உ என்ற தலைப்பை முதலில் பதிவு செய்தவர்கள் நாங்களே. இதே தலைப்பைப் பயன்படுத்த முயன்றவர்கள், முறையாக பதிவு கூட செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், இந்தத் தலைப்புக்கு நாங்களே சொந்தக்காரர்கள், என்று இயக்குநர் ஆஷிக் கூறினார்.
தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் உ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது, இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் திடீரென உருவான டைட்டில் பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது என்கிறார் இயக்குநர ஆஷிக்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது..
அது பற்றி அவர் கூறியதாவது, படத் தலைப்புகள் பதிவு செய்வதில் உள்ள நடைமுறைகளின் படி... தங்கள் அமைப்பில் பதிவு செய்யப்படும் தலைப்புகளுக்கான முறையான அறிவிப்பை மற்ற அமைப்புகளுக்கு அனுப்புகிறார்கள்.
15 நாட்களுக்குள் மற்ற இரு அமைப்புகளும் அந்த தலைப்பு அவர்களிடம் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்த நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்படுகிறது.
அதாவது கில்டில் ஒரு தலைப்பு பதிவு செய்யப்படும் போது அது மற்ற இரு அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர்கள் அந்த தலைப்பில் பதிவு செய்யவில்லை என்றால் மட்டுமே கில்டு அந்த தலைப்பை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்க முடியும். ஒரு படத் தலைப்பை பதிவு செய்த பின் உறுதி செய்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள்.
அப்படி நாங்கள் 2012ம் ஆண்டு, ஜூன் மாதம் 30ம் தேதி (30.06.2012) கில்டில் உ தலைப்பை பதிவு செய்தோம். கில்டில் இருந்து முறையாக மற்ற இரு அமைப்புகளுக்கும் இது தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து எந்த மறுப்பும் வராத நிலையில் ஒரு மாதம் கழித்து ஜூலை மாதம் 31ம்தேதி (31.07.2012) உ தலைப்பை எங்களுக்கு வழங்கினார்கள்.
உ படத்தலைப்பு சம்பந்தமாக எந்த அமைப்புகளிடமும் இருந்தும் இதுவரை எங்களுக்கும் எந்த மறுப்பும் வரவில்லை. எனவே உ தலைப்பு உங்களுக்கு உரிமையானது என மறுபடியும் உறுதி செய்துள்ளனர்.
"உ" தலைப்பை 29.06.2013 வரை பயன்படுத்திக்கொள்ளும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது, என்றார். இதற்காக கலைப்புலி தாணுவைச் சந்தித்து முறையிட்டுபோது, அவரும் தலைப்புக்கு சொந்தக்காரர் ஆஷிக்தான் என்பதை உறுதிப்படுத்தினாராம்.
இந்தப் படத்தில் தம்பி ராமையா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 டைட்டில் வின்னர் ஆஜீத், மதன் கோபால், 'ஸ்மைல்' செல்வா, தீப்ஸ், உ,சத்யா,வருண், நேகா, யோகி தேவராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசை: அபிஜித் ராமசுவாமி இசையமைக்க, ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும் இவரே. படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஆஷிக்.