அல்ல. மற்றொருவர் அந்த புகழையும் பணத்தையும் தட்டிச் சென்று விட்டாரம்.

சிவகார்த்திகேயன் குழுவினர் கல்லூரியின் இறுதி ஆண்டில் ஒரு 'Face Recognition software'-ஐ புராஜெக்டாக எடுத்து செய்திருக்கின்றனர். புராஜெக்டை நல்ல முறையில் முடித்து 200-க்கு 198 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் குழு செய்த புராஜெக்டை பரிசோதனை செய்த தேர்வு கண்காணிப்பாளர், இவர்களின் நல்ல முயற்சியை பாராட்டியதோடு தனது மாணவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் என்று சொல்லி அதன் நகல் ஒன்றை எடுத்துச் சென்றாராம்.

சிவகார்த்திகேயன் கொடுத்த புராஜெக்டை லேசாக மாற்றியமைத்த அந்த பேராசிரியர், அதனை தனது புராஜெக்ட் எனக்கூறி டாக்டரேட் பட்டம் பெற்றறிருக்கிறார் .

தற்போது அந்த 'Face Recognition software'-ஐ வாங்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசுகின்றனராம். 160 மில்லியன் டாலர் விலைபோகும் அந்த சாஃப்ட்வேரைப் பற்றி கவலைப்படாத சிவகார்த்திகேயன் தொடர்ந்து திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறாராம். அவரது முயற்சியில் வெற்றி பெற்று தற்போது இரண்டு கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் சிவ கார்த்திக்கேயன்.

இதைப் பற்றி கேட்டால், இதெல்லாம் சாதரணம் பாஸ் என்பது போல சிரிக்கிறார் ஜீனியஸ் சிவகார்த்திக்கேயன்.

 

கார்த்தி பிறந்த நாளில் பிரியாணி டீஸர்

நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளன்று பிரியாணி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர்கள் தங்களின் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை செய்து விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.

ஆனால் இப்போது தாங்கள் நடித்த படத்தில் டீஸர், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றினை வெளியிட்டு விளம்பரப்படுத்துகின்றனர்.

அந்தவகையில் இப்போது கார்த்தி தனது 36 வது பிறந்தநாளினை மே 25ம் தேதி கொண்டாடப் போகிறார். அன்றைய தினம் தன்னுடைய பிரியாணி படத்தின் டீஸரை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பிரியாணி படம் யுவன் சங்கர் ராஜாவின் 100 வது படம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் கார்த்தி உடன் ஹன்சிகா,ராம்கி, பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

 

கேன்ஸ் விழாவில் ரூ 5.5 கோடி நகைகள் கொள்ளை!

Jewels Stolen Cannes Chopard Says Not For Stars

கேன்ஸ்: பிரான்சில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில் ரூ 5.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை துப்பாக்கி சூடு, கொள்ளை என எதிர்மறையான விஷயங்கள் கேன்ஸ் பட விழாவில் அரங்கேறியுள்ளன.

ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு விருது பெறும் நடிகைகள் அணிவதற்காக ஒரு தனியார் நிறவனம் தங்க நகைகளை இரவல் ஆக வழங்கி இருந்தது. அந்த நகைகள் விழா நடந்த ஓட்டலின் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்கு வைத்திருந்த தங்க நகைகள் முழுவதும் கொள்ளை போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ. 5.5 கோடி.

ஆனால் விழாவில் வழங்கப்படும் பால்ம் 'டி' மோர் கோப்பை மட்டும் பாதுகாப்பாக இருந்தது. அதை கொள்ளையர்கள் எடுத்துச் செல்லவில்லை.

கடந்த ஆண்டு நடந்த "கேன்ஸ்" பட விழாவில் கால்பந்து வீரர்களின் ரூ.3 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

கேன்ஸ் விழாவில் இன்று துப்பாக்கி சூடு நடந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.